Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha Sandhirane Saatchi
Antha Sandhirane Saatchi
Antha Sandhirane Saatchi
Ebook73 pages42 minutes

Antha Sandhirane Saatchi

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466824
Antha Sandhirane Saatchi

Read more from Rajeshkumar

Related to Antha Sandhirane Saatchi

Related ebooks

Related categories

Reviews for Antha Sandhirane Saatchi

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha Sandhirane Saatchi - Rajeshkumar

    1

    அந்த வியாழக்கிழமை சாயங்காலத்தின் கடைசி நிமிஷங்களில் பாக்கி இருந்த பத்து சதவீத வெளிச்சமும் நிதானமாய் இருட்டுக்குள் கரைந்து கொண்டிருந்தது. குன்னூரின் பச்சைப் பசேல் தேயிலை எஸ்டேட்களின் மேலே ஓடிய பாஸிட்டிவ் பொலாரிட்டி மேகங்கள் ஜிலீரிடும் நீரைச் சிதைத்து சின்னத் தூறல்களாய்த் தெளித்துவிட்டன.

    வாக்கிங்கை முடித்துக்கொண்டு திரும்பும் வித்யாசாகரை குளிரைத் தடவிக் கொண்ட காற்று குத்தூசி முனைகளாய் மாறி மைனஸ் டிகிரிகளில் தாக்க வித்யசாகர் அணிந்திருந்த ஸ்வெட்டரின் ஜிப்பை பரிபூரணமாய் இழுத்து விட்டுக் கொண்டார். நடையில் கொஞ்சம் வேகம் கொடுத்து, கால்களையும் வாக்கிங் ஸ்டிக்கையும் எட்டி வைத்தார். அந்த மேட்டுப் பகுதியிலிருந்த பங்களாவை ஐம்பதடியில் சமீபிக்க ஓட்டத்தையும் கலந்து கொண்டார்.

    போர்டிகோவைத் தொடுவதற்குள் அவரைப் பற்றி சில வரிகள்...

    போர்த்தியிருந்த சாம்பல் நிற சால்வையைத் தலையில் போட்டுக்கொண்டு தன் கனத்த சரீரம் குலுங்க, மூச்சு வாங்க ஓடும் ஐம்பத்தியொரு வயது வித்யசாகர்... அந்தப் பிராந்தியத்தில் நாலைந்து தேயிலை எஸ்டேட்களை வளைத்துப் போட்டிருப்பவர். தொடர்ந்து மேலும் வளைத்துப்போடும் முனைப்பில் இருந்த வித்யாசாகர் வயதாகிவிட்டது என்பதாலோ - சேர்த்த சொத்து போதுமென்று சோர்ந்துவிட்டதாலோ- போன வருடத்திலிருந்து விஸ்கரிப்பு முயற்சியைக் கைவிட்டுவிட்டார். எண்பது சதவித வழுக்கையைத் தலையில் வாங்கியிருக்கும் வித்யாசாகரைப் பிடித்த நிறம் எது எனக்கேட்டால் ‘தேயிலைப்பச்சை’ என்பார். பிடித்த நபர் யாரென்று கேட்டால் பளிச்சென்று ‘சுபலேகா’ என்பார். கொஞ்ச நாள் முன்னால நடந்த எலெக்ஷனில் வாக்குரிமை இருந்தும் நிலை நாட்டாத சுபலேகா வித்யாசாகரின் ஒரே... (வேண்டாம் அந்த அழகான சுபலேகாவை அடுத்த அத்தியாத்தில் பார்த்துக்கொள்வோமே)

    போர்டிகோவிற்குள் காலை வைத்ததும், ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு மூச்சு வாங்கினார். போர்டிகோ படிகளில் அமர்ந்து காத்து - கொண்டிருத்த சின்னசாமி அவரைப் பார்த்ததுமே - விசுக்கென எழுந்து கொண்டான். காதை மூடின குல்லாய் அவன் தலையில் அமர்ந்திருந்தது. பச்சை கட்டம்போட்ட லுங்கியும், கறுப்பு ஸ்வெட்டரும் போட்டிருந்த சின்னசாமிக்கு வயது முப்பத்தியெட்டு - ப்ளஸ் ஆர் மைனஸ் டூ. உப்பலான உடம்பு. அந்த பங்களாவின் வேலைக்காரன், தோட்டக்காரன், காவல்காரன், இன்னும் இதர காரன்!

    நிதானமாய்ப் படிகளை நோக்கி நடந்து வர ஆரம்பித்த வித்யாசாகரைப் பார்த்துப் பதறலோடு பேசினான்.

    அய்யா நீங்க போகும் போதே சொன்னேன்... இன்னிக்கு வானம் மப்பு போட்டிருக்கு... போகவேண்டாம்னு... கேக்காம போயிட்டு... இப்போ நனைஞ்சுட்டு வர்றீங்க.

    படியேறின வித்யாசகர் சிரித்தார்.

    நான் என்ன முழுசுமாவா நனைஞ்சிட்டேன்? ஏண்டா இப்படி கத்தறே?

    அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே - உள்ளே ஓடிப்போய் டவலோடு திரும்பி வந்தான் சின்னசாமி. அவரிடம் நீட்டினான்.

    இந்தாங்கய்யா... துவட்டுங்க.

    வாக்கிங் ஸ்டிக்கை சோபாவின் மேல் கிடத்தின வித்யாசாகர் அவன் நீட்டிய டவலை வாங்கித் துவட்ட ஆரம்பித்தார்.

    இருங்கய்யா நிமிஷத்துல காபி கொண்டாரேன்.

    சொல்லிவிட்டு சின்னசாமி நகரப் போனபோது சட்டென முகம் மாறின வித்யாசாகர் படபடப்பாய்க் கேட்டார்.

    சுபலேகா இன்னும் வரலை?

    சின்னசாமி திடும்மென அவரைப் பார்த்தான்.

    வரல்லீங்களேய்யா...

    லேசாய் கவலை தடவின முகத்தோடு, ‘மேல் ஊட்டியில லாயர் வீட்டுக்குப்போறதா சொல்லிக் காரெடுத்துகிட்டுப் போனா. சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடறேன்னு சொன்னா! இன்னுமா லாயர்கிட்ட பேசிட்டிருக்கா?’ என்றார்.

    அவஸ்தையாய் வழுக்கையைத் தடவிக்கொண்டே ஹால் கடிகாரத்தைப் பார்த்தார். ஆறு ஐம்பது.

    "வக்கீலய்யா வீட்டுக்காய்யா...? அவரு பொண்ணும் நம்ம அம்மாவும் சேர்ந்துகிட்டா அரட்டைக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1