Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thattungal Thirakkaathu
Thattungal Thirakkaathu
Thattungal Thirakkaathu
Ebook113 pages48 minutes

Thattungal Thirakkaathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466411
Thattungal Thirakkaathu

Read more from Rajeshkumar

Related to Thattungal Thirakkaathu

Related ebooks

Related categories

Reviews for Thattungal Thirakkaathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thattungal Thirakkaathu - Rajeshkumar

    23

    1

    கோவை ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பாரம் நெடுக இரத்தத் துனிகளைத் தெளித்த மாதிரி உதிர்ந்து போன ரோஜா இதழ்கள்.

    கன்னியாகுமரியிலிருந்து வரப்போகும் கன்னியாகுமரி - பெங்களூர் எக்ஸ்பிரஸ்ஸுக்காக ஜனக்கும்பல் திட்டுத்திட்டாய் காத்துக் கொண்டிருக்க, இந்த நாவலின் நாயகன் தினகர் அந்தக் கும்பலின் நடுவே சந்தோஷத்தோடு தெரிந்தான்.

    சந்தோஷத்துக்குக் காரணம்?

    அன்றைக்குக் காலையில்தான் வினிதா என்கிற அழகான பெண்ணுக்குக் கணவனாக மாறியிருந்தான். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்கிற எந்தவிதமான சொந்த பந்தமும் இல்லாத தினகர் - ஒரு ஸ்காலர்ஷிப்பின் உதவியால் எம்.ஏ. படித்து முடித்து பெங்களூரில் இருக்கும் அரிஸ்டோ கம்பெனியில் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிஸராக வேலை பார்க்கும் தினகர் - தினசரி டென்னிஸில் உடம்பை ஒரு கமலஹாசன் மாதிரி வைத்திருக்கும் இருபத்தைந்து வயதான தினகர் - கடந்த ஒரு மாத காலமாய் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுப் பல பெண்களைத் தட்டிக் கழித்த தினகர் - இன்றைக்கு வினிதா என்கிற இருபது வயது சொர்க்கத்திற்கு அதிபதி. லைசென்ஸ் ஹோல்டர்.

    டேய் தினகர்...

    லேடிஸ் வெயிட்டிங் ரூமில் வினிதா முகம் தெரிகிறதா என்று தேடிக் கொண்டிருந்த தினகர், அருகே குரல் கேட்டுத் திரும்பினான்.

    அவனுடைய கொலீக் லட்சுமணன். காலையிலிருந்து அலைந்த கல்யாண அலைச்சலில் நிரம்பவும் சோர்ந்து போயிருந்தான். சொன்னான்.

    வண்டி அரை மணி நேரம் லேட்டாம்...

    போச்சுடா... - தன் அடர்ந்த கிராப்பின், மேல் வலது கையை வைத்து போலியாய் கவலைப்பட்டான் தினகர்.

    நல்லா விசாரிச்சியாடா...?

    பக்காவா விசாரிச்சுட்டேன்...

    "எப்படா ட்ரெயின் வரும்...? எப்படா கூபேக்குள்ளே போவோம்ன்னு இருக்குடா... டேய்... லட்சுமண்... என்னோட நெஞ்சைத் தொட்டுப் பாருடா...

    பாலத்து மேலே போற டீசல் எஞ்சின் மாதிரி தடதடன்னு ஒரே சத்தம்... லேடீஸ் வெயிட்டிங் ரூமுக்குள்ளே வினிதாவோட தலை தெரியுதான்னு பாரேண்டா... கொஞ்சம்..."

    லட்சுமண் எட்டிப்பார்த்துவிட்டு ஊஹும் என்று தலையை ஆட்டி உதட்டைப் பிதுக்கினான்.

    வினிதாவைச் சுத்தி ஒரே கும்பல். வினிதா ஒரு மில்லி மீட்டர் கூட தெரியலை...

    அப்படி கொஞ்சம் தள்ளி நின்னு பார்ப்பமா?

    ம்... வாடா...

    நகர்ந்தார்கள்.

    அதே விநாடி -

    மாப்ளே... ஒரு நிமிஷம்! - வினிதாவின் தாய்மாமன் வேங்கடபதி காதுவரை சிரித்து கும்பிட்ட கையோடு எதிர்ப்பட்டார். வேங்கடபதிக்கு உளுந்து நிறம்.

    அசப்பில் வினுச்சக்கரவர்த்தியை ஞாபகப்படுத்தினார். விசாரித்த போது, தெரிந்த முன் வரிசைப் பற்களில் ஒரு பல் இடத்தைக் காலி செய்திருந்தது. நான் சாராயம் குடிப்பேன் என்றது அவரது தொப்பை, கல்யாணத்திற்காகக் கட்டியிருந்த பட்டு வேஷ்டி அவருடைய தொப்பையில் நிற்காமல் சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தது. அகலமான நாசிக்குக் கீழே ஒரு கைப்பிடி மீசையை உற்பத்தி பண்ணியிருந்தார்.

    தினகர் அவரருகே வந்தான்.

    என்ன விஷயம் சொல்லுங்க...

    கல்யாணத்துக்கு முன்னாடி நான் உங்ககிட்ட சொன்னமாதிரி இன்னிக்கு நடந்த கல்யாணத்துல என்னால எதுவுமே செய்ய முடியலை... நீங்க அதை மனசு வச்சுக்கக்கூடாது...

    நகை விஷயத்தைச் சொல்றீங்களா...?

    ஆமா... எதிர்பார்த்த பணம் வரலை... வர்ற ஆடி சீருக்கு நான் சொன்ன பிரகாரம் நகையைப் பண்ணிப் போட்டுடறேன்...

    பரவாயில்ல... நான் அந்த நகையை பெரிசா நினைக்கவேயில்லை... உங்களாலே முடிஞ்சா செய்யுங்க... இல்லேன்னா வேண்டாம்...

    அது மரியாதையில்லை... கண்டிப்பா பண்ணி போடுவேன்... அப்புறம் ஒரு சின்ன சமாச்சாரம்...

    சொல்லுங்க...

    வினிதா அப்பா, அம்மா இல்லாத பொண்ணு... கொஞ்சம் செல்லமா வேறு வளர்த்துட்டேன். அவளுக்கு பொசுக் பொசுக்குன்னு கோபம் வரும்... நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்...

    இதைத்தான் பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கே சொல்லீட்டிங்களே... நான் வினிதாவை அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கறேன்...

    இந்த வார்த்தை போதும் மாப்பிள்ளை...

    வினிதாவைப் பார்க்க பெங்களூருக்கு நீங்க எப்போ வரப்போறீங்க...?

    அடுத்த வாரத்துல ஒரு நாள் வர்றேன் மாப்ளே...! அப்படி உள்ளார வந்து உட்காருங்க... ஏன் இப்படி கால் கடுக்க நின்னுட்டிருக்கணும்... மாப்ளே...!

    வெயிட்டிங் ரூமை நோக்கிக் கூட்டிக் கொண்டு போனார் வேங்கடபதி. அவரைப் பின் தொடர்ந்து வெயிட்டிங் ரூமுக்குள் நுழைந்தான் தினகர். அவனைப் பார்த்ததும் -

    பெண்களுக்கு மத்தியில் - தலையில் ஏராளமான பூ பாரத்தோடு உட்கார்ந்திருந்த வினிதா மௌனமாய் எழுந்து நின்றாள்.

    ஐந்தடி உயரத்திற்குக் குறையாமல் இருந்த வினிதாவுக்கு செம்பு கலக்காத பொன்னிறம். சேலைக்கட்டை மீறி வெளியே தெரிந்த உடம்பின் பாகங்களில் சலவைக் கல்லின் மழமழப்பு தெரிந்தது. தேன் நிறக் கண்களில் ராத்திரி கண் விழித்த செம்மை தெரிய - அந்த சோர்விலும் அழகாய் இருந்தாள் வினிதா. புஷ்ப பாரம் கழுத்தின் பின்பக்கம் அழுத்தியதில் லேசாய் வியர்த்திருந்தாள்.

    அமோக ஜரிகை வேய்ந்த ரோஜாநிற புட்டுச் சேலையில் திணித்திருந்தாள்.

    அவளைப் பார்க்கப் பார்க்க - தினகரின் மனசில் இனிப்பு பரவியது. அவளைப் பார்த்துக் கொண்டே காலியாய் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

    வினிதாவுக்கு அருகே உட்கார்ந்திருந்த பெண்ணொருத்தி சிரித்தாள்.

    மாப்பிள்ளை ஸார்... இது லேடீஸ் வெயிட்டிங் ரூம்... ஜெண்ட்ஸ் வரக்கூடாது... என்றாள்.

    அந்த ரயில்வே ரூல் புதுமாப்பிள்ளைகளைக் கட்டுப்படுத்தாது தினகர் சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள். வினிதா கையிலிருந்த கர்ச்சீப்பால் வாயைப் பொத்திச் சிரிப்பை அடக்க முயன்றாள்.

    அதே விநாடி -

    வெளியே பிளாட்பாரத்தில் தண்டவாளத் துண்டில் ‘கண கண’வென்று சத்தம் எழ, வேங்கடபதி சொன்னார்: "வண்டி பிளாக்காயிடுச்சி...! லக்கேஜ்களை

    Enjoying the preview?
    Page 1 of 1