Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaagitha Iruthayangal
Kaagitha Iruthayangal
Kaagitha Iruthayangal
Ebook95 pages45 minutes

Kaagitha Iruthayangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kaagitha Iruthayangal

Read more from Rajeshkumar

Related to Kaagitha Iruthayangal

Related ebooks

Related categories

Reviews for Kaagitha Iruthayangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaagitha Iruthayangal - Rajeshkumar

    22

    1

    கோவை. மத்திய பஸ் நிலையம்.

    மழைச்சாரல் அடிக்கும் மத்தியான வேளை. சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு என்று பெயர் பலகை தெரிந்த அத்தனை பஸ்களிலும் ஜனங்களின் முகங்கள் நெருக்கமாய் முளைத்திருக்க. கண்டக்டர்களும், டிரைவர்களும் பிளாட்பாரத்தில் நின்று டீ குடித்து சிகரெட் புகையோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

    ‘‘சண்முகம்! இந்தியா இந்த கடனை அடைக்கும்ன்னு நம்பறியா?"

    இந்தியா மத்த நாடுகளுக்கு கடனை திருப்பிக் குடுக்குதோ... இல்லையோ... அதைப்பத்தி எனக்கு கவலையில்லை... சோமு... என்னோட கவலையெல்லாம் போன மாசம் நீ என்கிட்டயிருந்து வாங்கின ஐம்பது ரூபாயை திருப்பிக் குடுப்பியோ இல்லையோன்னுதான்

    சிரிப்பலை கிளம்பியது

    அவர்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போதே –

    அந்த இளைஞன் பக்கத்தில் வந்து நின்றான். அழகாக இருந்தான். தூக்கி வாரிய க்ராப்.

    ‘‘வால்பாறை போகணும்...! பஸ் எந்த ப்ளாட்பாரம்...?’’

    "அதோ... பஸ் நின்னுட்டிருக்கு... போய் ஏறிக்கோ...’’ கண்டக்டர் ஒருவர் தள்ளி நின்றிருந்த சேரன் பஸ்ஸைக் காட்ட -

    வேக வேகமாய் போய் பஸ்ஸுக்குள் ஏறினான்.

    ‘‘எங்கே ஸார் போகணும்...?’’

    "வால்பாறை...’’

    "ம்... ஏறுங்க...’’

    பஸ் எப்ப புறப்படும்...?

    "லோடானதும்...’’

    இளைஞன் சாய்ந்து உட்கார்ந்து, முன்புறக் கண்ணாடியின் வழியே மழையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

    "க்கும்...’’

    தொண்டையின் கனைப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்தான் இளைஞன். அந்தப் பெண் நின்றிருந் தாள். எக்ஸ்க்யூஸ்மீ... குரல், உதடு, கண்கள் எல்லாமே அழகு.

    "எஸ்...’’

    சுற்றும் முற்றும் பாத்தபடி - ‘‘நீங்க ஒரு உதவி பண்ணனும்...’’ என்றாள் மெல்லிய குரலில். கண்கள் ளில் நீர் பளபளத்தது.

    "என்ன...?’’

    குரல் தழுதழுத்தது.

    பஸ் கிளம்பிப் போகிற வரைக்கும்... உங்க பக்கத்துல உட்கார்ந்துக்க எனக்கு அனுமதி தரணும்...

    "எதுக்கு...?’’

    "உட்கார்ந்துட்டு காரணத்தைச் சொல்றேன். ப்ளீஸ்... அலவ் பண்ணுங்க... உங்களுக்கு புண்ணியமா போகும்...’’ கையெடுத்து கும்பிட்டாள்.

    இளைஞன் அவளை ஏறிட்டான். முகத்தில் செல்வச் செழிப்பும் குடும்பப் பாங்கும் தெரிந்தது. கண்களில் பயமும் நீரும் முண்டியடித்தன.

    ‘‘உட்கார்...’’

    இளைஞன் நகர்ந்து இடம் கொடுத்தான். அவள் உட்கார்ந்து கொண்டே சேலைத் தலைப்பை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டாள்.

    ‘‘தேங்க்ஸ்...’’

    "மொதல்ல... விஷயத்தை சொல்லு...’’

    எங்கப்பா வால்பாறையில் ஒரு எஸ்டேட் ஓனர்... அவருக்கு நான் ஒரே பொண்ணு. போன வருஷம்தான் எனக்கு கல்யாணமாச்சு... கோயமுத்தூரில் இருக்கிற ஒருத்தர்க்குத்தான் வாழ்க்கை பட்டேன். கல்யாணம் ஆன நாளிலிருந்து... என்னோட கணவரும், மாமியாரும் பணம் பணம்’ன்னு கேட்டு கொடுமைப்படுத்துவாங்க. எங்கப்பாவும் ஆயிரக்கணக்கில் பணத்தை குடுத்திருக்கார். போன மாசம் ஒரு பிசினஸை ஆரம்பிக்கிறதுக்காக ஒரு லட்ச ரூபாய் வேணும்ன்னு அப்பாகிட்டே கேட்டாங்க. அப்பா தரமாட்டேன்னு சொல்லிட்டார். அன்னியிலிருந்து என்னை வால்பாறைக்கு போய் உங்கப்பாவை பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. நானும் மனசைகட்டுப்படுத்திகிட்டு போகாமே இருந்தேன்... ஆனா ஒரு மணிநேரத்துக்கு முந்தி இந்த தந்தி எனக்கு வந்தது.

    கையில் கசக்கி வைத்திருந்த இளஞ்சிவப்பான அந்த தந்தியைக் காட்டினாள். இளைஞன் வாங்கிப் பார்த்தான்.

    FATHER SERIOUS - MANAGER.

    அவன் அந்த வாசகத்தை படித்துக் கொண்டிருக்கும் போதே அவள் சொன்னாள்.

    "உயிருக்கு போராடிகிட்டு இருக்கிற எங்கப்பாவை பார்த்துட்டு வந்துடறேன்னு சொல்லி எவ்வளவோதூரம் கெஞ்சினேன். என் மாமியாரும், கணவனும் விடலை. ஒரு ரூம்ல போட்டு அடைச்சுட்டாங்க... நான் அவங்களை ஏமாத்திட்டு எப்படியோ வந்துட்டேன். நான் தப்பிச்சதை அவங்க... கண்டுபிடிச்சுட்டா... நேரா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து என்னை தேடுவாங்க... தனியா, எந்த பெண்ணாவது உட்கார்ந்திருக்காளான்னுதான் பார்ப்பாங்க... உங்க பக்கத்துல நான் உட்கார்ந்துகிட்டா... அவங்க கண்ணை ஏமாத்திடலாம். பஸ் புறப்பட்டு சிட்டி அவுட்டரை தாண்டற வரைக்கும் உங்க பக்கத்துல உட்கார்ந்துக்கிறேன். உங்களை என் அண்ணனா நினைச்சு...’’

    இளைஞன் கையமர்த்தினான்.

    "நீ தாராளமா வால்பாறை வரைக்குமே என் பக்கத்துல உட்கார்ந்துட்டு வரலாம்...’’

    "ரொம்ப... ரொம்ப தேங்க்ஸ்...’’ கண்ணீரில் நனைந்த கண்களை சேலைத்தலைப்பால் ஒற்றிக் கொண்டே பஸ்ஸுக்கு வெளியே பார்வையை துரத்தி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

    ‘‘அவங்க வந்துடுவாங்கன்னு பயப்படறியா...?"

    "ஆமா...’’

    "அவங்க வரட்டும். நான் பேசிக்கிறேன்.’’

    "அய்யய்யோ... சண்டையெல்லாம் வேண்டாங்க...’’

    "சண்டை போடமாட்டேன்... உன்பக்கம் இருக்கிற நியாயத்தை எடுத்துச் சொல்வேன் அவ்வளவுதான்... ஆமா உன் பேரென்ன...?’’

    ‘‘காயத்ரி...’’

    ‘‘உன் கணவர் என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1