Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathal Thozhirsalai
Kaathal Thozhirsalai
Kaathal Thozhirsalai
Ebook90 pages35 minutes

Kaathal Thozhirsalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466176
Kaathal Thozhirsalai

Read more from Rajeshkumar

Related to Kaathal Thozhirsalai

Related ebooks

Reviews for Kaathal Thozhirsalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathal Thozhirsalai - Rajeshkumar

    23

    1

    அம்மா!

    மகன் முரளியின் குரல் கேட்டு உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள் திலகம். முரளி வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையில் வெளிச்சமாய் நின்றிருந்தான். படிய வாரியிருந்த கிராப்பும் இள நீல நிற டையும் அவனுடைய முகத்திற்கு களையூட்டியது.

    "என்ன முரளி?’’

    "இப்படி கிழக்கு பார்த்து நில்லும்மா...’’

    "எதுக்குடா?’’

    எனக்கு வேலை கிடைச்சிருக்கம்மா! இன்னிக்குத் தான் முதல் முதலா வேலைக்கு சேரப் போறேன். ஆசீர்வாதம் பண்ணி அனுப்பும்மா...

    ‘‘டேய் முரளி... உங்கப்பா சம்பாதிச்சு வைச்சுட்டு போன சொத்தும் இவ்வளவு பெரிய வீடும் இருக்கிறப்போ நீ ஏண்டா வேலைக்கு போகணும்? இத்தனை நாளும் நீ சும்மா தாமாசுக்காகத்தான் வேலைக்கு போறேன்னு சொல்றியோன்னு நினைச்சேன். இன்னிக்கு நிஜமாவே கிளம்பிட்டே!’’

    அம்மா! அப்பா நிறைய சொத்தை சம்பாதிச்சு வைச்சுட்டு போயிருக்கார். அது உண்மைதான்! அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்தை நான் ஜாலியா செலவு பண்ண தயாராயில்லை. நான் படிச்ச எம்.காம். படிப்புக்கு ஏத்த மாதிரி ஒரு வேலை கிடைச்சிருக்கு. நேத்தே உன்கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன். சொன்னா... இப்ப பாடின பாட்டையே நேத்திலிருந்து ஒரு நூறு தடவையாவது பாடியிருப்பே! சரி சரி. கிழக்கு பார்த்து நில்லு. கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்.

    திலகம் கிழக்கு பார்த்து நின்றுகொள்ள - முரளி சாஷ்டாங்கமாய் அம்மாவின் கால்களில் விழுந்து எழுந்தான். எழுந்த மகனின் கன்னங்களை வருடி திருஷ்டி கழித்தாள்.

    என் பிள்ளை தீர்க்காயுசோட ராஜா மாதிரி இருக்கணும்.

    நான் கிளம்பட்டுமாம்மா...

    நில்லுடா! எந்த கம்பெனியில் என்ன உத்தியோகம்? ஒண்ணும் சொல்லமே போறியே?

    எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் வேலை. மாசத்துக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளம்.

    ஏண்டா முரளி... இந்த சம்பளத்துக்காக ஒருத்தன் முன்னாடி போய் நின்னு கையைக் கட்டி வேலை பார்க்கணுமா? கொஞ்சம் யோசிடா!

    ஊகூம்! நான் இப்ப வேலைக்கு கிளம்பிட்டே இருக்கேன் சொல்லிக்கொண்டே ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான் முரளி.

    அப்பன் மாதிரியே பிடிவாதம். ஒண்ணை பிடிச்சா பிடிச்சதுதான். காது கொடுத்து கேட்க மாட்டானே?

    முரளி ஸ்கூட்டரை கிளப்பிக் கொண்டு அண்ணாசாலையின் போக்குவரத்தில் கலந்து சிக்னல்களுக்கு கட்டுப்பட்டு - ஸ்பென்சருக்குப் பக்கத்தில் ஆறு மாடி கட்டிடத்தோடு இருந்த அலுவலகத்தை தொட்டபோது நேரம் 9.50. ஸ்கூட்டரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு லிப்ட்டுக்கு வந்தான்.

    காலியாக இருந்தது.

    உள்ளே நுழைந்து கதவைச் சாத்த முயன்ற விநாடி –

    அந்தப் பெண் பரக்க பரக்க ஓடி வந்தாள்.

    இளம்பெண். மஞ்சள் பூசிக் குளித்த களையான முகம். அநாவசிய சதை இல்லாமல் - உருவிவிட்ட மாதிரியான உடம்புவாகு. வயது இருபது இருக்கலாம். போர்த்தப்பட்ட சேலைத் தலைப்பு ஓடி வந்த வேகத்தில் விலக - மார்புகளின் செழுமை ஒரு விநாடி நேரம் தெரிந்து மறைந்தது. கழுத்தில் தாலி இல்லை.

    முரளி லிப்ட் கதவைச் சாத்தாமல் புன்னகைத்தான்.

    நிதானமா வாங்க.

    அவள் உள்ளே நுழைந்தாள். லேசாய் மூச்சிரைத்தது. ஒரு கையில் லேடீஸ் குடை அடக்கமாய் மடிக்கப்பட்டு தெரிய - இன்னொரு கையில் மதிய உணவு டிபன் பாக்சை திணித்துக் கொண்ட பிளாஸ்டிக் ஒயர் பை.

    முரளி கதவைச் சாத்தினான்.

    நீங்கள் எந்த மாடிக்கு போகணும்?

    ‘‘ஆறாவது மாடி."

    எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் கம்பெனிக்கா?

    ஆமா.

    ஆறாவது மாடிக்குரிய பொத்தானை அழுத்த லிப்ட் மேலே ஏறியது. முதல் மாடியைக் கடந்ததும் முரளி கேட்டான்.

    எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கறீங்களா?

    "ஆமா.’’

    என்ன வேலை?

    அந்தப் பெண் - தன் கரிய பெரிய கண்களால் முரளியை ‘இது என்ன அதிகப்பிரசங்கித்தனம்?’ என்பது மாதிரி முறைக்க, முரளி புன்னகைத்தான்.

    "நான் ஏதாவது தப்பா கேட்டிருந்தா என் கேள்வி வாபஸ்.’’

    டைப்பிஸ்ட். என்றாள்.

    ‘‘நினைச்சேன்.’’

    ‘‘என்ன நினைச்சீங்க.’’

    "நீங்கள் டைப்பிஸ்டாய் தான் இருக்கணும்ன்னு.’’

    எப்படி

    விரல்கள் நீளநீளமா... பிஞ்சு வெண்டைக்காய் மாதிரி இருக்கே.

    அவள் முறைத்தாள். முரளி புன்னகைத்து - கன்னத்தை இடது கையின் ஆட்காட்டி விரலால் கீறிக் கொண்டே அவளைப் பார்த்தான்.

    "சாரி. மனதில் நான் எதையும்

    Enjoying the preview?
    Page 1 of 1