Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vengai Veliye Varuthu
Vengai Veliye Varuthu
Vengai Veliye Varuthu
Ebook87 pages28 minutes

Vengai Veliye Varuthu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Vengai Veliye Varuthu

Read more from Rajeshkumar

Related to Vengai Veliye Varuthu

Related ebooks

Related categories

Reviews for Vengai Veliye Varuthu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vengai Veliye Varuthu - Rajeshkumar

    23

    1

    டெலிபோன் அந்த நள்ளிரவு நேரத்தில் விழித்துக் கொண்டு அலற ஆரம்பித்தது. அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருந்த சஹாடே டெலிபோன் அலறலால் உசுப்பப்பட்டு எழுந்து உட்கார்ந்தார். ஐம்பத்தைந்து வயது. சுத்தமாய் ரோமம் கொட்டி விட்ட மண்டை தரித்திருந்த நைட் கவுனிலேயே அவருடைய பணவாசனை அடித்தது. வைர மோதிரங்கள் டாலடிக்கும் வலது கையால் - ரிஸீவரை - வாய்க்கும் காதுக்கும் கொடுத்தார்.

    ஹலோ

    மிஸ்டர் சஹாடே…?

    எஸ்...

    நாங்க போலீஸ். பூக்கடை ஸ்டேசனிலிருந்து பேசறோம். TNU 3747 மாருதி வேன் உங்களோடது தானே...?

    ஆமா...

    அந்த வேன் ஒரு லாரியோட மோதி ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கு மாருதியை ஓட்டிகிட்டு வந்த ஆள் ஸ்பாட்லேயே ஆவுட்

    எ... என்ன சொல்றீங்க... என்னோட மாருதி வேன் ஆக்ஸிடெண்டா...! அதை ஒரு ஒர்க்ஷாப்பில் ரிப்பேர் பார்க்க அல்லவா விட்டிருக்கேன்...

    எந்த ஒர்க்ஷாப்ல விட்டீங்க...?

    கார் க்யூர் ஒர்க்ஷாப்...

    "அது எங்கே இருக்கு...?

    தி.நகர், சீதாராமன் தெருவுல...

    ஒர்க்ஷாப்ல... எப்ப வேனை விட்டீங்க...?

    நேத்து சாயந்திரம்...

    அண்ணாசாலை ஸ்பென்ஸர்க்குப் பக்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்த ஆக்ஸிடெண்ட் நடந்திருக்கு, வேன் டாஷ் போர்டில் உங்க ஆர்.சி. புக் இருந்தது. அதுல உங்க அட்ரஸ் இருந்ததால் போன் பண்றோம். நீங்க ஸ்பாட்டுக்கு வந்தாத்தான் செத்துக்கிடக்கிற ஆள் யாருன்னு தெரியும்.

    சரி... இப்ப... வர்றேன்...

    ரிஸீவரை வைத்த சஹாடே அங்கிருந்த நாற்காலியில் தளர்ந்துபோய் உட்கார்ந்தார். சத்தம் கேட்டு விழித்து கொண்ட அவரோட மனைவி கெளசல்யா கட்டிலில் சிரித்தபடியே கேட்டாள்.

    போன்ல யாரு...?

    போ... போலீஸ்...

    அவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்து - உடம்புக்கு போர்த்தியிருந்த ‘ரஜா’க்கை உதறினாள்.

    போலீஸா... எதுக்கு போன் பண்ணினாங்க...?

    ஒர்க்ஷாப்ல விட்டிருந்த நம்ப மாருதி வேன் மவுண்ட் ரோட்ல ஒரு ஆக்ஸிடெண்ட் ஆயிருக்காம்...

    பாப்ரே!

    அவள் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

    எ... எப்படி?

    தெரியலை... போலீஸ், ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்கு என்னை வரச் சொல்லியிருக்காங்க

    சஹாடே எழுந்து கொண்டார். நைட்கவுனை உரித்து விட்டு தன் வழக்கமான பைஜாமா ட்ரஸ்ஸுக்கு மாறினார். கண்டரா கார் சாவியை எடுத்துக் கொண்டு - ஹாலுக்கு வந்தார்.

    கெளசல்யா பின்னாலேயே வந்தாள்.

    நானும் உங்க கூட வரட்டுமா?

    வேண்டாம்...

    வாசல் கதவின் உட்பக்க பூட்டைத் திறந்து கொண்டு போர்டிகோவுக்கு வந்தார்.

    வந்தவர் அதிர்ந்தார்.

    அவருடைய அல்சேஷன் நாய் போர்டிகோவின் மார்பிள் பரப்பில் ரத்த வெள்ளத்தில் ஒருக்களித்துக் கிடந்தது.

    ஏதோ விபரீதம் என்று எண்ணிய விநாடி - போர்டிகோ தூண் மறைவிலிருந்த அந்த நான்கு பேரும் வெளிப்பட்டார்கள்.

    கைகளில் திரட்சியாய் -

    ரிவால்வார்கள்.

    மெல்ல நடையிட்டு சூழ்ந்தார்கள். நள்ளிரவு வணக்கம் மிஸ்டர் சஹாடே! உங்க மாருதிவேன் ஆக்ஸிடெண்ட்டுன்னு போன் வந்திருக்குமே?

    அப்படி போன் பண்ணினது எங்க ஆள்தான். நீங்க கதவைத் திறந்துகிட்டு வெளியே வரணும்ங்கிறதுக்காகத்தான் அப்படி போன் பண்ணச் சொன்னோம். அப்ப உள்ளே போகலாம்... வாங்க...

    நான்கு பேரும் ஒரே வினாடியில் - சஹாடேயின் தலையைச் சுற்றிலும் ரிவால்வர்களை வைத்தார்கள். அலற முயன்ற கௌசல்யாவிடம் ஒருவன் திரும்பி ஸ்ஸ்ஸ்... என்றான். சஹாடேயின் கண்பாவைகள் உலர்ந்து போயிற்று, அவருடைய ஆறடி உயர ஆகிருதி மெல்ல நடுங்கியது.

    ம்... உள்ளே நடங்க...

    சஹாடே நடந்தார்.

    ஒருவன் சஹாடேயின் நெற்றிப் பொட்டில் இருந்த தன் ரிவால்வரை எடுத்து - கௌசல்யாவின் நெற்றிப் பொட்டில் பதித்தான். ஏதாவது சத்தம் போட்டே உம் புருஷனைக் கொன்னுருவோம்... ம்... நட...

    தள்ளினான்.

    எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

    ஒருவன் கதவைச் சாத்தி தாழிட்டான். சஹாடேவையும் கெளசல்யாவையும் இரண்டு பேர் தள்ளிக் கொண்டு போய் சோபாவில் கிடத்தினார்கள். இன்னொருவன் நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.

    "சஹாடே...! நீங்களும் உங்க மனைவியும் வயசானவங்க. எங்ககிட்ட அடிபட்டு ரத்தம் சிந்தறதை நாங்க

    Enjoying the preview?
    Page 1 of 1