Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini... Ragini
Ini... Ragini
Ini... Ragini
Ebook149 pages45 minutes

Ini... Ragini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465698
Ini... Ragini

Read more from Rajeshkumar

Related to Ini... Ragini

Related ebooks

Reviews for Ini... Ragini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini... Ragini - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் ஒன்றை இந்த உலகத்தில் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடவுளைக் காட்டிலும் ஒரு சிறந்த ஸாஃப்ட்வேர் என்ஜினியர் யாரும் இருக்க முடியாது. இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து ஒருவேளை எந்த ஸாஃப்ட்வேர் என்ஜினியராவது மனித மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் ஒன்றைக் கண்டுபிடிக்கும் காலத்தில் அவன் மரணத்தை வென்றவனாக இருப்பான். அல்லது அவனுடைய ஆயுள் உச்சபட்சமாக 1000 வருஷங்களாக இருக்கும். அந்த கால கட்டத்தில் வாழ்பவர்கள் மணமக்களை வாழ்த்தும்போது ஆயிரம் ஆண்டு காலம் வாழ்க என்று வாழ்த்த வேண்டியிருக்கும். மூளை ஆராய்ச்சி மாநாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் விலாண்டர் பேசியது.

    சங்கரநாராயணன் இரண்டாவது தடவையாய் அன்றைய நாளிதழை எடுத்து, விட்டுப்போன சின்னச் சின்ன செய்திகளைக் கண்களால் மேய்ந்து கொண்டிருந்தபோது மாடியிலிருந்த அவருடைய மனைவி வாசுகி படிகளில் வேகமாய் இறங்கிக் கொண்டே குரல் கொடுத்தார்.

    என்னங்க...

    ஏழு வயது சிறுமியை எழுபது வயது கிழவர் கற்பழித்த கொடுமையை நெஞ்சம் பதற படித்துக் கொண்டிருந்த சங்கரநாராயணன் நிமிர்ந்தார்.

    என்ன வாசுகி..?

    பக்கத்தில் இருக்கிற டெலிபோன் ரிஸீவரை எடுங்க... லைன்ல மாப்பிள்ளையோட அப்பா...! உங்ககிட்டே ஏதோ பேசணுமாம்...

    சங்கரநாராயணன் கையில் இருந்த நாளிதழை டீபாயின் மேல் அப்படியே போட்டுவிட்டு ரிஸீவரை எடுத்தார். ஹலோ...

    வணக்கம்... சம்பந்தி... மறுமுனையில் இன்னும் ஒரு மாதம் கழித்து தன் மகள் ப்ரீதாவை மருமகளாக்கிக் கொள்ளப் போகிற கோமதிநாயகம் பேசினார்.

    வணக்கம்...! எப்படியிருக்கீங்க... சம்பந்தி..?

    நல்லாயிருக்கேன்..! உங்க பொண்ணை நிச்சயம் பண்ணின நாளிலிருந்து எங்க பிசினஸும் அமோகமா இருக்கு.... பையனுக்கு ஆபீஸ்ல ப்ரமோஷனும் கிடைக்கும் போலிருக்கு...

    கேட்கவே சந்தோஷமாயிருக்கு... சம்பந்தி...

    அப்புறம்... நான் எதுக்காக போன் பண்ணினேன்னு சொல்லிடறேன்.

    சொல்லுங்க.... சொல்லுங்க...

    இன்னிக்குக் காலையில் பத்து மணிக்கு எங்க குலதெய்வமான அங்காளம்மன் கோயில்ல ஒரு அபிஷேகப் பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம். வருஷத்துக்கு ஒரு தடவை நடத்தற பூஜை இது. இந்த வருஷ பூஜையில் எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போகிற உங்க பொண்ணு ப்ரீதாவும் கலந்துக்கணும்ன்னு என் பையன் பாலு ரொம்பவும் பிரியப்படறான். நீங்க உங்க பொண்ணை அனுப்பி வைக்கணும்....

    .......

    சங்கரநாராயணன் பதில் பேசாமல் மெளனமாய் இருக்க, கோமதிநாயகம் கேட்டார்.

    என்ன சம்பந்தி...! பதிலையே காணோம்.

    அது... அது... வந்து...

    எனக்குப் புரியுது சம்பந்தி... நிச்சயதார்த்தம் முடிஞ்சு பதினஞ்சு நாள் தான் ஆச்சு... கழுத்துல தாலி ஏறாமே மாப்பிள்ளை கூட எப்படி அனுப்பி வைக்கிறதுன்னு யோசனை பண்றீங்க... இல்லையா..?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை... நம்ம ஜாதி ஜனங்களைப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே... ஏதாவது சொல்லி வைப்பாங்க. அதான் கொஞ்சம் தயக்கமாயிருக்கு...

    ஒரு அரைமணிநேரம் போதும். பத்து மணிக்கு பூஜை ஆரம்பமானா பத்தரை மணிக்கெல்லாம் முடிஞ்சுடும்... பத்தே முக்காலுக்கெல்லாம் ப்ரீதாவைக் கொண்டு வந்து உங்க வீட்ல விட்டுடறோம். இது ஒரு வேண்டுகோள்தானே தவிர... கட்டாயம் இல்லை... ப்ரீதாகிட்டே கேட்டுப்பாருங்க... இஷ்டமில்லேன்னா விட்டுருங்க...

    அவ... சின்னப் பொண்ணு...! அவகிட்டே எதுக்குக் கேட்கணும்..? கோயிலுக்குத்தானே கூட்டிட்டுப் போறீங்க... நீங்க... வாங்க... நான் அனுப்பி வைக்கிறேன்...

    ரொம்ப நன்றி... சம்பந்தி...!

    அட... என்னங்க... நீங்க! இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லிகிட்டு..! ப்ரீதா... யாரு..? உங்க வீட்டு மருமகள். அவளுக்கு என்னிக்கு உங்க பையனோடு நிச்சயதார்த்தம் நடந்ததோ அன்னிக்கே அவ உங்கவீட்டு பொண்ணாயிட்டா... நீங்க எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்றீங்க சம்பந்தி..? நான் ப்ரீதாவை ரெடியா இருக்கச் சொல்றேன்...

    ஒன்பதரை மணிக்கு வர்றேன்...

    வாங்க... சங்கரநாராயணன் ரிஸீவரை வைத்துவிட்டு மனைவி வாசுகியிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் லேசாய் முகம் மாறினாள்.

    என்னங்க..! இது சரியில்லையே..? கழுத்துல தாலி ஏறினாத்தான் ப்ரீதா அவங்க வீட்டுப் பெண். அதுவரைக்கும், அவ நம்ம வீட்டுப் பெண்தான்.... அவங்க குலதெய்வக் கோயிலுக்கு நம்ம பொண்ணு போக வேண்டிய அவசியமே இல்லை... நீங்க ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்து இருக்கணும்.

    சங்கரநாராயணன் அவளைக் கோபமாய் ஏறிட்டார்.

    வாசுகி… அவங்க நம்ம பொண்ணை உரிமையோடு கூப்பிடும்போது நாம மறுக்கிறது சரியில்லை. அப்படி மறுத்தா முதல் கோணல் முற்றிலும் கோணல்ங்கிற மாதிரி ஆயிடும்... நாம வேண்டாம்ன்னு சொல்லிட்டா அவங்க ஒண்ணும் சொல்லிடப் போறது இல்லை. இருந்தாலும் நாம மறுத்தது அவங்க மனசுக்குள்ளே ஒரு சின்னக் காயத்தை உண்டாக்கியிருக்கும்...

    இருந்தாலும்...

    இதோ பார் வாசுகி..! நம்ம பொண்ணு ப்ரீதா வாழ்க்கைப்படப் போற இடம் பெரிய இடம்...! அவங்களோடு நம்மை ஒப்பிட்டா நாம ஒண்ணுமேயில்லை. பெரிய இடத்தோடு நாம சம்பந்தம் பண்ணிகிட்டாலே நிறைய விஷயங்கள்ல நாம ‘காம்ப்ரமைஸ்’ பண்ணியாகணும்...

    சரி… ப்ரீதாவை ஒரு வார்த்தை கேட்டீங்களா?

    இப்ப கேட்டுட்டாப் போகுது... சொன்ன சங்கரநாராயணன் ஹாலின் கோடியிலிருந்த அறையைப் பார்த்து ப்ரீதா என்று குரல் கொடுக்க - ப்ரீதா வெளிப்பட்டாள்.

    21 வயது ப்ரீதாவை ஒரே வார்த்தையில் வர்ணித்து விடலாம். ‘ரோஜா நிற சிற்பம்.’

    ப்ரீதா..! மாப்பிள்ளையோட அப்பா எனக்கு போன் பண்ணி... சங்கரநாராயணன் பேசப் பேசவே -

    ப்ரீதா குறுக்கிட்டாள். "அப்பா... டெலிபோனோட இன்னொரு ‘பேரலல்’ லைன்ல

    Enjoying the preview?
    Page 1 of 1