Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Kolaiyavathu Sei Kanney
Ennai Kolaiyavathu Sei Kanney
Ennai Kolaiyavathu Sei Kanney
Ebook151 pages48 minutes

Ennai Kolaiyavathu Sei Kanney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ennai Kolaiyavathu Sei Kanney

Read more from Rajeshkumar

Related to Ennai Kolaiyavathu Sei Kanney

Related ebooks

Related categories

Reviews for Ennai Kolaiyavathu Sei Kanney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Kolaiyavathu Sei Kanney - Rajeshkumar

    21

    1

    கண்ணே!

    உன் பெயரைக்கூட நான்

    எழுதுவது இல்லை -

    பேனா முனை

    உன்னைக் குத்துமே

    என்று!

    காரட் நிற கதிரவன் கிழக்கில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். கடற்கரைச் சாலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தவர்களில் நடுவில் ஜாக்கிங் சூட் அணிந்த நீலகண்டன் தன் மெய்க்காப்பாளர்களோடு வேகமாய் நடந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். ஐம்பது வயது உடம்பு தேகப் பயிற்சி காரணமாய் பத்து வயதைக் குறைத்துக் காட்டியது. கழுத்தில் தங்கம் கலந்த உருத்திராட்சக் கொட்டை மின்னியது.

    இதோ பாருங்க பரசுராமன்...! கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாத்த முடியாது. அந்த நாள் ரொம்பவும் நல்ல நாள்ன்னு எல்லா ஜோஸியர்களும் சொல்லியிருக்காங்க. இனிமேல் அப்படி ஒரு நாள் அமையறது ரொம்பவும் சிரமம்ன்னும் சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா நடுவுல பூந்து மந்திரியோட வசதிக்காக கும்பாபிஷேக தேதியை மாத்துன்னு சொல்றீங்க. இது எந்த விதத்துல நியாயம்ன்னு எனக்குத் தெரியலை!

    மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த இந்து அறநிலையத்துறை ஆணையர் கெஞ்சினார்.

    ஸார்...! மந்திரி அந்தக் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கணும்ன்னு ரொம்பவும் ஆசைப்படறார். பட் நீங்க கும்பாபிஷேகம் வெச்சு இருக்கிற தேதியில் அவர்க்கு டெல்லியில் ஏதோ வேலை இருக்கிறதாலதான் தேதியை மாத்தி வைக்கச் சொல்றார். அடுத்த மாசத்துல ஏதாவது ஒரு தேதியைப் பாருங்க.

    அதெல்லாம் பார்க்க முடியாது பரசுராமன். எது எது எந்த எந்த நேரத்துல நடக்கணும்ன்னு ஒரு விதிமுறை இருக்கு. அதையெல்லாம் ஒரு மந்திரிக்காக மாத்த முடியாது.

    ஸார்... கொஞ்சம் யோசனை பண்ணி...!

    இதுல யோசனை பண்ண என்ன இருக்கு...? ஏதோ ஒரு கல்யாண விஷயம்ன்னா கூட தேதியை மாத்திக்கலாம். இது கோயில் கும்பாபிஷேகம்...! ஒண்ணும் பண்ண முடியாது பரசுராமன்... நீங்க மினிஸ்டர்கிட்டே எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லிருங்க...!

    ஸார்...!

    வேண்டாம் பரசுராமன்...! காலங்கார்த்தாலே என்னைக் கெட்ட வார்த்தை பேச வெச்சிடாதீங்க... செல்போனை ஆஃப் பண்ணிட்டு வேற வேலை ஏதாவது இருந்தா பார்க்கப் போங்க...! செல்போனை ஆஃப் பண்ணி தனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு மெய்க்காப்பாளனிடம் கொடுத்தார்.

    நாகராஜ்!

    அய்யா...!

    இனிமேல் இந்த பரசுராம் போன் பண்ணினா எனக்குக் கொடுக்காதே! கோயில் கும்பாபிஷேகத்தைக் காட்டிலும் அவனுக்கு மந்திரி வர்றதுதான் முக்கியமாப்படுது. அடிவருடிப் பசங்க...!

    அய்யா...!

    என்னடா?

    நா... ஒண்ணு சொன்னா கோபிச்சுக்க மாட்டீங்களே...!

    ஒண்ணு என்னடா... ஒன்பது சொல்லு...! அதுக்குத்தானே உன்னையெல்லாம் கூடவே வெச்சுட்டு இருக்கேன்...

    அய்யா...! பரசுராம் சொன்ன மாதிரி கும்பாபிஷேகத் தேதியைத் தள்ளிப் போடறதுதான் உத்தமம்!

    ஏண்டா... அப்படி சொல்றே?

    அய்யா! ஆண்டவனைப் பகைச்சுகிட்டாலும் பரவாயில்லை. ஒரு அரசியல்வாதியைப் பகைச்சுக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க!

    டேய்! என்னைப் பார்த்துதான் ஒரு அரசியல்வாதி பயப்படணும். நான் யார்க்கும் பயப்பட மாட்டேன். கும்பாபிஷேகத்தேதியை யார்க்காகவும் நான் மாத்த முடியாது. நீலகண்டன் பேசிக் கொண்டே ரோட்டின் ஓரமாய் நிறுத்தியிருந்த தன் கார்க்கு வந்தார்.

    ட்ரைவர் முருகப்பன் ஓட்டமும் நடையுமாய் வந்தான். அய்யா! அருகம்புல் ஜூஸ் கொண்டாரட்டுமா?

    ஒரு அரை டம்ளர் கொடு... போதும்...

    ட்ரைவர் காரின் பின்சீட்டில் இருந்த பிளாஸ்கை எடுக்கப் போக நீலகண்டன் வியர்த்துப் போன முகத்தை டவலால் ஒற்றிக் கொண்டு ரோட்டோரமாய் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தார். இளநீல சபாரி உடையில் இருந்த மெய்க்காப்பாளர்கள் நான்கு பேரும் நான்கு திசைகளையும் பார்த்தபடி நின்றார்கள்.

    ட்ரைவர் கொண்டு வந்து கொடுத்த அருகம்புல் ஜூஸ் டம்ளரை வாங்கிக் கொண்ட நீலகண்டன் ஒரு வாய் பருகிவிட்டு நிமிர்ந்தார்.

    முருகா...!

    அய்யா...

    உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம்ன்னு சொன்னியே? முகூர்த்த தேதியைக் குறிச்சுட்டியா...?

    இல்லீங்கய்யா...

    ஏண்டா...?

    பையன் வீட்ல கொஞ்சம் கெடுபிடி பண்ணினாங்க... கையில ரொக்கத்தையும் கொடுத்து இருபத்தஞ்சு பவுன் நகையையும் போடச் சொன்னாங்க. நான் வேண்டாம்ன்னுட்டேன்.

    பையன் என்ன பண்றான்?

    செக்ரட்டேரியட்டுல க்ளார்க் உத்யோகம். ரெவின்யூ டிபார்ட்மெண்ட்...!

    அட...! ஏதோ முன்னே பின்னே பேசி முடிக்க வேண்டியதுதானே...!

    பணம் காசை எதிர்பார்க்கிறவங்க வேண்டாங்கய்யா...! வேற ஒரு வரன் வராமலா போயிடும்? முருகப்பன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பின்பக்கம் அந்த சத்தம் கேட்டது.

    அதெல்லாம் பார்க்க முடியாது...!

    அவர்கிட்டே கொஞ்சம் பேசணும்.

    பேச முடியாது... போய்யா... அந்தப் பக்கம்...!

    நீலகண்டன் அருகம்புல் டம்ளரோடு திரும்பிப் பார்த்தார். ஒரு இளைஞன் மெய்க்காப்பாளனிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தான். மாநிறத்தோடு உயரமாய் இருந்தான். முப்பது வயது இருக்கலாம். தலைக் கேசம் கலைந்து இருந்தது. தாடையில் லேசாய் அரும்பிய தாடி. கண்களில் ரிம்லஸ் கண்ணாடி. கையில் சின்னதாய் ப்ரீப் கேஸ்.

    ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்துட்டு போயிடறேன்.

    யோவ்... தள்ளிப் போய்யா... அய்யாவை இப்ப பார்க்க முடியாது.

    இரண்டு பேர்க்கும் இடையில் ‘தள்ளு முள்ளு’ நடந்து கொண்டிருக்க நீலகண்டன் குரல் கொடுத்தார்.

    விக்டர்! அந்தப் பையனை என்கிட்டே அனுப்பு!

    அய்யா...! அவன் யார்ன்னு தெரியலை. கேட்டா எந்த பதிலும் சொல்லாமே அடம் பிடிக்கிறான். கையில் ஏதோ ப்ரீப்கேஸ் மாதிரி இருக்கு. அதுல என்னான்னு கேட்டா அதுக்கும் பதில் கிடையாது. ரெண்டு தட்டு தட்டி அனுப்பிடவா...?

    வேண்டாம்...! அவனை என்கிட்டே அனுப்பு. நான் பார்த்துக்கறேன்...

    Enjoying the preview?
    Page 1 of 1