Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum August 15
Meendum August 15
Meendum August 15
Ebook201 pages1 hour

Meendum August 15

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Meendum August 15

Read more from Rajeshkumar

Related to Meendum August 15

Related ebooks

Related categories

Reviews for Meendum August 15

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum August 15 - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    பொன்னான நிகழ்காலம்

    நீங்கள் கோரியது கிடைக்கவில்லை என்றாலும் ஆண்டவன் மேல் நம்பிக்கை வையுங்கள். 100 கோரிக்கைகளில் 99 கோரிக்கைகள் மறுக்கப்பட்டால் கூட நம்பிக்கையை இழக்காமல் இருங்கள். அவ்வாறு இருந்தால் இறுதியில் எதையும் வேண்டாத மேலான ஒன்றை அடைவீர்கள். நீங்கள் ஆண்டவனை எவ்வளவு அதிகமாக நம்புகிறீர்களோ அந்த அளவுக்கு அவன் உங்களை சோதிப்பான். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்: நீங்கள் பத்தாண்டு காலம் பிரார்த்தனை செய்தும் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். வேறொருவர் ஒரு நிமிடமே பிரார்த்தனை செய்து எல்லாவற்றையும் அடைந்து இருக்கலாம். பிரார்த்தனையின் தரமே நீங்கள் எவ்வளவு நேர்மையாக - உண்மையாக - உள்ளம் உருகப் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. பிறர் நலன் பாதிக்காத வகையில் உங்கள் பிரார்த்தனை இருக்க வேண்டும்.

    1

    தீட்சண்யா தனக்கு எதிரே உட்கார்ந்து இருந்த நபரிடம் தீர்மானமான குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்:

    ஸாரி.... ஸார்...! எங்க ‘ரெட் ஸ்டார்’ டி.வி.யில் எந்த ஒரு சீரியலையும் ஒரு வருஷத்துக்கு மேல டெலிகாஸ்ட் பண்ண ‘அலவ்’ பண்றது இல்லை. நீங்க இன்னும் 4 எபிசோட்களில் சீரியலை முடிங்க. அப்புறம் ஆறு மாசம் வெயிட் பண்ணி ஒரு புது சீரியலை ஸ்டார்ட் பண்ணுங்க. நல்ல ப்ரைம் டைமாவே தர்றோம். அது தவிர... என்று மேற்கொண்டு தீட்சண்யா பேசப் பேச - எதிரே உட்கார்ந்து இருந்த நபர் சற்றே கோபத்தோடு அவளை ஏறிட்டார். நான் உங்க எம்.டி.யைப் பார்க்கணும். இந்த சீரியல் விஷயமாய் நான் அவர்கிட்ட பேசணும். உங்ககிட்ட பேசி பிரயோஜனமில்லை.

    எம்.டி. இப்ப ரொம்பவும் பிஸி. அவரைப் பார்க்க எனக்கே நேரம் கிடைக்கிறது இல்லை. ரெண்டு நாள் கழிச்சு வாங்க. நான் அவர்கிட்டே பேசி அப்பாய்ண்மெண்ட் வாங்கித் தர்றேன்.

    நான் இன்னிக்கே அவரைப் பார்த்து பேசணும்.

    ஸாரி ஸார்...! அவரோட டெய்லி ஷெட்யூல் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். இன்னிக்கு அவர் ரொம்பவே என்கேஜ்ட்.... நானாக அவர்க்கு போன் பண்ணி பேச முடியாது. அவராகவே என்னை காண்டாக்ட் பண்ணினால்தான் பேச முடியும். ப்ளீஸ்... ட்ரை... டூ அண்டர்ஸ்டாண்ட் மீ...!

    அவரோட செல் நெம்பர் குடுங்கம்மா. நான் பேசறேன்.

    எனக்கு அவரோட செல்போன் நெம்பர் தெரியாது.

    நம்பற மாதிரி இல்லையே?

    நீங்க நம்பினாலும் சரி, நம்பாமே போனாலும் சரி... இப்ப நான் சொன்னதுதான் உண்மை.

    தீட்சண்யா சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவளுக்கு முன்பாய் இருந்த இண்ட்டர்காம் முணுமுணுப்பாய்க் கூப்பிட்டது. ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்தாள். மறுமுனையில் டி.வி. சேனலின் மேனேஜிங் டைரக்டர் அமிர்தரூபன் பேசினார்.

    தீட்சண்யா..!

    ஸார்...?

    ஒரு ரெண்டு நிமிஷம் என்னோட ரூமுக்கு வந்துட்டு போம்மா.

    ஸ... ஸார்... ஒரு விஷயம்...!

    என்ன...?

    ஸார்! நம்ம டி.வி.யில் டெலிகாஸ்ட் ஆயிட்டு இருக்கிற ‘உன்னால் முடியும் பெண்ணே!’ சீரியலின் தயாரிப்பாளர் ஜோதிமாணிக்கம் இங்கே வந்து இருக்கிறார். உங்களைப் பார்த்து பேசணுமாம்.

    விஷயம் என்னான்னு கேட்டியாம்மா...?

    கேட்டேன் ஸார்... அவரோட சீரியலை இன்னும் நாலு வாரத்துக்குள்ளே முடிக்க சொல்லியிருந்தோம். அதுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

    அப்படியா...! அவரையும் கூட்டிட்டு என்னோட ரூமுக்கு வாம்மா. நான் அவர்கிட்டே பேசிக்கறேன்.

    தீட்சண்யா ரிஸீவரை வைத்துவிட்டு எதிரே உட்கார்ந்திருந்த ஜோதிமாணிக்கத்தை ஏறிட்டாள்.

    எம்.டி. உங்களையும் கூப்பிடறார். வாங்க போலாம்.

    பார்த்தீங்களாம்மா...! என்னோட பேரைச் சொன்னதும் உங்க எம்.டி. வரச்சொல்லிட்டார்.

    தீட்சண்யா தனக்கு முன்பாய் இருந்த கம்ப்யூட்டரை லாக் செய்து விட்டு எழுந்தாள். ஜோதிமாணிக்கம் அவளுக்கு இணையாய் நடந்துவர மூன்றாவது மாடியில் இருந்த எம்.டி.யின் அறையை நோக்கி நடை போட்டாள்.

    லிஃப்ட்டில் உயர்ந்து மூன்றாவது மாடியைத் தொட்டு எம்.டி.யின் அறைக்குள் நுழைந்தபோது அவர் ஃப்ளாஸ்கில் இருந்த மோரை கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தார். ஜோதிமாணிக்கத்தைப் பார்த்து புன்சிரிப்போடு கேட்டார் - அந்த அறுபது வயது அமிர்தரூபன்.

    எப்படி இருக்கீங்க ஜோதிமாணிக்கம்?

    நல்லாயிருக்கேன் ஸார்.

    உங்க சீரியல் ‘உன்னால் முடியும் பெண்ணே!’ எப்படிப் போயிட்டிருக்கு...?

    வெரிவெல் கோயிங் ஸார்...! ஸ்பான்ஸர் நல்லா வருது. யூனிட்ல இருக்கிற எல்லாரும் ஹேப்பியாய் இருக்காங்க. இப்படி எல்லாமே சாதக விஷயங்களாய் இருந்தாலும் உங்க டி.வி. சீஃப் ப்ரோக்ராமர் இன்னிக்கு காலையில் என்னை போன்ல கூப்பிட்டு சீரியலை நாலு வாரத்துக்குள்ளே முடிச்சுக்க சொன்னதும் நான் அப்படியே அதிர்ந்து போயிட்டேன். நல்லா போயிட்டு இருக்கிற சீரியலை எதுக்காக நிறுத்தணும்னு தெரியலை. அதான் உங்களைப் பார்த்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன்.

    ரொம்ப சந்தோஷம்... உட்கார்ங்க.

    ஜோதி மாணிக்கம் உட்கார்ந்தார்.

    மோர் சாப்பிடறீங்களா...?

    வேண்டாம் ஸார். ரெண்டு நாளாய் கோல்ட்.

    அமிர்தரூபன் தீட்சண்யாவை ஏறிட்டார்.

    நீ சாப்ட்றியாம்மா...?

    வேண்டாம் ஸார். நான் இப்பத்தான் டீ சாப்பிட்டேன்.

    இட்ஸ் ஓ.கே.! என்றவர் டம்ளரில் இருந்த மோரை ஒரே மூச்சில் வயிற்றுக்கு வார்த்துவிட்டு நிமிர்ந்தார். கர்ச்சீப்பால் உதடுகளை ஒற்றிக் கொண்டே கேட்டார்.

    சொல்லுங்க ஜோதிமாணிக்கம்...! என்கிட்டே என்ன பேசணும்...?

    ‘உன்னால் முடியும் பெண்ணே!’ சீரியலை இன்னும் ஒரு ஆறு மாசத்துக்காவது டெலிகாஸ்ட் பண்ண நீங்க அனுமதிக்கணும்.

    எங்க சீஃப் ப்ரோக்ராமர் உங்ககிட்டே என்ன சொன்னார்?

    நாலு வாரத்துக்குள்ளே சீரியலை முடிச்சுக்கச் சொன்னார்.

    அவர் சொன்னபடியே முடிச்சுக்குங்க.

    என்ன ஸார்...! அவர் சொல்ற மாதிரியே நீங்களும் சொல்றீங்க?

    அவரை அப்படி சொல்லச் சொன்னதே நான்தானே...?

    ஜோதிமாணிக்கம் முகம் மாறினார். என்ன ஸார்.... எதுக்காக இப்படியொரு திடீர் முடிவு...?

    உங்க சீரியல் போன மாசம் வரை நல்லாயிருந்தது. அதுக்கப்புறம் வந்த எபிசோடுகள் சரியில்லை. தகாத உறவுகளை நியாயப்படுத்தற மாதிரியான காட்சிகள், வசனங்கள் - ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை மறைமுகமாய் தாக்கறதாய் புகார். சீரியல் டைரக்டர்களை அடிக்கடி மாத்தறீங்க. எல்லாத்துக்கும் மேலாய் ஆரம்பத்துல சொன்ன கதை வேற; இப்ப சொல்லிட்டு இருக்கிற கதை வேற. இப்படி எத்தனையோ குறைகளை சொல்லிட்டே போகலாம்.

    ஸார்! நீங்க சொல்றதையெல்லாம் குறைகளாகவே வெச்சுகிட்டாலும் என்னோட சீரியலோட டி.ஆர்.பி. ரேட்டிங் டாப்ல இருக்கு. போன வாரம் பதினோரு புள்ளி... தெரியுமா?

    அது எனக்குத் தெரியாதா என்ன?

    தெரிஞ்சுமா... சீரியலை முடிக்கச் சொல்றீங்க...?

    அமிர்தரூபன் மெல்லச் சிரித்தார். மிஸ்டர் ஜோதிமாணிக்கம்! எங்களுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் முக்கியம் இல்லை. தரமான சீரியல்தான் முக்கியம். டாஸ்மாக் கடையில் கூட்டம் இருக்குங்கிறதுக்காக அதை நம்மால மதிக்க முடியுமா...? உங்க சீரியல் இப்ப சரியில்லை. ஏதாவது ஒரு மாதர் சங்கத்துல இருந்து தினசரி ஒரு கண்டனக் கடிதம் வருது.

    அதெல்லாம் பொறாமை பிடிச்சவங்க பண்ற வேலை ஸார்.

    இந்த சப்பைக் கட்டு வேலையெல்லாம்... வேண்டாம். எது உண்மை, எது பொய்ன்னு எனக்குத் தெரியும்.

    முடிவா என்ன ஸார் சொல்றீங்க?

    இன்னும் நாலு எபிசோட்ல சீரியலை முடிக்கச் சொல்றேன்.

    அது முடியாது ஸார்...

    அப்படீன்னா ரெண்டு எபிசோட்ல சீரியலை முடிங்க...

    என்ன கிண்டலா...? இந்த ஜோதிமாணிக்கம் யார்ன்னு உங்களுக்குத் தெரியலை. நான் யார்ன்னு கூடிய சீக்கிரம் காட்டறேன்.

    கூடிய சீக்கிரம்ன்னா எவ்வளவு நாள்? பத்து நாளா.... பதினஞ்சு நாளா...?

    ஜோதிமாணிக்கம் பதில் சொல்லாமல், அமிர்தரூபனை

    Enjoying the preview?
    Page 1 of 1