Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malivu Vilaiyil Oru Maranam
Malivu Vilaiyil Oru Maranam
Malivu Vilaiyil Oru Maranam
Ebook85 pages50 minutes

Malivu Vilaiyil Oru Maranam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Malivu Vilaiyil Oru Maranam

Read more from Rajeshkumar

Related to Malivu Vilaiyil Oru Maranam

Related ebooks

Related categories

Reviews for Malivu Vilaiyil Oru Maranam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malivu Vilaiyil Oru Maranam - Rajeshkumar

    15

    1

    மாவட்ட வேலை. வாய்ப்பு அலுவலகம்.

    பெயிண்ட் உதிர்த்த போர்டு. கோபி கரைந்த சுவர்கள். அந்த நாளின் காலை பதினோரு மணி. நாட்டின் எதிர்காலங்கள் நிறைய பேர், முகத்தில் அவநம்பிக்கையோடு அந்த அலுவலக கட்டிட வராந்தா முழுக்க சிதறியிருந்தார்கள். இன் செய்திருந்த, டீ சர்ட் போட்டிருந்த, ஜீன்ஸுக்குள் பதுங்கியிருந்த இளவட்ட பட்டதாரிகள் காம்பவுண்ட் சுவர்களில் வானரங்களாகி தலைக்கு மேலே புகை கிளப்பிக் கொண்டு எண் - புதுப்பித்தலுக்காகக் காத்திருந்தார்கள்.

    இந்த நாவலைப் படிக்கிற இந்த நிமிஷம் –

    நமக்குத் தேவையான நபர் –

    ராஜாமணி.

    ராஜாமணி தளர்வு நடையில் அலுவலகக் கட்டிடத்தை விட்டு வெளிப்பட்டுக் கொண்டிருந்தான். பிரவுன் நிற காட்டன் பேண்ட்டிலும் வரி போட்ட சட்டையிலும் வசதிக் குறைவாய் தெரிந்தான். கொஞ்சம் உயரப் பற்றாக்குறை. எண்பதில் ப்ளஸ் டூ முடித்துவிட்டு மேலே படிக்க வைக்க ஆசைப்பட்ட அப்பாவின் ஆசையில் நிறைய மண்ணைப் போட்டு - ‘ஒரு உருப்படியான வேலையிலாவது சேருடா’ என்ற அவரின் அறிவுரையையும் அலட்சியப்படுத்திவிட்டு மனம் போனபடி ஊர் சுற்றிக் கொண்டிருந்த ராஜாமணி போன வாரத்தின் ஒரு நாளில் திடீரென்று ‘ஹார்ட் அட்டாக்’கில் அப்பா கண்மூடின விநாடிதான் தனக்கென்று இந்த உலகத்தில் யாருமே கிடையாது என்கிற ஞானக்கண் திறந்தது.

    விளைவு -

    அப்பாவின் விடாப்பிடியான வற்புறுத்தலினால் ப்ளஸ் டூ முடித்த கையோடு வந்து வேலை வாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்து விட்டுப் போனது ஞாபகம் வர - இன்று இங்கே வந்திருந்தான்.

    யாரிடம் போய்க் கேட்டாலும் எரிச்சலான - ஏளனமான பதில். வாய்யா - போய்யா என்கிற மாதிரி மரியாதைக் குறைவான வார்த்தைப் பிரயோகங்கள்.

    சீனியாரிடி பிரகாரம்தான் வரும். இன்னும் ஒரு வருஷம் ஆகும்.

    ஸார்... ப்ளீஸ், எப்படியாவது இன்ட்டர்வியூ கார்டு அனுப்ப ஏற்பாடு பண்ணுங்க ஸார். எந்த வேலை செய்யறதுக்கும் நான் தயார் ஸார்.

    இப்படி தினம் ஆயிரம் பேர் வந்து அழுதுட்டுப் போறாங்க. எல்லாருக்குமே கார்டு அனுப்ப முடியுமா? போய்யா... சீனியார்டி பிரகாரம்தான் கார்டு வரும்.

    ஸார்... ப்ளீஸ்...

    அவன் சீறினான். ஏய்யா, பஸ்ஸ்டாண்ட் பிச்சைக்காரன் மாதிரி கெஞ்சிக்கிட்டு நிக்கறே? காலையில நாங்க வேற வேலை பார்க்க வேண்டாமா? மொதல்ல இடத்தைக் காலி பண்ணுய்யா. பெரிய ரோதனையாப் போச்சு.

    ராஜாமணி அவனையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு -

    அலுவலகக் கட்டிடத்தைவிட்டு வெளியே வந்தான்.

    தனக்கு வேலை கொடுக்காத கவர்மெண்ட்டைத் திட்டிக் கொண்டே நடந்தவனின் கண்ணில் எதிர் வரிசையிலிருந்த டீக்கடை பட -

    டீ குடிக்கும் ஆசை நாக்கில் ஊறியது. பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு தன் பொருளாதார நிலைமையை அலசினான்.

    வெளியே கையை எடுத்தபோது -

    கையில் ஒரே ஒரு ரூபாய் நாணயம் வெய்யிலில் மின்னியது.

    இப்போதைக்கு அவனுடைய பேங்க் பாலன்ஸ் சொத்து நிலவரம் ஒரு ரூபாய் மட்டும்தான்.

    கையிலிருந்த ஒரு ரூபாயை பார்த்துக் கொண்டே - டீ குடிக்கிற ஆசையைக் கைவிட்டான். இந்த நேரத்துக்கு டீ குடிப்பது அநாவசியம் என்பது போல் ஓர் எண்ணம். மத்தியானம் கண்டிப்பாய் பசிக்கும். அப்படிப் பசிக்கிற நேரத்துக்கு ஒரு டீயைக் குடித்து வயிற்றை தாஜா செய்து வைக்கலாம்.

    ரோட்டைக் கடந்து எதிர்ப்புற பிளாட்பாரத்துக்கு வந்தான் ராஜாமணி.

    மனசுக்குள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் - அடி வயிற்றில் ஒரு பனிக்கட்டியின் ஜில்லிப்போடு உட்கார்ந்திருந்தது.

    ‘அப்பாவின் பேச்சை அப்போதே ஒழுங்காய் கேட்டிருக்கலாம். கிழவனுக்கு வேற வேலை இல்லை என்று திட்டினோம். ப்ளஸ்டூவை ஒழுங்காய் படித்து நல்ல மார்க் எடுத்திருந்தால் - காலேஜில் நுழைந்திருக்கலாம். முன் பெஞ்ச் ராஜலட்சுமியைப் பார்த்துக் கொண்டே படிப்பை கோட்டை விட்டாயிற்று!

    புத்தி சொன்ன ஹெட்மாஸ்டரை ‘மாங்காய் மண்டை’ என்று திட்டினது எவ்வளவு

    Enjoying the preview?
    Page 1 of 1