Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vilagum Thiraigal
Vilagum Thiraigal
Vilagum Thiraigal
Ebook82 pages43 minutes

Vilagum Thiraigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403002
Vilagum Thiraigal

Read more from Rajesh Kumar

Related to Vilagum Thiraigal

Related ebooks

Reviews for Vilagum Thiraigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vilagum Thiraigal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    விலகும் திரைகள்

    Vilagum Thiraigal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ரத்தச் சிவப்பான வெல்வெட் திரை மேலே தூக்கப்படுவதற்காக காத்திருந்தது கூட்டம். வெல்வெட் திரையின் மையத்தில் ராஜா சர் தேவநாதன் ஞாபகார்த்த அழகுப் போட்டி என்ற எம்பிராய்டரி செய்யப்பட்ட எழுத்துக்கள். ஸ்பாட் லைட்டுகளின் வெளிச்சத்தில் தங்கமாய் டாலடித்தது. மேடைக்கு முன்புறமிருந்த முதல் வரிசை நாற்காலிகளில் மிஸ் ப்யூட்டியை தேர்ந்தெடுப்பதற்காக வழுக்கைத் தலை ஜட்ஜ்கள் ஏகப்பட்ட சபலங்களோடு உட்கார்ந்திருந்தார்கள்.

    மைக் கரகரத்தது.

    மேடைக்குப் பின்புறமிருந்து யாரோ பேசினார்கள்.

    விழாவுக்கு வருகை தந்திருக்கும் பெருமக்களே! யாவர்க்கும் ராஜா சர். தேவநாதன் அறக்கட்டளை சார்பில் பணிவான வணக்கங்கள். போட்டி துவங்கப்படுவதற்கு முன்பாக இந்த அழகுப் போட்டியைப் பற்றிய சில குறிப்புகளை சொல்ல ஆசைப்படுகிறோம். ராஜா. சர்.தேவநாதன் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர் தேகாப்பியாசங்களில் நிரம்பவும் அக்கறை காட்டி வந்தார் என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. உடம்பைப் பாதுகாக்க வேண்டிய முறைகளைப் பற்றி அவர் 'மானிட உடம்பு' என்கிற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார் - மேலும்...

    அந்த மனிதர் பேசப் பேச – அரங்கத்தின் பின் வரிசையில் உட்கார்ந்திருந்த இளைஞர் கூட்டம் ஊளையிட்டார்கள். விசிலடித்தார்கள்.

    அறுக்காதே... அறுக்காதே...

    போட்டியை ஆரம்பி...

    திரையைத் தூக்கு...

    மேடைக்குப் பின்புறம் மைக்கில் பேசிக் கொண்டிருந்தவர், இந்த அமளியை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினார். "மேலும் அவர் 'உடம்பின் சூட்சமங்கள்' என்கிற தலைப்பில் ஆயிரத்து தொளாயிரத்து, நாப்பத்திரெண்டாயிரம் வருஷம் ஒரு அப்பியாசம் எழுதி - அப்போது பிரபுவாய் இருந்த கர்னல் லாரன்ஸிடம் சான்றிதழ் வாங்கினார்.

    இளைஞர் கூட்டம் மறுபடியும் ஊளையிட்டு விசிலடித்தது.

    மகாத்மா காந்திக்கு ஜே... போட்டார்கள்.

    ஒரு ஐந்து நிமிஷம் அரங்கம் பூராவும் அமளியாய் இருந்தது.

    அமளி ஓய்ந்ததும் - மைக்கில் குரல் தொடர்ந்தது. "ராஜா. சர்.தேவராஜன் மறைவுக்குப் பின்னால் அவருடைய துணைவியார் ராஜாம்பாள் தன்னுடைய கணவரின் ஞாபகார்த்தமாக இந்த அழகுப் போட்டியை முதன் முறையாக நடத்த உள்ளார்கள். அம்மையார் அவர்கள் இப்போது குத்து விளக்கை ஏற்றி வைத்து போட்டியைத் தொடங்கி வைப்பார்கள்.

    அரங்கம் பூராவும் கைத்தட்டல் கடலின் இரைச்சலாய் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து

    வெல்வெட் திரை அங்குலம் அங்குலமாய் மேலே உயர்ந்தது.

    ராஜம்பாள் வெண்ணிற பட்டுப் புடவையில் - மேடையின் ஓரமாய் சங்கோஜமாய் நின்றிருந்தாள்.

    எழுபது வயதான ராஜாம்பாள் அசாத்திய கறுப்பு நிறம். கோனிக்கல் முகம். அணிந்திருந்த கண்ணாடி ஸ்பாட் லைட் வெளிச்சத்தில் கிளேர் அடித்தது. தலை முழுசுமாய் நரைத்து போய் உடம்பு தளர்ந்திருந்தாள். கழுத்தில் சமஸ்தான காலத்து நகைச்சரமொன்று பகட்டாய் வெட்டிக் கொண்டிருந்தது. மேடையின் ஓரத்தில் பஞ்ச முகத்திரியோடு குத்து விளக்கொன்று எண்ணெய்யோடு தளும்பிக் கொண்டிருக்க - யாரோ ஒருவர் எரிகிற மெழுகுவர்த்தியை ராஜாம்பாளிடம் நீட்ட - ராஜாம்பாள் தளர்நடை போட்டு - குத்து விளக்கை நெருங்கி - திரியைப் பற்ற வைத்தாள்.

    மறுபடியும் கரகோஷம் பிய்த்துக்கொண்டு போயிற்று.

    ராஜாம்பாள் மைக் அருகே வந்தாள்.

    வயோதிக நடுக்கம் குரலில் தெரிய பேசினாள்.

    "பெரியோர்களுக்கு வணக்கம். இத்தகைய போட்டிகள் நடப்பதின் மூலம் உடல் நலத்தைப்

    Enjoying the preview?
    Page 1 of 1