Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ethirukal Thevai
Ethirukal Thevai
Ethirukal Thevai
Ebook101 pages58 minutes

Ethirukal Thevai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ethirukal Thevai

Read more from Rajeshkumar

Related to Ethirukal Thevai

Related ebooks

Related categories

Reviews for Ethirukal Thevai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ethirukal Thevai - Rajeshkumar

    16

    1

    "வயத்துல ஆறுமாசக் குழந்தையை வெச்சுகிட்டு... இப்படி, ‘திம்... திம்’ன்னு மாடிப்படி ஏறி வர்றியே... மங்கை...? கொஞ்சம் நிதானமா, வரக்கூடாதா...?" மாடி மேல் போர்ஷன் காரி சித்ரா கேட்கவும் மங்கை சிரித்தாள்.

    மெதுவாத்தானே ஏறி வர்றேன்...

    என்னது... நீ மெதுவா ஏறி வர்றியா...? நீ இப்போ ஏறி வந்ததை உன் வீட்டுக்காரர் பார்த்திருக்கணும்... உன்னை அப்படியே ஒரு துர்வாசப் பார்வை பார்த்திருப்பார். அந்த மனுஷன் நீ உண்டான நாளிலிருந்து... உன்னை உள்ளங்கையில் ஏந்தி, பூ மாதிரி பார்த்துக்கிறார். நீ என்னடான்னா... விறுவிறுன்னு மாடிப்படி ஏறுறதும்... இறங்கறதும்... நினைச்ச இடத்தில் விசுக்... விசுக்ன்னு உட்கார்றதும்... எனக்கு ‘திக் திக்’ன்னு இருக்கு...

    எனக்கென்னமோ... உண்டான மாதிரியே இல்லை. உடம்பு ப்ரியா இருக்கு...

    அடுத்த மாசம் வரைக்கும் அப்படித்தான் இருக்கும்... ஏழாவது மாசம் பொறக்கட்டும்... பையனோ பொண்ணோ உதைக்கிற உதையில... இடுப்பு வலிக்கும்... நீ வேகமா நடந்தாலும் இழுத்துப் பிடிப்பாங்க...

    சித்ரா...

    மங்கை பக்கத்தில் வந்தாள்.

    வயிறு எனக்குத் தெரியுதா...?

    நல்லாவே தெரியுது...

    அசிங்கமா இருக்கா...?

    மண்டு! ஒரு பொண்ணுக்கு இதுதாண்டி அழகு...

    ‘‘எனக்கு என்ன குழந்தை பொறக்கும்னு நினைக்கிறே?"

    சொல்லட்டுமா...?

    உனக்கு பொண்ணுதான் பொறக்கும்

    ஏன் அப்படி சொல்றே...?

    ‘‘எனக்குத் தெரியும்...?"

    ‘‘எப்படித் தெரியும்...?"

    ‘‘தெரியும்ன்னா விடேன்..."

    ‘‘விடமாட்டேன்... நீ சொல்லித்தான் ஆகணும்..."

    சரி சொல்றேன். இன்னிக்கு காலையில் உங்க வீட்ல என்ன டிபன்...?

    "சப்பாத்தி வெங்காய சட்னி...’’

    எத்தனை சாப்பிட்டே...?

    "நாலு...’’

    இதுக்கு முந்தியெல்லாம் வழக்கமா எவ்வளவு சாப்பிடுவே...?

    "ரெண்டு... இல்லேன்னா... மூணு...’’

    இப்பல்லாம் உனக்கு பசி அதிகம்தானே...?

    ஆமா...

    ‘‘வயித்துல இருக்கிறது பொண்ணா இருந்தாத்தான் இப்படி பசிக்குமாம்... நீ சாப்பிடற வேகத்தை நானே ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கேன்..."

    அய்யய்யோ...

    ‘‘என்ன...?"

    பையன் தான் பொறக்கும்ன்னு... அவர் நம்பிட்டிருக்காரே...?

    அதுக்கு நீ என்ன பண்ண முடியும்...? மொதல்ல உண்டானது ஆணா இருந்தா என்ன...? பொண்ணா இருந்தா என்ன...?

    வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. கீழே எட்டிப் பார்த்த சித்ரா, மங்கையின் தோளைத் தட்டினாள்.

    உன் இல்லத்தரசர் வந்து விட்டார்...

    அட... அதுக்குள்ளே மணி ஆறாயிடுச்சா...? நான் போய். டிபன் பண்ணணும்...

    மங்கை, தன் போர்ஷனுக்கு ஓடினாள்.

    ஏ... ஏய்... மெதுவா...

    மங்கை, சித்ராவின் கத்தலைப் பொருட்படுத்தாமல் தன் வீட்டுக்குள் நுழைந்து, கண்ணாடி முன் நின்று சீப்பை எடுத்து தலையை மேலாக வாரி, ஸ்டிக்கர் பொட்டை சரியாய் பொருத்திக் கொண்டு, கணவன் பட்டாபியை எதிர் கொண்டாள். நெற்றியில் வலது கையை வைத்து குறும்பாக சல்யூட் பண்ணினாள்.

    "குட் ஈவினிங் ஜென்டில்மேன்...’’

    பட்டாபி ஒரு புன்சிரிப்பு கூடக்காட்டாமல், நாற்காலிக்கு போய் உட்கார்ந்து ஷூக்களை கழற்றி சுவரோரமாய் வீசினான்.

    மங்கை முகம் மாறினாள். அப்போதுதான் அதையும் கவனித்தாள். அவன் வழக்கமாய் வாங்கி வரும் ஸ்வீட் பொட்டலமும், வாழை இலையில் கட்டிய மல்லிகைச் சரமும் மிஸ்ஸாகி இருப்பதை. தவிப்போடு அவனை நெருங்கினாள்.

    ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க...?

    ஓ... ஒண்ணுமில்லை...

    ஒண்ணுமில்லையா...? முகமெல்லாம் வாடின மாதிரி இருக்கு. உடம்புக்கு சரியில்லையா...?

    நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்தாள்.

    பட்டாபி அவளுடைய கைகளை விலக்கி விட்டு, சர்ட்டையும் பேண்ட்டையும் களைந்து சுவர் ஆணியில் மாட்டி விட்டு லுங்கியைச் சுற்றிக் கொண்டபடி பாத்ரூமை நோக்கிப் போனான்.

    என்னங்க... காப்பி கொண்டு வரட்டுமா...?

    வேண்டாம். வழியில வர்றப்பவே... ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டேன்...

    வீட்டுக்கு வரும்போது... ஹோட்டல்ல எதுக்காக சாப்பிடணும்?

    ‘‘சாப்பிடணும் போல் தோணிச்சு. சாப்பிட்டேன்"

    பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு...

    ஆட்களும்... ஒரு மாதிரியா மாறும் போது, பேச்சும் ஒரு மாதிரியா இருக்கிறதில என்ன தப்பு?

    நில்லுங்க...

    பாத்ரூமுக்குள் நுழைய முயன்றவன் நின்றான்.

    என்ன...?

    காரணத்தை சொல்லிட்டு உள்ளே போங்க...

    ‘‘உனக்கு காரணம் தெரியணும். அவ்வளவுதானே?"

    ஆமா...

    என்னோட சர்ட் பாக்கெட்ல ஒரு லெட்டரை வெச்சிருக்கேன். எடுத்துப் படி...

    சொன்ன பட்டாபி பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொள்ள, மங்கை ஹேங்கரில் மாட்டியிருந்த சர்ட்டை நோக்கிப் போனாள். இருதயத்துக்குள் நூற்றுக்கணக்கான புறாக்கள் இறக்கைகளை அடித்துக் கொண்டன.

    ‘அது என்ன லெட்டராயிருக்கும்?’

    சர்ட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்தாள். வாய் கிழிபட்ட ஒரு தபால் கவர் கிடைத்தது. எடுத்தாள். ஃப்ரம் அட்ரஸ் பகுதியில் ஒரு ஆச்சர்யக் குறியும், கேள்விக் குறியும் தெரிந்தது. கவர்க்குள் கையை நுழைத்து நான்காய் மடிக்கப்பட்ட அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்தாள்.

    பரிதாபத்துக்குரிய பட்டாபி அவர்களுக்கு,

    வணக்கம்.

    இது ஒரு மொட்டைக் கடிதம் என்று நீங்கள் அலட்சியப்படுத்துவதாக இருந்தால், படிக்க ஆரம்பிக்கும் போதே கிழித்து விடுங்கள். உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் மட்டும் படிக்க ஆரம்பியுங்கள்.

    "மங்கை என்கிற பெயரில்

    Enjoying the preview?
    Page 1 of 1