Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanithiru Vizhithiru
Thanithiru Vizhithiru
Thanithiru Vizhithiru
Ebook140 pages34 minutes

Thanithiru Vizhithiru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thanithiru Vizhithiru

Read more from Rajeshkumar

Related to Thanithiru Vizhithiru

Related ebooks

Related categories

Reviews for Thanithiru Vizhithiru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanithiru Vizhithiru - Rajeshkumar

    16

    1

    அட்சதா...!

    காலை பதினோரு மணியின் ஆபீஸ் காண்டீனின் கூட்ட நெரிசலில் தயிர்சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்த அட்சதா தனக்கு பின்பக்கம் எழுந்த குரல் கேட்டுத் திரும்பினாள்.

    ஸ்டெனோ மகிளா நின்றிருந்தாள்.

    என்ன மகி...?

    சாப்பிட்டு முடிச்சாச்சா...? இல்லையா...?

    ம்... ஆச்சு... ஏன்...?

    உன்னை ஜி. எம். கூப்பிட்டார்...

    எ... எதுக்கு...? அட்சதாவின் தொண்டைக்குள் தயிர்சாதக் கவளம் ஒரு விநாடி நின்று இறங்கியது.

    அந்த மகிளா சிரித்தாள். நான் எதுக்குன்னு கேட்க முடியுமா...? போய் என்னான்னு கேட்டுட்டு வந்து நீதான் சொல்லணும்

    அட்சதா தயிர்சாதத்தை அவசர அவசரமாய் முடித்துக்கொண்டு எழுந்தாள். வாஷ்பேசினில் கையைக் கழுவும்போதும், காண்டீனை விட்டு வெளியே வந்து அந்த மத்தியான வெய்யிலில் வேர்க்க விறுவிறுக்க நடந்தபோதும் மூளைக்குள் கேள்வி குடைந்தது.

    ‘ஜி.எம். எதுக்காக கூப்பிட்டிருப்பார்...?’

    இங்கே வேலைக்கு சேர்ந்த இந்த இரண்டு வருஷ காலத்தில் ஜி.எம். அவளைக் கூப்பிடுவது இதுதான் முதல் தடவை. காலை நேரங்களில் அவர் எதிர்ப்படும்போது ‘குட்மார்னிங்’ சொல்வதோடு சரி. இதுவரைக்கும் அவர்க்கு முன்பாய் நின்று இரண்டு வார்த்தை பேசியது கூட இல்லை.

    ‘இப்போது பர்சனலாக எதற்காக கூப்பிட்டிருப்பார்?’

    அட்சதாவுக்கு நெற்றியிலும் பின்னங் கழுத்திலும் ‘குப்’பென்று வியர்த்தது. வேகமாய் நடந்து ஆபீஸ் முகப்பின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளேபோனாள். செண்ட்ரலைஸ்ட் ஏ.ஸி. குளிர் அவளை சட்டென்று நனைத்தது. கையில் வைத்திருந்த சிறிய பூப்போட்ட கர்ச்சீஃபால் நெற்றி வியர்வையை ஒற்றிக்கொண்டு காற்று வாங்கிக்கொண்டிருந்த லிஃப்ட்டுக்குள் நுழைந்து ஜி.எம்.மின் அறை இருந்த இரண்டாவது மாடிக்குப்போனாள்.

    லிஃப்ட்டினின்றும் வெளிப்பட்டு வராந்தாவில் வேகநடை போட்டு கடைசியில் இருந்த ஜி.எம்.மின் அறைக்கு முன்பாய் போய் நின்றாள். இருதயம் முழுவதும் மாண்டியா கலவரம். கண்ணாடிக் கதவுக்கு அப்பால் ஜி.எம். குணசேகர் எக்ஸிக்யூடிவ் நாற்காலியில் அரைவட்டம் போட்டுக்கொண்டே ரிம்லஸ் ஸ்பெக்ஸில் ஒரு ஃபைலைப் புரட்டிக்கொண்டிருந்தார். அட்சதா மெல்லத் தட்டினாள்.

    டொக்... டொக்...

    குணசேகரின் வழுக்கைத்தலை திரும்பியது. அவளைப் பார்த்து உள்ளே வரும்படி கையசைந்தது. அட்சதா கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனாள்.

    குட் ஆஃப்டர்நூன் ஸார்...!

    குட் ஆஃப்டர்நூன்...! உட்கார்ம்மா... ஃபைலைப் பார்த்துக்கொண்டே தனக்கு முன்னால் இருந்த நாற்காலியைக் கை காட்டினார் குணசேகர்.

    பரவாயில்ல ஸார் நிக்கறேன்...!

    சாப்பிட்டியாம்மா...?

    சாப்பிட்டேன் ஸார்...!

    குணசேகர் பார்த்துக்கொண்டிருந்த ஃபைலை மேஜையின் ஒரு ஓரத்துக்கு தள்ளி வைத்துவிட்டு அவளிடம் நிமிர்ந்தார்.

    கொஞ்ச நேரத்துக்கு முந்தி உன்னோட அண்ணன் உனக்கு போன் பண்ணியிருந்தார்ம்மா... உன்னோட செக்ஷன்ல எல்லா ஸ்டாஃபும் லஞ்சுக்கு போயிட்டதால போனை நான் அட்டெண்ட் பண்ணினேன்.

    ‘அண்ணன் என்ன சொன்னார் ஸார்’ என்று கேட்பதற்குள் குணசேகர் தொடர்ந்தார்.

    உன்னை மத்தியானத்துக்கு மேல் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வரச்சொன்னாரம்மா...

    லீவு போடச்சொன்னாரா...? எதுக்கு ஸார்...?

    எனக்குத் தெரியல்லேம்மா... பேசும்போது ரொம்பவும் டென்ஷனாயிருந்தார். நானும் என்ன விஷயம்ன்னு கேட்டேன். அவர் எதுவும் சொல்லலை... ஏதோ முக்கியமான விஷயம் இருக்கப்போய்த்தான் போன் பண்ணியிருக்கார்ன்னு நினைக்கிறேன். உன் வீட்ல போன் இருந்தா காண்டாக்ட் பண்ணிப்பாரும்மா...

    வீட்ல போன் கிடையாது ஸார்...!

    பக்கத்து வீடுகள்ல...?

    ஸார்...! நாங்க குடியிருக்கிற பகுதி ஒரு எக்ஸ்டன்ஷன் ஏரியா. பக்கத்துல வீடுகள் இல்லை. இப்பத்தான் கட்டிகிட்டு இருக்காங்க. ஏதாவது போன் பண்ணனும்ன்னா ரெண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துதான் மெயின்ரோட்டில் இருக்கிற எஸ்.டி.டி. பூத்தில் பேச முடியும்...

    நீ குடியிருக்கிறது எந்த ஏரியாம்மா...?

    செம்மேடு போகிற வழியில் கல்பனா நகர் ஸார்...!

    ரொம்பவும் ரிமோட்டட் ஏரியாவாச்சே...? இவ்வளவு பெரிய கோயமுத்தூர் சிட்டியில் குடிபோக உனக்கு இடமா கிடைக்கலை...?

    என்ன ஸார்... பண்றது...? சிட்டியில் வீடு பார்த்தா அட்வான்ஸ் அம்பதாயிரமும், மாச வாடகை ரெண்டாயிரமும் தரணும்... சிட்டிக்கு அவுட்டர்ல போயிட்டா எண்ணூறு ரூபாய் வாடகையில் பெரிய வீடாவே கிடைக்கும். அட்வான்ஸும் பெரிய தொகையா கொடுக்க வேண்டியதில்லை...!

    வீட்ல நீயும் உன்னோட அண்ணனும் மட்டும்தானா...?

    ஆமா ஸார்...! அப்பாவும் அம்மாவும் நான் ஸ்கூல் ஃபைனல் படிக்கும்போதே காலமாயிட்டாங்க... அதுக்கப்புறம் என்னை வளர்த்தது, படிக்க வெச்சது எல்லாமே என்னோட அண்ணன்தான் ஸார்.

    அண்ணன் பேர் என்னம்மா...?

    சபாபதி ஸார்...!

    அவர் எங்கே வேலை பார்க்கிறார்...?

    அண்ணனுக்கு இன்னும் வேலை கிடைக்கலை ஸார். எம்.சி.ஏ. படிச்சு முடிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்காக ரெண்டு வருஷமா வெயிட் பண்ணிட்டிருக்கார்.

    அப்படீன்னா... உன்னோட சம்பாத்தியத்துலதான் பொழுது ஓடிகிட்டிருக்குன்னு சொல்லு...?

    ஆமா... ஸார்...! ஏதோ பூர்வ ஜென்மத்துல நான் பண்ணின - புண்ணியம் இப்படிப்பட்ட ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைச்சிருக்கு...

    சரி... நீ புறப்படம்மா... ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கப்போய்த்தான், உன்னோட அண்ணன் போன் பண்ணியிருக்கார். நீ நாளைக்கு வந்து ஹெட் கிளார்க்கிட்டே லீவ் லெட்டர் கொடுத்துக்கலாம்...

    ரொம்ப நன்றி ஸார்...! கைகளைக்

    Enjoying the preview?
    Page 1 of 1