Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andre, Appothe, Antha Nimishame!
Andre, Appothe, Antha Nimishame!
Andre, Appothe, Antha Nimishame!
Ebook165 pages48 minutes

Andre, Appothe, Antha Nimishame!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Andre, Appothe, Antha Nimishame!

Read more from Rajeshkumar

Related to Andre, Appothe, Antha Nimishame!

Related ebooks

Related categories

Reviews for Andre, Appothe, Antha Nimishame!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andre, Appothe, Antha Nimishame! - Rajeshkumar

    27

    1

    "அடப்பாவி! நீ நல்லாயிருப்பியா? இப்படி வாய் கூசாமே - நெஞ்சு கொள்ளாமே பொய் சொல்றியே? நீயெல்லாம் உருப்படுவியா? அபாண்டமா பொய் சொன்னா அங்கம் பூராவும் அங்குலம் அங்குலமா அழுகி - நாறி - கார்ப்பரேஷன் குப்பை வண்டியில தான் உன்னைய அள்ளிட்டு போவாங்க... நான் கண்ணு மூடறதுக்குள்ளே இது நடக்கத்தான் போகுது.. உன் பொண்டாட்டியையும் புள்ளைகளையும் பேதி வாரிட்டு போகட்டும்..."

    அந்தக் காலை நேரத்தில் - திடீரென்று எழுந்த ஒரு பெண்ணின் கூக்குரல் சத்தத்தைக் கேட்டதும் ட்யூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா திடுக்கிட்டு போய் நிமிர்ந்தாள். புத்தகங்களைத் தள்ளி வைத்து விட்டு எதிரே உட்கார்ந்திருந்த கல்பனாவைக் கேட்டாள்.

    யாரது... சத்தம் போடறது...?

    தெரியலை மிஸ்... பக்கத்து பங்களாவிலிருந்து சத்தம் வருது...

    ஐஸ்வர்யா எழுந்து போய் - மாடி ஜன்னல் கதவைத் திறந்து பார்வையை வெளியே போட்டாள்.

    எதிர் பங்களாவின் விஸ்தாரமான போர்டிகோ பரப்பு தெரிந்தது. காரட் நிற மாருதி கார்க்கு பக்கத்தில் டென்னீஸ் ராக்கெட்டை சுழற்றியபடி அந்த இளைஞன் அலட்சியமாய் நின்றிருக்க - அவனுக்கு கொஞ்சம் தள்ளி - கூந்தல் அவிழ்ந்த நிலையில் ஒரு பெண் ஆக்ரோஷமாய் தெரிந்தாள். கர்ப்பிணிப் பெண் - வயிறு பம்மலாய் தெரிந்தது. மார்புகள் ஆவேசமாய் மூச்சிறைத்தது.

    அந்த இளைஞன் டென்னீஸ் ராக்கெட்டை ஆட்டி அமர்த்தலாய் சொன்னான். இதோ... பார்... காலங்கார்த்தாலே இங்கே வந்து நின்னுகிட்டு ஏதாவது சத்தம் போட்டுட்டு இருந்தா எனக்கு கெட்ட கோபம் வந்துடும்.. மரியாதையா வெளியே போயிடு.

    நான் போக மாட்டேன். எம் புருஷன் பத்து வருஷமா உங்க பங்களாவில நாய் மாதிரி ஒழைச்சார். அவர் மேல அநியாயமா திருட்டு பட்டம் கட்டி போலீஸ் கையில புடிச்சு குடுத்திருக்கியே... நீ உருப்படுவியா...

    திருடின உம் புருஷனை.. போலீஸ்ல பிடிச்சுக் குடுக்காமே... ராஜமரியாதையோட ஊர்வலமா கூட்டிகிட்டு போவாங்களா...?

    அந்த அங்காளம்மன் சாமி மேலே சத்தியமா நான் சொல்றேன். எம் புருஷன் திருடியிருக்க மாட்டார். வெத்திலை பாக்கு போடறதே கெட்ட பழக்கம்ன்னு சொல்ற எம் புருஷனா திருடுவார்?

    உம் புருஷன் திருடானா இல்லையாங்கிறதை போலீஸ் ஸ்டேஷன்ல போய் பேசிக்க. போ.. டென்னீஸ் ராக்கெட் வைத்திருந்த இளைஞன் பேசிக் கொண்டே காரின் ட்ரைவிங் சீட்டை நோக்கிப் போக - அந்தப் பெண் விருட்டென்று நகர்ந்து - அவனுக்கு முன்பாய் போய் நின்றாள். தலை முடியை முடிந்து கொண்டாள்.

    உன்னை நான் போக விட மாட்டேன்... எம் புருஷன் ஜெயிலுக்கு போயிட்டா... வயித்துல புள்ளையோடு இருக்கிற நான் பொழைப்புக்கு என்ன பண்ணுவேன்... எனக்கொரு வழி சொல்லிட்டு போ...

    அந்த இளைஞன் திரும்பி நின்று - பங்களாவின் உட்பக்கம் பார்த்து குரல் கொடுத்தான். டாட்... நீங்க கொஞ்சம் வெளியே வர்றீங்களா? இந்த பொம்பளை என்னைப் போக விட மாட்டேங்கிறா...

    அடுத்த நிமிஷம் -

    அபாரமான உயரத்தில் - கையில் விரித்த பேப்பரோடு - கண்ணாடி அணிந்த அந்த வழுக்கைத்தலை மனிதர் வெளிப்பட்டார். முகத்தில் கோபம் தத்தளித்தது.

    மரியாதையா வெளியே போயிடு... புள்ளைச்தாச்சின்னு பார்க்காமே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவேன்...

    என்னது! கழுத்தை புடிச்சு தள்ளுவியா? தள்ளு பார்க்கலாம்.... நீ ஆம்பளையா இருந்தா எம்மேல கை வை பார்க்கலாம்.... அவள் சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக் கொண்டு - வழுக்கைத்தலை மனிதரை உக்கிரமாய் பார்த்தாள்.

    அவர் பேப்பரை வீசியெறிந்து விட்டு புன்னகைத்தார். என் வீட்ல எச்சி சோறு சாப்பிட்ட உனக்கு இவ்வளவு துணிச்சல் இருந்தா... சோறு போட்ட எனக்கு... எவ்வளவு துணிச்சல் இருக்கும். உன்னை... கழுத்தைப் பிடிச்சு தள்றதுக்காக - உம்மேல நான் கையை வெக்க வேண்டிய அவசியமே இல்லை.. என் வீட்டு நாயே... அந்த வேலையைச் செய்யும்... என்று சொன்னவர் தோட்டத்துப் பக்கமாய் திரும்பி நின்று குரல் கொடுத்தார்.

    டே.. மருதமுத்து!

    தோட்டத்துக்கு மத்தியிலிருந்து - முண்டாசு கட்டின ஒரு ஆள் வேக வேகமாய் ஓடி வந்தான்.

    அய்யா...

    டாமியை அவுத்துகிட்டு வா...

    சரிங்கய்யா...

    அவன் நகர..

    எதிர் பங்களா ஜன்னலினின்றும் பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவுக்கு ரத்தம் லேசாய் சூடேறியது. ‘என்ன ஒரு மிருகத்தனமான எண்ணம்? கர்ப்பிணிப் பொண்ணு மேல நாயை ஏவி விடப் போகிறானே..?’

    கல்பனா...

    என்ன மிஸ்?

    அந்த கணக்கை போட்டு பார்த்துட்டிரு... நான் இப்போ வந்துடறேன்... சொல்லிக் கொண்டே - மாடிப்படிகளில் தடதடத்து கீழே வந்தாள்.

    கல்பனாவின் அம்மா சமையலறையிலிருந்து எதிர்பட்டு வந்தாள். என்ன டீச்சர் அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க?

    பக்கத்து பங்களாவில ஒரு குழப்பம்.. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்... சொல்லி விட்டு கல்பனாஅம்மாவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் - விறுவிறுவென்று வெளியே நடந்தாள்.

    அந்த குறுகலான ரோட்டைக் கடந்து - காம்பௌண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போன போது தோட்ட ஆள் மருதமுத்துவின் கையில் அந்த அல்சேஷன் நாய் திமிறியபடி குரைத்துக் கொண்டிருந்தது.

    மரியாதையா போயிடு... இந்த நாயை விட்டா போதும்... உன்னோட உடம்புல சேலையே இருக்காது... நார் நாரா.. பிய்ஞ்சுடும்... கையில் ராக்கெட் வைத்திருந்த இளைஞன் கோபமான குரலில் சொல்லிக் கொண்டிருக்க -

    ஐஸ்வர்யா குரல் கொடுத்தாள்.

    மிஸ்டர்...

    வழுக்கைத் தலை மனிதரும் - அந்த இளைஞனும் திரும்பினார்கள். ஐஸ்வர்யா வேகமாய் வந்து அவர்கள் முன்னால் நின்றாள்.

    ஒரு பொண்ணுகிட்டே இவ்வளவு அநாகரீகமாக நடந்துக்கறீங்களே? உங்களுக்கே இது நல்லாயிருக்கா?

    மோகன்! யார்ரா... இந்தப் பொண்ணு? - வழுக்கைத் தலை கேட்டது.

    மோகன்

    Enjoying the preview?
    Page 1 of 1