Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arai Milli Meettaril Oru Aabathu
Arai Milli Meettaril Oru Aabathu
Arai Milli Meettaril Oru Aabathu
Ebook127 pages44 minutes

Arai Milli Meettaril Oru Aabathu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Arai Milli Meettaril Oru Aabathu

Read more from Rajeshkumar

Related to Arai Milli Meettaril Oru Aabathu

Related ebooks

Related categories

Reviews for Arai Milli Meettaril Oru Aabathu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arai Milli Meettaril Oru Aabathu - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    தண்ணீர் லாரி பெரிய ஹாரன் ஓசையோடு அந்தக் குறுகலான தெருவுக்குள் பிரவேசித்தது.

    டிரைவர் ரங்கசாமி பீடியை வெளியே எறிந்துவிட்டு ஸ்டியரிங்கை முழு வீச்சில் வளைத்தான்.

    வரிசை வகுத்திருந்த பிளாஸ்டிக் குடங்களைப் பார்த்துத் திகைத்தான் க்ளீனர் பொடியன்.

    அண்ணே... என்ன இது...! இவ்வளவு கூட்டமா...?

    நீ வேலைக்கு சேர்ந்து மூணு நாள்தானே ஆகுது. இன்னும் பலான பலான ஏரியாவெல்லாம் இருக்கு... எம்ஜியார் படம் பார்த்திருக்கியா...?

    எதுக்குண்ணே கேக்கறிங்க...?

    ரஜினி படமாச்சும் நிச்சயமா பார்த்திருப்பியே... அதைவிட சூப்பரான ஃபைட்டெல்லாம் இங்கே பார்க்கலாம்... ஒவ்வொரு பொம்பளையும் தண்ணிக் குடத்தைத் தூக்கினா விஜயசாந்தி ஆயிடுவா...!

    அவ்வளவு தண்ணிக் கஷ்டமா...? எனக்கு பயமா இருக்குண்ணே...

    உனக்கென்ன பயம்...?

    இவுங்க அடிதடியில பைப்பைத் திறந்து விடற நான் ஏடாகூடமா மாட்டிக்கப் போறேன்...

    நாமதாண்டா இங்கே ஹீரோ... நீ பயப்படக்கூடாது... எல்லாருக்கும் பயங்காட்டணும்..."

    லாரி வேகமாய்ப் போய் ஜனத்திரள் அருகே நின்றது.

    ரிவர்ஸ் எடுத்து நிறுத்துகிற போதே பெண்கள் ஒருத்தர் குடுமியை இன்னொருத்தர் பிடிக்க ஆரம்பித்திருந்தார்

    ரங்கசாமி இருக்கையிலிருந்து எட்டிக் குதித்தான்.

    சண்டை சச்சரவில்லாம வரிசையாத் தண்ணி பிடிக்கறதுன்னா பைப்பைத் திறந்துவிடுவேன்... இல்லைன்னா கியரைப் படக்குன்னு மாத்திப் போயிட்டே இருப்பேன்... நீ எங்கே போய் எப்படிப் பெட்டிஷன் போட்டாலும் சரி... இந்த ஏரியா பக்கமே லாரி வராமப் பண்ணிடுவேன்...

    கூட்டத்தின் சளசளப்பு லேசாய் அடங்க - க்ளீனர் பையனிடம் புன்னகை பூத்தான் ரங்கசாமி.

    மெல்லச் சொன்னான்.

    பார்த்தியா...? அதட்டினா எப்படி அடங்கிப்போறாங்க பார்த்தியா?

    பொடியன் பவ்யமாய், உங்ககிட்டே நிறைய கத்துக்கணும் அண்ணே... என்றான்.

    டிரைவர் அண்ணே... குடத்தை வெச்சி இடிச்சிக்கிட்டே இருக்காளே... அந்த சரஸாவைப் பேசாம இருக்கச் சொல்லுண்ணே... அவ ஒருத்தி வாயைத் தெறக்காம இருந்தா இங்கே சச்சரவே இருக்காது...

    இளிச்சவாயைக் கண்டா ஏறி மிதிச்சிருவீங்களே...?

    அந்த சரஸா புடவையை மேலே சொருகிக் கொண்டு சண்டைக்கு வர - மூன்றாமவள் இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

    "ரங்கசாமியண்ணே... நீங்க பைப்பைத் திறந்துவிடுங்க...

    தம்பி வால்வைத் திருகி விடு... பையன் கேட் வால்வை சுழற்றினான். எல்லோரும் அதிர்ந்தார்கள்.

    குழாயிலிருந்து தண்ணி விழவில்லை.

    ரத்தம் கொட்டியது.

    2

    அலையும், கரையும் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு ஒட்டைப் படகின் அருகே உட்கார்ந்திருந்தார்கள் சந்தியாவும், கிருஷ்ணாவும். சந்தியா பிங்க் நிறத்தில் ப்ளெயின் ஸாரி உடுத்தியிருந்தாள். செதுக்கினாற்போல உதடுகளும், எக்ஸ்ட்ரா லார்ஜ் கண்களும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டின.

    இரண்டு நாள் தாடியோடு சோகமாய் இருந்த கிருஷ்ணாவின் அடர்த்தியான தலை முடியை பிடித்து வேகமாய் அசைத்தாள்.

    கிருஷ்ணா... ஏன் இப்படி விமானம் க்ராஷ் ஆனா மாதிரி ஹன்ட்ரட் பர்சன்ட் சோகத்தோட உக்காந்திருக்கிங்க...?

    நம்ம காதலை நினைச்சா எனக்கு இப்பல்லாம் தூக்கமே வர்றதில்லை சந்தியா... எதிர்காலத்தை நினைச்சா மண்டைக்குள்ளே என்னவோ பண்ணுது.

    "என்ன பண்ணுது...?'

    காதலுக்குக் கண்ணில்லைங்கறது சரியாத்தான் இருக்கு... சம்பாத்தியமே இல்லாத நான் உன்னை எந்த தைரியத்தில் காதலிச்சேன்னு எனக்கே தெரியலை... நான்தான் மடத்தனமா காதலிச்சேன்னா புத்திசாலிப் பொண்ணான நீயுமா அதே தப்பை செய்யணும்...? எந்தப் பிடிமானமும் இல்லாத என்னைப் போய் நீ எப்படி லவ் பண்ணினே...?

    சந்தியா பளீரென்று சிரித்தாள்.

    உங்களோட பாங்க் பாலன்ஸ் எவ்வளவு... என்னோட பாங்க் பாலன்ஸ் எவ்வளவு... இதையெல்லாம் பைசா சுத்தமா கணக்குப் போட்டுட்டுத்தான் காதலிக்க ஆரம்பிக்கணும்ன்னா அதுக்குப் பேர் காதலே இல்லை... என்னோட சொந்த அனுபவித்தில் காதலுக்கு நான் ஒரு டேஃபனிஷன் வெச்சிருக்கேன்...

    ...........

    என்னன்னு கேக்க மாட்டிங்களே...? சரி நானே செல்லிடறேன்... ஒரு கணத்தில் நிகழ்வது... பல யுகங்களுக்கும் தொடர்வது... அதுதான் காதல்...

    இந்த ‘பொயட்டிக்’ வரிகளை ரசிக்கிற மனோநிலையில் நான் இப்ப இல்லை சந்தியா... வாழ்க்கையைப் பத்திக் கவலைப்பட்டுட்டிருக்கேன்...

    கவலைப்பட்டா பிரச்சனை ஸால்வ் ஆயிடுமா...? ஒரு பிரச்சனையை எப்படித் தீர்க்கறதுன்னு சிந்திக்கணும்... அப்புறம் செயல்படணும்...

    "நான் செயல்படாமலா இருக்கேன்... எல்லாக் கம்பெனிகளின் படிக்கட்டிலும் ஏறி இறங்கிட்டேன்... வேலை இல்லைன்னு கழுத்தைப் பிடிச்சித் தள்ளாத குறையா சொல்லி அனுப்பறான்...

    Enjoying the preview?
    Page 1 of 1