Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalaippu Seithi
Thalaippu Seithi
Thalaippu Seithi
Ebook85 pages40 minutes

Thalaippu Seithi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thalaippu Seithi

Read more from Rajeshkumar

Related to Thalaippu Seithi

Related ebooks

Related categories

Reviews for Thalaippu Seithi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalaippu Seithi - Rajeshkumar

    19

    1

    ஒரு மலையின் மடியில் உட்கார்ந்திருந்த அந்த வளையாபதி கிராமம் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் ஒரு பயங்கர நிசப்தத்தில் உறைந்து போயிருந்தது. சுற்றிலும் தார்கொட்டின மாதிரி இருட்டு. கிராமத்தில் மொத்தம் நூறு வீடுகள் தேறினால் அதிகம். ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள் தவிர பாக்கி எல்லாமே பனை ஓலை வேய்ந்த குடிசைகள். சிம்னி விளக்குகளின் பலஹீன ஒளியை மட்டும் நம்பியிருந்த மின்சார வயர்கள் தீண்டாத குடிசைகள். தூ... ர... த்... தில் ரோட்டில் மட்டும் வெளிச்சப்புள்ளிகள் அவ்வப்போது தெரிந்து இருட்டைக் கழுவப் பார்த்ததுத் தோற்றன.

    வளையாபதி ஒன்றியம் - என்று பெயிண்டில் எழுதப்பட்ட போர்டு ஒன்றை நெற்றியில் ஒட்ட வைத்துக்கொண்டு - கூரைச் சுவர்களால் எழுப்பட்ட ஒரு சின்ன வீட்டுக்கு முன்னால் - கெட்டியான போர்வைகளை போர்த்திக் கொண்டு - ஆண்கள் சில பேர் உட்கார்ந்திருந்தார்கள். சுள்ளிகளைப் போட்டு நெருப்பு - அனல் அலைகளை எழுப்பி குளிரை விரட்டிக்கொண்டிருந்தனர். அநேகமாய் எல்லோருடைய வாய்களிலும் சுருட்டு புகைத்து நாறியது.

    என்றா...! நீ... சொல்ற... நாளைக்குக் காலையில் காட்டுக்குள்ளே போறதா... வேண்டாமா...?

    வேண்டாம் மாசாணி?

    ஏன்...?

    ஒத்தை யானை கத்திட்டு திரியுதாம்... மேட்டுபடுத்தி கிராமத்தில் நாலைந்து பேர் செத்துட்டாங்க... பாரஸ்ட் ஆபீஸருங்க எல்லாம் அந்த யானையை சுட்டுத் தள்றதுக்காக... வந்திருக்காங்கலாம்... அந்த யானையை சுட்டுக் கொல்லட்டும்... அதுக்கப்புறமா போலாம்...

    "நீ... ஒரு தொடை நடுங்கிப் பய... எல்லாத்துக்கும் உனக்கு பயம்தான்... உன்னைய போய் கூப்பிட்டேன் பாரு...’’ அவன் சுருட்டு - புகைகளோடு ‘படபட’வென்று சிரித்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே -

    அந்த இரைச்சல் சத்தம் கேட்டது.

    மலைப்பாதையில் ஏதோ வாகனங்கள் ‘ஹீம்ம்ம்ம்’ என்று முனகிக் கொண்டு வரும் இரைச்சல்.

    "ஏதோ... வண்டிக வருது போலிருக்கு...’’

    இந்நேரத்துக்கு... எதுக்கு...? மரலோடு லாரிகள் இந்நேரத்துக்கு வராதே...?

    இப்போது ஹெட்லைட் வெளிச்சம் அடித்தது.

    எஞ்சின் இரைச்சல் அதிகப்பட்டது.

    வண்டிக நம்ம கிராமத்துக்குத்தான் வருதுன்னு நினைக்கிறேன்.

    ஆமா... ஆமா...

    அவர்கள் வேகமாய் எழுந்து நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஹெட்லைட் வெளிச்சத்தில் புழுதி தெரிய - ஒரு வெள்ளைநிற போலீஸ் வேனும், போலீஸ் வேனை வால்பிடித்துக் கொண்டு - வெரட்டியபடியே இரண்டு போலீஸ் ஜீப்களும் வந்து கொண்டிருந்தன.

    எதுக்குப் போலீஸ் வருது...?

    தெரியலையே...?

    ‘‘நான் நினைக்கிறேன்... கலங்கக் கிராமத்துல கள்ளச் சாராயம் அதிகம்... சாராயம் காய்ச்சிற கோஷ்டியைப் பிடிக்கிறதுக்காகத்தான் இந்த ராத்திரி நேரத்துல போயிட்டிருக்காங்க...’’

    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே -

    போலீஸ் வேனும் ஜீப்களும் ஒன்றியம் வீட்டுக்கு முன்பாக வந்து நின்றன.

    காக்கி யூனிஃபார்ம் அணிந்த போலீஸ் வேனிலிருந்து ‘தபதப’வென்று பூட்ஸ் சத்தம் விரைய கீழே குதித்தார்கள். ஜீப்பிலிருந்து போலீஸ் அதிகாரிகள் இறங்கினார்கள்.

    போலீஸைப் பார்த்ததும் போர்வைக்குள் இருந்த ஆட்கள் கைகளில் வைத்திருந்த சுருட்டுக்களை எறிந்துவிட்டு - தத்தம் குடிசைகளுக்கு நழுவ முயல - ஒரு போலீஸ் அதிகாரி கத்தினார்.

    எவனும் நின்ன இடத்தை விட்டு அசையக்கூடாது... எல்லாரும் வரிசையா வந்து... இப்படி நில்லுங்கடா...

    சா... சாமி... எதுக்காக... எ... எங்களை…

    எவனும் எதிர்க் கேள்வி கேட்கக்கூடாது... உங்க கிராமத்துக்கு எவன்டா. பெரிய மனுஷன்...?

    வே... வே... வேலுத்தம்பிங்க...

    எவன்டா அவன்...?

    வூட்ல இருக்காரு...

    போய் கூட்டியாடா... அப்படியே கிராமத்து மொத்த பேரும் அடுத்த பத்து நிமிஷத்துக்குள்ளே இங்க வந்தாகணும்... போயி தகவல் சொல்லு...

    "சரிங்க சாமி...’’

    ஒருவன் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு - குடிசைப் பகுதிகளை நோக்கி ஓடினான்.

    இரண்டு போலீஸ் அதிகாரிகள் அந்த ஒன்றிய அறைக்குள் நுழைந்து - இரண்டு நாற்காலிகளையும் ஒரு மேஜையையும் எடுத்து வெளியே போட்டார்கள்.

    ஒரு அதிகாரி உட்கார்ந்துகொள்ள - மற்றொருவர் குரல் கொடுத்தார்.

    "உங்க கிராமத்துக்கு ஒரு விசாரணைக்காக வந்திருக்கோம். கேட்கிற கேள்விகளுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1