Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannil Theriyatha Vaanam
Kannil Theriyatha Vaanam
Kannil Theriyatha Vaanam
Ebook113 pages40 minutes

Kannil Theriyatha Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kannil Theriyatha Vaanam

Read more from Rajeshkumar

Related to Kannil Theriyatha Vaanam

Related ebooks

Related categories

Reviews for Kannil Theriyatha Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannil Theriyatha Vaanam - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அக்ஷய்குமார் மேடையின் மையத்தில் இருந்தான். அவன்மேல் பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருந்தது.

    மேடைகான்ஃபரன்ஸ் ஹாலில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் க்ரவுண்ட் ஃப்ளோர்க்கு கீழே இருந்த கான்ஃபரன்ஸ் ஹால், மேடைக்குப் பின்னே இருந்த சுவரில் ஃபிக்ஸோக்ராஃபிக் முறையில் அமைக்கப்பட்ட வாசகங்கள்.

    ‘க்ராண்ட் மாஸ்டர் தகுதி பெற்றிருக்கும் செஸ் சாம்பியன் அக்ஷய்குமார்க்குப் பாராட்டுவிழா.’

    தொழிலதிபர்களும், அரசாங்க உயரதிகாரிகளும் அந்த ஹால் பூராவும் முடிச்சு முடிச்சாய்ப் பரவியிருந்தார்கள்.

    அக்ஷய்குமார் ஐந்தே முக்காலடி உயரத்தில் இருந்தான். அதிகபட்சமாய் இருபத்தி நாலு வயதுக்கு மேல் சொல்ல முடியாது. வலப்பக்கமாய் கிராப்பை வழித்து சீவி ஒரு சின்னப் பையன் போல் தோற்றம் காட்டினான்.

    ஒரு நபர் மைக்கில் கரகரத்துக் கொண்டிருந்தார்.

    "இந்த அக்ஷய்குமார் ஆஸ்பத்திரியில் பிறந்த போதிருந்தே அவர்களின் குடும்ப நண்பன் என்கிற முறையில் எனக்கு தெரியும். அவரின் தலையில் இருந்த நாலணா சைஸ் மச்சத்தைப் பார்த்து அப்போதே நான் சொன்னேன், இந்த குழந்தை ஒரு பெரிய சாதனையைத் தன் வாழ்க்கையில் செய்யப் போகிறது என்று. என் வார்த்தை இப்போது பலித்து விட்டது.

    கூட்டம் ஒரு பலஹீனமான கரகோஷம் எழுப்பியது.

    அவர் மைக்கை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தார்.

    ...அது மட்டுமில்ல... அக்ஷய்குமார் பத்து வயதாய் இருக்கிறபோது ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனேன் அவருடைய தந்தையாருடன் செஸ் ஆட்டம் விளையாடினேன் பக்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்ஷய்குமார் திடீரெனக் குறுக்கிட்டார். நாலே நாலு மூவில் என்னைத் தோற்கடித்துவிட்டார். பத்து வயதுச் சிறுவனுக்கு இப்படி ஒரு செஸ் ஞானமா என அப்போதே வியக்க ஆரம்பித்தேன். இப்போது இவர் வாங்கியிருக்கும் க்ராண்ட் மாஸ்டர் பட்டம் எந்த வகையிலும் எனக்கு வியப்பைத் தரவில்லை...

    அக்ஷய் குமார் விரலை மடக்கி நகத்தைப் பார்த்தபடி மெல்லிசாய்ப் புன்னகைத்துக் கொண்டான்.

    பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்த அவரிடமிருந்து மைக் பிடுங்காத குறையாய் வாங்கப்பட்டது.

    தொழிலதிபர்கள் ஓரிருவர் தங்கள் மகிழ்ச்சியைச் சில லட்சங்கள் செக்காய்க் கொடுத்து வெளிப்படுத்தினார்கள் அரசாங்கம் சார்பாக தலைமைச் செயலர் அவனுக்கு இன்னும் சில நாட்களில் ஒரு விருது வழங்க இருப்பதாகத் தெரிவித்துவிட்டு கேடயம் ஒன்றை வழங்கினார்.

    ஃப்ளாஷ் காமிராக்கள் கண்களைச் சிமிட்டின.

    கடைசியாய் விழா அமைப்பாளர் மைக்கை வாங்கினார்.

    அக்ஷய்குமார்க்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா மிகச் சிறப்பாய் நடைபெற உதவியை அனைத்துத் தரப்பினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேல் ப்ளோர் டைனிங் ஹாலில் டின்னர் தயாராக உள்ளது. இனியும் உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை. இத்துடன் முடிவடைகிறது. வணக்கம்...

    கைதட்டல் சப்தம் சீலிங் வரை உராய்ந்தது.

    கூட்டம் மெதுவே கலைய ஆரம்பித்தது.

    அக்ஷய் குமாரை டைனிங் ஹாலுக்குக் கூட்டிப் போனார்கள். பஃபே பாணியில் டின்னர். மதுக் கோப்பைகள் மட்டும் வெள்ளுடுப்பு சிப்பந்திகள் மூலமாய் கூட்டத்தை ஊடுருவிக் கொண்டிருந்தது.

    அக்ஷய்குமார் ஸமோஸாவையும், கேக்கையும் நாசூக்காய் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்தான். இடையிடையே சிலர் அவனை நெருங்கி வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போனார்கள். சிநேகமாய்ப் பேசிப் புன்னகைத்தான் அக்ஷய்குமார்.

    அந்த விநாடி அவன் முதுகில் ஒரு கை விழுந்தது.

    அக்ஷய்குமார் திரும்பிப் பார்த்தான்.

    கடல் பாசி நிறத்தில் சூட் அணிந்த அந்த உயரமான மனிதர் ஒரு வசீகரப் புன்னகையோடு அவனைப் பார்த்தார். கோட்டில் தங்கப் பித்தான்கள். பால் அல்வா நிறத்தில் மிருதுவான தோற்றம் தந்தார். தலையின் மத்தியப் பிரதேசம் மட்டும் பாலைவனமாகியிருந்தது.

    வைர மோதிரம் டாலடிக்க கையைக் கூப்பினார்.

    வணக்கம் அக்ஷய்குமார்...

    வணக்கம்...

    உங்களை... என்று ஆரம்பித்தவர் ஒரு விநாடி நிறுத்தி - என்னைவிட பல வருஷங்கள் இளையவரா இருக்கிங்க... போலியா உங்களை ‘வாங்க, போங்க’ன்னு அவசியம் நான் கூப்பிடணுமா...?

    புன்னகைத்தான் அக்ஷ்ய் குமார்.

    அவசியமில்லை... மரியாதை... புகழ் ரெண்டையுமே நான் மத்தவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கறதில்லை...

    "ஆனாலும் உனக்கு எல்லாரும் பலமா மரியாதை தர்றாங்க... பலமாய்ப்

    Enjoying the preview?
    Page 1 of 1