Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivappu Iravu
Sivappu Iravu
Sivappu Iravu
Ebook190 pages38 minutes

Sivappu Iravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sivappu Iravu

Read more from Rajeshkumar

Related to Sivappu Iravu

Related ebooks

Related categories

Reviews for Sivappu Iravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivappu Iravu - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    எச்சரிக்கை -1

    மின்சாரத்தை சிக்கனப்படுத்த இப்பொழுது சி.எஃப்.எல். பல்புகளை பெரும்பாலானோர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால் சாதாரண பல்புகளைக் காட்டிலும் இதில் ஒரு கூடுதல் அபாயம் ஒளிந்து கொண்டு இருக்கிறது என்கிற உண்மை பலர்க்குத் தெரியாது. சி.எஃப். எல். பல்புகள் எரிந்து கொண்டு இருக்கும்போது எந்த ஒரு ஆபத்தும் ஏற்படுவது இல்லை. ஆனால் அந்த பல்புகள் கீழே விழுந்து உடையும் போதுதான் ஆபத்து ஆரம்பமாகிறது. அது எது மாதிரியான ஆபத்து என்பதை இரண்டாவது அத்தியாயத்தில் பார்க்கலாம்.

    1

    பிரகாசமான லஸ்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் நிரம்பியிருந்தது அந்த பங்களாவின் சதுரமான ஒரு பெரிய ஹால். க்ரானைட் கற்கள் பதித்த சுவர்களில் மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள். ஹாலின் மையத்தில் இருந்த நீள் செவ்வக கண்ணாடித் தொட்டியில் பொன்னிற மீன்கள் கூட்டம் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன.

    நீல நிற வெல்வெட் சோபாக்களில் அந்த நான்கு இளைஞர்களும் சாய்ந்து உட்கார்ந்திருக்க, கறுப்புக் கோட்டும் வெள்ளை பேண்ட்டும் அணிந்த லாயர் தன் கையில் வைத்து இருந்த ஃபைலைப் புரட்டியபடி அவர்களுக்கு எதிரே நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்.

    உங்க அப்பா அனந்தசயனம் கிரிஸ்டல் க்ளீயராய் உயிலை எழுதி வெச்சுட்டுத்தான் இறந்து போயிருக்கார். மொத்த சொத்தின் மதிப்பு இருநூறு கோடி. இதை நாலாய் பிரிச்சு வெச்சாச்சு. உங்க ஃபேமிலி லாயரான நானும், ஃபேமிலி ஆடிட்டரான பெருமாள் சாமியும் எல்லா ப்ராப்பர்ட்டியையும் முறையாய் ஸேல் பண்ணி அதை கேஷாய் மாத்தி நாலு சூட்கேஸ்களிலும் நிரப்பி உங்க முன்னாடி கொண்டு வந்து வெச்சிருக்கோம். கோர்ட் உத்தரவுபடி இந்த தஸ்தாவேஜ்களில் கையெழுத்தைப் போட்டுட்டு நீங்க பணத்தை எடுத்துட்டு இந்த வீட்டை விட்டு கிளம்பிடலாம். ஒவ்வொருத்தராய் வந்து கையெழுத்தைப் போடுங்க. மொதல்ல பிரசன்ன குமார்.

    லாயர் சொல்ல சோபாவில் அமர்த்தலாய் உட்கார்ந்திருந்த பிரசன்ன குமார் எழுந்து வந்து பரப்பியிருந்த பேப்பர்களில் கையெழுத்தை போட்டுவிட்டு ஒரு சூட்கேஸை எடுத்துக் கொண்டு மறுபடியும் சோபாவில் போய் உட்கார்ந்து பணத்தை சரிபார்க்க ஆரம்பித்தான்.

    லாயர் குரல் கொடுத்தார்.

    இரண்டாவதாக விஜயகுமார்.

    சற்று ஒடிசலாய் இருந்த விஜயகுமார் எழுந்து வந்து கையெழுத்தைப் போட்டுவிட்டு பணம் நிரம்பியிருந்த சூட்கேஸை எடுத்துக்கொண்டான். சோபாவுக்கு போய் சாய்ந்தான்.

    மூன்றாவதாக மகேஷ்குமார்.

    தொப்பை போட்டு சற்று அதிகப்படியான உடம்போடு இருந்த மகேஷ்குமார் அலட்சியமாய் நடை போட்டு லாயரை நெருங்கினான். அவர் நீட்டிய தாள்களில் கையெழுத்தைப் போட்டு விட்டு பணம் நிரம்பியிருந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டான்.

    பணம் சரியாய் இருக்குமா லாயர் ஸார்?

    எண்ணிப் பார்த்துக்கோ... எரிச்சலாய் சொன்ன லாயர் சோபாவில் இருந்த அந்த நான்காவது இளைஞனைக் கூப்பிட்டார்.

    முத்துகுமார்.

    அந்த இளைஞன் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். லாயர் அவனை நெருங்கினார். என்ன முத்துகுமார்...! உனக்கு பணம் வேண்டாமா? கூப்பிட கூப்பிட அப்படியே உட்கார்ந்துட்டிருக்கே?

    முத்துகுமார் எழுந்தான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்த மு.கு. இருபத்தேழு வயது நிரம்பி, உயரமாய், சிவப்பாய், அழகாய் இருந்தான். லாயரை ஒரு சின்னப் புன்னகையோடு பார்த்தான்.

    அந்த சூட்கேஸ்ல எவ்வளவு பணம் இருக்கு லாயர் ஸார்?

    என்ன ஒண்ணும் தெரியாதது மாதிரி கேட்கிறே...? ஐம்பது கோடி உள்ளே தூங்கிட்டிருக்கு...!

    அந்த ஐம்பது கோடி ரூபாயை நான் என்ன வேணும்ன்னாலும் பண்ணலாமா லாயர் ஸார்?

    தாராளமாய்! அது உன்னோட பணம். உன் விருப்பப்படி என்ன வேணும்னாலும் செய்யலாம்...!

    சரி.. இந்தாங்க என்று சொன்ன முத்துகுமார் தன் கையில் வைத்து இருந்த வெள்ளைத்தாளை நீட்டினான்.

    என்ன இது?

    படிச்சுப் பாருங்க... ஸார்...

    லாயர் தன் ஸ்பெக்ஸை சரியானபடி பொருத்திக் கொண்டு அந்தத் தாளில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு திகைப்போடு நிமிர்ந்தார்.

    முத்துகுமார் அவரை ஒரு புன்னகையோடு பார்த்தான். என்ன லாயர் ஸார்.. படிச்சிட்டீங்களா?

    என்ன முத்துகுமார்...! உன்னோட பங்கான 50 கோடி ரூபாயையும் அஞ்சு முதியோர் இல்லங்களுக்கும், அஞ்சு அநாதை விடுதிகளுக்கும் எழுதி வைக்கும்படியாய் லெட்டர் எழுதிக் கொடுத்து இருக்கே!

    ஆமா லாயர் ஸார்.

    எதுக்காக இந்த பைத்தியக்காரத்தனமான முடிவு?

    எனக்கு அந்த பணம் வேண்டாம்.

    என்ன காரணம்?

    அது பாவப்பட்ட பணம். என்னோட அப்பா நேர்மையான முறையில் உழைச்சு, வியர்வையை சிந்தி, சம்பாதிச்ச பணம் இல்லை. கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டின்னு பலபேரோட வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிட்டு சம்பாதிச்ச பணம். அந்த ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தா உங்களுக்கு அதுல இருக்கிற காந்தி படம் தெரியலாம். ஆனா எனக்கு ஏழைகளோட கண்ணீர் கறையும், ரத்தக்கறையும் தெரியுது லாயர் ஸார்.

    முத்துகுமார்! நீ பேசறது சரியில்லை. உன்னோட அப்பா ஆரம்ப காலத்துல ரொம்பவும் கஷ்டப்பட்டார்.

    அது எனக்குத் தெரியும் லாயர் ஸார். ஆரம்ப காலத்துல அப்பா ஒரு லேண்ட் ப்ரோக்கராய் இருந்தார். நியாயமான முறையில் சம்பாதிச்சார். சில ஆயிரங்களே லாபமாய் கிடைச்சாலும் அப்போ மனசுக்கு நிம்மதியாய் இருந்தது. ஆனா அப்புறம் அப்பா ஒரு உள்ளூர் அரசியல்வாதியோடு சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு தாதாவாய் மாறி அடியாட்களை வெச்சுக்கிட்டு கட்டப்பஞ்சாயத்து... கந்துவட்டின்னு கோடிக்கணக்கில் சம்பாதிச்ச பணம். அதாவது பாவப்பட்ட பணம்!

    நாய் விற்ற காசு குரைக்காது முத்துகுமார்!

    பூ விற்ற காசு மணக்காது என்கிற பழமொழியும் எனக்குத் தெரியும் லாயர் ஸார்.

    முடிவா நீ என்ன சொல்றே? பணம் கொஞ்ச நஞ்சம் இல்லை. அம்பது கோடி...!

    அது ஐநூறு கோடியாய் இருந்தாலும் எனக்கு வேண்டாம்.

    முத்துகுமார் சொன்ன விநாடி -

    கட்.. சீன்.. ஓ.கே... என்ற குரல் ஒலிக்க பக்கவாட்டு விளக்குகள் உயிர் பெற்றன. அந்த ஹால் பூராவும் வெளிச்சம் பரவியது. வாசனை பீடாவை மென்று கொண்டிருந்த டைரக்டர் அமிர்தராஜ் தன் பெரிய தொப்பையோடு ஓடி வந்து முத்துகுமாரை கட்டிப்பிடித்துக் கொண்டார்.

    முத்துகுமார்! இந்த சீனை சொதப்பாமே நல்லமுறையில் பேசி நடிச்சுட்டே... இதே மாதிரி டேக் வாங்காமே ஒவ்வொரு எபிசோடிலும் பேசி நடிச்சுடு. அடுத்த தடவை ப்ரொட்யூஸர் கிட்டே சொல்லி ஐநூறு ரூபாய் சேர்த்துவாங்கித்தர்றேன்.

    முத்துகுமார் சலித்துக் கொண்டான்.

    "அட போங்க ஸார்... இதையேதான் ஒவ்வொரு தடவையும் சொல்றீங்க. கண்ணுக்குத் தெரியற பணம் கைக்கு வரமாட்டேங்குதே... ‘பணம் பத்தும் செய்யும்’ என்கிற இந்த டி.வி. சீரியல் 500 எபிசோடுகளைத் தாண்டிப் போயிட்டு இருக்கு...! சீரியல் ஆரம்பிச்ச அன்னிக்கு கொடுத்த அதே அமௌண்ட்டைத்தான் போன வாரம் வரைக்கும் கொடுத்துட்டு வர்றீங்க. இந்த டி.வி. சீரியல்ல வர்ற கேரக்டரோட பேர் முத்துகுமார். அதே கேரக்டர்ல என்னோட ஒரிஜனல் பேரான முத்துகுமார் என்கிற பேர்லே நான் நடிக்கிறேன். இப்ப என்னோட சட்டைப் பாக்கெட்ல அம்பது ரூபாய் கூட இல்லை. ஆனா 50 கோடி ரூபாயை வேண்டாம்ன்னு சொல்ற கேரக்டர் எனக்கு. ஆண்டவன் என்னமா

    Enjoying the preview?
    Page 1 of 1