Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Goodnight Kurotham
Goodnight Kurotham
Goodnight Kurotham
Ebook98 pages29 minutes

Goodnight Kurotham

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Goodnight Kurotham

Read more from Rajeshkumar

Related to Goodnight Kurotham

Related ebooks

Related categories

Reviews for Goodnight Kurotham

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Goodnight Kurotham - Rajeshkumar

26

1

சமுத்திர அகலத்துக்குப் பரந்திருந்த ஃபோமில் மல்லாந்து படுத்து இருந்தார் அமைச்சர் வெற்றிச் செல்வன். அவரை நெருக்கியடித்துக் கொண்டு படுத்திருந்த மம்தா வலது முழங்கையை அவர் மார்பில் ஊன்றி, இடது கை விரல்களால் அவர் முகப்பரப்பில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

தன் கேரட் துண்டம் உதடுகளைப் பிரித்துச் சொன்னாள்.

இப்பல்லாம் நீங்க சீக்கிரம் டயர்ட் ஆயிடறிங்க...

வெற்றிச் செல்வனின் முகத்தில் புன்னகை தோன்றியது.

நேத்திக்கு நந்தனம் பொதுக் கூட்டத்தில் தொடர்ந்து ஆறு மணி நேரம் தொண்டை கிழியப் பேசினேன், நானா சீக்கிரத்தில் களைச்சுப் போற ஆளு

மம்தா அவர் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.

அப்படின்னா நான் சலிச்சுப் போய்ட்டேனா...?

வெற்றிச் செல்வனின் கை விரல்கள் அவளின் கூந்தலுக்குள் பிரவேசித்தன. வாட் 69 வாசம் வீசும் குரலில் கேட்டார்.

என்னாச்சு உனக்கு...? எப்பவும் உன்னோட மாடலிங் தொழிலைப் பத்திப் பேசுவே, இல்லைன்னா நான் கடைசியா விட்ட அறிக்கையைப் பத்தி ஏதாவது கமெண்ட் பண்ணுவே... இன்னிக்கு ரெண்டுமே இல்லாம புதுசா எதையோ பேசிட்டிருக்கே...?

காரணமில்லாமப் பேசுவேனா...?

காரணத்தைச் சொல்லு...

கடைசியா உங்களை எப்ப சந்திச்சேன்...?

போன வியாழக்கிழமை.

அப்ப நாம் என்ன பேசினோம்...?

என்னென்னவோ பேசினோம்.

முக்கியமான விஷயம் ஒண்ணு பேசினோம்.

ஓ... பெண் எம்.எல்.ஏ. பாரிஜாதம் ஏன் இப்படிப் பெருத்திட்டே போறான்னு நான் கவலைப்பட்டேனே. அதைச் சொல்றியா...?

மம்தா முறைத்தாள்.

விளையாடாதீங்க... நான் கோபமாயிருக்கேன். கடைசி கடைசியா நாம் பேசினது. நீங்க என்கிட்டே ப்ராமிஸ் பண்ணிட்டுப் போனிங்க. ஞாபகமில்லை...?

அடக் கடவுளே... ஞாபகம் வந்திருச்சு. இன்னிக்கு உனக்கு பர்த்டேன்னு நீ சொன்னே. உனக்குப் பிடிச்ச சிவப்புக் கலர் ஷிபான் புடவை வாங்கித் தர்றேன்னு நான் சொன்னேன்...

சொன்னதைச் செஞ்சிங்களா...?

சிரித்தார் வெற்றிச் செல்வன்.

நான் பொது ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை வேணா நிறைவேத்தாமப் போவேன். என் செல்லக்குட்டி மம்தாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தாமப் போயிடுவேனா...?

இப்படி நான் வாயைத் திறந்து கேட்டதுக்கப்புறம் நீங்க வாங்கித் தந்தா அந்தப் பரிசுக்கு மதிப்பே இல்லை.

நீ கேட்ட அந்த சிவப்புக் கலர் ஷிபான் புடவையை நான் ஏற்கெனவே வாங்கி வெச்சுட்டேன். கொஞ்ச நேரம் உன்னோட கோபமான முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். யப்பா... கோபச் சிவப்பில் நீ என்னமா அழகாயிருக்கே.

சொல்லிக்கொண்டே அவளை வாரியிழுத்து அவள் முகத்தில் ஒரு முத்தத்தை அழுத்தினார்.

மம்தா விலகினாள்.

நான் நம்ப மாட்டேன். நீங்க பொய் சொல்றீங்க...

இதாய்யா பொம்பளை... அந்தப் புடவையைக் கண்ணுல பார்க்கறவரைக்கும் உம் மனசு அடங்காதே. இரு. புடவையைக் கொண்டு வரச் சொல்றேன். நீ புடவையைக் கட்டு- அப்புறமா நான் உன்னைக் கட்டிக்கறேன்...

சொல்லிக் கொண்டே ஃபோமில் உருண்டவர் கட்டிலைத் தொட்ட மாதிரி இருந்த டீபாயில் கிடத்தப்பட்டிருந்த இன்டர்காமை அழுத்தினார்.

ஹலோ... ரத்னமா...? என்னோட மேஜையறையில் ஒரு சிவப்புப் புடவை இருக்கும். எடுத்துக்கிட்டு ரூமுக்கு வர்றியா...?

ரிசீவரை வைத்தார்.

மம்தா... கதவைத் திறந்து விடு-

கட்டிலை விட்டு இறங்கியவள், கலைந்த புடவையைச் சரியாய்க் கட்டிக் கொண்டே நடந்து போய்த் தாழ்ப்பாளை விலக்கினாள்.

மம்தா குஷன் நாற்காலியில் நிறையவும். ரத்னம் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.

வெற்றிச் செல்வன் புருவத்தை உயர்த்திக் கொண்டு அவனைப் பார்த்துக் கேட்டார்.

என்னப்பா வெறுங்கையை வீசிட்டு வர்ற...? புடவை எங்கே...?

அங்க... புடவை இல்லை தலைவரே...?

சிவப்புப் புடவை அங்க இல்லையா...? என்னடா இது. பொறந்த நாளும் அதுவுமா. இவ ஆசையாக் கேட்ட பரிசை நான் எப்படி வாங்கித் தராம இருக்கறது. ஒண்ணு பண்ணேன்

சொல்லிக் கொண்டே புன்னகையுடன் மம்தாவைப் பார்த்தார்.

கடைல போய் வாங்கிட்டு வர்றதா தலைவரே?

ரத்னம் கேட்க - சிரித்தார் வெற்றிச் செல்வன்.

மடையா... அதுக்கு லேட் ஆகும், நான் இப்பவே இவளுக்குப் பரிசைத் தரணும். மம்தா கட்டியிருக்காளே வெள்ளைப் புடவை. அதையே சிவப்பா மாத்திடேன்...?

மம்தா திடுக்கிட்டு வெற்றிச் செல்வனை திரும்பிப் பார்த்தாள்.

இப்போது ரத்னம் புரிந்து கொண்டு சிரித்தான்.

மாத்திடறேன் தலைவரே...

சொல்லிக் கொண்டே - இடுப்பருகே கையைக் கொண்டு போனான் ரத்னம்.

கைக்கு அடக்கமான பிஸ்டல் ஒன்று அவன் கையில் வெளிப்பட்டது.

பிஸ்டலின் கண் மம்தாவின் நெஞ்சைக் குறி பார்த்தது.

எ...எ...என்...ன்ங்க... இது...?

நாக்குழற கேட்டுக் கொண்டே நாற்காலியை விட்டுக் கலவரமாய் எழ முயற்சித்தாள்.

அவள் எழவே. -

Enjoying the preview?
Page 1 of 1