Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yours Murderly
Yours Murderly
Yours Murderly
Ebook99 pages54 minutes

Yours Murderly

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Yours Murderly

Read more from Rajeshkumar

Related to Yours Murderly

Related ebooks

Related categories

Reviews for Yours Murderly

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yours Murderly - Rajeshkumar

    20

    1

    அவன் பார்த்திபன். விடியற்காலை இளம் குளிரை - ஆரோக்கியமான காற்றை - நாசி நிறைய இழுத்தான். கடந்த ஐந்து வருஷங்களாய் சிறைக் கம்பிகளுக்கு நடுவே நடந்தவன் கருங்கல்லை ஆத்திரத்தோடு உடைத்தவன் - களியையும், கீரைக் குழம்பையும் முகச் சுளிப்போட்டு சாப்பிட்டவன் இந்த நிமிஷம்தான் சிறைவாசம் முடிந்துபோய்! சுதந்திர மண்ணை ஸ்பரிசிக்கிறான். விடுதலைக் காற்றை சுவாசிக்கிறான்.

    ஜெயிலர் கொடுத்த எழுநூறு ரூபாயும் சொற்ப சில்லறையும் அவனுக்குள் புதுத் தெம்பைப் பாய்ச்சின. தூங்குமூஞ்சி மரத்துக்குக் கீழிருந்த இடத்தை ஆக்ரமித்திருந்த அந்த டீக்கடையை சமீபித்தான். பாய்லரின் வெம்மையான கணப்புக்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டான்.

    டீக்கடை நாயர் குசலம் விசாரித்தான்.

    இன்னிக்குத்தான் ரிலீஸோ...?’’

    பார்த்தீபன் தலையை உயர்த்தி நாயரைப் பார்த்துப் புன்னகைத்தான். ‘ஆமாம்’ என்கிற பாவனையில் தலையை அசைத்தான்.

    "எத்தினி வருஷம்?’’

    நாயர் விடாமல் கேட்க –

    "மூன்று...’’

    பார்த்திபன் குறைத்துச் சொன்னாள்.

    எந்தா கேஸ்...?

    பார்த்திபனின் முகப்பரப்பில் கடுமை ஒரு கோட் அடித்துக் கொண்டது. அவனின் முக மாற்றத்தைப் பார்த்த நாயர் துணுக்குற்றான். ‘இதற்கு மேலே அவனிடம் பேசினால் தொந்தரவு நமக்குத்தான்!’ நினைத்துக் கொண்ட நாயர் பேச்சை மாற்றினான்.

    டீ எப்படி... லைட்டா... ஸ்ட்ராங்கா?

    கேட்டுக் கொண்டே பாய்லரின் தலையில் நிலக்கரியைக் கொட்டினான். கரி சடசடத்தது.

    பார்த்திபன், "ஸட்ராங்’’ என்று சொல்லி பக்கத்து ஆசாமி படித்து விட்டு பெஞ்ச்சில் போட்ட பேப்பரை உருவி எடுத்து கண்களை அதில் பரவ ஆரம்பித்தான். நாயர் கொண்டு வந்து வைத்த டீயை உறிஞ்சிக் கொண்டே பேப்பர் செய்தியை மேய்ந்தான்.

    நாயர் ஏளனத் தொனியில் அருகாமை ஆசாமியிடம் சொன்னான்.

    ‘‘மூணு வருஷ ஜெயில் வாசத்துக்கப்புறம் குடிக்கிற முதல் டீ... இந்த கேசவநாயருடையதாக்கும்...!’’

    பார்த்திபன் நிமிர்ந்தான். இருக்கையினின்றும் சட்டென எழுந்தான். நாயரின் சமீபம் வந்து நின்றான்.

    ‘‘நான்... எதுக்காக ஜெயிலுக்குப் போனேன்னு அப்போ கேட்டியே... இப்ப பதில் சொல்லட்டுமா...?"

    பார்த்திபனின் வெப்பமான வார்த்தைகளைப் பார்த்து துணியளவு கலக்கமாய் பார்த்தான் நாயர். பார்த்திபன் தொடர்ந்தான்.

    ‘‘இது மாதிரி கேலிப் பேச்சு பேசின ஒருத்தனை ரெண்டா வெட்டிப் போட்டேன்... அதுக்காக...’’

    நாயர் கலக்கமாக அவனைப் பார்க்க - ஒரு மூன்று ரூபாயை மேஜையில் வைத்துவிட்டு - கடையை விட்டு வெளியேறினான். சுற்றுப்புறம் பூராவும் இருட்டு சூரியனால் பளிச்சென்று கழுவப்பட்டிருந்தது.

    அந்த நீண்ட சாலையின் துவக்கத்தில் மெதுவாக நடையிட்டான். கலைந்த தலை. எரியும் விழிகள். மோவாய்ப் பகுதியில் மொரமொரத்த ரோமப் பயிர். கசங்கலாயிருந்த வெளிர் நிற ஸ்லாக். பழுப்பு நிறத்தில் சாயம் போன பான்ட் தன்னையே குனிந்து ஒரு தரம் பார்த்துக் கொண்டான்.

    மனசு ஐந்து வருஷங்களுக்கு முந்திய நாட்களை நிதானமாய் அசைபோட ஆரம்பித்தது.

    மனைவி கீதா சூரியப்பிரகாசமாய் கண்ணெதிரே கலந்தாள். ஏராளமான அழகோடு - அஜந்தா சித்திரம் மாதிரி அவனைச் சுற்றி சற்றி வந்து தன்னைத் தாமே மறக்கடிக்க வைக்கிற கீதா. தாலுக்கா ஆபீஸில் கிளர்க் ஊழிய நிமித்தமாய் ஐந்து மணி வரை லெட்ஜரைப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டு - அவசர அவசரமாய் ஆர்வ ஆர்வமாய் வீட்டுக்கு ஓட்டம். கீதாவின் வரவேற்பு வாசலிலேயே... சாயந்தர டிபன்... டிரஸ்ஸிங்... பிறகு சினிமா... பார்க்... நாடகம். இல்லையென்றால் ஷாப்பிங்... ஏதோ ஒன்றுடன் தினந்தோறும் ஐக்கியமான அந்த ஆனந்தமான நாட்கள்...

    அன்றைய தினம் - பார்த்திபன் வீட்டு வாசலைத் தொட்டபோது கீதா, வரவேற்க

    உறவு... நம்ம டாக்டர்கிட்டே போயிருந்தேன். அங்கே இவரைப் பார்த்தேன்...’’

    ஆர்வமாக கீதா அறிமுகப்படுத்துகையில் - பார்த்திபனுள் லேசாக சந்தேக விதைகள் சில தூவின.

    "க்ளாட் டு மீட் யூ...’’

    அவன் சிரித்தான். சிரிக்கிற போது இன்னமும் நிறைய கவர்ச்சி சிந்தினான்.

    பார்த்திபன் நகர்ந்து போய் முகம் கழுவிக் கொண்டிருந்தபோது - டிரஸ் செய்து கொண்ட போது - கீதாவும், சம்பத்தும் சேர்ந்து பேசுகிற - ஜோக் அடிக்கிற - பெரிதாய்ச் சிரிக்கிற சப்தங்கள் அவனின் இருதயப் பிரதேசத்தை வெடி வைத்துத் தகர்த்தது.

    உனக்கென்ன ஆயிற்று பார்த்திபன்? அவனை... அந்த சம்பவத்தை பார்த்து உனக்குள் ஏன் இத்தனை உளைச்சல்...? சகஜமாயிரு...!

    தகர்ந்து போன இருதயத்தை ஒட்ட வைத்துக் கொண்டு - மீண்டும் முன் அறைக்கு வந்தபோது - மறுபடியும் பொடிப்பொடியாக உதிர்ந்தான்.

    ‘பார்த்திபன் - கீதா’ திருமண போட்டோ ஆல்பத்தை கீதா சோபாவில் உட்கார்ந்து அவனுக்கு காட்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு... அருகே... மிக அருகே... மிக மிக அருகே... அவன் வேண்டுமென்றே...

    "கீதா...’’

    பார்த்திபன் உறுமினான்.

    கீதா படு இயல்பாகத் திரும்பினாள்.

    "சம்பத் என்ன சொல்கிறார் தெரியுமா...? இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1