Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadalorak Kolaikal
Kadalorak Kolaikal
Kadalorak Kolaikal
Ebook262 pages1 hour

Kadalorak Kolaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kadalorak Kolaikal

Read more from Rajeshkumar

Related to Kadalorak Kolaikal

Related ebooks

Related categories

Reviews for Kadalorak Kolaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadalorak Kolaikal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    மெல்லத் திறந்தது கதவு

    கிழக்கு திசை கீறிவிட்ட வெள்ளரிப் பழமாய் வெளுத்துக் கொண்டிருந்த அந்த ஆறு மணி ஐந்து நிமிஷத்திற்கு சென்னை மத்திய சிறைச்சாலையின் சதுரக்கதவு திறக்கப்பட வெளியே வந்தாள் இந்தக் கதையின் முக்கிய பாத்திரமான ஜெயா.

    இருபத்தைந்து வயதாகிற ஜெயாவுக்கு மாநிறத்துக்கும் ஒரு படி தூக்கலான நிறம். உருண்டை முகத்தில் கண்கள் பிரதான அழகை வாங்கியிருந்தது. அந்தக் கண்களில் இப்போது ஒரு அடர்த்தியன் சோகம் உறைந்துப் போயிருந்தது.

    தோளில் சாத்தியிருந்த ரைபிள்களோடு சிறைச் சாலை கதவருகே நின்றிந்த செண்ட்ரீஸ் - ஜெயா கதவை தாண்டிப் போனதும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள், ஒருத்தர் கேட்டார்.

    வெளியே போற பொண்ணு யாருன்னு தெரியுதா வேலு...

    அதன் யோசிக்கிறேன்.

    நீ மறந்துட்டே போலிருக்கு வேலு...! ரெண்டு வருஷம் முன்னே புருஷனோட ப்ரெண்ட் ஒருத்தனை அறிவாமனையினாலே வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு வந்தவ...

    ஏன் வெட்டினா...?

    புருஷன் இல்லாத நேரத்துல வீட்டுக்கு வந்து தப்பா நடந்துக்க பார்த்தானாம், காய்கறி நறுக்கிட்டிருந்த அருவாமனையால் ஒரே போடா போட்டுட்டா... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கேஸ் கோர்ட்ல ரொம்பவும் பரபரப்பா நடந்தது... திட்டமிட்ட கொலை இல்லேங்கிற காரணத்தினாலும்... தன்னோட மானத்தை காப்பாத்திக்கிறதுக்காக செய்யப்பட்ட கொலைங்கிறதுனாலும் ஜட்ஜ் ரெண்டு வருஷத்தோடு தண்டனையை நிறுத்திக்கிட்டார்...

    பாவம்... புருஷனோட சந்தோஷமா வாழ வேண்டிய வயசில... இப்படி வந்து இருந்துட்டு போறா...

    அதுல இன்னொரு கொடுமையிருக்கு வேலு...

    என்ன...?

    அந்த பொண்ணு ஜெயிலுக்கு வந்த இந்த ரெண்டு வருஷத்துல பொறந்த வீட்டை சேர்ந்தவர்களும் சரி... புருஷன் வீட்டைச் சேர்ந்தவர்களும் சரி... யாருமே வந்து ஒரு நாள் கூட எட்டிப் பார்த்துட்டு போனதில்லை...

    ஏன் என்ன காரணம்...?

    இவ ஒரு கொலையை பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்ததினாலே அந்த ரெண்டு வீட்டோட கௌரவமும், மரியாதையும் கெட்டுப் போச்சாம்...

    அடப்பாவமே... அந்த பொண்ணு தன்னோட மானத்தை காப்பாத்தத்தானே ஒரு கொலையைப் பண்ணினா...

    அந்த உண்மையை எல்லோரும் மறந்துட்டாங்க போலிருக்கு. இன்னிக்கு விடுதலையாகிப் போற பொண்ணு புருஷன் வீட்டுக்குப் போவாளா? பொறந்த வீட்டுக்குப் போவாளான்னு தெரியலை..."

    தன்னுடைய முதுகுக்கு பின்னால் பேசிக் கொள்ளும் அந்த செண்ட்ரிகளின் பேச்சை செவிமடுத்துக் கொண்டே ஜெயா அந்த செம்மண் பாதையில் நடந்தாள். உதட்டோரம் அந்த புன்னகை வந்து உட்கார்ந்தது. ஒரு ஆபத்து என்று வருகிற போதுதான் மனிதர்களின் சுயரூபம் பளிச்சென்று தெரிகிறது.

    சிறைச்சாலை காலி மைதானத்தின் கோடியில் புதிதாய் ரெக்ரூட் செய்யப்பட்ட கான்ஸ்டபிள்களின்அணிவகுப்பு நடந்து கொண்டிருக்க, அந்த விடியற்காலை காற்று ஜில்லென்று முகத்தை மோர்ந்து பார்த்ததும். நெற்றியின் முன்னுள்ள முடியையும் சேலையையும் அலை கழித்து பார்த்தது.

    வேக வேகமாய் நடந்து சிறைச்சாலை வெளி காம்பௌண்ட்த் தாண்டி ரோட்டுக்கு வந்த விநாடி, எதிரே ஜெயில் சூபிரிண்டெண்ட் தாமஸ் வெள்ளை நிக்கர் வெள்ளை பனியன் அணிந்து டென்னிஸ் விளையாட புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஜெயாவை பார்த்ததும் பைக்கை அணைத்தார். ஜெயா கைகளை குவித்தாள்.

    வணக்கம் ஸார்.

    "என்னம்மா புறப்பட்டியா? வீட்டுக்கு லெட்டர் போட்டிருந்தியே, யாரும் கூட்டிப் போக வரலையா...?

    வ... வ... வரலை ஸார் சொல்லும் போதே ஜெயாவுக்குத் தொண்டை அடைத்தது. நான் போட்ட லேட்டர்க்கு பதில் கூட போடலை ஸார்.

    ஜெயில் சூபிரிண்டெண்ட் தாமஸ் கவலையான கண்களோடு அவளை ஏறிட்டார். இப்போ நீ எங்கம்மா போயிட்டிருக்கே...?

    என்னோட புருஷன் வீட்டுக்குத்தான்! நான் வேறெங்கே போக முடியும் ஸார்... நான் ஜெயில்ல இருந்தப்போ என்னை பெத்தவங்க யாரும் பார்க்க வரலை!

    நீ தைரியமா புருஷன் வீட்டுக்கு போம்மா... ஏதாவது பிரச்சனை இருந்தா ரெண்டு நாள்ல என்கிட்டே வந்து சொல்லு.

    சரி ஸார்,

    மறுபடியும் கைகளை குவித்துவிட்டு நகர்ந்தாள் ஜெயா. மனசுக்குள் கவலை கனமாய் புரண்டது. பின் பக்கமாய் பைக் தடதடத்து புறப்பட்டது.

    யோசித்திக் கொண்டே நடந்தாள் ஜெயா.

    நான் போட்ட கடிதம் அவர்க்கு கிடைத்திருக்குமா? இல்லையா? எனக்கு ரெண்டு வருஷ சிறை தணடனை தீர்ப்பான போது கோர்ட்டில் அவர் அப்படி அழுதாரே? பின் ஏன் இந்த ரெண்டு வருஷமாய் பார்க்க வரவில்லை. மாமியார் மாமனார். அவருடைய தம்பி ஜெயபாலன் இவர்களில் யாருமே என்னை பார்க்க வரவில்லை. ஏன்...?"

    எல்லோருக்கும் என்னவாயிற்று?

    சிறைச்சாலைக்கு வெளியே கூவம் சாக்கடைக்கு மேல் போட்டிருந்த மரப் பாலத்தில் மெல்ல நடந்து ரோட்டின் பிளாட்பாரத்துக்கு வந்தாள். சென்னையின் காலை நேர போக்குவரத்து வெறிச்சோடி போயிருந்தது. இப்போது கிழக்கு திசையில், சூரியன் புறப்பட்டு வருவதற்கு அடையாளமாய் அடர்த்தியாய் சிவப்பு நிறம் அப்பியிருந்தது. பரபரப்பாய் இருந்த சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எதிரே பஸ் ஸ்டாப்பில் போய் நின்று கொண்டாள். தி. நகர் போகும் பஸ்ஸுக்காக காத்திருந்தவள் பத்தாம் நெம்பர் வந்ததும் ஒரு சின்ன ஓட்டமாய் ஓடிப்போய் தொற்றிக் கொண்டாள்.

    பஸ் நகர்ந்தது.

    ஒரு பத்து நிமிஷ பயணத்திற்கு பிறகு -

    ராஜகுமாரி தியேட்டர் அருகே உதிர்ந்து, அருகே திரும்பி தணிகாசலம் தெருவுக்குள் நுழைந்தாள். வரிசையாய் இருந்த வீடுகளில் வாசல் தெளிப்பும், கோலம் போட்டாலும் நிகழ்ந்து கொண்டிருக்க யாரையும், பொருட்படுத்தாமல் விடுவிடுவென்று நடந்தாள் ஜெயா.

    வாசல் தெளிப்பு சட்டென்று நின்று போக வம்பளப்பு ஜெயாவின் முதுக்கு பின்னால் மும்முரமாய் கிசுகிசுப்பான குரலில் நடக்க ஆரம்பித்தது.

    டீ... மீனு... போறவ யாரு, பாகீரதி அம்மாவோட மருமக ஜெயாத்தானே?

    ஆமா மாமி அவளேதான்.

    கொலைக்காரியை ரிலீஸ் பண்ணிட்டாங்க போலிருக்கு!

    எத்தினி வருஷம் போட்டாங்க...?

    ரெண்டு வருஷம்

    இப்போ எந்த மூஞ்சியை வெச்சுட்டு புருஷன் வீட்டுக்குப் போயிட்டிருக்கா... இவ வாசல்ல போய் நின்னா பாகீரதி சாணத்தை கரைச்சு தலையிலதான் ஊத்துவா...

    நடையைப் பாரு. ‘தாம் தாம்’னு... ரெண்டு வருஷம் ஜெயில்ல இருந்து வந்தும் திமிர் போகலை...

    பல்வேறு பேச்சுக் குரல்கள் காற்றில் கலந்து ஜெயாவின் செவிமடலை ஸ்பரிசித்து நெஞ்சுக்குள் அமிலத்துளிகளாய் விழுந்தன. கண்கள் இரண்டிலும் நீர் கரகரவென்று சுரந்தது. புடவைத் தலைப்பால் ஈரமான கண்களை ஒற்றிக் கொண்டே வேகமாய் நடந்து. அந்த ரோட்டின் கடைசியில் இருந்த வீட்டுக்கு முன்பாய் நின்றாள். வாசலில் ரொம்ப நேரத்துக்கு முன்னதாகவே நீர் தெளித்து கோலம் போட்டிருந்தார்கள்.

    முன்பக்கம் இருந்த சின்ன காம்பௌண்ட் கேட்டை ஓசைப்படாமல் திறந்து கொண்டு சிமெண்ட் பாதையில் நடந்து படிக்கட்டுகளில் ஏறி, வாசல் கதவின் நிலைப்படியில் இருந்த காலிங்பெல்லை தொட்டாள்.

    வீட்டுக்குள்ளே ‘கிணுங் கிணுங்’ என்றது. கதவு திறக்கப்பட காத்திருந்து ஒரு நிமிஷம் வரைக்கும் யாரும் வராமல் போக மறுபடியும் காலிங்பெல்லின் மேல் கையை வைத்தாள்.

    அதே விநாடி —

    கதவு விலகியது.

    கதவுகளுக்கு பின்னால் மாமியார் பாகீரதி அந்நேரத்துக்கே குளித்து மஞ்சள் மின்னும் முகமும் குங்குமப் பொட்டுமாய் நின்றிருந்தாள். ஜெயாவைப் பார்த்ததும் முகம் மாறி கறுத்தாள்.

    அத்தே... என்றாள் ஜெயா. நின்றிந்த கதவின் வழியே வீட்டுக்குள் நுழைய முயன்றாள்.

    கையை குறுக்கே நீட்டி மறித்தாள் பாகீரதி.

    நில்லடி. எங்கே... உள்ளே போறே?

    அத்தே... திடுக்கிட்டு பின்வாங்கினாள் ஜெயா.

    பாகீரதி நெருப்பாய் பொழிந்தாள். இனிமே அத்தேன்னு என்னைக் கூப்பிடாதே... எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு இந்த வாசற்படி ஏறினே...?

    அத்தே... நான் இங்கே வாரமே எங்கே போவேன்...?

    உன்னோட பொறந்த வீட்டுக்குப் போறது...

    எனக்கு கல்யாணமாயிருக்கு, உங்க மகனை நான் கட்டியிருக்கேன்... அத்தை மாமாவும் புருஷனும் உயிரோட இருக்கிறப்போ நான் எதுக்காக போகணும்...?

    என்னடி எதிர்த்து பேசறியா...?

    நான் எதிர்த்து பேசலை அத்தே... நான் நியாயத்தை பேசறேன்... நான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவங்கிறதுனாலே என்னை நீங்க வெறுக்கறீங்க... எதுக்காக நான் ஜெயிலுக்குப் போனேன்...? ஒருத்தர் வீட்ல திருடிட்டா ஜெயிலுக்குப் போனேன்...? வீட்ல யாரும் இல்லாதபோ என்னை நாசம் பண்ண நினைச்சவனை கொலை பண்ணினேன்...

    பொய்... உனக்கும் அவனுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்திருக்கு... விஷயத்தை அவன் வெளியே சொல்லிடுவேன்னு மிரட்டினதினால... நீ அவனை கொலை பண்ணியிருக்கே...

    பாகீரதி சொல்ல, திடுக்கிட்டாள் ஜெயா.

    அத்தே இப்படி பேசுறது அபாண்டம்... மாமா இருந்தா கூப்பிடுங்க... நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்...

    அவர் ஊர்ல இல்லே... வெளியூர் போயிருக்கார்.

    அண்ணி... அண்ணின்னு என் முதுகுக்கு பின்னாடியே சுத்தி சுத்தி வருவாரே... அவரோட தம்பி ஜெயபாலைக் கூப்பிடுங்க.

    அவன் தூங்கிட்டிருக்கான்... எழுப்ப முடியாது...

    அவராவது உள்ளே இருக்காரா...?

    யார்...?

    என் கழுத்துல தாலி கட்டுன உங்க பிள்ளை... பாகீரதி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சொன்னாள். அவன் வீட்ல இல்லை...

    எங்க போயிருக்கார்?

    ஆஸ்பத்திரியில் இருக்கான்...

    நெற்றி சுருக்கினாள் ஜெயா.

    ஆஸ்பத்திரியில் இருக்காரா... ஏன்...?

    யாருக்கு என்ன தெரியும், நீயே போய் பாரு...

    என்ன அத்தை... இப்படி சொல்றீங்க... உங்க புள்ளைக்கு என்ன உடம்புக்குன்னு உங்களுக்குத் தெரியாதா...?

    தெரியாது... நீ கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனதும் அவன் இந்த வீட்ல இருக்க பிடிக்காமே வெளியே போயிட்டான்.

    வெளியே போயிட்டாரா... ஏன்...?

    யாருக்குத் தெரியும்... உன்னோட புருஷனைப் போய் நீயே கேளு...

    எந்த ஹாஸ்பிடல்ல இருக்கார்...?

    கவர்மெண்ட் ஹாஸ்பிடல்லதான்...

    எந்த வார்டு...?

    நீயே போய் விசாரிச்சிக்க... சொல்லிவிட்டு கதவைச் சாத்த முயன்றாள் பாகீரதி. ஜெயா குறுக்கிட்டாள்.

    ஒரு நிமிஷம் அத்தை...

    என்ன...!

    "ரெண்டு வருஷமா நான் ஜெயில்ல இருந்தேன்... என்னை யாருமே பார்க்க வரலை.

    Enjoying the preview?
    Page 1 of 1