Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannaley Kollathey...!
Kannaley Kollathey...!
Kannaley Kollathey...!
Ebook130 pages43 minutes

Kannaley Kollathey...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kannaley Kollathey...!

Read more from Rajeshkumar

Related to Kannaley Kollathey...!

Related ebooks

Related categories

Reviews for Kannaley Kollathey...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannaley Kollathey...! - Rajeshkumar

    16

    1

    வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு போய் விட்டு ஃபோர்ட் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள் கோகுலனும் தீபாவும். மிக மிக இளசான தம்பதிகள். கழுத்தில் தாலி ஏறி வெற்றிகரமான 72 - ஆவது மணி நேரம். தீபா, ஊழலே செய்யாத ஒரு தமிழ்நாட்டு மந்திரியின் மகள். எல்லா பக்கமும் பார்க்க அழகாக இருந்தாள். ஆள் நடமாட்டம் அற்ற காட் ரோடு. மேற்கே கட்டிலுக்கு போகும் ஆரஞ்சு சூரியன்.

    காரை ஓட்டிக் கொண்டிருந்த கோகுலன் அடாமிக் ரிசர்ச் சென்டரில் எலக்ட்ரானிக் என்ஜினியர், யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்.

    என்னங்க... தீபா கோகுலனின் மேல் சாய்ந்து கொண்டே காதருகே மெல்லகே கூப்பிட்டாள்.

    ம்... என்றான் தீபக்.

    உங்க விருப்படியே உங்க குலத்தெய்வமான வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்து தரிசனமும் பண்ணிட்டோம்... உங்களுக்கு இப்ப திருப்திதானே...?

    பரிபூரண திருப்தி...

    வேற கோயிலுக்கு ஏதாவது வேண்டுதல் இருக்கா...?

    ஆமைலை மாசாணியம்மன் கோயிலுக்கு ஒரு வேண்டுதல் இருக்கு... அதுக்கு அடுத்த வருஷம் போய்க்கலாம்.

    தீபா கோகுலனின் தோள்பட்டையை மெல்ல சுரண்டினாள்.

    எ... என்னங்க...

    சொல்லுங்க மேடம்... தன் தலையால் அவள் தலையை மெல்ல இடித்தான் கோகுலன்.

    நம்ம ஹனிமூன் எப்ப...?

    இப்பவே வேணும்ன்னாலும் வெச்சுக்கலாம். காரைக் கொண்டு போய் அந்தப் பெரிய மரத்துக்குக் கீழே நிறுத்திடட்டுமா...?

    விலகி உட்கார்ந்து முறைத்தாள் தீபா. நம்ம ஹனிமூன் உங்களுக்கு அவ்வளவு சீப்பா போச்சா?

    ஸாரி...! சும்மா ஒரு ஜோக்குக்குச் சொன்னேன். நாம இனிப்பு நிலாவைக் கொண்டாட எங்கே போறோம் தெரியுமா...?

    எங்கே...?

    பக்கத்துல வந்து உட்கார்...

    ம்... ஓட்டி உட்கார்ந்தாள் தீபா.

    போதாது... இன்னும்...

    போதுமா...? வெல்வெட் மூட்டை மாதிரி மோதினாள்.

    ஆஹா... போதும்... மூச்சுமுட்டுது...

    சொல்லுங்க... எங்கே ஹனிமூன்...?

    காசி...

    மறுபடியும் பொய்க் கோபத்தோடு தள்ளி உட்கார்ந்தாள் தீபா அதே விநாடி-

    அவளுடைய கைப்பைக்குள் இருந்த செல்போன் குரல் கொடுத்தது.

    எடுத்தாள்.

    மறுமுனையில் அவளுடைய அப்பா அமைச்சர் சத்தியமூர்த்தி பேசினார்.

    என்னம்மா தீபா... கோயில் தரிசனம் முடிஞ்சாச்சா...?

    முடிஞ்சுதுப்பா... இப்ப ரிட்டன்ல இருக்கோம். ஒரு மணி நேரத்துக்குள் கோயமுத்தூர் ஏர்போர்ட் போயிடுவோம்... ஃப்ளைட் எட்டு மணிக்கு. ஒன்பது மணிக்கெல்லாம் மெட்ராஸ்ல உங்க பக்கத்துல உட்கார்ந்து டின்னர் சாப்பிட்டுகிட்டு இருப்போம்...

    மாப்பிள்ளை எப்படி இருக்கார்...?

    சமத்தா ட்ரைவ் பண்றார். அப்பா...! உங்க மாப்பிள்ளைக்கு ஒரு ஆசை...

    என்னம்மா...?

    எங்க ஹனிமூன் ட்ரிப்புக்காக அவர் ஒரு இடத்தை செலக்ட் பண்ணியிருக்கார். ஹனிமூனை அங்கே ஏற்பாடு பண்ணினாதான் பெட்டியை தூக்குவாராம்...

    சொல்லும்மா...! எந்த இடம்...? சந்திர மண்டலத்தைத் தவிர வேற எந்த இடமாக இருந்தாலும் சரி ஏற்பாடு பண்ணிடறேன்...

    அப்பா...! அவர் சொன்ன இடம் ரொம்பவும் காஸ்டலி. நான் வேண்டாம்ன்னு சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கலை. நான் ஒரு மினிஸ்டர்க்கு மருமகன். அந்த ஸ்டேட்டஸுக்கு தகுந்தபடி ஹனிமூன் ப்ளேஸ் இருக்க வேண்டாமான்னு கேட்கிறார்.

    கோகுலன் காரின் வேகத்தைக் குறைத்து அவளைப் பார்த்தான்.

    ஏய்... தீபா. என்ன உங்கப்பாகிட்டே பண்டல் பண்டலா பொய் சொல்லிக்கிட்டு இருக்கே...?

    தீபா அவனுக்கு 'பழிப்பு' காட்டிவிட்டு செல்போனில் தொடர்ந்தாள்.

    அப்பா...! உங்க மாப்பிள்ளைக்கு ஹனிமூன் எங்கே போகணும் தெரியுமா...?

    சொல்லும்மா...

    ஸ்விஸ்ஸுக்கு...

    இவ்வளவுதானே... ஏற்பாடு பண்ணிடலாம்...

    கோகுலன் ரோட்டோரமாய் காரை நிறுத்திவிட்டு, தீபாவின் கையில் இருந்த செல்போனைப் பறித்து பேசினான்.

    மாமா...! தீபா சொல்றது பொய். நான் அப்படி எல்லாம் சொல்லவேயில்லை... தீபாதான்சொல்றா...

    மறுமுனையில் சத்தியமூர்த்தி சிரித்தார்.

    "இருக்கட்டும் மாப்பிள்ளை... யார் சொன்னா என்ன...

    ஸ்விஸ் அருமையான ப்ளேஸ். ஒரே வாரத்துல நான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிடறேன். ஏர் டிக்கெட், விசா... ஸ்விஸ்ல ஹோட்டல் அக்காமடேஷன், உங்களுக்கு உதவி செய்யப் போகிற நபர்கள்... அப்புறம்... சைட் சீயங்..."

    மாமா...! தீபா சொல்றதைக் கேட்டுட்டு நீங்களும்...

    தீபா இப்பொது செல்போனை பறித்துக் கொண்டாள்.

    அப்பா...! நீங்க ஏற்பாடு பண்ணுங்கப்பா. உங்க மாப்பிள்ளை ரொம்பவும் ஷை டைப். உங்ககிட்ட வாய் திறந்து கேக்கறதுக்கு சங்கேஜப்பட்டார். அதான் விஷயத்தை நானே உடைச்சுட்டேன். மத்ததை மெட்ராஸ் வந்து பேசிக்கலாம்பா...

    செல்போனை அணைத்தாள் தீபா. கோகுலன் அவளுடைய தலையில் குட்டினான்.

    என்ன தீபா... இப்படியா உங்கப்பாகிட்ட பொய் சொல்றது... அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பார்...?

    ஒண்ணும் நினைக்கமாட்டார். நீங்க காரை எடுங்க...

    தீபா... இது சரியில்லை. செல்போனை என்கிட்ட குடு... உங்கப்பாகிட்ட நான் மறுபடியும் பேசணும்...

    "நோ...! நாம மெட்ராஸ் போய் சேர்றதுக்குள்ளே அப்பா எல்லா ஏற்பாடுகளையும்

    Enjoying the preview?
    Page 1 of 1