Poovum Puyalum
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5
Related to Poovum Puyalum
Related ebooks
Akkaraiyaai Oru Akiramam Rating: 5 out of 5 stars5/5En Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5356 Rating: 5 out of 5 stars5/5Welldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Un Vasamadi Rating: 0 out of 5 stars0 ratingsOtrai Megam Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Andha Naal Andha Nimidam Andha Nodi Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Pagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsRattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsDecember Iravukal Rating: 0 out of 5 stars0 ratingsFebuary - 30 Rating: 3 out of 5 stars3/5Nisha... Nisha... Odi vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsInimel Indira… Rating: 0 out of 5 stars0 ratingsOru Theekkuchiyin Velichathil! and Naalum Therinthu Kol! Rating: 0 out of 5 stars0 ratingsBullet Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pothuvazhiyalla Rating: 0 out of 5 stars0 ratingsPulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsMenmaiyaai Oru Vanmurai Rating: 0 out of 5 stars0 ratingsAduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsKashmeeril Oru Karuppu Naal Rating: 5 out of 5 stars5/5Neela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsAagaya Kottai Rating: 5 out of 5 stars5/5Oru Kathavu Thattapadukirathu Rating: 5 out of 5 stars5/511 Mani 59 NImidangal 59 Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Kadalorak Kolaikal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Poovum Puyalum
0 ratings0 reviews
Book preview
Poovum Puyalum - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
அந்த ஏப்ரல் மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை சூரியன் பிறக்கிற போதே சூடாய் இருப்பது போல் நித்யாவுக்குத் தோன்றியது. ஆறு மணிக்கே கண்ணை வெளிச்சம் குத்தியது.
கண்ணாடி ஜன்னல் வழியே தொலைவில் தெரிந்த சௌடேஸ்வரியின் கோவில் கோபுரத்தைப் பார்த்துத் தன் மெல்லிய விரல்களால், கன்னங்களில் போட்டுக் கொண்ட நித்யா கட்டிலின் கொசுவலையை விலக்கிக் கொண்டு கீழே இறங்கினாள்.
கருநீல நிற நைட் கவுனின் நாடாவை இறக்கிக் கொண்டாள். வேலைக்காரி சொர்ணம் அறை வாசல் அருகே நின்று எட்டிப் பார்த்தாள். நித்யாம்மா! காபி கொண்டாரட்டுமா?
சொர்ணம்? ஒரு நிமிஷம் உள்ளே வா.
என்னம்மா?
இமிடேஷன் கல் மூக்குத்தியும், தோடும் பகட்டாய் டாலடிக்க உள்ளே வந்தாள் சொர்ணம்.
நித்யா தன் சிறிய வாயைத் திறந்து மெலிதாய்க் கொட்டாவி விட்டபடி சொர்ணத்தை ஏறிட்டாள்.
மாமா எந்திரிச்சுட்டாரா?
எந்திரிச்சுட்டாரம்மா. காபியைக் குடிச்சிட்டு யாருக்கோ போன் போட்டிட்டிருக்கார், ரொம்ப நேரமா போனை சுத்தறார்.
நாகலட்சுமி அத்தை?
அஞ்சு மணிக்கு எந்திரிச்சு குளிச்சாச்சி. நான் குளிப்பாட்டி விட்டேன். தோட்டத்துல உட்கார்ந்திட்டிருக்காங்க.
கோபிநாத்?
அவரும் அஞ்சு மணிக்கே குளிச்சாச்சும்மா. இன்னிக்குப் பங்குனி உத்திரமாம். பேரூர் கோவிலுக்குப் போயிருக்கார்.
வாஷ்பேசினில் வாயைக் கொப்பளித்த நித்யா சிரிப்போடு நிமிர்ந்தாள். கோவில் குளத்துக்குப் போறதுன்னாலே கோபிநாத்துக்கு அல்வா சாப்பிடற மாதிரிதான்! ஒரு பி.காம் படிச்சவர் இப்படி இருக்கார்ன்னா ஆச்சரியம் தான்!
அதையேம்மா கேக்கறே? ஒரு அமாவாசை பெளர்ணமி வரக்கூடாது. ரெண்டு நேரம் குளிச்சு ஒரு நேரம் உபவாசம் இருந்து பூஜை ரூம்ல உட்கார்ந்துகிட்டு ஏதோ பாட்டுப் படிக்கிறார். நாகலட்சுமி ஒருநாள் சாமியாராத்தான் போவான்னு சொன்னாங்க.
சரி நீ போய் காப்பியைக் கொண்டா. அப்படியே பேப்பர் வந்திருந்தா எடுத்துட்டு வந்துரு.
சரிம்மா.
சொர்ணம் அறையை விட்டு வெளியேறி மாடிப் படிகளில் இறங்கிப் போனாள். நித்யா ஜன்னல் கதவுக்கு வந்தாள்.
சூரியனின் புதிதான மஞ்சள் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. இந்தத் தொடர் கதையின் முக்கியமான நாயகியான நித்யாவின் முழுப்பெயர் நித்ய கல்யாணி.
வயசுக்கு வந்த போது, தன் பெயரின் பின்னால் இருந்த தாயார் ‘கல்யாணி’ கொஞ்சம் கர்நாடகமாய்த் தெரியவே அதைக் கத்தரித்துக் கொண்டாள். ‘நித்ய கல்யாணி’ என்று நீளமாய்க் கூப்பிட்டுக் கொண்டிருந்த மாமா சங்கமேஸ்வரணும் நாகலட்சுமியும் ‘நித்யா’ என்று கூப்பிடப் பழகிக் கொண்டார்கள். நித்யாவுக்கு வருகிற ஜூலையில் இருபதாவது பிறந்த நாள் வருகிறது. ஒரிஜினல் தேன் நிறம், கண்களில் நிஜமாகவே நாவல் பழ நிறம் தெரிந்தது. அம்மா ஞான செளந்தரியையும், அப்பா குமார ஸ்வாமியையும் போட்டோவில்தான் பார்த்திருக்கிறாள். போட்டோவில் நேர் பார்வை பார்த்துக் கொண்டு நிற்கும் தன் அப்பாவையும், அம்மாவையும் ‘யாரோ இவர்கள்’ என்கிற மாதிரிதான் பார்த்தாள். பாசம் வர மறுத்தது. காரணம் மாமா சங்கமேஸ்வரன் வளர்த்த விதம் அப்படி.
அம்மா... காப்பி.
சொர்ணத்தின் குரல் கேட்டு ஜன்னல் அருகே நின்றிருந்த நித்யா மெல்லத் திரும்பினாள். டீபாயின் மேல் காப்பி மெல்ல மூச்சு விட்டது.
எடுத்துக் கொண்டு மெல்ல உறிஞ்சினாள்.
மாடிப் படிகளில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது.
யார் வர்றாங்க சொர்ணம்?
சொர்ணம் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னாள்.
மாமா வர்றாங்கம்மா.
சரி... நீ போ! முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தாத்தான் மாமா என்னோட ரூமுக்கு வருவார்.
காப்பியை வேகவேகமாய் உறிஞ்சிவிட்டு டம்ளரைக் கீழே வைத்தாள். மாமா சங்கமேஸ்வரன் உள்ளே நுழைந்தார்.
சங்கமேஸ்வரன் கிட்டத்தட்ட காலம் சென்ற நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அளவில் இருந்தார். உயரம் மட்டும் கொஞ்சம் உதைத்தது. இரண்டு கண்களில் ஒரு கண்ணுக்கு மட்டும் பவர் கிளாஸ் மாட்டியிருந்தார். அந்த ஐம்பத்தைந்து வயசிலும் பேண்ட் போட ஆசைபட்டுத் துணியை விரயம் செய்திருந்தார். பேண்ட்டின் இரண்டு பக்கங்களிலும் வாரை வைத்துத் தைத்து தோள்பட்டையின் இரு பக்கங்களிலும் மாட்டியிருந்தார்.
அம்மா... நித்யா.
குரல் கூட ரங்காராவ் குரல்தான்.
வாங்க மாமா
நித்யா முறுவலித்தாள்.
இப்பத்தான் எந்திரிச்சியாம்மா?
ஆமா மாமா.
உன் கூடக் கொஞ்சம் பேசணுமேம்மா...
உட்காருங்க மாமா.
சங்கமேஸ்வரன் உட்கார்ந்து தன்னுடைய பவர் கிளாசைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
நாளைக்குக் காலையில் நாம பெங்களூருக்குப் போக வேண்டியிருக்கும் நித்யா.
எதுக்கு மாமா?
உன்னோட கல்யாண விஷயமாத்தான்.
நித்யா மௌனமானாள்.
சங்கமேஸ்வரன் தொடர்ந்தார்.
என்னோட ப்ரெண்ட் நந்தகோபாலுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணிப் பேசினேன். நித்யா! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சம்மதம்ன்னு சொல்லிட்டாங்களாம். நிச்சயதார்த்தத்தை கிராண்டா செலிபரேட் பண்ணப் போறாங்களாம். பெண்ணையும் பெண் வீட்டைச் சேர்ந்தவங்களையும் பெங்களூருக்கே வரச் சொல்றாங்களாம்.
மாமா
என்னம்மா...?
எனக்கு இப்ப கல்யாணம் ரொம்ப அவசியமா? இன்னும் ஒரு ரெண்டு வருஷம் ப்ரீயா இருக்கேன்.
சங்கமேஸ்வரன் சிரித்தார்.
கல்யாணத்தைப் பண்ணிகிட்டு புருஷன் கூட ப்ரீயா இரும்மா! உன்னோட வயசுல இருக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்யாணம் ஒரு அத்யாவசியம். உங்கப்பா எழுதி வெச்ச உயில் வாசகப்படி ஒவ்வொரு காரியமா பண்ணிட்டு வர்றேம்மா. உனக்குப் பதினெட்டு வயசானதும் சொத்து பூராவையும் உன்கிட்ட ஒப்படைக்கணும்ன்னு எழுதியிருந்தார். நம்ம சொந்த ஜனம், ஊர் ஜனம், குடும்ப டாக்டர், குடும்ப வக்கீல் எல்லாரையும் கூட்டி வெச்சு அவங்க முன்னாடி உங்கப்பா சொத்தை உன்கிட்ட ஒப்படைச்சேன். சொத்தை ஒப்படைச்ச ரெண்டு வருஷத்துக்கப்புறம் - உன்னோட இருபதாவது வயசுல கல்யாணத்தை செஞ்சு வெக்கணும்ங்கிறது உயிலோட ரெண்டாவது வாசகம்... அந்த வாசகத்தைத் தான் இப்போ நிறைவேத்தப் போறேன். மாப்பிள்ளை நம்ம அந்தஸ்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய இடம். எக்கச்சக்கமான பணம்.
நித்யா குறுக்கிட்டாள்.
மாப்பிள்ளையோட பேமிலியைப் பத்தி விசாரிச்சீங்களா மாமா?
அட்சர சுத்தமா விசாரிச்சிருக்கேன்.
மாப்பிள்ளையைப் பத்தி தனிப்பட்ட முறையில் விசாரிச்சீங்களா?
"கோபிநாத்தையே பெங்களூருக்கு அனுப்பி வெச்சேம்மா. ஒரு வாரம் கோபிநாத் மாப்பிள்ளையை ஃபாலோ பண்ணி அக்கம் பக்கம் விசாரிச்சுட்டு வந்திருக்கான். மாப்பிள்ளைக்கு சிகரெட் பழக்கம் மட்டும் தான் உண்டாம்.
நித்யா சிரித்தாள்.
உங்களுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா மாமா...?
பிடிச்சிருக்கு.
நாகலட்சுமி அத்தைக்கு...?
அவளுக்கும் பிடிச்சிருக்கு.
அப்போ எனக்கும் சம்மதம்.
சங்கமேஸ்வரன் கண்ணாடியை மாட்டிக் கொண்டு எழுந்தார்.
பெங்களூர் புறப்பட ஏற்பாடு பண்ணட்டுமாம்மா?
ம்...
பெங்களூருக்குப் போனா நாம லாட்ஜ்ல தங்க வேண்டிய அவசியம் இல்லேம்மா. என்னோட ஃப்ரண்ட் நந்தகோபால் யஷ்வந்த் பூர்ல டாக்டரா ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கான். அவனோட வீடும் பங்களா டைப்தான். நாம அங்கேயே தங்கிகிட்டு நிச்சயதார்த்த ஃபங்க்ஷனுக்குப் போயிட்டு வந்துடலாம்.
சரி மாமா.
சங்கமேஸ்வரன் நகர்ந்தார்.
மாமா...
நித்யா மறுபடியும் கூப்பிட்டாள்.
என்னம்மா?
என்று கேட்டார்.
நாகலட்சுமி அத்தையும் வர்றாங்களா?
அவளை எப்படியம்மா பெங்களூருக்குக் கூட்டிட்டுப் போக முடியும்? அப்படியே கூட்டிட்டுப் போனாலும், வர்றவங்களுக்கும் போறவங்களுக்கும் அவ ஒரு கண்காட்சி ஆயிடுவாளே. அவ இங்கேயே இருக்கட்டும். சொர்ணம்தான் துணைக்கு இருக்காளே, பார்த்துக்குவா… நீயும் நானும் கோபிநாத்தும் நாளைக்குக் காலையில கார்ல கிளம்பறோம்.
தலையாட்டினாள் நித்யா.
சங்கமேஸ்வரன் பேண்ட்டின் தோள்பட்டை வாரை இழுத்துக் கொண்டே மாடிப் படிகளில் இறங்கினார். நித்யா குளிக்க ஆயத்தப்பட்டு பாத்ரூமை நோக்கி நடக்க, எதிர்புற ஜன்னலின் வழியே கீழே தோட்டம் தெரிந்தது.
ஜன்னல் அருகே போனாள்.
ஏராளமான ரோஜாப் பதியன்களுக்கு மத்தியில் லாவகமாக சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு அதில் உட்கார்ந்தபடி நாகலட்சுமி அத்தை தெரிந்தாள். தலைக்குக் குளித்த ஈரம் போவதற்காக தேங்காய்ப்பூ துவாலையைத் தலையில் சுற்றியிருந்த நாகலட்சுமிக்கு மிஞ்சிப் போனால் முப்பது வயதுதான் இருக்கும். சங்கமேஸ்வரனின் இரண்டாவது சம்சாரம். முதல் மனைவி பர்வதம் தவறியபோது சங்கமேஸ்வரனுக்கு நாற்பத்தைந்து வயது. அந்த வயதில் உடம்பு இம்சைப்படுத்துகிறதே என்பதற்காக டீச்சர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது இருபது வயது நாகலட்சுமியைக் கல்யாணம் செய்து கொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னால் வரை நித்யாவுக்கு சரிசமமாய்க் குதித்து பூப்பந்து விளையாடிய நாகலட்சுமிக்குக் கால்கள் இரண்டும் செயலிழந்து போனது