Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Illavasam Oru Vanavil
Illavasam Oru Vanavil
Illavasam Oru Vanavil
Ebook173 pages54 minutes

Illavasam Oru Vanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Illavasam Oru Vanavil

Read more from Rajeshkumar

Related to Illavasam Oru Vanavil

Related ebooks

Related categories

Reviews for Illavasam Oru Vanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Illavasam Oru Vanavil - Rajeshkumar

    28

    1

    க்ளோனிங் (Cloaning) என்கிற இந்த வார்த்தை இந்த 1997 ல் மிகவும் பிரபலமான வார்த்தை. (குஷ்பு மாதிரி) க்ளோனிங் என்றால் என்னவென்று பார்ப்போம். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களுமே தத்தம் வாரிசுகளை உருவாக்க இனப்பெருக்கம் செய்கின்றன. (மனித இனந்தான் வேகம் இதில் அதிகம்) மனித இனத்தில் பிறக்கும் குழந்தைகள் தன் தாய் தந்தையின் குணநலன்களை ஜீன் என்று அழைக்கப்படும் மரபணுக்கள் மூலம் பெறுகின்றன. அத்துடன் தாத்தா பாட்டியின் குணங்களும் அதில் இருக்கும். இயற்கையான வழியில் வாரிசுகளை உருவாக்கும் முறை இது. ஆனால், இதற்கு நேர்மாறான முறையில் வாரிசுகளை உருவாக்கும் முறைக்குத்தான் க்ளோனிங் என்று பெயர்.

    ஊட்டி மலைப்பாதையில் அந்த டாக்ஸி சிரமத்தோடு ரீங்காரம் செய்தபடி ஏறிக் கொண்டிருந்தது.

    டிரைவர் சிரத்தையாய் டாக்ஸியின் ஸ்டீயரிங்கை கையாண்டுக் கொண்டிருக்க - பின் சீட்டில் தாடி வைத்த முப்பது வயது இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் படுத்திருந்தார்கள்.

    பெண் அழகாக இருந்தாள். இருபத்தி மூன்று வயது இளமை எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் பூரண மெஜாரிட்டியோடு ஆட்சி செய்து கொண்டிருந்தது.

    கழுத்தில் புது மஞ்சளைப் பூசிக் கொண்ட தாலி தங்கச் சங்கிலியோடு சேர்த்து மின்னியது. தலைக்குக் கட்டியிருந்த இளம் நீல வர்ண ஸ்கார்ப் குளிர்காற்றில் படபடத்தது.

    டாக்ஸி ஒரு ஹேர்பின் வளைவை பெருமூச்சுகளோடு கடந்தபோது அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

    என்னங்க...?

    ம்...

    லேசா வயித்தைப் புரட்டுது...

    காட் ரோடு ஜர்ணின்னா அப்படித்தான் இருக்கும். என் மடியில படுத்துக்கறியா...?

    ம்...

    படுத்துக்கோ... அவன் வசதியாய் சாய்ந்து தன் மடியைக் காட்ட அவள் ஒரு ரோஜா மாலை போல் அவனுடைய மடியில் மெத்தென்று சாய்ந்தாள்.

    வாய்ல மிட்டாய் போட்டுக்கறியா ஜமுனா...?

    வேண்டாம்...

    கொஞ்சம் க்ளூகோஸ்...?

    வேண்டாங்க...உங்க மடியே போதும்.

    அவன் அவளுடைய வயிற்றை மெல்ல தடவி விட்டான். ஊட்டிக்கு இப்பத்தானே ஃப்ர்ஸ்ட் டைம் வர்றே... அதனாலதான் இந்த வயிற்றுப் புரட்டல். நாலைஞ்சு தடவை வந்துட்டா அப்புறம் இந்த அவஸ்தை இருக்காது .

    இப்ப மணி என்னங்க...

    ஆறு... பத்து...

    எத்தனை மணிக்கு ஊட்டி போய் சேர்வோம்?

    ஏழு மணியாயிடும்...

    காட்டேஜ்ல ரூம் கிடைக்குமா...?

    போன் பண்ணித்தான் சொல்லியாச்சே...? என்றவன் அவளை காதோரம் குனிந்து சாக்லேட் வாசனையோடு சொன்னான். காட்டேஜும் அங்கே இருக்கிற இரட்டைக் கட்டிலும் நமக்காக வெயிட் பண்ணிட்டிருக்கும்...

    கெட்ட வார்த்தை பேசாதீங்க...

    கட்டில் கெட்ட வார்த்தையா?

    "போதும் வழியல்... டாக்ஸி டிரைவர் காதுல விழுந்துடப் போகுது...

    விழட்டுமே...! அதனால என்ன...?

    உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்.

    இந்த தைரியம் எப்பயிருந்து வந்தது தெரியுமா?

    எப்பயிருந்து...?

    உன் கழுத்துல தாலி கட்டின நிமிஷத்திலிருந்து

    எனக்கு இன்னும் ஆச்சர்யமாவே இருக்கு...

    எது...?

    நம்ம கல்யாணம் நடந்தது...

    ஏன்? என்மேல உனக்கு நம்பிக்கையில்லாமே இருந்ததா...?

    அப்படியெல்லாம் இல்லை...

    பின்னே...?

    ஒரு பயம்தான்...

    என்ன பயம்...?

    நிறைவேறாத காதல் லிஸ்டில் நம்ம காதலும் இடம் பெற்றுவிடுமோ என்கிற சின்ன பயம்தான்...

    ஜமுனா! நம்ம காதல் ஜெயிச்சதுல எந்த ஆச்சர்யமும் இல்லை. உனக்கும் அப்பா அம்மா ஃபேமிலின்னு யாரும் கிடையாது. எனக்கும் எந்த உறவும் கிடையாது. நம்ம காதலுக்கு குறுக்கே நிக்க யாராவது இருந்தாத்தானே சந்தேகம் வரணும்...?

    டாக்ஸியின் வேகம் குறைந்தது.

    அவள் தலையை உயர்த்திப் பார்த்தாள். டிரைவர் ரோட்டோரமாய் டாக்ஸியை ஒதுக்கி நிறுத்திக் கொண்டிருந்தான்.

    என்ன டிரைவர்...

    ஸார்... ஒரு பத்து நிமிஷம் டாக்ஸியிலேயே இருங்க. என்னோட வீடு அந்த யூகலிப்டஸ் மரங்களுக்குப் பின்னாடித்தான் இருக்கு. போய் என்னோட ஒய்ஃபுக்கு பணத்தைக் கொடுத்துட்டு வந்துடறேன்.

    சரி... சரி... போய்க் குடுத்துட்டு வா. லேட் பண்ணிடாதே... குளிர் ஜாஸ்தியாகறதுக்குள்ளே ஊட்டி போய்ச் சேர்ந்துடணும்...

    சீக்கிரமாவே போயிடலாம் ஸார்... பணத்தைக் குடுத்ததுமே ஓடி வந்துடுவேன்...

    டிரைவர் டாக்ஸியைவிட்டு இறங்கி ரோட்டோரமாய் வளர்ந்திருந்த முல்லைச் செடிகளை மிதித்துக் கொண்டு மரங்களுக்குப் பின்னால் மறைந்து போனான்.

    டாக்ஸியின் இயக்கம் இப்போது நின்று போயிருந்ததால் சுற்றுப்புறம் முழுவதும் கனத்த நிசப்தம்.

    யூகலிப்டஸ் மரங்களின் இலைகள் மட்டும் வீசிய குளிர் காற்றுக்கு ஏற்றபடி ரகசியம் பேசியது.

    அவன் கூப்பிட்டான்.

    ஜமுனா...

    ம்...

    என் மடியிலிருந்து கொஞ்சம் தலையை எடுத்துக்கறியா...?

    ஏன்...?

    வெளியே ஒரு அவசர வேலை இருக்கு...

    என்ன வேலை...?

    இடது கை சுண்டு விரலைக் காட்டினான்.

    இப்படிக் காட்டினா என்ன அர்த்தம்...?

    மூச்சா போகணும்ன்னு அர்த்தம்...

    ச்சே...! இதுதானா... போய்ட்டு வாங்க... அவன் மடியினின்றும் எழுந்து பின் சீட்டுக்கு சாய்ந்து கொண்டாள்.

    அவன் டாக்ஸியின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான். காத்திருந்த குளிர்காற்று முகத்தில் மோதியது. உள்ளங்கைகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டு மெதுவாய் நடந்தான்.

    ஐம்பதடி தூரம் போனதும் ரோட்டோர இறக்கத்தில் இறங்கி புதராய் மண்டிய வேலிக்காத்தான் செடிகளுக்குப் பின்னே மறைந்து ஸ்வெட்டர் அணிந்திருந்த மார்புப் பகுதிக்குள் கையைக் கொண்டு போய் செல்போனை எடுத்து அதற்கு உயிரூட்டினான்.

    டயலில் எண்களைத் தட்டிவிட்டு - மறுமுனையில் ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டதும் குரல் கொடுத்தான்.

    ஹலோ...

    யாரு...?

    நான்தான் ஸார் மனோ...

    மறுமுனையில் நலிந்த ஆண் குரல் ஆர்வமாய்க் கேட்டது.

    என்ன மனோ... ஊட்டி போய் சேர்ந்துட்டியா?

    இல்ல சார்... இப்போ பாதி வழியில் இருக்கேன். ஊட்டி போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரமாயிடும்.

    இப்ப நீ எங்கிருந்து பேசிட்டிருக்கே...?

    டிரைவர் டாக்ஸியை நிறுத்திட்டு பக்கத்தில் இருக்கிற அவன் வீட்டுக்கு போயிருக்கான். டாக்ஸியில ஜமுனா உட்கார்ந்துட்டிருக்கா. நான் யூரின் பாஸ் பண்ணப் போறதா சொல்லிட்டு ஒரு புதர்க்குப் பின்னே வந்து பேசிட்டிருக்கேன்.

    யாராவது கேட்டுடப் போறாங்க...

    இங்கே ஒரு ஈ காக்கா கிடையாது ஸார். பக்கத்துல யாராவது இருந்தா போன் பண்ணுவேனா...?

    சரி... போட்ட திட்டத்துல எந்த மாற்றமும் இல்லையே...?

    இல்ல... ஸார்...

    திட்டம் சரியா வொர்க் அவுட் ஆகணும்...

    "துல்லியமா வொர்க் அவுட் ஆகும் ஸார், யாரும்

    Enjoying the preview?
    Page 1 of 1