Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avan Aval Avargal
Avan Aval Avargal
Avan Aval Avargal
Ebook130 pages35 minutes

Avan Aval Avargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Avan Aval Avargal

Read more from Rajeshkumar

Related to Avan Aval Avargal

Related ebooks

Related categories

Reviews for Avan Aval Avargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avan Aval Avargal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    விடியற்காலை ஐந்து மணி.

    பளீரென்று வேஷ்டியிலும் சர்ட்டிலும் நிலைக்கண்ணாடி முன் நின்றிருந்த ஜனார்த்தனம், ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த அங்கவஸ்திரத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டபோது - ஹாலில் இருந்த டெலிபோன் கிணு கிணுத்துக் கூப்பிட்டது. வெளியே வந்து ரிஸீவரை எடுத்தார்.

    ஹலோ...

    ஹலோ...

    ஜனா...! நான் தம்புராஜ் பேசறேன்... இன்னுமா நீ வீட்டை விட்டு புறப்படலை... முகூர்த்தம் சரியா அஞ்சரை மணிக்கு. தாலி எடுத்துக் குடுக்க வேண்டியவன் நீ...! நீயே லேட்டா வந்தா எப்படி?

    இதோ புறப்பட்டுக்கிட்டே இருக்கேன்... பொண்ணும் மாப்பிள்ளையும் மணையில் உட்கார்ந்தாச்சா...?

    உட்கார்ந்து பத்து நிமிஷமாச்சு. சடங்கெல்லாம் போயிட்டிருக்கு... கல்யாண மண்டபம் ரொம்பிட்டிருக்கு...

    சரியா அஞ்சே கால் மணிக்கு மண்டபத்துல இருப்பேன்...! கவலைப்படாமே வர்றவங்களைக் கவனி...

    ரிஸீவரை வைத்த ஜனா மாடியை நோக்கிக் குரல் கொடுத்தார்.

    டேய்... கனகு...!

    வந்துட்டேம்பா...

    மகன் கனகுவின் குரல் கேட்டது.

    சீக்கிரமா வாடா... மணி அஞ்சு. அஞ்சே கால் மணிக்கெல்லாம் மண்டபத்துல இருக்கணும்...

    கனகு இறங்கி வந்தான். இருபத்தைந்து வயதான கனகு நல்ல உயரமும் உயரத்துக்கேற்ற உடம்புமாய் இருந்தான். வெளிர் நீல நிற சர்ட்டும் - கறுப்பு நிறப் பேண்ட்டும் அவனுடைய கோதுமை நிறத்தை எடுப்பாக்கிக் காட்டியது.

    யார்கிட்டருந்துப்பா ஃபோன்...?

    என் ஃப்ரண்ட் தம்புராஜ்தான் ஃபோன் பண்ணியிருந்தான்... முகூர்த்தத்திற்கு நேரமாயிடுச்சாம். கத்தறான்.

    இதோ கிளம்பிட்டோம்...

    இருவரும் ஹாலைக் கடந்து போர்டிகோவுக்கு வந்தார்கள். தூணுக்குச் சாய்ந்து உட்கார்ந்து கோழித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த வேலையாள் பத்ரய்யன் சத்தம் கேட்டு அரக்கப் பரக்க எழுந்து மார்புக்குக் குறுக்காய்க் கைகளைக் கட்டிக் கொண்டான்.

    பத்ரு.

    அய்யா!

    தூங்கினது போதும்... நானும் தம்பியும் கல்யாணத்துக்குப் போய்ட்டு வர்றோம். வீட்டைப் பத்திரமா பார்த்துக்க. காம்பௌண்ட் கேட்டை உள்பக்கமா தாழ் போட்டு வை...

    சரிங்கய்யா...

    டெலிபோன் ஏதாவது வந்தா பேசறது யார்ன்னு கேட்டு விபரத்தைத் தெரிஞ்சு வை.

    அவன் தலையாட்ட, காருக்கு வந்தார்கள். பரிசுப் பெட்டியைப் பின் சீட்டில் வைத்துவிட்டு - முன் சீட்டுக்கு வந்தார் ஜனார்த்தனம். கனகு ஸ்டீரிங்கைப் பிடித்தான். கார் நகர்ந்தது. காம்பௌண்ட் கேட்டைத் தாண்டியதும் கனகு கேட்டான்.

    உங்க ஃப்ரண்ட் தம்புராஜ் வீட்ல நடக்கிற கடைசிக் கல்யாணம் இதுதானேப்பா...?

    ஆமா...

    மாப்பிள்ளைப் பையன் பெரிய இடம்ன்னு கேள்விப்பட்டேன்.

    ரொம்ப பெரிய இடம். கம்பம், குமுளி, தேனியில நிறைய ஏலக்காய், டீ எஸ்டேட்ஸ்... தம்புராஜோட ஸ்டேட்டஸுக்கு இது பெரிய இடம்தான்.

    ஆறு மணிக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சிடும், இல்லையாப்பா?

    முடிஞ்சுடும். ஏன்?

    நான் கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்பாட்டுக்குப் போகணும். இன்னிக்கு ஆர்சி கான்க்ரீட் போடறோம். கட்டிட ஓனர் சின்னதா ஒரு பூஜையும் வெச்சிருக்கார்.

    கனகு...

    ம்.

    நீ என்ஜினியரிங் படிப்பை முடிச்சு எத்தனை வருஷமாச்சு?

    நாலு வருஷம்.

    இப்ப உனக்கு வயசு எவ்வளவு தெரியுமா?

    தெரியும்.

    எவ்வளவு?

    இருபத்தேழு.

    எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே?

    அடுத்த வருஷம்.

    போன வருஷம் கேட்டப்ப அடுத்த வருஷம்ன்னு சொன்னே. இந்த வருஷம் கேட்கிறப்பவும் அடுத்த வருஷம்ன்னு சொல்றே... நீ எப்பத்தான் கல்யாணம் பண்ணிக்குவே?

    இல்லேப்பா... அடுத்த வருஷம் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்.

    எந்தப் பொண்ணையாவது மனசுல நினைச்சுட்டிருக்கியா?

    சேச்சே! அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லேப்பா.

    நீ எந்தப் பெண்ணை விரும்பறதாய் இருந்தாலும் சரி. நம்ம ஸ்டேட்டஸுக்குத் தகுந்தவளா இருக்கும்படியா பார்த்துக்கோ. ஜாதி மதத்தைப் பத்திக்கூடக் கவலையில்லை.

    உங்களோட இந்த பாலிஸிதான் ஏற்கெனவே எனக்குத் தெரியுமேப்பா. எனக்கு எந்தவிதமான காதல் விவகாரமும் கிடையாது.

    அப்ப நம்ம சாதி சனத்துல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடலாமா?

    ஒரு மூணு மாசம் கழிச்சு ஆரம்பிங்கப்பா.

    கார் விடியற்காலையின் நிசப்தங்களைக் கெடுத்துக் கொண்டு நகரின் மையத்திலிருந்த கல்யாண மண்டபத்தை நெருங்கியது. நேரம் - 5.10. மண்டபத்துக்கு வெளியே கார்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருக்க, காரை மெதுவாய் ஓட்டிப் போய் இடைவெளி கிடைத்த இடத்தில் செருகி நிறுத்தினான்.

    கிட்டத்தட்ட ஒரு நூறு கார் இருக்கும் போலிருக்கே!

    தாராளமாய் இருக்கும். மாப்பிள்ளை பெரிய இடங்கிறதுக்கு இந்த கார் பார்க்கிங் ஒண்ணே போதுமே!

    காரை விட்டு இறங்கி லாக் செய்து கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1