Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karuppu Vanakam
Karuppu Vanakam
Karuppu Vanakam
Ebook123 pages45 minutes

Karuppu Vanakam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Karuppu Vanakam

Read more from Rajeshkumar

Related to Karuppu Vanakam

Related ebooks

Related categories

Reviews for Karuppu Vanakam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karuppu Vanakam - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    நேரம் 8.42

    டி.வி. திரையில் அந்தப் பெண் தோன்றி - புன்னகைத்து வணக்கம் சொல்லி- செய்திகளை வாசிக்க ஆரம்பித்தாள்.

    தலைப்புச் செய்திகள். நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் தங்கள் சுயநலத்தைத் தள்ளி வைத்து விட்டு - பொதுமக்களுக்காக உழைக்க முன்வரவேண்டுமென்று பிரதம மந்திரி கேட்டுக் கொண்டார். நேற்று பஞ்சாப்பில் நடந்த பல்வேறு சம்பவங்களில் இரண்டு போலீஸ் அதிகாரிகளும், பதினோரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டார்கள். மக்கள் நலக் கட்சியின் இணைச் செயலாளர் திருமதி மணிமொழி அக்கட்சியை விட்டு விலகி - ஜனநாயக பாதுகாப்புக் கட்சியில் சேர்ந்தார். வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் ஆந்திராவின் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஸ்டெபி கிராப் மோனிகா செலஸிடம் தோற்றுப் போனார். ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில்...

    டேய் வாசு...

    சோபாவில் சாய்ந்து டி.வி.யை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வானமாமலை கத்தினார். பக்கத்து அறையில் ஏதோ வேலையாய் இருந்த வேலைக்காரன் ஓடிவந்தான்.

    அய்யா!

    டி.வி.யை ஆஃப் பண்ணுடா...

    டி.வி. திரையின் க்ளோஸப்பில் பிரதமரின் முகம் தெரிய, வாசு ஓடிப் போய் அணைத்தான். ஐம்பது வயதான வானமாமலை, தன் வழுக்கையில் வியர்த்திருந்த வியர்வைத் துளிகளைத் தோளில் போட்டிருந்த மேல் துண்டால் ஒற்றிக் கொண்டே டெலிபோனைப் பக்கத்தில் இழுத்து - ரிசீவரை எடுத்துக் கொண்டார். டயல் பட்டன்களைத் தட்டிவிட்டு - மறுமுனையில் ரிசீவர் எடுக்கப்பட்டதும் கேட்டார்.

    குழந்தைசாமியா?

    ஆமா...

    நான் வானமாமலை பேசறேன்!

    தலைவரே! நீங்களா... வணக்கம். என்ன திடீர்ன்னு போன்?

    டி.வி. நியூஸைக் கேட்டியா?

    இல்லையே?

    ஏன்யா... நம்ம கட்சிக்கு... செயலாளரா இருக்கே? எலெக்ஷன் வேற பக்கத்துல வந்துட்டிருக்கு. டி.வி. நியூஸெல்லாம் கேக்க வேண்டாமா? எந்நேரமும் தண்ணியைப் போட்டுக்கிட்டு இருக்கிறதுதான் கட்சி செயலாளரோட வேலைன்னு நினைச்சுக்கிட்டியா?

    மன்னிக்கணும் தலைவா... அசந்து தூங்கிட்டேன். டி.வி.யில் என்ன நியூஸ்?

    நம்ம கட்சியோட கூட்டணி வெச்சிருந்த மக்கள் நல கட்சி லீடர் மணிமொழி அந்தக் கட்சியிலிருந்து ராஜினாமா பண்ணிட்டு - எதிர்க்கட்சியில் போய் சேர்ந்துட்டா...

    அட...டே!

    உச்சுக் கொட்டாமே... உடனே புறப்பட்டு வாய்யா...! வழியில எந்தப் பேப்பர்காரனாவது பார்த்து - மணிமொழி சம்பந்தமா கேள்வி கேட்டா... எதையாவது உளறி வைக்காதே. நான் பேப்பர்ல அறிக்கை விட்ட பின்னாடி அப்புறமா வாயைத் திறக்கலாம்...

    சரிங்க தலைவரே!

    உடனே புறப்பட்டு வா...

    வானமாமலை ரிசீவரை வைத்து விட்டுத் திரும்ப... டெலிபோன் கூப்பிட்டது.

    எடுத்தார்.

    ஹலோ!

    மிஸ்டர் வானமாமலை இருக்காரா?

    வானமாமலை தான் பேசறேன்...

    நான் தின ஒளி எடிட்டர் சங்கரன்...

    என்ன விஷயம்?

    மணிமொழி கட்சி மாறிட்டாங்களே? அதைப் பற்றி உங்க கருத்து என்ன?

    ஒரு பேரம் நடந்து முடிந்து விட்டது.

    பேரமா...?

    ஆமாம்... மணிமொழி ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு வாங்கப்பட்டு விட்டார். ரொம்ப நாட்களாக நடந்து வந்த பேரம் இன்றைக்கு முடிந்திருக்கிறது.

    அவருடைய விலகல் உங்கள் கூட்டணியை பாதிக்குமா?

    கோபுரம் இடிந்து விடவில்லை. ஒரு செங்கல்தான் உதிர்ந்து கீழே விழுந்திருக்கிறது.

    மணிமொழிக்கு மக்களின் செல்வாக்கு கணிசமாக இருக்கும்போது... அவரது விலகல் உங்கள் கூட்டணியை பாதிக்கத்தானே செய்யும்?

    கட்சி மாறியதால் இனி... மணிமொழியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சரியும்... இந்தத் தேர்தலில் அவர் சேர்ந்திருக்கும் கட்சி மோசமான தோல்வியைச் சந்திக்கும்...

    நீங்க இப்ப சொன்னதைப் பேப்பர்ல அப்படியே போட்டுரட்டுமா சார்...?

    போடுங்க... எனக்கென்ன பயமா? - ரிசீவரை ஆத்திரமாய் சாத்திவிட்டு எழுந்தார் வானமாமலை.

    அறையை குறுக்கும் நெடுக்குமாய் இரண்டு முறை நடந்தார். வாசு! என்று மறுபடியும் இறைந்தார்.

    அய்யா...

    ஒரு ஸ்மால் ஊத்திக் குடு...

    அய்யா! டாக்டர் - உங்களைக் குடிக்கக் கூடாதுன்னு...

    பேசிட்டிருக்காதே... போய் ஊத்திக் கொண்டா...

    அவர் கத்த வாசு உள்ளே ஓடினான். அடுத்த சில நிமிடங்களில் விஸ்கி அசையும் டம்ளரோடு வந்தான். அதை வாங்கி ஒரே மூச்சில்

    Enjoying the preview?
    Page 1 of 1