Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karupu Vaanavil
Karupu Vaanavil
Karupu Vaanavil
Ebook306 pages2 hours

Karupu Vaanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Karupu Vaanavil

Read more from Rajeshkumar

Related to Karupu Vaanavil

Related ebooks

Related categories

Reviews for Karupu Vaanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karupu Vaanavil - Rajeshkumar

    22

    1

    கண்ணாடி முன் நின்று தன் சுருண்ட முடியை நேர்த்தியாய் சீவிக்கொண்டு இருந்த அரவிந்தை நெருங்கினாள் சொர்ணம். கையில் மணக்க மணக்க காபி. அரவிந்த்...

    என்னம்மா?

    "காபியை

    சூடாகுடிச்சாத்தான் நல்லாயிருக்கும்."

    இதோ.... சீப்பை எறிந்து விட்டு காபி டம்ளரை வாங்கிக்கொண்ட அரவிந்துக்கு இருபத்தைந்து வயது. ஆறடி உயர உடம்பு. எடுப்பான நாசியும் வலது பக்கம் குழிவிழுகிற கன்னமும் எந்தப் பெண்ணையும் சற்றே பேதலிக்க வைத்து 'இவனைக் காதலிக்கலாமா!' என்று யோசிக்க வைக்கும். அவனுடைய கோதுமை நிறத்துக்கு அணிந்திருந்த இளநீல வர்ண சட்டையும் கறுப்பு வண்ண பேண்ட்டும் பாந்தமாயிருந்தது.

    அம்மா... ஒரு வாய் காபி சாப்பிட்ட அரவிந்த் நிமிர்ந்து சொர்ணத்தைப் பார்த்தான். என்னடா?

    அதே பால், அதே காபிப்பொடி, அதே சர்க்கரை, இருந்தாலும் காபியை நீ போடும்போது மட்டும்தாம்மா இவ்வளவுருசி. எப்படியம்மா இது சாத்தியம்?

    சொர்ணம் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும்போதே அரவிந்தின் அக்கா ரேணுகா ஒருமுறைப்புப் பார்வையோடு உள்ளே வந்தாள். இருபத்தியேழு வயதில் அழகாக இருந்தாலும் பணம், நகை இல்லாததால் கல்யாணச்சந்தையில் விலைபோகாதவள்.

    என்னடா சொன்னே? அரவிந்தின் காதைப் பிடித்தாள் ரேணுகா. அம்மா போட்டாத்தான் காபியா?

    இல்ல... இல்ல... நீ போட்டாலும் காபி நல்லாத்தான் இருக்கு... எனக்கு கீழே ரெண்டு பிறந்திருக்கே... அதுக போட்டாத்தான் கழுநீர்த்தண்ணி மாதிரி இருக்கும்...

    வித்யாவும் கலாவும் காபி போட்டால் கழுநீர்த்தண்ணி மாதிரியா இருக்கு?

    ஆமா! மனுசன் குடிப்பானா அதை? நாம் வளர்த்த பூனையொண்ணு வீட்டைவிட்டு ஓடிப்போனதுக்கு என்ன காரணம் தெரியுமா?

    சொல்லு.

    வித்யா ஒருநாள் எனக்கு போட்டுக் கொடுத்த காபியை தட்டுல ஊற்றி பூனைக்கு வைச்சேன். ரெண்டு வாய் நக்கிப் பார்த்துட்டு தலைதெறிக்க புழக்கடைப் பக்கமா அன்னிக்கு ஓடிப்போனதுதான். இந்த வட்டாரத்திலேயே அதைக்காணோம்..

    நீயும் ஓடிப்போயிருக்க வேண்டியதுதானே? பின்பக்கம் எழுந்த குரல் கேட்டு அரவிந்த் திரும்பிப் பார்த்தான்.

    தாவணி உடுத்திய அவனுடைய அழகான இரண்டு தங்கைகள் வித்யாவும், கலாவும் இடுப்புகளில் கைகளை வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

    நீங்க ரெண்டு பேரும் இன்னும் தையல் கிளாசுக்குப் போகலையா?"

    கலாமுறைத்தாள். என்னண்ணா சொன்னே? நாங்க போட்டுத் தர்ற காபி கழுநீர் தண்ணி காபி கழுநீர் தண்ணி மாதிரியா இருக்கு? பூனை ஓடிப்போனதுக்கு நாங்க போட்ட காபிதான் காரணமா?

    அது... வந்து... வந்து

    இனிமேல் எங்க கையால் உனக்கு ஜென்மத்துக்கும் காபி கிடையாது.

    போங்கடி... நீங்களும் உங்க காபியும்! எனக்கு எங்கம்மா இருக்கும்போது என்ன கவலை?

    "ஓஹோ! அப்படியா? இனிமேல் வெளியே போயிட்டு வந்து காபின்னு கேளு... ஆறிப்போன வெந்நீரைக்

    சொர்ணம் குறுக்கிட்டாள்,

    ஏய்... கலா... வித்யா! அண்ணன் ஒரு முக்கியமான இண்டர்வியூக்கு போகத் தயாராயிருக்கும்போது எதுக்காக சண்டை? போய் ரோட்டை எட்டிப்பார்த்து நல்ல சகுனம் வருதான்னு பாருங்க.

    கலாவும் வித்யாவும் முகங்களை தூக்கி வைத்துக் கொண்டு வீதிப்பக்கம் போனார்கள். ரேணுகா சமையல்கட்டைப் பார்க்க நடந்தாள். சொர்ணம் மகனை ஏறிட்டாள்.

    அரவிந்ந்...

    என்னம்மா...?

    இன்னிக்கு இண்டர்வியூக்குப் போற இந்தக் கம்பெனியில் உனக்கு கண்டிப்பா வேலை கிடைச்சுடுமா?

    கிடைச்சுடும். கவலைப்படாதேம்மா...

    இண்டர்வியூவுக்குப் போற ஒவ்வொரு தடவையும் இதே வார்த்தையைத்தான் சொல்லிட்டுப் போறே... திரும்பிவரும்போது உதட்டைப் பிதுக்கிட்டு வர்றே....

    'நான்என்னம்மா பண்றது? முதல் வகுப்பில் எம்.காம். பாஸ் பண்ணியிருக்கேன். விளையாட்டுல எக்கச்சக்கமா மெடல்களை வாங்கிவைச்சிருக்கேன். இண்டர்வியூவ்ல என் சர்ட்டிஃபிகேட்டுகளைப் புரட்டிப் பார்க்கவே பத்து நிமிடமாகும். இவ்வளவு தகுதிகள் இருக்கிற எனக்கு எப்படியும் வேலை கிடைக்கும்ங்கிற நம்பிக்கையோடுதான் போறேன். கேட்கிற கேள்விக்கெல்லாம் மணியடிச்ச மாதிரி பதில் சொல்றேன். கடைசியில் வேற யாருக்கோ அந்த வேலை கிடைச்சுடுது..."

    சொர்ணம் லேசாய் கண்கலங்கினாள், உன் அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தார்னா ஒரு வேலைக்காக இப்படி அலையவேண்டியதே இல்லை...

    அட... ஏம்மா கண்கலங்கறே! இப்ப என்னை இண்டர்வியூக்கு கூப்பிட்டிருக்கிற கம்பெனி தமிழ் நாட்டிலேயே பெரிய கம்பெனி. இந்தியா பூராவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கு.

    உனக்கு வேலை கிடைக்குமா?

    நிச்சயமாகிடைக்கும்மா.

    "என்னமோ பார்க்கலாம்... எல்லாத்துக்கும் அந்த கருமாரியம்மன்தான்

    கண்திறந்து பார்க்கணும்..." அரவிந்த் காபியை குடித்து முடித்துவிட்டு சர்ட்டிபிகேட்

    இருந்த ஃபைலை எடுத்துக் கொண்டான்.

    சொர்ணம் வாசல் பக்கம் பார்த்து குரல் கொடுத்தாள். ஏண்டி கலா! ரோட்ல நல்ல சகுனம் இருக்கா?பார்த்து சொல்லு.

    உம்... வரலாம். ஒரு சுமங்கலிப் பொண்ணு வந்துட்ருக்கா...

    கிளம்புடாஅரவிந்த். அரவிந்த் கக்கத்தில் ஃபைலை அடக்கிக்கொண்டு போட்டோவில் இமைக்காமல் பார்த்த அப்பாவை தொட்டு கும்பிட்டுவிட்டு வாசலுக்கு வந்தான்.

    வித்யாவும் கலாவும் பெரிய மனுசிகளைப் போல் வாழ்த்தினார்கள். எங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் உண்டண்ணா... வேலை கிடைக்கும். தைரியமா போயிட்டுவா...

    வர்றேன் பாட்டிகளா...! அரவிந்த் சிரித்துக்கொண்டே வாசற்படி இறங்கி தெருவில் கால் வைத்து வேகமாய் நடந்தான்.

    இரண்டு தெரு தள்ளி பஸ் ஸ்டாப் இருந்தது. வீட்டில் இருந்த வரைக்கும் மகிழ்ச்சியோடும் மலர்ச்சியோடும் இருந்த அரவிந்த் இப்போது முகம் மாறியிருந்தான். 'இந்த வேலை கிடைக்குமா? அவனுக்கு நம்பிக்கை இல்லை. அந்த கம்பெனியில் காலியாக உள்ள ஒரு அக்கவுண்டண்ட் வேலைக்கு குறைந்த பட்சம் நூறு பேராவது மோதுவார்கள். இதில் எத்தனை பேருக்கு மந்திரிகள் சிபாரிசோ?'

    'இது ஒருவேளை கண்துடைப்பு இண்டர்வியூவாகக் கூட இருக்கலாம்!’

    என்னதம்பி... பொம்பளைமாதிரி தலைகுனிஞ்சுட்டு பார்க்காமலேயே போறீங்க?

    யோசனையிலிருந்து கலைந்து தலை உயர்த்தினான் அரவிந்த், பெட்டிக்கடை வாசலில் கல்யாணத்தரகர் ராமசாமி நின்றிருந்தார். அப்பா காலத்து மனிதர்.

    நான் கவனிக்கலை...

    இண்டர்வியூக்கு போறீங்க போலிருக்கு?

    ஆமாம்.

    "எந்த கம்பெனி?

    கங்காகவுரி குரூப்ஸ்...

    அடடே... பெரிய கம்பெனியாச்சே அது. அந்தக் கம்பெனியிலிருந்து இண்டர்வியூ கார்டு வர்றதே பெரிய விஷயம் எப்படி... வேலை கிடைச்சுடுமா?

    அந்த நம்பிக்கையில்தான் போயிட்டிருக்கேன்...

    இதோ பாருங்க தம்பி! இந்தக் காலத்துல வெறும் நம்பிக்கை மட்டும் போதாது. வேலைவாங்கறதுக்கு வேற வழிகளும் வேணும். சிபாரிசுக்கு யாரையாவது பிடிச்சிருக்கீங்களா?

    இல்லை.

    என்ன தம்பி நீங்க? வீட்டுல இருக்கிற நிலவரம் புரியாமே இன்னும் சின்னக் குழந்தையாவே இருக்கீங்க. உங்கப்பா ஒரு சுதந்திர போராட்ட வீரர்ங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக மாசா மாசம் ரெண்டாயிரம் ரூபாய் மானியத் தொகையா வருது. உங்க தங்கைங்க ரெண்டு பேரும் தையல் கிளாஸ் வைச்சு நடத்தறது மூலமா கொஞ்சம் பணம் வருது. ஏதோ பசி பட்டினி இல்லாமல் வாழ்க்கை ஓடிட்டிருந்தாலும் பொண்ணுங்களுக்கு கல்யாணம் நடக்க வேண்டாமா...? உங்க அக்காவுக்கு வயசு இருபத்தேழு. தங்கச்சிகளும் கல்யாண வயசுக்கு வந்து, உன்னைப் பார் என்னைப் பார்ன்னு ஜோடி போட்டுக்கிட்டு நிக்கறாங்க... அந்த வீட்டுல இருக்கிற ஒரே ஒரு ஆண் நீங்க. உங்களுக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைச்சாத்தானே... நீங்க சீர்வரிசை சரியா பண்ணுவீங்கங்கிற தைரியத்துல உங்க வீட்டுக்கு பொண்ணு எடுக்க வருவாங்க...

    அரவிந்த் முகம் இருண்டு போய் தலை குனிந்தபடி நிற்க, பெரியவர் தொடர்ந்தார்.

    தம்பி! நான் ஒரு கல்யாணத் தரகராயிருந்தாலும் உங்க அப்பா காலத்து நண்பன். உங்க அக்கா ரேணுகாவுக்கு எத்தனையோ மாப்பிள்ளைகளை நான் பார்த்துட்டேன். மாப்பிள்ளைகளுக்கு பெண்ணைப் பிடிக்குது. ஆனால் மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும் கணிசமா சவரன்களை எதிர்பார்க்கிறாங்க. இன்னும் சில பேர் பொண்ணோட தம்பி வேலைக்கு போறதாயிருந்தாலும் பரவாயில்லை... அவனுக்கும் வேலை இல்லைன்னு சொல்றீங்க.... அந்தக் குடும்பத்துல போய் எப்படி பெண் எடுக்கிறதுன்னு கேட்கிறாங்க... மாப்பிள்ளை பார்த்து எனக்கு சலிச்சுபோச்சு தம்பி... உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கலைன்னா இந்த ஜென்மத்துல உங்க அக்கா தங்கச்சிகளுக்கு கல்யாணம் நடக்காது..." கண்களில் நீரோடு நிமிர்ந்தான் அரவிந்த்.

    நான் என்னங்க பண்ணட்டும்? கடந்த ரெண்டு வருடமா ஒரு வேலை கிடைக்காதான்னு நாய் மாதிரி அலைஞ்சிட்டுதான் இருக்கேன். இண்டர்வியூ நல்லா பண்றேன். ஆனா வேலை கிடைக்க மாட்டேங்குது...

    நம்மதொகுதி எம்.எல்.ஏ.வைப் போய் பார்த்தீங்களா?

    போய்ப்பார்த்தேன்.

    என்ன சொன்னார்?

    ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டார். என்னால் முடியாதுன்னு சொல்லிட்டேன்...

    தரகர் பெருமூச்சுவிட்டார். எப்படியோ ஒரு நல்ல வேலையில் சேர்ந்துடுங்க. தம்பி. இல்லேன்னா உங்ககூடப் பிறந்த மூணும் கன்னிக்கடன் கழியாமே காலம் பூராவும் வீட்டுல உட்கார்ந்துட்டிருக்க வேண்டியதுதான்.

    அரவிந்த் ஒன்றும் பேசாமல் தலையாட்டி விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

    கங்காகவுரி குரூப்ஸ் கட்டிடம் ஏழுமாடிகளோடு ஒரு கேக்துண்டம் மாதிரி நின்றிருக்க- வெளியே பார்க்கிங்கில் பல்வேறு ஜாதிகார்கள் தெரிந்தன.

    இண்டர்வியூ அறைக்குள் நுழைந்த அரவிந்துக்கு மார்பு அடைத்துக் கொண்டது. அறை முழுக்க போடப் பட்டிருந்த நூற்றுக்கணக்கான நாற்காலிகளில் இண்டர்வியூவுக்காக வந்திருந்த இளைஞர்கள் பட்டாளம் உட்கார்ந்து இருந்தது. அதில் பாதிப்பேர் பெண்கள். 'இந்த வேலை கிடைத்த மாதிரிதான்!'

    அரவிந்த் தளர்ந்து போய் அங்கிருந்த நாற்காலியொன்றில சாய்ந்தான். மனசுக்குள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் பிறாண்டிக்கொண்டு இருந்தது.

    சரியாய் பத்து மணிக்கெல்லாம் இண்டர்வியூ தொடங்கியது.

    அரவிந்த் உள்ளே அழைக்கப்பட்டபோது பதினோம் மணி. வியர்த்து வழிந்து கொண்டு அந்த மேனேஜிங் டைரக்டரின் குளிர்சாதன அறைக்குள் நுழைந்தான்.

    மேனேஜிங் டைரக்டர் கருணசேகர் ஐம்பது வயதில் புன்னகை முகத்தோடு தெரிந்தார். நெற்றியில் சின்னதாய் குங்குமப் பொட்டு, கதர் வேட்டி, கதர் சட்டை.

    குட்மார்னிங்சார்.

    அவர் புன்னகை பெரிதாயிற்று. எதுக்கு தம்பி குட்மார்னிங்கெல்லாம்? தமிழில் அழகா 'வணக்கம்' என்று சொல்லக்கூடாதா?

    வ... வ... வணக்கம் சார்...

    உட்கார்தம்பி அரவிந்த் உட்காராமல் சரசரவென்று மேசையைச் சுற்றிக் கொண்டு போய் அவருடைய கால்களில் விழுந்தான். அடடே! என்ன தம்பி இதெல்லாம்? எழுந்திரு...

    சார்... இந்த வேலை... எனக்கு கண்டிப்பா வேணும். என் அப்பா ஒரு சுதந்திரப் போராட்டகால வீரர். அவர் இப்போ உயிரோடு இல்லை. எனக்கு இந்த வேலை கிடைச்சாதான் என் அக்காவுக்கும் ரெண்டு தங்கைகளுக்கு கல்யாணம் நடக்கும்... எனக்கு இங்கே வேலை கிடைக்காட்டி... நான் தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேறு வழியில்லை... கண்களில் நீர்வழிய சொல்லிக்கொண்டே எழுந்தான் அரவிந்த்.

    கருணசேகர் கையமர்த்தினார்.

    அரவிந்த் கண்களை துடைத்துக்கொண்டே போய் அமர - அவர் கையில் பேப்பர் வெயிட்டை வைத்து உருட்டிக்கொண்டே சொன்னார்

    தம்பி! இந்தக் கம்பெனியில் சிபாரிசு எதுவும் செல்லாது. இங்கே திறமைசாலிகளுக்குத்தான் வேலை. இருக்கிற ஒரு அக்கவுண்ட்டண்ட் வேலைக்கு நூத்தி அறுபத்தேழு பேர் அப்ளை பண்ணியிருக்காங்க. அந்த நூத்தி அறுபத்தேழு பேர்ல நீ திறமைசாலியா இருந்தால் உனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும். உன்ஃபைலைக் கொடு.

    கொடுத்தான்.

    சர்ட்டிஃபிகேட்களையெல்லாம் புரட்டிப் பார்த்தவர் மலர்ந்தார், பரவாயில்லையே! படிப்பு, விளையாட்டு ரெண்டிலேயும் பிரகாசமா இருந்திருக்கே! நீ இண்டர்வியூ முடியற வரைக்கும் வெயிட் பண்ணு. மத்தவங்களுக்கு இண்டர்வியூவை முடிச்சுட்டு உனக்கு பதிலைச் சொல்றேன்.

    நன்றி சார்.

    அரவிந்த் கைகளைக் குவித்துவிட்டு ஒரு நூலிழை - நம்பிக்கையோடு வெளியே வந்தான்.

    இண்டர்வியூ முடியும்போது மத்தியானம் இரண்டு மணி.

    எல்லோரும் போய்விட்டு இருக்க -

    Enjoying the preview?
    Page 1 of 1