Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inimel Charumathi
Inimel Charumathi
Inimel Charumathi
Ebook124 pages47 minutes

Inimel Charumathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Inimel Charumathi

Read more from Rajeshkumar

Related to Inimel Charumathi

Related ebooks

Related categories

Reviews for Inimel Charumathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inimel Charumathi - Rajeshkumar

    12

    1

    ராம்நகர் காளிதாஸ் ரோடின் ஏறக்குறைய க... டை... சி...யில் ஒரு பாரிஜாத மரத்துக்குக் கீழே இருந்த ராமநாதனின் வீட்டில் - அவருடைய அறையில் வழக்கம் போல் ஐந்து மணிக்கு வைக்கப்பட்ட அலாரம் காலை ஆறு மணிக்கு சாவகாசமாய் அடித்தது.

    ராமநாதனின் கம்பளிப் போர்வை கசமுசாவென்று கலைய ராமநாதன் எழுந்து உட்கார்ந்தார். கண்களைக் கசக்கிக் கொண்டார்.

    இராமநாதனுக்கு வயது 50லிருந்து 55க்குள். சராசரி உயரத்தில் - நரைத்த தலையோடு சிவப்பாய் இருந்தார். பத்து வருடங்களுக்கு முன்பே மனைவி கஸ்தூரியைப் பூவும் பொட்டுமாய் அனுப்பிவிட்டு, தினசரி அவளுடைய காபினட் சைஸ் போட்டோவுக்கு மாலை போட்டுக் கொண்டிருப்பவர். கோவை நகர சந்தடியை விட்டுப் பத்து கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சின்னக்குயிலி கிராமத்து ஆரம்பப் பாடசாலையில் ஹெச். எம். என்ற அந்தஸ்தோடு - கிராமத்துப் பசங்களோடு மாரடிப்பவர். ரிடையராக இன்னமும் நான்கைந்து வருடங்கள் இருந்தாலும் ‘கட்டாய ஓய்வை’ வாங்கிக் கொள்ளலாமா என்று இந்த ஒரு மாத காலமாய் யோசித்துக் கொண்டிருப்பவர்.

    அவருடைய அப்பா விட்டுச் சென்ற சொத்து ஒரு ஓட்டு வீடு.

    அவருடைய மனைவி கஸ்தூரி விட்டு சென்ற சொத்து சாருமதி.

    ராமநாதன் கட்டிலை விட்டு இறங்கி - தளர்வாய் இருந்த வேஷ்டியை நன்றாக முடிந்து கொண்டு ஜன்னல் பக்கமாய்ச் சென்று கதவைத் திறந்து விட்டார்.

    சாரு... அம்மா... சாரு!

    வழக்கமாய் வரும் காபிக்காக சமையலறையை நோக்கிக் குரல் கொடுத்தார் ராமநாதன். பதிலுக்குக் குரல் பாத்ரூமிலிருந்து வந்தது. பட்டு நூலை ஸ்பரிசித்த மாதிரி குரல்.

    அப்பா...! நாள் குளிச்சிட்டிருக்கேன் ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க, வந்துடறேன்...!

    என்னம்மா நீ...? காப்பியைக் கொடுத்துட்டு குளிக்கப் போயிருக்கக் கூடாதா? கண்விழிச்சதுமே காப்பி எங்கேன்னு கேக்கிற நாக்கம்மா என்னோடது. இன்னிக்கு வெள்ளிக்கிழமை தலைக்கு வேற குளிப்பே. எப்படியும் பதினஞ்சு நிமிஷமாயிடும்! ஒரு குழந்தையின் கோபத்தோடு சிணுங்கினார் ராமநாதன்.

    அப்போ... ஒண்ணு செய்யறீங்களாப்பா!

    என்னம்மா...?

    குக்கர்ல பால் சூடா இருக்கு. டிக்காஷனை இறக்கி வெச்சிருக்கேன். சர்க்கரையை அளவாப் போட்டு நீங்களே காப்பி கலந்து சாப்பிடுங்கப்பா...!

    வேண்டாம்மா... எனக்கு நானே தண்டனையைக் குடுத்துக்க எனக்கு இஷ்டமில்லை... எத்தனை அஞ்சு நிமிஷமானாலும் பரவாயில்லை. நீயே வந்து காப்பியைக் கலக்கிக் குடும்மா. அது வரைக்கும் நான் பேப்பரை மேயறேன் - ராமநாதன் முன்புற அறைக்கு வந்து டீபாயின் மேல் கிடந்த நேற்றைய சாயங்காலப் பேப்பரை எடுத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தார்.

    ‘சிலுக்குக்குக் கடுமையான ஜலதோஷம். படப்பிடிப்பு ரத்து’ என்கிற செய்தியிலிருந்து ஈரான் ஈராக் கடைசி நிமிஷப் போர் முஸ்தீபுகள் வரை பேப்பரை அலசிவிட்டு தலை நிமிர்கையில் வாசலில் ஓசைப்படாமல் வந்து நிற்கும் அந்த க்ரே நிற அம்பாஸிடர் கார் கண்ணில் பட்டது.

    ராமநாதன் பேப்பரை மடித்து டீபாயின் மேல் எறிந்து விட்டு எழுந்தார். காரின் இரண்டு பக்கக் கதவுகளைத் திறந்தபடி அந்த இளைஞர்கள் வெளிப்பட்டார்கள்.

    ஒருவன் குறுந்தாடியில் தெரிய -

    இன்னொருவன் மோவாயிலும், மேலுதட்டிலும் சுத்தமாய் வழித்திருந்தான்.

    வாசலில் கொட்டிக் கிடந்த பாரிஜாதப் பூக்களை பூட்ஸ் காலால் எத்திக் கொண்டே வாசற்படி ஏறினார்கள் இருவரும். அவர்கள் காலிங்பெல்லைத் தொடுவதற்கு முன்பே கதவுகளை விரிய வைத்த ராமநாதன் புருவத்தை உயர்த்தி அவர்களைப் பார்த்தார்.

    குறுந்தாடி பவ்யமாய்க் கேட்டான்.

    மாடலிங் கேர்ள் மிஸ் சாருமதியோட வீடு இதுதானே?

    ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தார் ராமநாதன்.

    நாங்க... ஜே அண்ட் ஜே அட்வர்டைஸர்ஸ்... நான் ஜோயல் இவன் ஜேத்ராம். ஒரு விளம்பர விஷயமா மிஸ் சாருமதியைக் கன்சல்ட் பண்ணணும்...!

    உள்ளே வாங்க...!

    உள்ளே வந்தார்கள்.

    ஷூவைக் கழட்டிடுங்க... ப்ளீஸ்! ராமநாதன் சொல்ல இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஓகே! தோளைக் குலுக்கிக் கொண்டு ஷூவை உருவி வாசற்படியிலேயே போட்டு விட்டு அறைக்குள் நுழைந்தார்கள். நாற்காலிகளைக் காட்டினார் ராமநாதன்.

    நுனி நாற்காலியில் உட்கார்ந்த குறுந்தாடி தலையைச் சாய்த்தபடி கேட்டான்.

    நீங்க... மிஸ் சாருமதிக்கு ஃபாதரா?

    எஸ்! - தலையை ஆட்டியபடியே உள்ளே போனார் ராமநாதன்.

    சாருமதி குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள். அசர வைக்கிற அழகு. ரோஜா இதழின் உள் மடிப்பு நிறம். குளித்ததில் நிறம் தற்காலிகமாய்க் கூடியிருந்தது. கண்களுக்கு ஒரு காக்டெயில் பார்ட்டி நடத்தும் சக்தி இருந்தது. வெளிர் நீல வண்ண க்ரிம்ப் சேலையிலும், அதே நிற பிளவுஸிலும் ஒரு மேகத்துணுக்குக் கூட இல்லாத பகல் நேரத்து நீலவானமாய்த் தெரிந்தாள்.

    ஸாரிப்பா! கொஞ்சம் லேட்டாயிடுச்சு! சமையலறையை நோக்கி நடந்தாள் சாருமதி. உடம்பு பூராவும் அவசரம் ததும்பியது.

    "அம்மா... சாரு...! காப்பியைக் கொஞ்சம் அதிகமா கலந்துடு. உன்னைப் பார்த்துப் பேசலாம்னு யாரோ ரெண்டு பேர் வந்திருக்காங்க...!’’

    சாருமதி நின்றாள். யாருப்பா அவங்க...?

    ஜே அண்ட் ஜே அட்வர்டைஸர்ஸாம்... ஒரு விளம்பர போஸுக்காக உன்கிட்ட விசாரிக்கறதுக்கு வந்திருக்காங்க...!

    ‘பேரு புதுசா இருக்கே...!’ - யோசித்தபடியே சமையலறைக்குள் நுழைந்து - யோசித்தபடியே காப்பியைக் கலந்து - யோசித்தபடியே டம்ளர்களில் எடுத்துக் கொண்டு - யோசித்தபடியே முன் அறைக்கு வந்தாள்.

    குட்மார்னிங் மிஸ் சாருமதி..! குறுந்தாடியும், சுத்தமான மோவாயும் சேர்ந்து வாயை அசைத்தார்கள். இருவருடைய பார்வையும் சாருமதியின் உடம்பை அவசர அவசரமாய் அலம்பியது. கண்கள் சந்தோஷ அலைகளைப் பரஸ்பரம் எழுப்பிக் கொண்டன.

    குட்மார்னிங்! போத் ஆப் யூ ஜென்டில்மென்! - என்று சொல்லி காப்பி டம்ளர்களை டீபாயின் மேல் பரப்பி விட்டுத் தானும் எதிரே இருந்த நாற்காலியில் சாய்ந்தாள்.

    நாங்க ஜே அண்ட் ஜே அட்வர்டைஸர்ஸ்.

    அப்பா சொன்னார். காப்பி சாப்பிடுங்க...!

    தேங்க்யூ! - டம்ளர்களை எடுத்து உதட்டுக்குக் கொடுத்தார்கள்.

    ராமநாதன் காபியை ஒரே இழுப்பில் உறிஞ்சிவிட்டு, அம்மா - சாரு நீ இவங்ககிட்ட வந்த விஷயத்தைப் பேசி முடி... நான் குளியலை முடிச்சுகிட்டு வந்துடறேன்...! என்றார்.

    சரிப்பா! சாருமதி தலையை அசைக்க ராமநாதன் பாத்ரூமை நோக்கிப் போனார். சாருமதி எதிரே உட்கார்ந்திருந்தவர்களை அளந்தாள்.

    என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...? கொஞ்சம் முன்னுக்குச் சாய்ந்து மெல்லிய குரலில் கேட்டாள் சாருமதி.

    ஷ்யூர்...! தோள்களைக் குலுக்கிக் கொண்ட குறுந்தாடி கர்வம் தம்பட்டம் அடிக்கும் குரலில் சொன்னான். "இந்தியாவில் இருக்கிற எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளுக்கும் நாங்க அட்வர்டைஸிங் மீடியமா இருக்கோம். பெஸ்ட் போட்டோ கிராபர்ஸாவும் இருக்கோம். நீங்க சம்பந்தப்பட்ட சில விளம்பரங்களை ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பார்த்தோம். வீ ஆர் அஸ்டானிஷ்ட் பை தெம். குறிப்பாச் சொல்லணும்னா அந்த வாசமதி மில்ஸ் சேலைகளுக்காக மகாபலிபுர சிற்பங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1