Neethana Nejamthana
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Neethana Nejamthana
Related ebooks
Thinam Thinam Thigil Thigil Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nimishangal! and Oru Megathin Thaagam! Rating: 0 out of 5 stars0 ratingsSatthamillatha Samuthiram and Soorya Thagam Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsMiss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsIllavasam Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsOru Rojavum Sila Thottakkalum Rating: 5 out of 5 stars5/5Ippadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsMeendum August 15 Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsPulip Pori Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsMatroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Sinnaj Siru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsKaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/59-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Iraththam Illatha Yuththam Rating: 0 out of 5 stars0 ratingsThazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsMannikkapatta Manaram Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsMul Illaatha Kadigaram Rating: 5 out of 5 stars5/5Nisha... Nisha... Odi vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai! Rating: 4 out of 5 stars4/5Unnudaiya GUNkalukku Mattum Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Neethana Nejamthana
0 ratings0 reviews
Book preview
Neethana Nejamthana - Rajeshkumar
17
சித்தர் பாடல்களில் அறியப்படாத எத்தனையோ கருத்துக்கள் இன்னமும் உண்டு. சித்தர்களின் இலக்கிய முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படாத மர்மமாகத்தான் இருக்கிறது. சித்தர் பாடல்கள் ஒருபுறம் இருக்க அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தடயங்களாவது நமக்குச் சரிவர கிடைக்கிறதாவென்றால் அதுவும் கிடையாது. சித்தர்கள் யாரும் ஏடும் எழுத்தாணியும் கொண்டு பாடல்களைப் புனைந்து வைத்துவிட்டு செல்லவில்லை. இறைவனின் திருக்கருணையால் வெளிவந்த அவர்களின் வாய்மொழி உபதேசங்கள் அவர்களின் சீடர்களால் தொகுக்கப் பெற்றவையே இப்போதுள்ள பாடல்கள்.
1
விடியற்காலை ஐந்தே முக்கால் மணி.
கோவையின் கிழக்கு வானத்தில் வெளிச்சக் கீறல்கள் தெரிய பனி இன்னமும் விலகாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தது. கே.பி.என். பஸ் மேம்பாலத்தில் இறங்கி காந்திபுரம் திரும்பியதும் பஸ்ஸின் கண்டக்டர் குரல் கொடுத்தார்.
ரயில்வே ஸ்டேஷன் போறவங்க இந்த இடத்துல இறங்கிக்கலாம்.
திருமூர்த்தி சூட்கேஸோடு எழுந்து நின்றான். பக்கத்து இருக்கையில் தூக்கக் கலக்கத்தோடு உட்கார்ந்திருந்த ஸ்ருதி அவனை வியப்போடு பார்த்தாள்.
என்ன திரு... எந்திரிச்சுட்டே...?
இந்த இடத்துல இறங்கிக்கலாம்... இங்கே இறங்கி ஆட்டோ பிடிச்சா சுந்தரவதனம் வீட்டுக்கு ஒரு பத்து நிமிஷத்துல போயிடலாம்...
ஹோட்டல்ல ரூம் போட வேண்டாமா?
எல்லாம் அப்புறம்தான்...! மொதல்ல சுந்தரவதனத்தை பார்க்கிறோம். இவ்வளவு காலை நேரத்துல வீட்டுக்குப் போனாத்தான் அவர் இருப்பார். நாம ஹோட்டல்ல ரூம் போட்டு குளிச்சு ட்ரஸ் பண்ணிட்டுப் போறதுக்குள்ளே அவர் வீட்டை விட்டு கௌம்பிடுவார். அப்புறம் அவரைப் பிடிக்க முடியாது.
கண்டக்டர் எரிச்சலாய் குரல் கொடுத்தார். என்ன ஸார் பஸ்ஸை விட்டு இறங்கறதா வேண்டாமான்னு பட்டிமன்றமா நடத்திகிட்டு இருக்கீங்க? இறங்கறதானா... சட்டு புட்டுன்னு இறங்குங்க... இல்லேன்னா அப்படியே உட்கார்ங்க.
இல்ல இறங்கறோம்...!
திருமூர்த்தியும் ஸ்ருதியும் சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு அரக்கபரக்க கீழே இறங்கினார்கள். கோவைக்கே உரித்தான அந்த ஐஸ்காற்று இரண்டு பேர்களின் முகங்களிலும் மோதியது.
என்ன ஒரு க்ளைமேட் பார்த்தியா திரு...!
அதுதான் கோவை. இந்த க்ளைமேட்டுக்காகவும் சிறுவாணித் தண்ணீர்க்காகவுமே இந்த ஊர்ல ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம் போலிருக்கு...!
அப்ப... திருநெல்வேலிக்குப் போனா அந்த ஊர் அல்வாவுக்காக ஒரு பொண்ணையும், சேலத்துக்குப் போனா அந்த ஊர் மாம்பழத்துக்காக ஒரு பொண்ணையும், பழனிக்குப் போனா பஞ்சாமிர்தத்துக்காக ஒரு பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்குவே போலிருக்கே?
கொடுத்தா பண்ணிக்க வேண்டியதுதான்...!
அப்படீன்னா உன்னை கூடிய சீக்கிரம் ஜெயிலுக்குப் பேர் போன வேலூர்ல பார்க்கலாம்ன்னு சொல்லு...
- சிரித்துக் கொண்டே சொன்ன ஸ்ருதியை திருமூர்த்தி பொய்க் கோபத்தோடு முறைத்த விநாடி - அவனுடைய இடுப்பு பெல்ட்டில் இடம் பிடித்து இருந்த செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று டிஸ்ப்ளேயில் பார்த்து விட்டு மலர்ந்தான்.
குட் மார்னிங் ஸார்!
என்ன... கோவை போய் சேர்ந்துட்டீங்களா?
சேர்ந்துட்டோம் ஸார்... இப்பத்தான் பஸ்ஸை விட்டு இறங்கினோம்!
இப்பவே சுந்தரவதனத்தைப் பார்த்துருங்க...!
அவரைப் பார்க்கத்தான் கிளம்பிட்டிருக்கோம் ஸார்...
திரு...!
சொல்லுங்க ஸார்...!
சுந்தரவதனத்தைப் பார்க்கிறது முக்கியம் இல்லை. பேசப் போற விஷயம் நமக்கு சாதகமாய் இருக்கணும்...!
இருக்கும் ஸார்!
தட்ஸ் குட்...! உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே இந்த தன்னம்பிக்கைதான்... மறுபடியும் நீ எனக்கு போன் பண்ணும்போது அது ஒரு வெற்றிச் செய்தியை சொல்லப் போகிற போனின் அழைப்பாய்த்தான் இருக்கணும்.
சர்ட்டன்லி ஸார்...!
- திருமூர்த்தி செல்போனை அணைத்து சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ள, ஸ்ருதி கேட்டாள்.
போன்ல யார் திரு...?
நம்ம புரபசர்தான்...!
என்ன சொல்றார்?
‘சுந்தரவதனத்தைப் பார்த்துப் பேசறது முக்கியம் இல்லை. பேசப் போற விஷயம் நமக்கு சாதகமாய் இருக்கணும்’ன்னு சொல்கிறார்.
உனக்கு நம்பிக்கை இருக்கா திரு...?
டன் டன்னாய்...
எனக்கு பத்து கிராம்கூட நம்பிக்கையில்லை திரு.
ஏன் அப்படி சொல்றே?
மொதல்ல சுந்தரவதனம் நம்ம ரெண்டு பேரையும் பார்த்துப் பேச ஒத்துக்குவாரான்னே சந்தேகமாய் இருக்கு...
இதோ பார் ஸ்ருதி...! சென்னையிலிருந்து ஐநூறு கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி இங்கே வந்து இருக்கோம். எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையோடு அப்ரோச் பண்ணினா வெற்றி கிடைக்கும்.
ம்... பார்க்கலாம்...! அதோ... ஒரு ஆட்டோ காலியாய் வருது. நிறுத்து...!
திரு கைகாட்ட ஆட்டோ நின்றது. டிரைவரின் தலை பீடிப்புகையோடு நீண்டது.
எங்க ஸார் போகணும்?
ரேஸ்கோர்ஸ் ரோடு
ரேஸ் கோர்ஸ் ரோட்ல எங்கே ஸார்... ஸ்பாட்டை கரெக்டா சொல்லுங்க. அப்பத்தானே ரேட் ஃபிக்ஸ் பண்ண முடியும்?
அப்துல் ரஹ்மான் ரவுண்டானா...!
இப்படி மொட்டையா சொன்னா எப்படி ஸார்...? ரவுண்டானாவில் எந்த இடம்...?
மனித உரிமைக் கமிஷன் சேர்மன் சுந்தரவதனத்தோட பங்களாவைத் தெரியுமா?
தெரியும்...
அங்கதான் போகணும்.
இதை மொதல்லயே சொல்லியிருக்கலாமே ஸார்! அம்பது ரூபாயாகும் ஸார்...!
திருமூர்த்தியும் ஸ்ருதியும் பேரம் பேசாமல் ஏறிக்கொண்டனர். ஆட்டோ புறப்பட்டது.
கோவை விடிந்து கொண்டிருக்க தண்டு மாரியம்மன் கோயிலில் அந்தக் காலை வேளையிலேயே பெண்கள் கூட்டம் தெரிந்தது. ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ என்று ஒலிபெருக்கி பாட, அவிநாசி சாலையின் பிளாட்பார ஓரங்களில் தொப்பைகளைக் கரைக்க சிலர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். சென்ற வாரம் வந்துவிட்டுப் போன ஒரு அரசியல்வாதியின் கட் அவுட் இன்னமும் கைகளைக் கூப்பி சிரித்துக் கொண்டிருக்க, ‘நாளைய வரலாறே! வருக வருக!’ என்று பேனர் பொய் சொல்லியது.
ஆட்டோ டிரைவர் கேட்டார்.
என்ன ஸார்... போனதும் ரிட்டர்னா...? ஆட்டோவை வெயிட்டிங்கில் போடட்டுமா...?
வேண்டாம்பா...! எங்களை நீ ட்ராப் பண்ணிட்டு கௌம்பு.
கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்ல ஸார்!
இல்ல வேண்டாம்...! நீ வெயிட் பண்ணாதே...! எங்களுக்கு அங்கே வேலையிருக்கு...!
ஆட்டோ ரேஸ்கோர்ஸ் எல்லைக்குள் நுழைந்தது. மஞ்சள் பூக்களை சுமந்தபடி வரிசையாய் சரக்கொன்றை மரங்கள் தெரிய, கார்ப்பரேசனின்