Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjum Kili
Konjum Kili
Konjum Kili
Ebook98 pages58 minutes

Konjum Kili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Konjum Kili

Read more from Rajeshkumar

Related to Konjum Kili

Related ebooks

Related categories

Reviews for Konjum Kili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjum Kili - Rajeshkumar

    9

    1

    அந்தப் பிரம்மாண்டமான ஆபீசை மலங்க மலங்கப் பார்த்தான் சிவசுப்பிரமணியன்.

    ஒரு மினி கல்யாண மண்டபம் சைசில் ரிசப்ஷன் இருந்தது. தரைப்பரப்பு பூராவும் கால்களுக்கு மெத்தையாய் அடர்பச்சை நிறத்தில் கம்பளம் விரித்திருக்க சுவர்ப் பரப்புகளை வால்பேப்பர்கள் இறுக்கமாய்க் கவ்வியிருந்தன. ஏர்-கண்டிஷன் முடுக்கிவிடப்பட்டிருக்க - சில்லென்று ஈரப்பதத்தோடு வெல்வெட் சோபாக்கள் அமர்த்தப்பட்டிருந்தன. கண்ணாடிக் கதவுகள் வேய்ந்த லிப்ட் ஒன்று மவுனமாய் மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமாக இருந்தது. ரிசப்ஷன் ஹாலுக்கு அழுத்தமாய்ப் பொட்டு வைத்தாற்போல் ஒரு சினிமா நடிகைக்குரிய கவர்ச்சியோடு வரவேற்புப் பெண் தெரிந்தாள். நீள நீள விரல்களால் கம்ப்யூட்டரைத் தட்டுவதும், டெலிபோனில் கிசுகிசுப்பதும், விசாரிக்கும் நபர்களுக்கு வஞ்சமில்லா புன்னகையோடு பதிலளிப்பதுமாய் நிமிடங்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

    சிவசுப்பிரமணியன் தன்னருகே அமர்ந்திருந்த மேகலாவைக் கவலையோடு பார்த்தான்.

    மேகலா...

    வழித்துப் பின்னிய தலைப் பின்னலோடும், மொட மொடப்பான காட்டன் சேலையோடும் இருந்த மேகலா அவனிடம் திரும்பினாள். சேலையின் வெண்ணிறப் பின்னணியும், அதிலிருந்த ஊதா நிற வட்டங்களும் மேகலாவின் கோதுமை நிற உடம்புக்கு அழகாய் இருந்தன.

    என்ன... என்றாள்.

    தயக்கம் இழையோடும் குரலில் கேட்டான் அவன்.

    இவ்வளவு பெரிய ஆபீசில் எனக்கு வேலை கிடைக்குமா மேகலா...?

    ஏன்...

    ஆபீஸ் வெளிநாட்டு ஸ்டைல்ல பந்தாவா இருக்கு... சின்ன டவுன் பஞ்சாயத்திலிருந்து வந்திருக்கும் என்னைப் போல ஆட்களை இங்கே உள்ளவங்க மதிப்பாங்களா...

    லேசான கோபத்தோடு அவனைப் பார்த்தாள்.

    முதல்ல இந்த தயக்கத்தை மூட்டை கட்டி வையுங்க சிவசுப்பிரமணியன்... ஆபீசோட தோற்றத்தைப் பார்த்து பயப்பட்டீங்கன்னா சென்னைக்குள்ளே உங்களுக்கு அவ்வளவு சுலபத்தில் வேலை கிடைக்காது...

    எல்லாமே புதுசாவும், பிரமிப்பாவும் இருக்கே... பயப்படாம என்ன செய்ய...

    இங்கே பாருங்க... திறமைக்கு எங்கே போனாலும் மதிப்பு இருக்கு... உங்க திறமை மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது... எவ்வளவு பெரிய இடத்துக்குப் போனாலும்... உனக்கு வேலை தெரியும்மான்னு பார்ப்பாங்க... வேலை தெரிஞ்சா எடுத்துப்பாங்க... அவ்வளவுதான்... கல்லூரி படிப்பை முடிச்சிருக்கீங்க... உங்களுக்கு என்ன குறைச்சல்...?

    ஒரு வேதனையான புன்னகையை அவளுக்குக் கொடுத்தான் சிவசுப்பிரமணியன்,

    அதைக் கவனித்தவளாய் கேட்டாள் மேகலா.

    ஏன் சிரிக்கறீங்க...?

    திறமை மட்டும் இருந்தாப் போதும்ன்னு சொல்றியா...?

    ஆமா அதில் என்ன சந்தேகம்...?

    உனக்கு ஒரு விசயம் ஞாபகம் இருக்கா...?

    என்னது...?

    இது நீ என்னைக் கூட்டிக்கிட்டு படியேறுற நாலாவது கம்பெனி...

    ஆமா... அதுக்கென்ன இப்போ...?

    திறமையை மட்டுமே மதிச்சு வேலை கொடுப்பாங்கன்னா... முதல் முதலா போன இடத்திலேயே எனக்கு வேலை கிடைச்சிருக்கணும் இல்லையா...?

    ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நினைப்பா... நாம் போய்க் கேட்ட இடங்களில் வேலை காலி இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்த வேலை உங்களுக்கு பொருத்தமானதா இல்லாமல் இருந்திருக்கலாம்...

    நான் பொருத்தமான வேலை கேட்டேனா...? ஏதோ ஒரு வேலைதானே கேட்கிறேன்...

    ஏதோ ஒரு வேலைங்கறதெல்லாம் சரிப்பட்டு வராது... உங்க படிப்புக்கும் திறமைக்கும் தீனி போடற மாதிரி இருக்கணும். அப்போ தான் தொடர்ந்து உங்களால் அந்த வேலையைச் செய்ய முடியும். எந்த வேலையும் கிடைக்கலைங்கற ஆதங்கத்தில் ஏதோ ஒரு வேலையில் சேர்த்துட்டா பின்னாடி நீங்க வருத்தப்படுவீங்க...

    அவள் சொன்ன விநாடி - வரவேற்புப் பெண் மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.

    மிஸ். மேகலா...

    எஸ்...

    எம்.டி. உங்களுக்காக காத்திருக்கிறார்...

    நன்றி...

    சொல்லிவிட்டு எழுந்தாள். சிவசுப்பிரமணியனிடம் திரும்பி, வாங்க... போகலாம்... என்று சொன்னபடியே நடக்க ஆரம்பித்தாள்.

    சிவசுப்பிரமணியன் அவளோடு இணைந்து கொண்டான்.

    வளவளப்பான டைல்கள் இருவரின் பிம்பங்களும் பிரதிபலித்தன.

    நடக்க நடக்க சிவசுப்பிரமணியன் கேட்டான்.

    எம்.டி. டைப் எப்படி...?

    நல்ல டைப்தான்...

    உன்னை அவருக்கு பர்சனலா தெரியுமா...?

    தெரியும்...

    அவன் அவளைக் கேள்விக்குறியோடு பார்த்தான்.

    குருப் கன்சர்ன் அத்தனைக்கும் அவர்தானே எம்.டி...?

    ஆமா...

    ஆயிரக்கணக்கானவங்க வேலை பார்க்கிறாங்க... அவரை அடிக்கடி மீட் பண்ணி பேசற அளவுக்கு நீ பெரிய ஆபீசர் இல்லை. அப்படியிருக்க உன்னை அவருக்கு எப்படி பர்சனலா தெரியும்...?

    அவன் கேட்டதும் பஞ்சு மிட்டாய் நிறத்தில் ஈறுகள் தெரியச் சிரித்தாள் மேகலா.

    குறுக்கு விசாரணை பண்ற வக்கீல் மாதிரி கரெக்டா பாயிண்ட்டைப் பிடிக்கறீங்க...

    சிவசுப்பிரமணியன் முகத்தில் லேசாகப் பதட்டம் காட்டி அவசரமாய் மறுத்தான்.

    சேச்சே என்னைத் தப்பா நினைச்சிக்க வேண்டாம் மேகலா. நான் ஆச்சரியப்பட்டு கேக்கறேன்...

    மனசில் பட்டதைப் பளிச்சின்னு நீங்க கேட்டது எனக்குப் பிடிச்சிருக்கு... சொன்னவள் தொடர்ந்து வார்த்தைகளை வெளியிட்டாள்.

    "எம்.டி. கிட்டே அறிமுகம் பண்ணிக்கக்கூடிய வாய்ப்பு ரெண்டு மாசத்துக்கு முன்னால் தான் எனக்குக் கிடைச்சது. அவரோட பர்சனல் செக்ரட்டரி அத்தியாவசியமான காரணத்துக்காக திடீர்ன்னு ஒரு வாரத்துக்கு மேல லீவ் எடுத்துட்டாங்க... மேனேஜர் அந்த இடத்துக்கு என்னை மாற்றினார். ஒரு வாரம் நான் தான் அவருக்கு பர்சனல் செக்ரட்டரி... என்னோட வேலை எம்.டி.க்கு பிடிச்சது... ரொம்பப் பாராட்டினார். ஏதாவது உதவி தேவைப்பட்டா

    Enjoying the preview?
    Page 1 of 1