Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

November Nalliravu Narmatha
November Nalliravu Narmatha
November Nalliravu Narmatha
Ebook106 pages49 minutes

November Nalliravu Narmatha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
November Nalliravu Narmatha

Read more from Rajeshkumar

Related to November Nalliravu Narmatha

Related ebooks

Related categories

Reviews for November Nalliravu Narmatha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    November Nalliravu Narmatha - Rajeshkumar

    18

    1

    குழந்தை பெற சரியான வயது 21 முதல் 35 வரை. நேரடி சொந்தங்களில் - திருமணம் செய்வதைத் தவிர்த்தால் பல பரம்பரை நோய்கள் அடுத்த தலைமுறைக்கு வருவதைத் தடுக்கலாம். சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக உறவில் கல்யாணம் செய்வது எவரெஸ்ட் தவறு.

    கற்பகம்...

    ம்...

    எனக்கு டென்ஷனாயிருக்கு...

    எதுக்கு டென்ஷன்...?

    டாக்டரம்மா என்ன சொல்வாங்களோன்னுதான்...

    இதோ பாருங்க...! இதுல டென்ஷன்பட ஒண்ணுமேயில்லை. டாக்டரம்மா எல்லா ரிப்போர்ட்டையும் படிச்சுப் பார்த்துட்டு உண்டா... இல்லையான்னு ரெண்டுல ஒரு பதிலைச் சொல்லப் போறாங்க. அவங்க என்ன பதிலைச் சொன்னாலும் சரி... எனக்கு சந்தோஷமே...!

    என்ன கற்பகம் இப்படிச் சொல்றே...? உன்னால கர்ப்பம் தரிக்க முடியாது. நீ ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியாது’ன்னு டாக்டரம்மா சொன்னா. அது உனக்கு சந்தோஷமான செய்தியா...?

    கற்பகம் தன் கணவன் விஷ்வாவை பார்த்து புன்னகைத்தாள்.

    ம்... சந்தோஷமான செய்திதான்...

    எப்படி சந்தோஷமான செய்தியாகும்...?

    என்னங்க இது...! என்னால் கர்ப்பம் தரிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டா என்ன...? எனக்குத்தான் ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கே...?

    என்னது...! குழந்தை இருக்கா...?

    ம்... அந்தக்குழந்தைக்கு இப்போ வயசு என்ன தெரியுமா...? முப்பத்திரண்டு... பேரு... விஷ்வா!

    கற்பகத்தையே இமைக்காமல் பார்த்தான் விஷ்வா… அவள் அவனுடைய தோளில் செல்லமாய் குத்தினாள்.

    என்ன... அப்படிப் பார்க்கறீங்க...?

    கற்பகம்! உன்கிட்டே எனக்குப் பிடிச்சதே இந்த பாலிஸிதான்...

    என்ன பாலிஸி...?

    எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாய் எடுத்துக்காமே ஈஸியா எடுத்துக்கறதுதான்...! பட், என்னால அப்படி இருக்க முடியலை. டாக்டரம்மா வாயிலிருந்து என்ன பதில் வரப்போகுதுன்னே அடிவயிறு கலங்கிட்டிருக்கு... ஹார்ட்டைத் தொட்டுப் பாரு... அது ரேஸ் குதிரையாட்டம் ஓடிக்கிட்டு இருக்கு...

    கற்பகம் சிரித்தாள்.

    இதோ பாருங்க... எதுவுமே நம்ம கையில் இல்லை. நீங்க நினைச்சா தும்மல் போட்டுட முடியாது. அது எப்போ வருதோ அப்பத்தான் நீங்க தும்ம முடியும்...! நாம ரெண்டு பேருமே ஒரு குழந்தைக்காக அஞ்சு வருஷமா முயற்சி பண்ணினோம். முடியலை. போன வாரம் இந்த டாக்டரம்மாகிட்டே வந்தோம். டெஸ்ட்டெல்லாம் எடுத்துக்கிட்டோம். இன்னிக்கு ரிசல்ட் டே. டாக்டர் சொல்லப் போகிற பதில் எதுவாக இருந்தாலும் அதை நாம ஏத்துக்கத்தான் வேணும். என்னால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டா சந்தோஷம்தான். அப்படி டாக்டர் சொல்லாத பட்சத்தில் நாம் இடிஞ்சு போயிடவும் கூடாது. ‘நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி’ன்னு பாடிகிட்டு - வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்...!

    கற்பகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே –

    டாக்டரின் அறையிலிருந்து வெளிப்பட்ட அந்த நர்ஸ் மெல்ல குரல் கொடுத்தாள். மிஸஸ் கற்பகம்.

    இருவரும் எழுந்து போனார்கள். ஏ.ஸி.யின் குளிரில் உறைந்து போயிருந்த டாக்டரம்மாள் மனோரஞ்சிதத்தின் அறைக்குள் நுழைந்தார்கள். ஐம்பது வயது மனோரஞ்சிதம் சுழல் நாற்காலியில் சாய்ந்து கையில் ஒரு ஃபைலை வைத்து இருந்தாள். உயர்த்திப்போட்ட நரைக் கொண்டையும் அணிந்து இருந்த வெள்ளை நிற கோட்டும் ஒரு டாக்டர்க்குரிய ‘கெட்-அப்’பை உயர்த்திக் காட்டியது.

    வணக்கம்... டாக்டர்...

    உட்கார்ங்க...

    மனோரஞ்சிதம் தனக்கு எதிரே இருந்த நாற்காலிகளைக் காட்டி அவர்கள் உட்கார்ந்ததும் கற்பகத்திடம் கேட்டாள்.

    வீட்லயிருந்து பெரியவங்க யாராவது வந்து இருக்காங்களா?

    இல்ல டாக்டர்...

    ஓ.கே...! நீங்க ரெண்டு பேருமே படிச்சவங்க. உங்ககிட்டே ஒளிவு மறைவு இல்லாமே பேசலாம்ன்னு நினைக்கிறேன்...

    பை... ஆல்... மீன்ஸ் டாக்டர்...

    டாக்டர் மனோரஞ்சிதம் ஃபைலை பார்த்துக் கொண்டே பேசினாள். நீங்க ரெண்டு பேருமே நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கீங்க. எடுத்த எல்லா டெஸ்ட்டும் நார்மலாயிருக்கு... இருந்தாலும் கற்பகத்துகிட்டே ஒரு சின்ன குறைபாடு இருக்கிறதால...

    இருவரும் டாக்டரையே பார்க்க, அவர் தொடர்ந்தார். கர்ப்பம் தரிக்கும் போது ஒரு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கு...

    எ... எ... என்ன பிரச்சனை விஷ்வா தவிப்போடு கேட்க, மனோரஞ்சிதம் டாக்டர்...? சொன்னார்.

    கற்பகத்தோட கர்ப்பப்பை ரொம்பவும் வீக்காயிருக்கு. ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து பெறக்கூடிய வகையில் கர்ப்பப்பை வலுவாக இல்லை...

    டா... டாக்டர்...

    இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான்...! இருந்தாலும் இந்தப் பிரச்சனையை நீங்க ஃபேஸ் பண்ணித்தான் தீரணும்...

    கற்பகம் டாக்டரிடம் நிமிர்ந்தாள். டாக்டர் மருந்து, மாத்திரைகள் மூலமாய் கர்ப்பப்பையை வலுப்படுத்திக் கொள்ள முடியுமா?

    அதுக்கு இனி வாய்ப்பு இல்லை... இது ஜீன் சம்பந்தப்பட்ட பிரச்சனை... உனக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சுன்னு சொன்னேம்மா...?

    அஞ்சு வருஷம்...

    அதாவது... உன்னோட இருபதாவது வயசுல கல்யாணம் நடந்தது. இல்லையா...?

    ஆமா...!

    இப்போ உனக்கு இருபத்தஞ்சு வயசு... இந்த அஞ்சு வருஷம் முயற்சி பண்ணிப் பார்த்துட்டு இப்பத்தான் ஒரு டாக்டரைப் பார்க்கணும் என்கிற எண்ணம் வந்து இருக்கு... இல்லையா...?

    அப்படியில்லை டாக்டர்... கல்யாணமான முதல் மூணு வருஷம் குழந்தை வேண்டாம் என்கிற எண்ணத்தில் நானும் என்னோட கணவரும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தினோம். மூணு வருஷத்துக்கப்புறம்தான் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டோம். பட், இந்த ரெண்டு வருஷ காலமாய் எங்க ஆசை நிறைவேறலை. என்ன பிரச்சினைன்னு தெரியாமத்தான் உங்ககிட்டே வந்தோம்...

    இப்போ பிரச்சனை என்னான்னு தெரிஞ்சு போச்சு. இதுக்கு ஏற்ற மாதிரி நாம செயல்பட வேண்டியிருக்கும்...

    டாக்டர்...! எங்களுக்கு குழந்தை கிடைக்க என்னதான் வழி...?

    "ஒரே ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1