Maandavan Kattalai
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Maandavan Kattalai
Related ebooks
Mudinthal Uyirodu Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Irandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsMoodu Pani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsEllam Nanmaikke Rating: 0 out of 5 stars0 ratingsThattungal Thirakkaathu Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Vilai Kel! Rating: 1 out of 5 stars1/5Oru Vaanam Sila Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSorkkam En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsKaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Oru Athikaalaik Kolai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsOru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5Ethuvum Oru Ellai Varai Rating: 0 out of 5 stars0 ratingsNenjellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodu...! Rating: 4 out of 5 stars4/5Thigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Pagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5Thooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsOndrum Ondrum Moondru Rating: 0 out of 5 stars0 ratingsSaathal Saamraajjiyam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nimishangal! and Oru Megathin Thaagam! Rating: 0 out of 5 stars0 ratingsDecember Pournami Rating: 0 out of 5 stars0 ratingsNitthiyavin Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsRed Rose! Guest House! Rating: 0 out of 5 stars0 ratingsIraththam Illatha Yuththam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Maandavan Kattalai
0 ratings0 reviews
Book preview
Maandavan Kattalai - Rajeshkumar
23
1
சென்னை.
அசோக்நகர் எக்ஸ்டென்ஷன். கடல்காற்று உற்சாகமாய் பீறிட்டுக்கொண்டிருந்த ஒரு ராத்திரி நேரம். சென்ட்ரல் ஸ்டேஷன் கிளாக் டவர்படி நேரம் பத்து மணி முப்பது நிமிடம்.
‘பூர்ணோதயம்’ என்று காம்பவுண்ட்கேட்டின் இரண்டு பக்கங்களிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிராஸ் போர்டுகள் மின்னிய-அந்த பங்களாவின் போர்டிகோவில், இரண்டு லட்ச ரூபாய் கொட்டி வாங்கப்பட்ட ஸ்டேண்டர்ட்2000 கார் நின்று கொண்டிருந்தது. சிம்லா பனி மாதிரி நிறம்.
மணி...
போர்டிகோவின் முதற்படியில் நின்றிருந்த சந்திரமவுலி தன் கனமான குரலில் காரின் டிரைவரை கூப்பிட்டார். கூப்பிட்ட சந்திரமவுலிக்கு வயது ஐம்பத்தி ஐந்து இருக்கலாம். தன் உடம்புக் கட்டுப்பாட்டில் பார்க்கிறவர்களை நாற்பது என்று சொல்ல வைத்தார். முகம் சதை வாங்கி உப்பலாய் தெரிந்தது. சதா அலையும் கண்களில் ஒரு கூர்மை ஒளிந்திருந்தது. அவர் அணிந்திருந்த சில்க்சர்ட் காற்றில் உப்பி இன்னும் பருமனாய் அவரைக் காட்டியது.
அய்யா...!
டிரைவர் மணி காரைச் சுற்றிக் கொண்டு ஓடி வந்தான். கெச்சலான உடம்புவாகுக்கு பொருத்தமில்லாத காக்கி யூனிபார்ம் தொளதொளவென்று ஆடியது.
ராத்திரி நேர ட்ரைவிங், காரை மெதுவா ஓட்டிட்டு போகணும்... தூக்கம் வர்ற மாதிரி இருந்தா ரோட்டோரமா காரை நிறுத்திட்டு தூங்கிடு...
சரிங்கய்யா...
வீட்டின் உள்ளேயிருந்து ஜெயம் தன் எண்பது கிலோ உடம்பைத் தூக்கிக்கொண்டு ‘புஸ்புஸ்’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு வந்தாள். அமோகமாய் ஜரிகை வேய்ந்த ஆரஞ்சு நிற பட்டுப் புடவைக்குள் புதைந்து போயிருந்தாள். 70 எம்.எம். அகலமுகம். மூக்கின் வலது பக்கம் ஒரு வைர பேசரி உட்கார்ந்து குட்டி நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.
என்ன ஜெயம் எல்லாத்தையும் எடுத்து வெக்கச் சொன்னியா...?
சொல்லிட்டேன்
மேரேஜ் பிரசன்டேஷன்?
எடுத்து டிக்கியில வெச்சாச்சு...
நகை பெட்டி பத்திரம்
அதை நான் பார்த்துக்கிறேம்பா.
பின்பக்கம் குரல் கேட்டுத் திரும்பினார் சந்திரமவுலி.
அவருடைய மூத்த மகன் இளங்கோ கையில் ஒரு சின்ன ப்ரீப்கேஸோடு வந்து கொண்டிருந்தான். அப்படியே சந்திரமவுலியின் இளமை அச்சு. தலைமுடி மட்டும் சுருட்டைத்தனம் வாங்கி இருந்தது.
பத்திரம்பா... ஒரு லட்சரூபா... நகையிருக்கு...
நீங்க இதைப்பத்தி கவலைப் படாதீங்கப்பா...
சொல்லிக் கொண்டே காரின் முன் சீட்டுக் கதவைத் திறந்து கொண்டே உள்ளே போனான் இளங்கோ.
ஜெயம்... கல்யாணம் முடிந்ததுமே உடனே புறப்பட்டுடாதே. தர்மலிங்கம் கோவிச்சுக்குவான். இருந்து மத்தியான விருந்து சாப்டுட்டு வா.
நீங்க ஏன் கல்யாணத்துக்கு வரலைன்னு கேட்டா... நான் என்ன பதில்லைச் சொல்லட்டும்? அவர் நம்புகிற மாதிரி ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லுங்க...
இன்கம்டாக்ஸ் பிராப்ளம்ன்னு சொல்லு வருமானவரி அதிகாரிங்க எந்த நிமிஷமும் வீட்டுக்கு வரலாமாம், அதனாலதான் வரலைன்னு சொல்லு
ஜெயம் தலையாட்டினாள்.
சரிங்க...
டிரைவர் மணி கதவைத் திறந்து விட, ஜெயம் தன் உடம்பைத் தூக்கிக் கொண்டு பின் சீட்டுக்குப் போய் அகலமாய் ரொம்பினாள்.
மணி... சொன்னது ஞாபகமிருக்கட்டும். காரை மெதுவா ஓட்டிட்டுப்போ. இளங்கோவை ஸ்டீயரிங் பிடிக்க விடாதே. அவன் காட்டுத்தனமா வண்டியை ஓட்டிக்கிட்டு போய் எங்கேயாவது மோதிடுவான்
நான் தரமாட்டேன்யா
மணி காருக்குள் உட்கார்ந்தான். இக்னீஷியனை உசுப்பினான். ஜெயம் காரின் கண்ணாடியைக் கீழே இறக்கி விட்டு வெளியே தலையை நீட்டினாள்.
இப்படி கொஞ்சம் வாங்க...
சந்திரமவுலி வந்தார்.
என்ன...?
நான் போனதும் இதான் சாக்குன்னு நிம்மதியா உட்கார்ந்து தீர்த்தம் போட ஆரம்பிச்சுடாதீங்க...
மாட்டேன்...
நேரத்துல படுத்துத் தூங்குங்க...
ம்...
காலையிலிருந்து புகைச்சு... புகைச்சு... இருமிட்டிருந்தீங்க... சாப்பாட்டுல தயிர் சேர்த்துக்காதீங்க...
சரி...
இளங்கோ சிரித்தான்.
மணி! நீ மொதல்ல வண்டியை எடு. அம்மாவை பேச விட்டா... ஊறுகாயை சாப்பிடாதீங்க, உப்பை சேர்த்துக்காதீங்க, பனியில வாக்கிங் போகாதீங்கன்னு... ஒரே அட்வைஸ் மயமா வந்துட்டிருக்கும். ஏம்மா... நீயும் நானும் எங்கே போறோம்...? திருச்சியில் கல்யாணம். அதுக்காக போறோம். அதுக்குள்ளே அப்பாவுக்கு ஆயிரம் அட்வைஸ் தரணுமா...? மணி நீகாரை எடு
மணி காரை நகர்த்தினான்.
கார் காம்பவுண்ட் கேட்டைத் தாண்டும் வரை கையசைத்துக் கொண்டிருந்த சந்திரமவுலி காரின் சிவப்பு விளக்குகள் மறைந்ததும் பங்களாவுக்குள் திரும்பினார். நடையில் ஒரு துள்ளல் வந்து ஒட்டிக் கொண்டது.
ஹாலுக்குள் நுழைந்தவர் - இடது கை பக்கமாய் தெரிந்த அறைக்குள் எட்டிப் பார்த்து அங்கே டைப் மெஷினின் முன்னால் உட்கார்ந்து டைப் அடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை கூப்பிட்டார்.
கேசவன்...
ஸார்...
அவன் நாற்காலியை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு வேகமாய் எழுந்தான். தாடையில் தாடிப்பயிர். கண்களில் பவர்கிளாஸ் கண்ணாடி. கலைந்த தலை.
கொஞ்சம் மேலே வா... வரும்போது வாசல் கதவை சாத்திட்டுவா...
கேசவன் தலையாட்டினான். சந்திரமவுலி மாடிக்கு போக, கேசவன் கதவை தாழிட்டுவிட்டு சந்திரமவுலியை பின்தொடர்ந்து மாடிக்கு வந்தான்.
சந்திரமவுலி அறையின் மையத்திலிருந்த போம் சோபாவில் வசதியாய் சாய்ந்து இருக்க எதிரே வந்து நின்றான்.
கேசவன்...
ஸார்...
அம்மாவும் இளங்கோவும் திருச்சி கல்யாணத்துக்கு புறப்பட்டு போயிட்டாங்க...
பார்த்துட்டுத்தான் ஸார் இருந்தேன்...
சரி... அந்த அலமாரியைத் தொறந்து ஸ்காட்ச் பாட்டிலையும் ரெண்டு டம்ளரையும் எடுத்துக்கிட்டு வா...
எனக்கு வேண்டாம் ஸார்...
ஏன் வேண்டாங்கிற...? போன வாரம் ஊத்தி கொடுத்தப்ப குடிச்சியே...?
இன்னிக்கு எனக்கு வேண்டாம் ஸார்...
சரி வற்புறுத்தலை... நான் குடிக்கிறேன் போய் கொண்டா
சந்திரமவுலி சொன்னதும் கேசவன் அலமாரியை நோக்கிப் போனான். போன நிமிஷமே -திரும்ப வெறுங்கையோடு வந்தான்.
ஏன்கேசவா ஸ்காட்ச் இல்லையா?
அலமாரி பூட்டியிருக்கு ஸார்...
அலமாரி பூட்டியிருக்கா?
லேசாய் திடுக்கிட்டுப் போய் எழுந்தார். வேக வேகமாய் நடை போட்டு அலமாரியை நெருங்கினார். இழுத்துப்பார்த்தார்.
அந்த மர அலமாரி இறுக்கமாய் சாத்தியிருந்தது. சந்திரமவுலி திரும்பிப்பார்த்து தனக்குப் பின்னால் நின்றிருந்த கேசவனிடம் புன்னகைத்தார்.
இது அம்மாவோட கைங்கரியம் போலிருக்கு போகிற போக்கில அலமாரியைப் பூட்டி சாவியையும் எடுத்துக்கிட்டா போலிருக்கு.
கேசவன் மவுனமாய் நின்றிருந்தான். சந்திரமவுலி தன் சில்க் ஜிப்பா பாக்கெட்டில் கையை நுழைத்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து கேசவனிடம் நீட்டினார்.
எதுக்கு ஸார்...?
ஹனிபீ ஒய்ன்ஷாப்புக்கு போய் - நாராயணன்கிட்டே நான் சொன்னதா சொல்லு. இந்த முன்னூறு ரூபாயையும் குடு அவன்பாட்டிலைத் தருவான். வாங்கிட்டு வந்துரு...
சரி ஸார்!
பணத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தான் கேசவன்.
அப்படியே கேசவா...
சொல்லுங்க ஸார்...
உன்னோட தங்கச்சி மாதவியை இங்கே கூட்டிகிட்டு வந்துரு.
ஸார்...
என்ன கேசவா... நீ...? மாதவியைப் பத்தி சொல்லும் போதே... மூஞ்சியில அதிர்ச்சியைக் காட்டறே... போல தடவை மாதிரியே... ஒரு மணி நேரத்துல் மாதவியை அனுப்பிச்சு வெச்சுடறேன்...
ஸ... ஸார்...
நீஎதையும் சொல்லவேண்டாம். நான் ஏன் இன்னிக்கு திருச்சி கல்யாணத்துக்கு அம்மா கூட போகலை தெரியுமா...? உன்னோட தங்கச்சி மாதவிக்காகத்தான். திடீர்ன்னு அவ ஞாபகம் வந்துருச்சு... அதான் தங்கிட்டேன்.
கேசவன் கண்களில் நீ கோர்த்தான்.
ஸார்... போன தடவையே நீங்க சொன்னீங்க... மாதவியை இனிமே கூப்பிடமாட்டேன்னு...
ஆமா சொன்னேன்... மனசுக்கு தெரியுது இது தப்புன்னு. இந்த பாழாப் போன உடம்புக்குத் தெரியுணுமே?
ஸார்! அவ வாழ வேண்டிய பொண்ணு ஸார். அவ வாழ்க்கையை பாழடிச்சு நரகம் பண்ணிடாதீங்க
சந்திரமவுலி திடீரென்று கோபமானார்.
டேய்... என்னடா... நான் பாட்டுக்கு சொல்லிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு உபதேசம் பண்ணிட்டே இருக்கே? இன்னும் உனக்கு ஒரு மணி நேரம் டயம் தர்றேன். அதுக்குள்ளே ஒரு கையில பாட்டிலும், இன்னொரு கையில உன்னோட தங்கச்சியையும் தள்ளிகிட்டு வரணும். இல்லேன்னா மாசம் பொறந்தா ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கிற இந்த வேலை உனக்கில்லை. சீட்டை அந்த நிமிஷமே... கிழிச்சுடுவேன்
ஸார்... அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க ஸார்.
அப்படி நான் பண்ணாம இருக்கணும்னா நீ... நான் சொல்றபடி கேக்கணும். ஒருவேளை சோத்துக்கு வழியில்லாம... ஒவ்வொரு கடையா ஏறி வேலை கேட்டுக்கிட்டிருந்த உன்னை என்னோட கம்பெனிக்கு கூட்டிட்டு வந்து ஆயிரம் ரூபா சம்பளம் போட்டு கொடுத்தேனே! எவன் இதுமாதிரி செய்வான்...? அங்கங்கே போய் பாரு. எம்.ஏ., பி.ஏ. படிச்சவனும் மாசம் முன்னூறு ரூபா காசு சம்பாதிக்கிறதுக்காக நாய் படாதபாடு படறான்.
கேசவன்கண்களில் நீர்த் திரையோடு மெதுவாய் நகர - சந்திரமவுலி திரும்பவும் தொடர்ந்தார்.
இதோபார் கேசவா! நான் உனக்கு இங்கே வேலை போட்டுக்குடுத்ததே உன்னோட தங்கச்சி மாதவி அழகாயிருக்காங்கிறா ஒரேயொரு காரணத்துக்காகத்தான். மாதவியோட கல்யாணத்தைப் பத்தி நீ கவலைப்படாதே... ரெண்டு வருஷம் போனதும் அவளுக்கு நானே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிவெக்கறேன். போ... போய் கூட்டிட்டுவா நேரம் போயிட்டே இருக்கு...
கேசவன் அதிர்கிற மனசோடு - அறையைவிட்டு வெளியே வந்தான்.
அதே இரவு.
பதினோரு மணி. பட்டினப்பாக்கம் குடியிருப்பின் வால் பகுதியில் கடைசி வீடு. ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் நிரம்பின அந்த அறையில் அழுக்கு பிடித்த சுவரில் நிறைய சாமி படங்கள். பக்கத்தில குறுகலான சமையலறை. சமையலறையையொட்டின மாதிரியான வாசற்படியில் ஒரு சின்ன சிம்னி விளக்கை வைத்துக்கொண்டு ஒரு தடிமனான புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள், மாதவி.
இருபது வயதான - ஊட்டமான உடம்பில் இளமை தத்தளித்து கொண்டிருந்தது.
டொக்... டொக்...
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் மாதவி. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கதவை நோக்கிப் போனாள்.
யாரது...?
நான்தாம்மா...
அண்ணனின் குரல் கேட்டதுமே - கதவின் தாழ்ப்பாளை பளிச்சென்று விலக்கினாள் மாதவி. திறந்த கதவின் வழியாக உள்ளே வந்தான் கேசவன்.
என்னண்ணா இவ்வளவு நேரம் கழிச்சு வர்றே...?
கேசவன் பதில் பேசாமல் தங்கையை பார்த்தான்.
என்னண்ணா அப்படி பார்க்கிறே...!
கொஞ்சம் திருத்தமா டிரஸ் பண்ணிகிட்டு என்கூட புறப்படம்மா..., வெளியிலே ஆட்டோ காத்துக்கிட்டிருக்கு...
எங்கண்ணா...?
முதலாளி உன்னைக் கூப்பிடறார்.
மாதவியின் கண்களில் அதிர்ச்சி மின்னல் அடித்தது.
2
"என்னம்மா... என்னையே பார்த்துட்டு நிக்கறே...? பொறப்படு, அந்தப்பாவி உனக்காக காத்திட்டிருப்பான்."
ஏண்ணா... இது உனக்கே வெட்கமாப்படலை? நாம் இப்படி மானத்தைவிட்டு பொழைக்கணுமா...?
வேற வழி எனக்குத் தோணலைம்மா! இந்த வேலையும் எனக்கு இல்லேன்னு ஆயிட்டா சீக்கிரமே தெருவுக்கு வந்துடுவோம். நீ மனசுல எதுவும் நினைக்காமே அந்த பாவிகிட்டே அனுசரிச்சு போயிடம்மா. நீ அனுசரிச்சு போகலைன்னா... என்வேலை மட்டும் போகாது. நீ தர மறுத்த கற்பையும் இவன் வலுக்கட்டாயமா எடுத்துக்குவான்
கண்களில் நீர் கசிய - கெஞ்சும் குரலில் பேசும் அந்த அண்ணனையே சில வினாடிகள் வரை கழிவிரக்கமாய் பார்த்தாள் மாதவி.
என்னை அப்படியெல்லாம் பார்க்காதேம்மா மாதவி. உன்னோட அண்ணன் ஒரு கோழை. அவனாலே யாரையும் எதுவும் பண்ண முடியாது. நான் வெளியே நிக்கிறேன். நீ புடவையை மாத்திகிட்டு வாம்மா
சொல்லிவிட்டு - விறுவிறுவென்று வெளியே வந்தான் கேசவன்.
வாசலில் காத்திருந்த ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டான். ஆட்டோ டிரைவர் கேட்டார்.
என்ன சார்! போகலாமா...?
ஒரு ரெண்டு நிமிஷம் பொறுங்க டிரைவர். ஆள் வரணும்
வெயிட்டிங்க்ல ரொம்ப நேரம் போட்டுடாதீங்க சார். நான் வூட்டுக்கு போகணும். முளுவாத பொஞ்சாதி வூட்டு திண்ணை மேலேயே காத்துகிட்டு கிடப்பா
இப்போ போயிடலாம்...
ஏன் சார் வூட்டுக்குள்ளே லைட் எரியலை. கரண்ட் இல்லையா...?
கரண்ட் இருக்கு. பத்து மணிக்கு மேலே லைட் போடக்கூடாதுன்னு வீட்டுச் சொந்தக்காரர் சொல்லியிருக்கார். பத்து மணிக்கு மேலே வீட்ல சிம்னி விளக்குதான்.
கேசவன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம் -. ஆட்டோ