Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Illai Ilaiyuthirkaalam
Ini Illai Ilaiyuthirkaalam
Ini Illai Ilaiyuthirkaalam
Ebook92 pages59 minutes

Ini Illai Ilaiyuthirkaalam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Ini Illai Ilaiyuthirkaalam

Read more from Rajeshkumar

Related to Ini Illai Ilaiyuthirkaalam

Related ebooks

Related categories

Reviews for Ini Illai Ilaiyuthirkaalam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Illai Ilaiyuthirkaalam - Rajeshkumar

    15

    1

    "விக்னவிநாயக பாதம் நமஸ்தே!"

    பூஜையை முடித்துக்கொண்டு அந்தச் சிறிய பூஜையறையிலிருந்து வெளிப்பட்டாள் விஜயலட்சுமி. தலைக் கேச ஈரத்தை உறிஞ்சுவதற்காக தலையில் சுற்றப்பட்டிருந்த அந்த ஈரிழை டவல் கூட முப்பது வயது விஜயலட்சுமியின் முகத்துக்கு தனியழகை சப்ளை செய்து கொண்டிருக்க, நெற்றிக்கு இட்டிருந்த குங்குமம் கன்னியாகுமரிக் கடலில் உதிக்கும் சூரியனை ஞாபகத்துக்குக் கொண்டு வந்தது.

    காற்றுக்காக ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு சமையலறையை நோக்கி நகர முயன்ற விநாடி பக்கத்து அறையிலிருந்து குரல் கேட்டது.

    அம்மா... விஜி...!

    அப்பாவின் குரல்.

    வந்துட்டேம்பா...!

    விஜயலட்சுமி உள்ளே போனாள்.

    அப்பா பொன்னம்பலம் படுக்கைக்கு சாய்ந்து உட்கார்ந்து இடது கைவிரல்களால் நெஞ்சுக்குழியை நீவிக் கொண்டிருந்தார். விஜயலட்சுமி பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.

    என்னப்பா...! நெஞ்சு வலிக்குதா...?

    அது என்னிக்கு வலிக்காம இருந்திருக்கு...?

    பொன்னம்பலம் அந்த சிரமத்திலும் புன்னகைத்து விட்டுக் கேட்டார்.

    ஜனனி எழுந்துட்டாளா...?

    ம்... எழுந்து குளிச்சுட்டிருக்கா...

    எத்தனை மணிக்கு அவளுக்கு இன்டர்வ்யூ?

    ஒன்பது மணிக்கு...

    அது என்ன வேலைக்கான இன்டர்வ்யூ...?

    குழந்தை உணவுகளைத் தயாரிக்கிறஃபேக்டரி அது...

    ஃபேரக்ஸ் மாதிரியா...?

    ஆமாப்பா

    ஃபேக்டரி எங்கே...?

    அம்பத்தூர்ல...

    வேலை கிடைச்சுடுமா...?

    "அப்பா...! உங்ககிட்ட பேசிட்டிருந்தா காலை டிபனை பண்ண முடியாது. அதோ... ஜனனியே வந்துட்டா...! நீங்க என்ன கேக்கணுமோ அதை அவகிட்டயே கேட்டுக்கலாம்...’’

    விஜயலட்சுமி சமையலறைக்குள் நுழைந்துவிட பொன்னம்பலம் ஜனனியைப் பிடித்துக் கொண்டார்.

    என்னம்மா...! வேலை கிடைச்சுடுமா...?

    கொஞ்சம் கஷ்டம்தான்ப்பா... பெரிய கம்பெனி. நல்ல சம்பளம். ஏகப்பட்ட ரெக்கமண்டேஷன்ஸ் வரும். அதையெல்லாம் மீறி வேலை கிடைக்கணும்ன்னா போன ஜென்மத்துல கண்டமேனிக்கு புண்ணியம் பண்ணியிருக்கணும்.

    ஒண்ணிலிருந்து பத்துக்குள்ளே ஒரு நெம்பர் சொல்லு...

    ஏழு...

    உனக்கு கண்டிப்பா வேலை கிடைச்சுடும்

    எப்படிப்பா...?

    இன்னிக்கு தேதி என்ன...?

    இருபத்தஞ்சு...

    ரெண்டையும் அஞ்சையும் கூட்டு. என்ன டோட்டல்?

    ஏழு...

    இன்னிக்கு தேதி, மாசம், வருஷம் இந்த மூணையும் கூட்டிப்பார். எவ்வளவு வருது...?

    ஜனனி மனசுக்குள் கூட்டிப் பார்த்துவிட்டு. அட கூட்டுத்தொகை ஏழு என்றாள்.

    பொன்னம்பலம் சிரித்தார்.

    பார்த்தியா...? இன்னிக்கு பூராவும் எண் ஏழோட ஆதிக்கம். உன்கிட்ட ஒண்ணிலிருந்து பத்துக்குள்ளே ஒரு நெம்பர் சொல்லச் சொன்னதும் நீ ‘ஏழு’ன்னு சொன்னே. தைரியமா போய் இன்டர்வ்யூவை அட்டெண்ட் பண்ணு. வேலை கண்டிப்பா கிடைக்கும்...

    இன்னிக்கு அப்பாவோட ஜோஸியம் பலிக்குதான்னு பார்க்கலாம்.

    எனக்கும் கொஞ்சம் ஜோஸியம் சொல்றீங்களா... பொன்னம்பலம்...?

    குரல் கேட்டு வாசல் பக்கம் திரும்பினார் பொன்னம்பலம். வீட்டுக்காரர் இறுகிய முகத்தோடு நின்றிருந்தார்.

    வாங்க... நாயுடு...!

    வர்றது இருக்கட்டும். நானும் ஒண்ணிலிருந்து பத்துக்குள்ளே ஒரு நெம்பர் சொல்றேன். நீங்க எனக்கு தரவேண்டிய நாலுமாச வாடகை பாக்கி எப்போ கிடைக்கும்ன்னு சொல்லுங்க...

    அடுத்த மாசம் வரைக்கும் பொறுங்க நாயுடு. சேர்த்து குடுத்துடறேன்...

    எப்படி கொடுப்பீங்க...? சிங்கப்பூரிலிருந்து ஏதாவது ட்ராஃப்ட் வரப்போறதா ஃபேக்ஸ்ல மெஸேஜ் வந்ததா...?

    ஜனனி கோபமானாள்.

    நாயுடு ஸார்...! நீங்க வயசுல பெரியவங்க இப்படியெல்லாம் ஒருத்தர் மனசு புண்படும்படியா பேசக்கூடாது. அப்பா ஹெட்மாஸ்டராயிருந்து ரிடையர்ட் ஆனவங்க. அவர் வகித்த உத்யோகத்துக்காவது கொஞ்சம் மரியாதை குடுங்க

    இதோ பாரம்மா ஜனனி...! உங்கப்பாவுக்கு மரியாதைதானே வேணும்...? வண்டி வண்டியா தர்றேன். இந்த வழியா போகும்போதும் சரி... வரும்போதும் சரி ஒவ்வொரு தடவையும் கும்பிடு போட நான் தயார். என் வாடகைப் பணத்தை அவர் கொடுக்கத் தயாரான்னு கேளு...

    ஜனனி மௌனமாய் நிற்க நாயுடு அதே கோபத்தோடு தொடர்ந்தார்.

    ஒழுங்கா வாடகை கொடுக்க வக்கில்லை. மரியாதை மட்டும் வேணுமாம்.

    விஜயலட்சுமி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

    அவளைப் பார்த்ததும் நாயுடு கோணலாய்ப் புன்னகைத்தார்.

    உன்னோட பங்குக்கு நீ என்னம்மா சொல்லப்போறே? ஆளுக்கு ஆள் ஒரு காரணம் வெச்சிருப்பீங்களே...?

    இப்படி காலங்கார்த்தால் வந்து வாடகைப்பணம் கேட்டு சத்தம் போடறது கொஞ்சம்கூட நல்லாயில்லை...

    சரி...! உங்களுக்கு எந்த நேரம் சௌகரியப்படும்ன்னு சொல்லுங்க... அப்ப வந்து சத்தம் போடறேன்...

    அப்பாவுக்கு வரவேண்டிய பென்ஷன் பணம் ஏதோ ஒரு பிரச்னை காரணமா பெண்டிங்க்ல இருக்கு. அடுத்த மாசம் இந்தப் பிரச்னை க்ளியராயிடும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்குங்க...

    "பொறுமையைப்பத்தி நீ எனக்கு சொல்லித் தர்றியா...? புருஷன்கூட அனுசரிச்சு போய் குடும்பம் நடத்த முடியாமே

    Enjoying the preview?
    Page 1 of 1