Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agmark Murder
Agmark Murder
Agmark Murder
Ebook101 pages1 hour

Agmark Murder

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466732
Agmark Murder

Read more from Rajeshkumar

Related to Agmark Murder

Related ebooks

Related categories

Reviews for Agmark Murder

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agmark Murder - Rajeshkumar

    1

    டெல்லி. பாராளுமன்றக் கட்டிடம் காலை மணி 10.15.

    குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க இன்னும் அரைமணி நேரம் அவகாசம் இருக்க கார்களிலும், மாருதி வேன்களிலும் வந்த எம்.பி.க்கள் வீடியோ காமிராக்களுக்கும், போட்டோகிராஃபர்களுக்கும் வலுக்கட்டாயச் சிரிப்பைக் கொடுத்தபடி பாராளுமன்ற முகப்புக் கட்டிட படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

    ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் வார்த்தைகள் சிதறிக் கொண்டிருந்தன.

    என்ன யஷ்வந்த்... பாராளுமன்றத்திற்கு வந்திருக்கிறாய். வழி தவறி வந்துவிட்டாயா...?

    வீட்டில் பெண்டாட்டியின் தொல்லை தாங்க முடியவில்லை. சாயந்தரம் நான்கு மணி வரைக்கும் இங்கே நிம்மதியாய் இருந்துவிட்டுப் போகலாமே...

    ஹலோ மிஸ்டர் பண்டார்... நேற்றைய பேப்பர்கள் எல்லாவற்றிலும் நீங்கள்தான் ஹாட் நியூஸ் போல் இருக்கிறதே...?

    அது பொய்யான நியூஸ். இன்கம்டாக்ஸ் பீப்பிளும் சரி... சி.பி.ஐ. ஆட்களும் சரி, யாருமே என் வீட்டுப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்கிற விஷமத்தனமான வேலைகள். இன்றைக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நாரகேஸ்வரரை ஒரு பிடி பிடிக்கிறேன் பாருங்கள்.

    என்ன மிஸ்டர் பூபேஷ்வர்மா... தொகுதிப் பக்கம் மும்முரமாய்த் திரிந்து சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் போலிருக்கிறதே...?

    பின்னே...? பாராளுமன்றத்திற்கு எந்த நிமிஷத்திலும் இடைத்தேர்தல் வரக்கூடிய வாய்ப்பு உருவாகிக்கொண்டு இருக்கிறதே...!

    இடைத் தேர்தல் இப்போதைக்கு வராது...

    அந்த பூபேஷ்வர்மா தொப்பை குலுங்க பகபகவென்று சிரித்துவிட்டு சொன்னார்.

    இந்தக் கட்சி, ஆட்சியில் இருப்பதும், இல்லாததும் எங்கள் கட்சித் தலைவரின் கையில் இருக்கிறது. அவர் ஆதரவு வாபஸ் என்று சொன்னால் போதும். அடுத்த நிமிடமே பிரதமர் ஆசாத் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

    இந்தப் பேச்சுக் குரல்களுக்கு மத்தியில் வாசலில் சின்னதாய் ஒரு பரபரப்பு அரும்பியது. போலீஸ் சார்ஜெண்ட்கள் பூட்ஸ் சத்தம் ஒலிக்க அந்த வெள்ளை நிற காண்ட்டஸா காரை நோக்கி வேக நடை போட்டு சூழ்ந்தார்கள்.

    காரின் கதவுகள் ஒரு பூவின் இதழ்கள் மாதிரி திறக்கப்பட, உள்துறை மந்திரி கீர்த்தி பட்டேல் மின்னும் வழுக்கைத்தலையோடு கைகளில் ஒரு தடிமனான ஃபைலோடு கீழே இறங்கினார்.

    பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கேள்விகள் பறந்தன்.

    பரபரப்பான ஒரு சூழ்நிலையில் இந்த குளிர்கால பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. விவாதத்துக்கு என்னென்ன விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன என்பதைச் சொல்ல முடியுமா...?

    கீர்த்தி பட்டேல் தன் நரை மீசைக்குக் கீழே பலமாய்ச் சிரித்தார்.

    இது குளிர்கால பாராளுமன்றக் கூட்டம். ஆனால் உள்ளே அனல் பறக்கும் சூடான விவாதங்கள் நடைபெற உள்ளது. விவாதங்கள் சூடாக இருந்தாலும் முடிவில் எல்லாமே சுமூகமாகத்தான் இருக்கும்...

    எதிர்க்கட்சியில் ஒரு பிரிவினர் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்கப் போவதாக சொல்லியுள்ளார்களே?

    அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டதே மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசத்தான். அதை அவர்கள் மறந்துவிட்டு பாராளுமன்றத்தைப் புறக்கணித்தால் இனி வரும் தேர்தல்களில் மக்கள் அவர்களைப் புறக்கணிப்பார்கள். அற்ப விஷயத்திற்கெல்லாம் பாராளுமன்றத்தை ‘பாய்காட்’ செய்தால் அவர்கள் எம்.பி.க்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்.

    உங்கள் ஆட்சி நீடிக்குமா...?

    ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்...?

    இல்லை... ஆளும் கட்சியான உங்களோடு, உங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணி கட்சிகள் நல்ல உறவோடு இருக்கிற மாதிரி தெரியவில்லையே...?

    இது எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரச்சாரம். கூட்டணிக் கட்சிகளோடு எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. இந்த அரசு ஐந்து வருஷம் நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசையும். ஏனென்றால் இன்னொரு பொதுத் தேர்தலைச் சந்திக்க நாட்டு மக்கள் தயாராக இல்லை...

    உங்கள் ஆட்சியில் மந்திரிகளில் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு... அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் உத்தேசம் ஏதாவது உண்டா...?

    அதெல்லாம் கற்பனைக் குற்றச்சாட்டுகள். இட்டுக் கட்டிய பொய்கள். அதற்கெல்லாம் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் சட்டமும், நீதியும் கேலிக்குரிய விஷயங்கள் ஆகிவிடும்...

    கீர்த்தி பட்டேல் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் வாசலில் பரபரப்பு.

    ஒரு நிருபர் சொன்னார்...

    ஸார்... பிரைம் மினிஸ்ட்டர் வந்துவிட்டார். வழக்கத்தைவிட இன்றைக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டார்.

    வெள்ளை நிற அம்பாசிடர், கும்பலின் நடுவே மிதந்து வர ஒரே மாதிரியான நிறத்தில் சபாரி அணிந்த பாதுகாப்பு அதிகாரிகள் காரோடு சேர்ந்து ஓடி வந்தார்கள்.

    வாசலுக்கு வந்து கார் நிற்க, பாதுகாப்பு அதிகாரியால் திறக்கப்பட்ட கார்க் கதவின் வழியாக பளீரென்ற வெள்ளைக் கதராடையில் தலையில் குல்லாயுடன் பிரதமர் ஆசாத் கைகூப்பிக்கொண்டே இறங்கினார். பிரதமருக்கு எழுபது வயது. ஆனால் பத்து வயதைக் குறைத்து மதிப்பிடும் அளவுக்கு யோகா மூலமாகவும், உடற்பயிற்சி மூலமாகவும் உடம்பைப் பளிங்காய் வைத்திருந்தார்.

    உள்துறை மந்திரி கீர்த்தி பட்டேலிடம் மொய்த்துக்கொண்டிருந்த பத்திரிகை நிருபர்கள், இப்போது பிரதம மந்திரியை நோக்கி ஓடிவர, அவர் இரண்டு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டார்.

    நோ... கொஸ்டியன்ஸ் ப்ளீஸ்...

    இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் ஸார்...

    நோ... நோ... மதிய உணவு இடைவேளையின் போது பி.எம். சேம்பருக்கு வாருங்கள். சின்னதாய் ஒரு பிரஸ் மீட் வைத்துக் கொள்வோம்...

    "ஸார்...

    Enjoying the preview?
    Page 1 of 1