Urainthu Pona Unmai!
By Rajeshkumar
4/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Aattam! Rating: 4 out of 5 stars4/5
Related to Urainthu Pona Unmai!
Related ebooks
Maranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Miss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratings19 vayathu Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Un Vasamadi Rating: 0 out of 5 stars0 ratingsInbavin Irandavathu Nizhal Rating: 5 out of 5 stars5/5Vaikarai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVaaimaiye Kollum Rating: 5 out of 5 stars5/5Ethaiyum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsWelldone Vivek Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Kanavugal Inge Virkkapadum Rating: 0 out of 5 stars0 ratingsJulaiyil Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5Neela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsNirangal Rating: 3 out of 5 stars3/5Kaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Neethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsBullet Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsReadymade Sorkkam Rating: 5 out of 5 stars5/5Miss Devathai 1996 Rating: 0 out of 5 stars0 ratingsKadalorak Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsNisha... Nisha... Odi vaa! Rating: 0 out of 5 stars0 ratingsFirst Flight to Paris Rating: 5 out of 5 stars5/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsPachai Kan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavu Thattapadukirathu Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Urainthu Pona Unmai!
1 rating0 reviews
Book preview
Urainthu Pona Unmai! - Rajeshkumar
17
1
கீர்த்தனா...!
கீழே அப்பாவின் குரல் கேட்டு மாடியறையில் கண்ணாடி முன் நின்றிருந்த கீர்த்தனா அவசர அவசரமாய் நெற்றிக்கு ஸ்டிக்கர் பொட்டை ஒட்ட வைத்துக் கொண்டே குரல் கொடுத்தாள்.
இதோ வந்துட்டேன்....
சீக்கிரமா வாம்மா....! நான் உன்கூட ரெண்டு நிமிஷம் பேசிட்டு வெளியே கிளம்பணும்.
கீர்த்தனா கண்ணாடியை விட்டுத் திரும்பினாள். இருபத்திமூன்று வயதான கீர்த்தனாவின் உடம்பில் இளமை வசந்த விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. மஞ்சள் நிற சுடிதாரும், மார்புப் பகுதியை மூடியிருந்த கறுப்பு வண்ண துப்பட்டாவும் அவளுடைய ரோஜா நிற உடம்புக்கு எடுப்பாய் இருந்தது. பெரிய கண்களில் நிறையவே காந்தம்.
மாடிப்படிகளில் இறங்கி ஹாலில் சோபாவில் சாய்ந்து இருந்த அப்பா குமரகுருவுக்கு முன்பாய் வந்து நின்றாள்.
சொல்லுங்கப்பா...!
காதோரங்களில் நரைத்து, கண்களுக்கு பவர்ஃபுல் ஸ்பெக்ஸ் கொடுத்திருந்த குமரகுரு நிமிர்ந்தார்.
காலேஜ் இன்னிக்கு லீவுதானே?
ஆமாம்பா.
மொதல்ல உட்கார்.
எதிரில் உட்கார்ந்தாள்.
குமரகுரு கேட்டார்.
இன்னிக்கு என்ன தேதி....?
செப்டம்பர் 3
பட்டென்று சொன்னாள் கீர்த்தனா.
போன மார்ச் மாசம் 3ம் தேதி நீ என்ன சொன்னே?
என்ன சொன்னேன்?
பதில் கேள்வி கேட்காதே. யோசனை பண்ணிப் பாரு... கீர்த்தனா. வயசானவன் நான் மறந்தாலும் நீ மறக்க மாட்டியே...?
அவள் யோசித்துவிட்டு தலையாட்டினாள்.
ஸாரிப்பா... எனக்கு ஞாபகம் இல்லை.
நிஜமாவே உனக்கு ஞாபகம் இல்லையா...? இல்லே ஞாபகம் இல்லாத மாதிரி நடிக்கிறயா...?
என்னப்பா நீங்க...? எனக்கு ஞாபகம் இருந்தா சொல்ல மாட்டேனா...?
சரி சரி நானே சொல்லிடறேன்...
என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டார். போன மார்ச் மாதம் 3ம் தேதி ஒரு ராத்திரி நேரம் இதே சோபாவில் எதிர் எதிரே நீயும் நானும் உட்கார்ந்து பேசிட்டு இருக்கும்போது நீ என்ன சொன்னே தெரியுமா...?அப்பா... எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்... ஆறு மாசம் கழிச்சு பேசிக்கலாம். அப்ப நீங்க என்ன முடிவு எடுத்தாலும் ‘ஓ..கே.’ சொல்லிடறேன்
னு சொன்னே, ஞாபகம் இருக்கா...?"
கீர்த்தனா புருவங்களை உயர்த்தினாள்.
ஓ அதுவா...?
அதுவேதான்....! இப்ப அந்தக் கெடு முடியுது, பேசலாமா...?
அய்யோ அப்பா...! அது ஒரு பேச்சுக்கு சொன்னது. என்னோட கல்யாணத்துக்கு இப்ப என்னப்பா அவரசம்? நான் எம்.எஸ்.சி. முடிக்க வேண்டாமா? இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே...?
நோ வாய்தா... உன்னோட படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு. கல்யாணத்தைப் பண்ணிக்கோ... அதுக்கப்பறம் படி. யார் வேண்டாம்ன்னு சொன்னது..?
கீர்த்தனா ஒருவிநாடி யோசித்தாள். ‘இனி அப்பா கன்வின்ஸ் ஆக மாட்டார். பேசாமல் தலையை ஆட்டிட வேண்டியதுதான். மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தால் அதில் எப்படியும் ஒரு வருஷம் ஓடிவிடும். அப்பாவுக்கும் எனக்கும் பிடித்த மாதிரி மாப்பிள்ளை அமைவதற்குள் நாட்கள் ஓடிவிடும்.'
குமரகுரு அவளுடைய தோளைத் தொட்டார்.
என்னம்மா யோசனை?
சரிப்பா... நான் கல்யாணம் பண்ணிக்கறேன்... மெதுவா நிதானமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்க...
என்னது... மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறதா? சரியாப் போச்சு. நான் மாப்பிள்ளை பார்த்துட்டேன்மா..
மாப்பிள்ளை பார்த்துட்டீங்களா?
கீர்த்தனா அதிர்ந்து போனவளாய் அப்பாவைப் பார்த்தாள்.
ஆமாம்மா. இதோ மாப்பிள்ளையோட போட்டோ
சொன்னவர் டீபாயின் மேல் இருந்து ஒரு ப்ரவுன் கவரை எடுத்து உள்ளேயிருந்து போஸ்ட் கார்டு சைஸ் போட்டோ ஒன்றை உருவி அவளிடம் நீட்டினார்.
கீர்த்தனா போட்டோவை வாங்கிப் பார்த்தாள்.
போட்டோவில் ஒரு இளைஞன் டை கட்டிக் கொண்டு அழகாய் சிரித்தான். சுருண்ட கேசம் தலைகொள்ளாமல் அடர்த்தியாய் தெரிந்தது. கண்களில் கூர்மை.
என்னம்மா... போட்டோவைப் பார்த்தியா... மாப்பிள்ளை எப்படியிருக்கார்? போட்டோவில் இருக்கிறதைக் காட்டிலும் நேர்ல இன்னமும் அழகாய் இருப்பாராம். தரகர் சொன்னார். பையன் பேரு அஸ்வினிகுமார். ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் சீஃப் ப்ரோக்ராம் ஆபீசராய் இருக்கார். நல்ல குடும்பம். நீ போட்டோவைப் பார்த்து ஓ.கே. சொன்னா போதும். பெண் பார்க்க அவர்களை வரச் சொல்லிடலாம்...
அப்பா...
என்னம்மா...
நீங்க ரொம்பவும் அவசரப்படறீங்க...
இதோ பாரம்மா. நா ஒண்ணும் அவசரப்படலை. உன்னோட அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே உனக்குக் கல்யாணம் நடந்து இப்போ ஒரு குழந்தைக்கு அம்மாவாகி இருப்பே... தெரியுமா...!
அப்பா... நான் என்ன சொல்ல வரேன்னா..
நீ ஒண்ணையும் சொல்லாதேம்மா.. இந்தப் பையனை எனக்குப் பிடிச்சிருக்கு உனக்குப் பிடிச்சிருக்கா இல்லையா?
.
அது வந்து...
உன்னோட அபிப்பிராயத்தைச் சொல்லம்மா.
உங்களுக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்ச மாதிரிதானப்பா..
அப்படீன்னா.. பெண் பார்க்க வரச் சொல்லிடலாமா?
கீர்த்தனா ‘சரி’ என்கிற மாதிரி தலையசைத்து கொண்டிருக்கும்போதே அவளிடம் இருந்த செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தாள்.
ஒரு புது எண் டிஸ்ப்ளேயில் பளிச்சிட்டது.
'யாராக இருக்கும்,' கீர்த்தனா யேசித்துக் கொண்டு இருக்கும்போதே குமரகுரு கேட்டார்.
போன்ல யாரம்மா...?
தெரியல்லேப்பா...
சொன்னவள் செல்போனை காதுக்குப் பொருத்தி மெல்ல குரல் கொடுத்தாள்.
எஸ்.
மறுமனையில் ஒரு ஆண்குரல்.
யார் பேசறது? மிஸ் கீர்த்தனா?
எஸ்.
நான் அஸ்வினிகுமார்.
அஸ்வினிகுமார்...?
நான் யார்ன்னு தெரியலையா கீர்த்தனா? என்னோட போட்டோவை இன்னும் நீங்க பார்க்கலையா? தரகர் கொண்டு வந்து கொடுத்திருப்பாரே?
கீர்த்தனாவுக்கு சட்டென்று நெற்றி வியர்த்து வாய் ஈரம் இல்லாமல் உலர்ந்து போயிற்று.
நீ...நீ..நீங்க...?
எஸ்.... உங்களுக்காக பார்க்கப்பட்ட மாப்பிள்ளை. நீங்க என்னோட போட்டோவைப் பார்த்து இருப்பீங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க ‘எஸ்’ சொல்வீங்களோ ‘நோ’ சொல்வீங்களோ எனக்குத் தெரியாது. அதுக்குள்ளே கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாய் போன் பண்ணிட்டேன். வெரி சாரி...
அ...அ... அப்பாகிட்ட பேசணுமா..?
இல்லை... இல்லை... உங்ககிட்டதான் பேணும்...
ஒரு நிமிஷம்!
ப்ளீஸ்... டேக் யுவர் வோன் டைம்
கீர்த்தனா குமரகுருவிடம் திரும்பினாள். குரலைத் தாழ்த்திக் கொண்டு பேசினாள். அப்பா... போனில் அந்த மாப்பிள்ளை வரன் அஸ்வினிகுமார் என்னோடு பேசணுமாம்..
குமரகுரு புன்னைகையோடு எழுந்தார். நீ அவர்கிட்ட ஃப்ரீயா பேசம்மா... நான் என்னோட ரூமுக்குப் போறேன்.
அவர் கிளம்பிப் போய்விட கீர்த்தனா சில விநாடிகள் யோசனையாய் இருந்துவிட்டு செல் போனுக்கு உதட்டைக் கொடுத்தாள்.
ம்... சொல்லுங்க ... என்ன விஷயம்?
என்னோட போட்டோவைப் பார்த்தீங்களா?
"பார்த்தேன்... ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் தரகர் கொண்டு வந்து கொடுத்தார்
எப்படி? நான் பரவாயில்லையா?
மார்க் போடட்டுமா?
ம்..
100க்கு 99மார்க்
.
தேங்க்யூ கீர்த்தனா. எனக்கு இந்த பஜ்ஜி சொஜ்ஜியோடு பெண் பார்க்கிற படலம் பிடிக்காது. உங்களுக்கு என்னையும் எனக்கு உங்களையும் பிடிச்சிருந்தா தனியா சந்திச்சு மனம் விட்டுப் பேசணும். உங்க விருப்பு வெறுப்புகள் - என்னோட விருப்பு வெறுப்புகள் ரெண்டையும் லிஸ்ட் பண்ணணும். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா எதிர்காலத்தில் பிரச்சைனைகள் இல்லாமே- டைவர்ஸ்ன்னு கோர்ட்டுக்குப் போகாம வாழ முடியுமான்னு நிதானமாய் யோசிச்சுப் பார்த்து முடிவு எடுக்கணும்.. ரெண்டு பேர்க்கும் ஒத்து வராதுன்னு ஆரம்பத்திலேயே தோணிட்டா பரஸ்பரம் ‘பை’ சொல்லி பிரிஞ்சிடணும். என்னோட பாலிசி இது.
எனக்கும் இந்த பாலிசி பிடிச்சிருக்கு.
அப்படின்னா நாம ரெண்டு பேரும் சந்திச்சு பேசினா என்ன?
பேசலாமே!
எங்கே பேசலாம்... ‘வென்யூ’ எதுன்னு நீங்களே மென்ஷன் பண்ணுங்க..
ஏதாவது ஒரு ரெஸ்டாரெண்ட்.
அடையார்ல க்ரீன் ஃபாரஸ்ட்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு. கும்பல் அதிகம் இல்லாத ஒரு டீஸண்டான ரெஸ்டாரெண்ட். அங்கே மீட் பண்ணலாமா..?
சாயந்தரம் ஏழு மணிக்கு...
ஓகே.. அந்த ரெஸ்டாரெண்ட்ல ஒரு டேபிள் ரிசர்வ் பண்ணிட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன். நீங்க உங்க ஃபாதர் கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு வாங்க.
நீங்க சொன்னாலும் சொல்லாமல் போனாலும் நான் என்னோட ஃபாதர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுத்தான் வருவேன்.
தட்ஸ் குட், ஏழு மணிக்கு மீட் பண்ணுவோம்.
சாயந்தரம் ஏழு மணி. க்ரீன் ஃபாரஸ்ட் ரெஸ்டாரண்ட்.
கீர்த்தனா தன்னுடைய காரை பார்க் செய்துவிட்டு கீழே இறங்கினாள். செல்போன் கூப்பிட்டது. எடுத்தாள். மறுமுனையில் அஸ்வினிகுமார் பேசினான். என்ன கீர்த்தனா... மணி இப்ப ஏழு...
வந்துட்டேன். இப்ப ஹோட்டல் வாசல்லதான் இருக்கேன்...
உள்ளே வந்துருங்க. டேபிள் நெம்பர் ஃபோர்ட்டீன். எக்ஸ்ட்ரீம் ரைட் கார்னர்.
வந்துடறேன்.
கீர்த்தனா குரோட்டன்ஸ் செடிகளுக்கு நடுவில் நடந்து அரையிருட்டான ரெஸ்டாரண்ட்டுக்குள் நுழைந்தாள். கூட்டம் சொற்பமாய் இருந்தது. சுவர்களில் ஒளிந்து இருந்த ஸ்பீக்கர்களில் ட்ரம்ஸ் இசை ஒற்றையடியாய் கேட்டுக் கொண்டு இருக்க, சிவப்பு சீருடை அணிந்த பேரர்கள் போலி பவ்யம் காட்டி கூடுதல் டிப்சுக்காக கஸ்டமர்களிடம் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
கீர்த்தனா மேஜை நாற்காலிகளுக்கு நடுவில் மெல்ல நடந்தாள். வலதுபக்க கார்னரில் மேஜை தெரிந்தது. அஸ்வினிகுமார் உட்கார்ந்திருப்பது அவளுடைய பார்வைக்குக் கிடைத்தது.
அரையிருட்டில் நிதானமாய் நடந்து 14ம் எண்ணிட்ட மேஜையை நெருங்கினாள்.
குட் ஈவினிங்...!
என்றாள் கீர்த்தனா.
பதிலுக்கு குட்ஈவ்னிங்
சொல்லாமல் நாற்காலிக்கு சாய்ந்து இருந்த அஸ்வினிகுமார் அவளையே சிரிக்காமல் பார்த்தான். உடம்பையே ஊடுருவுகிற மாதிரியான பார்வை.
கீர்த்தனாவுக்கு அந்தப் பார்வை என்னவோ செய்தது.
‘ஒரு பெண்ணை இப்படிக்கூட பார்ப்பாங்களா