Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyiroduthaan Vilaiyaduven
Uyiroduthaan Vilaiyaduven
Uyiroduthaan Vilaiyaduven
Ebook133 pages36 minutes

Uyiroduthaan Vilaiyaduven

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Uyiroduthaan Vilaiyaduven

Read more from Rajeshkumar

Related to Uyiroduthaan Vilaiyaduven

Related ebooks

Related categories

Reviews for Uyiroduthaan Vilaiyaduven

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyiroduthaan Vilaiyaduven - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    1

    குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்த அந்த அலுவலக அறை ஊட்டியாக மாறியிருந்தது. இருபதடிக்கு இருபதடி என்ற அளவுகளில் மிகப்பெரிய அறை. கண்களை உறுத்தாத ஊதாநிற உயர்தர பெயிண்ட் பூச்சு. கண்ணாடி சன்னல்களை வருடும் திரைச்சீலைகள். குற்றால அருவி வால்போஸ்டராய் மாறி - சுவரின் ஒரு பக்கத்தை அடைத்துக்கொண்டிருந்தது. ‘பளபள’வென்று - தேக்கு கதவில் - வினித்குமார் பி.டெக்., எம்.பி.ஏ., மானேஜிங் டைரக்டர் என்ற ஆங்கில பித்தளை எழுத்துக்கள் புடைப்பாய் தெரிய - கம்பெனியின் வளர்ச்சி பற்றிய வரைபடம் ஒன்று பலவித நிறக் கோடுகளால் ஓடியிருந்தன.

    கனமான கண்ணாடி வேய்ந்த மேசைக்கு அப்பால் - சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் வினித்குமார். வயது முப்பதுக்குள். மெலிதான நீலவர்ண சபாரி உடையில் தன் தேகாப்பியாச உடம்பை நுழைத்திருந்தான். சதைப்பிடிப்பான சதுர முகம். வலது கண்ணுக்கு மேல் - நெற்றியில் சின்னதாய் ஒரு காயத் தழும்பு. அந்த தழும்பு கூட அவனுடைய முகத்திற்கு அழகாக இருந்தது. டிரிம் செய்யப்பட்ட தலைமுடி. வலதுகையில் முழுக்கை சர்ட்டின் பரப்புக்கு கீழே தங்க பிரேஸ்லட் மின்னியது. எந்த நேரமும் கண்களைக் கவ்வியிருக்கும் குளிர்கண்ணாடி - அலுவலக நேரங்களில் மட்டும் மேசையின் மீது மல்லாந்திருக்கும்.

    கோப்புகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வினித்குமார் தன்னுடைய இடதுகையை தன்னிச்சையாய் நீட்டி - இண்ட்டர்காம் ரிசீவரை எடுத்து ஒரு எண்ணை டயலில் சுழற்றினான்.

    மறுமுனை முணுமுணுத்து ரிசீவர் எடுக்கப்பட்டது.

    மிஸ்டர் முரளிதரன்?

    எஸ்.. சார்...

    இன்னிக்கு என்ன தேதி...?

    முப்பது சார்...

    மாத அறிக்கை இன்னும் என் மேசைக்கு வரலை. என்னாச்சு...?

    தயார் பண்ணிட்டிருக்கேன் சார்...

    என்னது..? தயார் பண்ணிட்டிருக்கீங்களா...? ஒரு மாசத்துக்கு முப்பது நாளா.. நாற்பது நாளா...? நேத்திக்கு சாயந்தரமே என்னோட மேசைக்கு அறிக்கை வந்திருக்கணும்... போன நிமிடம் வரைக்கும் வரலை. வாடிக்கையாளர் சர்வீஸ் ஃபைலை ரெண்டு நாளா கேட்டுகிட்டு இருக்கேன். அதுவும் வரலை... என்ன வேலை செய்றீங்க? இந்த ஆபீசுல வேலை நடக்குதா இல்லையான்னு எனக்கு சந்தேகமா இருக்கு...

    வினித்குமார் படபடவென்று பொரிந்து தள்ள மறுமுனையில் இருந்த மானேஜர் முரளிதரன் சற்றே தணிந்த குரலில் சொன்னான்.

    மன்னிக்கணும் சார்... எப்படியோ தாமதம் ஆயிடுச்சு...! இன்னும் பத்து நிமிடத்துல நீங்கள் கேட்ட அறிக்கையை அனுப்பி வைக்கிறேன்.

    முதல்ல அதைச் செய்யுங்க...

    ரிசீவர் மறுமுனையில் - இரண்டாய் உடைபடுகிற மாதிரி வைக்கப்பட - முரளிதரன் பெருமூச்சுவிட்டான்.

    பக்கத்து மேசையில் உட்கார்ந்திருந்த ஸ்டெனோ லீலாவதி சிரித்தாள் மெள்ள. என்ன சார்... எம்.டி.ரொம்ப சூடா இருக்கார் போலிருக்கே?

    ஆமா...! அறிக்கை இன்னும் மேசைக்கு வரலையாம். புடிச்சு காய்ச்சுட்டார்... சொன்ன முரளிதரன் அழைப்பு மணியைத் தட்ட பியூன் எட்டிப்

    Enjoying the preview?
    Page 1 of 1