Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karpura Bommaigal
Karpura Bommaigal
Karpura Bommaigal
Ebook95 pages29 minutes

Karpura Bommaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பெண் தன் திருமண வயதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். காதல் என்னும் உணர்ச்சிக்கு பலியாகி கற்பையும் பறிகொடுத்து விட்டுக் கண்கலங்கித் தவிக்கும் பெண்கள் 1928லும் இருந்தார்கள், 1998லும் இருக்கிறார்கள். இனிவரும் வருடங்களிலாவது பெண்கள் விழிப்போடு இருந்து தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும் என்கிற எதிர் பார்ப்போடு எழுதப்பட்ட நாவல் இந்த “கற்பூர பொம்மைகள்” பெண்மை என்பது தூஷிக்கப்படவேண்டிய ஒன்றல்ல பூஜிக்கப்பட வேண்டிய ஒன்று.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403443
Karpura Bommaigal

Read more from Rajesh Kumar

Related to Karpura Bommaigal

Related ebooks

Reviews for Karpura Bommaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karpura Bommaigal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கற்பூர பொம்மைகள்

    Karpura Bommaigal

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    இந்த நாவலைப் பற்றி...

    ஒரு பெண் தன் திருமண வயதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். காதல் என்னும் உணர்ச்சிக்கு பலியாகி கற்பையும் பறிகொடுத்து விட்டுக் கண்கலங்கித் தவிக்கும் பெண்கள் 1928லும் இருந்தார்கள், 1998லும் இருக்கிறார்கள். இனிவரும் வருடங்களிலாவது பெண்கள் விழிப்போடு இருந்து தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும் என்கிற எதிர் பார்ப்போடு எழுதப்பட்ட நாவல் இந்த கற்பூர பொம்மைகள் பெண்மை என்பது தூஷிக்கப்படவேண்டிய ஒன்றல்ல பூஜிக்கப்பட வேண்டிய ஒன்று.

    1

    அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பின் டாக்டரம்மாவின் அறைக்குள் நுழைந்தாள் பவித்ரா.

    பெரிய கொண்டை போட்டு பளிச்சென்ற ஸ்டிக்கர் பொட்டோடு மெலிதான ரோஸ் நிற சேலையில் இருந்தாள் டாக்டரம்மாள் நித்யகல்யாணி. காலை ஏழு மணியிலிருந்து அவுட்பேஷண்ட்களைப் பார்த்ததில் ஒரு லேசான களைப்பு கண்களில் தொற்றியிருந்தது. உட்கார்ம்மா...

    நித்யகல்யாணி எதிரில் இருந்த நாற்காலியைக் காட்ட பவித்ரா தயக்கமாய் உட்கார்ந்தாள்.

    சொல்லும்மா... என்ன உடம்புக்கு...

    டாக்டர் எனக்கு கல்யாணமாகி முணு மாசம்தான் ஆச்சு...

    இப்போ கன்சீவ் ஆகி இருக்கேன்... இவ்வளவு சீக்கிரத்தில் உண்டாவேன்னு எனக்குத் தெரியலை... எனக்கு இப்போ இந்தக் குழந்தை வேண்டாம்னு மனசுக்குப் படுது...

    ஏம்மா வேண்டாங்கறே...

    வேண்டாம் டாக்டர்...

    அதான் ஏன்னு கேக்குறேன்... ஒரு பொண்ணுக்கு இதை விட ஒரு பெரிய சந்தோஷம் இருக்க முடியுமா...

    "நான் சந்தோஷப்படலாம் டாக்டர்... ஆனா என்னைப் பெத்தவங்க சந்தோஷப்படலையே...?

    ஆமா டாக்டர்! மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அப்பா நாய் படாத பாடு பட்டு அங்கே இங்கே கடன் வாங்கி எனக்குக் கல்யாணத்தைப் பண்ணி வெச்சார்... அந்தக் கடனே அவரோட கழுத்தைப் பிடிச்சிட்டிருக்கும்போது நான் உண்டாயிருக்கிற விஷயம் அவங்களுக்கு எப்படி சந்தோஷமா இருக்க முடியும்...? பிரசவ செலவு குழந்தை பொறந்தா அதுக்கு நகை செய்ய வேண்டிய செலவு இதையெல்லாம் என்னோட அப்பாவால தாக்குப் பிடிக்க முடியாது டாக்டர்... இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எனக்குக் குழந்தை பொறக்காமே இருக்கணும்...

    சொல்லும்போதே பவித்ராவுக்கு கண்களில் நீர் கட்டிக் கொண்டு நின்றது.

    நித்யகல்யாணி மேஜையின் மீது தன் இரு கைகளையும் ஊன்றியபடி கேட்டாள்.

    "உன்னோட கணவர் வேலைக்குப் போறாரா இல்லை பிசினஸா...?

    வேலைக்குப் போறார்...

    எங்கே...?

    ஒரு சிட்பண்ட் கம்பெனியில் அவர் ஃபீல்டு ஆபிசர்...

    நீ குழந்தை உண்டாகியிருக்கிற விஷயம் உன் வீட்டுக்காரர்க்குத் தெரியுமா...?

    அவர்க்கு மட்டும்தான் தெரியும்... என்னோட மாமியாருக்கும் மாமனாருக்கும் தெரியாது...!

    கருவைக் கலைச்சிடலாம்னு உன்னோட வீட்டுக்காரர்கிட்டே சொன்னியா...?

    சொன்னேன்...

    அவர் அதுக்கு ஒத்துகிட்டாரா...?

    மொதல்ல அவர் ஒத்துக்கலை... அப்புறம் நான் நிலைமையை எடுத்துச் சொன்ன பிறகு சரி உன்னோட இஷ்டப்படி செய்துக்கன்னு சொல்லிட்டார்... பார்மஸிக்குப் போய் மருந்து வாங்கி சாப்பிட்டேன்... ஒண்ணும் ஆகலே... இதை கணவர் கிட்டே சொன்னா... இருந்துட்டுப் போகட்டுமேன்னு சொல்லிடுவார்... அதான் உங்களைப் பார்க்க வந்தேன்...

    நித்யகல்யாணி ஸ்டெத்தை எடுத்துக் காதில் மாட்டிக் கொண்டபடி கேட்டாள்.

    எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு...?

    இருபது நாள்...

    அப்படி அந்த மேஜை மேல ஏறிப்படும்மா...

    பவித்ரா போய்ப் படுத்தாள்.

    நித்யகல்யாணி சில நிமிஷங்களை எடுத்துக் கொண்டு சோதித்துப் பார்த்து விட்டுப் புன்னகைத்தாள்.

    கரு நல்லா ஃபார்ம் ஆயிடுச்சு... இனிமே மாத்திரையால ஒண்ணும் முடியாது...டி அண்ட் ஸி தான் பண்ணியாகணும்...

    பண்ணிடுங்க டாக்டர்...

    நாளைக்குக் காலையில ஆறு மணிக்கு எதுவும் சாப்பிடாம வெறும் வயித்தோட இங்கே வரணும்...

    வர்றேன் டாக்டர்...

    துணைக்கு யாரையாவது கூட்டிகிட்டு வந்துடு...

    பக்கத்து வீட்டுப் பொண்ணை கூட்டிகிட்டு வர்றேன்...

    வா...

    டாக்டர்...

    பவித்ரா தயங்கினாள்.

    என்ன...?

    "ஃபீஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1