Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum
Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum
Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum
Ebook100 pages49 minutes

Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சத்யகீதா பிரபல நடிகை. அவளுக்கு தொழில் ரீதியாக பல சிக்கல்கள் ஏற்படுகிறது. சுற்றியுள்ளவர்களால் வாழ்வில் பல ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சந்திக்கின்றாள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறாள்... இறுதியில் சத்யகீதாவின் நிலை என்ன?

வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580100406748
Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum

Read more from Rajesh Kumar

Related to Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum

Related ebooks

Related categories

Reviews for Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    ஒரு காகிதப் பூவும் சில பட்டாம்பூச்சிகளும்

    Oru Kaagitha Poovum Sila Pattampoochigalum

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    கிரிஜா!

    தனக்குப் பின்புறம் குரல் கேட்டு ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் நின்றிருந்த கிரிஜா திரும்பி, அந்த வினாடியே சிணுங்கினாள்.

    என்னங்க... ஆபீஸ் முடிஞ்சு இவ்வளவு லேட்டா வர்றீங்க. மத்த குவார்ட்டர்ஸ்காரங்க எல்லாரும் ட்ராமா பார்க்க கிளம்பியாச்சு!

    ‘கிரிஜாவின் கணவன் முரளி பின்பக்கமாய்’ அவளை நெருங்கி கட்டி அணைத்தான்.

    ஹம்மாடி...

    கணவனின் அணைப்பில் கண் சொக்கிய கிரிஜா முனகினாள்.

    லேட்டா வந்துட்டு... இதென்ன விளையாட்டு?

    இன்னிக்கு எனக்கு செம மூட்...

    சரியா போச்சு... இங்கே மணி ஆறரை... ஏழு மணிக்கு நாடகம் ஆரம்பம். போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க. டிபன் எடுத்து வெக்கிறேன்.

    எனக்கு டிபன் வேணாம். நீதான் வேணும்...

    என்னங்க உங்களுக்கு நேரம் காலம் தெரியாமே...

    இதுக்கெல்லாம் நேரம் காலம் எதுவும் கிடையாது தெரியுமா... கிரிஜாவின் கன்னத்தை மெல்லத் தடவினான்.

    ச்சே... நீங்க ரொம்ப மோசம்...

    கிரிஜா...

    ம்

    எனக்கொரு சந்தேகம்!

    என்னவாம்?

    நமக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு?

    உத்தேசமா சொல்லட்டுமா. சரியா சொல்லட்டுமா?

    சரியாவே சொல்லு.

    நூத்தி இருபத்திரெண்டு நாள்.

    உனக்கு என்னை பிடிச்சிருக்குதானே?

    இதெல்லாம் என்ன கேள்விங்க. உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

    நான் உன்னை சந்தோஷமா: வெச்சிருக்கிறேனா இல்லையா?

    எக்கச்சக்க சந்தோஷத்துல வெச்சிட்டிருக்கீங்க. மத்த குவார்ட்டர்ஸில் இருக்கிற பெண்களெல்லாம் நீங்க என் மேல காட்டுற பிரியத்தைப் பார்த்து வயிறு எரியறாங்க.

    இவ்வளவு சந்தோஷமா உன்னை நான் வெச்சிட்டிருக்கும் போது, எதுக்காக இன்னொருத்தனுக்கு முந்தானை விரிக்கணும்?

    கிரிஜா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

    எ... என்ன சொல்றீங்க?

    நீ பத்தினி வேஷம் போட்டது போதும்னு சொல்றேன். இன்னிக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கு ஹோட்டல் பைவ் ரோஸஸில் நூத்தி நாலாம் நம்பர் ரூம்ல ஒருத்தனோட கொட்டமடிச்சியே, அவன் யாரு?

    கட்... கட்... டைரக்டர் பவானிசங்கர் நாற்காலியினின்றும் எழுந்தபடி குரல் கொடுக்க, சூரியப் பிரகாசத்தைப் போல் இருந்த ஒளி வெள்ளம் சட்டென்று அணைந்து போயிற்று. கிரிஜாவாக நடித்த நடிகை சத்யகீதாவும் முரளியாக நடித்த ஹீரோ அருண்குமாரும் விலகிக் கொண்டார்கள்.

    டைரக்டர் பவானிசங்கர் லேசான கோபத்தோடு அருண்குமாரைப் பார்த்தார். என்னாச்சு

    அருண் உங்களுக்கு? இந்த சீனுக்கு ஏழெட்டு டேக் வாங்கறீங்க. நூத்தி நாலாம் நம்பர் ரூம்ல ஒருத்தனோட கொட்டமடிச்சியே, அவன் யாருன்னு நீங்க பேசற வசனத்துல ஏற்ற இறக்கம் வேணும், நீங்க என்னடான்னா வசனத்தை ஒப்புவிக்கிற மாதிரி பேறீங்க?

    ஸாரி சார்.

    ஸாரி சொல்லிட்டா ஆச்சா! இந்த டேக்கையாவது பார்த்து ஒழுங்கா பண்ணுங்க. ப்ரொடியூசர் ரெண்டு எஸ்டேட்டை வித்து பணத்தைக் கொண்டாந்து போட்டிருக்கார். இப்படி பிலிமை சாப்பிட்டா அவர் தன்னோட தலையில துண்டை போட்டுக்க வேண்டியதுதான்.

    ஒன் மோர் டேக் ப்ளீஸ் டைரக்டர் சார்.

    ஓ.கே. லைட்ஸ் ஆன். விளக்குகள் உயிர்ப்புக்கு வர, க்ளாப் அடிக்கப்பட்டது.

    ஆக்ஷன்.

    ஹீரோ அருண்குமார் சத்யகீதாவை நெருங்கி அவளுடைய தோளின் மேல் கையைப் போட்டபடி வசனத்தைப் பேச ஆரம்பித்தான்.

    நூத்தி நாலாம் நம்பர் ரூம்ல ஒருத்தனோட கொட்டமடிச்சியே, அவன் யாரு? கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே பழக்கமா? இல்லே. நான் கட்டின தாலிக்கு பின்னாடி ஏற்பட்ட தெய்வீக உறவா?

    அபத்தமா பேசாதீங்க.

    என்னது! அபத்தமா நான் பேசறனா? என் ரெண்டு கண்ணால உன்னோட அசிங்கத்தைப் பார்த்துட்டுதான்டி பேசிட்டிருக்கேன். யாரு அவன் சொல்லு? ஆத்திரமாய் கேட்டுக்கொண்டே சத்யகீதாவை சுவரோடு சுவராய் சேர்த்து அழுத்தி அவளுடைய உடம்பு முழுவதையும் ஆக்கிரமித்த விநாடி,

    பளார்.

    "சத்யகீதா அவனிடம் இருந்து திமிறிக்கொண்டு ஓங்கி அறைந்தாள். ராஸ்கல்! உன் கை எங்கடா போகுது? என்கிட்ட இந்த சில்மிஷ விளையாட்டெல்லாம் வேண்டாம். சீனியர் ஆர்ட்டிஸ்ட்டேன்னு பார்க்கிறேன். இல்லேன்னா இந்நேரத்துக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1