Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Paadal Paadu
Puthiya Paadal Paadu
Puthiya Paadal Paadu
Ebook138 pages38 minutes

Puthiya Paadal Paadu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Puthiya Paadal Paadu

Read more from Rajeshkumar

Related to Puthiya Paadal Paadu

Related ebooks

Related categories

Reviews for Puthiya Paadal Paadu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Paadal Paadu - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அற்புதா!

    அம்மா அழைக்கிற குரல் கேட்டு - டிபன் பாக்ஸில் தயிர் சாதத்தை வைத்து அடைத்துக் கொண்டிருந்த அற்புதா, திரும்பாமலேயே கேட்டாள்.

    என்னவாம்...?

    தனம் பெருமூச்சு விட்டாள்.

    உன்னோட ஆபீஸ் எம்.டி.கிட்டே இன்னிக்காவது லோனைப் பத்தி பேசி... கல்யாணத்துக்கு சரியா இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு...

    ம்...ம்...

    ம்...ம்ம...ன்னா என்னடி அர்த்தம்...?

    சரி கேக்கறேன்னு அர்த்தம்.

    அலமாரியில் ஊறு காய் பாட்டிலை எடுத்து - ஸ்பூனினால் ஒரு பத்தையை அள்ளி தயிர் சாதத்தின் மேல் போட்டு மூடினாள்.

    கேட்ட லோன் இருபதாயிரமும் கிடைக்குமா?

    அவ்வளவெல்லாம் எதிர்பார்க்க முடியாது... பத்தாயிரத்திலிருந்து பதினஞ்சாயிரத்துக்குளே கிடைக்கும்...

    போதாதுன்னா என்ன பண்றது...?

    "இருக்கிறதை வெச்சுட்டு சமாளிக்க வேண்டியதுதான். இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்... ரெண்டு வருஷம் போகட்டும்ன்னு தலை தலையா அடிச்சுகிட்டேன். நீ கேக்கலை... இப்ப கல்யாணத்தை நிச்சயம் பண்ணிட்டு லோனை வாங்குன்னு என்னை கிளறிட்டிருக்கே... எம்.டி. வெளிநாட்டுக்கெல்லாம் போய்ட்டு நேத்துதான் வந்தார். வாங்கிட்டு வந்த எக்ஸ்போர்ட் ஆர்டர்ஸ் சம்பந்தமா மானேஜர்கிட்டேயும் - ப்ரொடக்ஷன் இன்ஜினியர்கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணவே நேரம் அவர்க்கு சரியா இருக்கு... லோனைப் பற்றி மானேஜர் கிட்டே கேட்டா... ‘பொறும்மா! ஃபைல் எம்.டி. டேபிள் மேலே இருக்கு... அவர் பார்த்து கையெழுத்து போட்டுட்டார்ன்னா... உடனே உனக்கு பணத்தை குடுக்க ஏற்பாடு பண்ணிடுவேன்’னு சொல்றார். அற்புதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே - பெருமூச்சுவிட்டபடி - அம்மாக்காரி தனம், சமையறைக்குள் நுழைந்தாள்.

    நம்ம... ஆத்திரமும் அவசியமும் அவங்களுக்கு எங்கே புரியப்போகுது... லோன் பணம் கைக்கு வந்தா... பேங்க்ல வெச்சிருக்கிற நகையை மீட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்...

    இன்னிக்கு... எப்படியும் எம்.டி.யைப் பார்த்து லோன் விஷயமா பேசிடறேன். டிபன் பாக்ஸை வயர் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள் அற்புதா. சிறிய வாட்டர் கேனையும் உள்ளே சொருகினாள்.

    அம்மா... நான் வர்றேன்...

    பஸ்ஸுக்கு சில்லரை எடுத்துகிட்டியா...?

    எடுத்துகிட்டேன்...

    இப்படி பக்கத்துல வா...

    எதுக்கு...?

    வா... சொல்றேன்... வந்தாள். தனம் தன் இரண்டு கைகளால் - அற்புதாவின் முகத்தை வருடி நெட்டி முறித்தாள்.

    என் கண்ணே பட்டுடும் போலிருக்கு...

    போம்மா... உனக்கு வேற வேலை இல்லை...

    நில்லுடி! திருஷ்டி பொட்டு வெச்சுடறேன்...

    நீ ஒண்ணையும் வெக்க வேண்டாம்... எனக்கு பஸ்ஸுக்கு நேரமாச்சு... இந்த பஸ்ஸை கோட்டைவிட்டா... அரைமணி நேரம் பஸ் ஸ்டாண்ட்ல தவம் இருக்க வேண்டியதுதான்.

    அற்புதா பையை தோளில் மாட்டிக் கொண்டு - கால்களில் செருப்பை பொருத்திக் கொள்வதற்காக - முன்பக்கம் வந்த பொழுது - வாசலில் அந்த காண்டஸா க்ளாஸிக், க்ரீம் நிற உடம்போடு வந்து நின்றது.

    கார் யாருடையது என்பது சட்டென்று தனத்துக்கு புரிந்துபோக - அவள் சன்னமான குரலில் பதறினாள்.

    அற்புதா... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க... கார்ல வர்றாங்க

    அற்புதா கார்க்குள் பார்வையைக் கொண்டு போனாள். பின் சீட்டில் யாருமில்லை. டிரைவர் மட்டும் கீழே இறங்கி வந்தான்.

    வணக்கம்மா...

    உள்ளே வாப்பா... தனம் கூப்பிட்டாள்.

    மாப்பிள்ளை வீட்டிலிருந்து டிரைவர் என்ன தகவலைக் கொண்டு வந்திருக்கிறான் - என்று தெரிந்து கொள்வதற்காக நின்றாள் அற்புதா. அவன் தனத்திடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

    உங்க பொண்ணோட கை வளையல் அளவு வேணுமின்னு முதலாளியம்மா சொல்லிட்டிருக்காங்க...

    எதுக்கு...?

    கல் வெச்சு வளையல் பண்ணணுமாம்... தனம், அகலமாய் மலர்ந்தாள். இருந்தாலும் சந்தோஷத்தைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

    இப்ப எதுக்கு...?

    எனக்கு அதைப்பத்தியெல்லாம் தெரியாதும்மா... முதலாளியம்மா உங்க பொண்ணோட கைவளையல் அளவு வாங்கிட்டு வரச் சொன்னாங்க. நகை பண்ற ஆசாரி வீட்ல வந்து காத்திட்டிருக்கான்...

    தனம் அற்புதாவை ஏறிட்டாள்.

    நீ போட்டிருக்கிற கண்ணாடி வளையல்ல ஒண்ணைக் கழட்டி குடு... அற்புதா...

    அற்புதா தயங்க - தனம் மறுபடியும் சொன்னாள்.

    ம்... கழட்டி... குடு! டிரைவர் காத்திட்டிருக்கார் இல்லையா...?

    அற்புதா தன் வலது கையிலிருந்த - கண்ணாடி வளையல் ஒன்றை மெல்ல உருவி நீட்ட - டிரைவர் அதை வாங்கி - சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

    நான் வர்றேம்மா...

    அவன் போனதும் தனம் பாய்ந்து வந்து மகளைக் கட்டிக் கொண்டாள்.

    நீ அதிர்ஷ்டக்காரிடி...! மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோட மனசைப் பார்த்தியா கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு நகைகளை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...

    ம்...ம்ம்...

    ஏண்டி... உனக்கு சந்தோஷமாய் இல்லையா...?

    சந்தோஷம்தான்...

    அதை சிரிச்சுகிட்டுத்தான் சொல்லேன்...?

    நான் வர்றேன்... பஸ் போயிடும்... அற்புதா கால்களுக்கு செருப்பைக் கொடுத்தபடி வாசற்படி இறங்கினாள்.

    குறுகலான அந்தத் தெரு - காலை

    Enjoying the preview?
    Page 1 of 1