Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Angey... Inkey... Enkey?
Angey... Inkey... Enkey?
Angey... Inkey... Enkey?
Ebook191 pages1 hour

Angey... Inkey... Enkey?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Angey... Inkey... Enkey?

Read more from Rajeshkumar

Related to Angey... Inkey... Enkey?

Related ebooks

Related categories

Reviews for Angey... Inkey... Enkey?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Angey... Inkey... Enkey? - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சியை ஒரு ஆக்க சக்தியாக மாற்றிய ‘நாசா’ உருவான வருடம் - 1958.

    1

    அந்த அதிகாலைவேளையில் மேஜை விளக்கை உயர்ப்பித்துக் கொண்டு அந்த அழகான இளைஞன் கம்ப்யூட்டரில் தமிழ் சாஃப்ட்வேர் உதவியோடு ஒரு கடிதத்தை டைப் செய்து கொண்டு இருந்தான்.

    என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மாவுக்கும் அப்பாவுக்கும்,

    உங்கள் மகன் கோகுலனின் கடைசி வணக்கம். இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். என்னுடைய பிரிவை உங்களால் தாங்க முடியாது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் இப்போது இருக்கும் நிலைமையில் மரணம் என்கிற ஒரு விஷயம்தான் எனக்கு நல்ல தீர்வாய் இருக்க முடியும். நான் உங்களுக்கு ஒரே மகன். நீங்கள் கோடி கோடியாய் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்கு நான் ஒரே ஒரு வாரிசு. எந்தப் பிரச்னையும் இல்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் பணம் ஒன்று மட்டும் வாழ்க்கை இல்லையே! அதைக் காட்டிலும் வேறு ஒரு விஷயம் எனக்கு விலை உயர்ந்ததாய் தோன்றியது. அதுதான் என்னுடைய வாழ்க்கை என்று நினைத்து ஒவ்வொரு விநாடியும் வாழ ஆரம்பித்தேன். அந்த வாழ்க்கை எனக்கு நிரந்தரமாய் கிடைக்கும் என்று நினைத்தேன். அது வீணாய் போயிற்று. அந்த விஷயம் எதுவாக இருக்கும் என்று இந்நேரம் நீங்கள் ஊகம் செய்து இருப்பீர்கள். உங்கள் ஊகம் சரிதான்! நான் ஒரு பெண்ணை உயிர்க்கு உயிராய் காதலித்தேன். அவளும் என்னைக் காதலித்தாள். இருவரும் சரியான தருணம் பார்த்து விஷயத்தை வீட்டிலே சொல்லலாம் என்று நினைத்து இருந்தோம். ஆனால் அதற்குள் அவளுடைய அப்பா வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு செய்து விட்டார். நான் அவளுடைய அப்பாவை சந்தித்து எங்கள் காதல் விவகாரத்தை சொல்ல நினைத்தேன். என் அன்புக்குரியவள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘அப்பாவுக்கு இப்போது விஷயம் தெரிந்தால் ஒரு ருத்ரதாண்டவமே ஆடி விடுவார். எங்களுடைய குடும்ப மானம் வீட்டுக்குள்ளிருந்து வீதிக்கு வந்து சந்தி சிரித்து விடும். எனவே என்னை நீ மறந்து விடு!’ என்று சொல்லி - இந்த காதல் விவகாரம் வெளியே யார்க்கும் தெரியக்கூடாது என்று சொல்லி சத்தியமும் வாங்கிக் கொண்டாள். என் பிரியத்துக்குரியவளின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. உன்னைப் பற்றிய விபரங்கள் வெளியே யார்க்கும் தெரியாதபடி நான் நடந்து கொள்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ஒரு ‘பை’ சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. செல்ஃபோனில் பேசவும் முயற்சி செய்யவில்லை. அவள் வேறு ஒரு வாழ்க்கைக்கு தயாராகிவிட்டாள். ஆனால் என்னால் அப்படி தயாராக முடியவில்லை. நான் நினைவோடு இருக்கிற ஒவ்வொரு விநாடியும் அவளுடைய ஞாபகம் தான் எனக்கு. என்னை மறந்து நான் தூங்கினாலும் கனவிலும் வந்து என்னை ரணமாக்கினாள். இந்த அவஸ்தையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த வலியோடு நான் இந்த உலகில் வாழ விரும்பவில்லை.

    இன்று அவளுக்குத் திருமணம். முகூர்த்தம் காலை 9 மணியிலிருந்து 9 1/2 மணிக்குள். அவளுடைய கழுத்தில் தாலி ஏறும் முன்பே நான் இந்த உலகத்தை விட்டு போய்விட முடிவு செய்து விட்டேன். நான் இப்படியொரு முடிவு எடுத்தது மற்றவர்களின் பார்வைக்குத் தப்பாக தெரியலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் இதுதான் சரியான முடிவு. சந்தோஷமான முடிவு.

    காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். என்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த வேண்டாம். அதே போல் நான் காதலித்த பெண் யார் என்று தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.

    அம்மா! அப்பா!

    மீண்டும் என்னை மன்னியுங்கள். நான் உங்களிடமிருந்தும் இந்த உலகத்திடம் இருந்தும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

    இப்படிக்கு,

    உங்களுக்கு மகனாக வாழக் கொடுத்து வைக்காத

    கோகுல்.

    லெட்டரை கம்ப்யூட்டரில் டைப் அடித்து முடித்தவன் அதை பிரிண்ட்டர்க்கு கொடுத்து காப்பி எடுத்துக் கொண்டான். பிறகு கம்ப்யூட்டரில் டைப் செய்திருந்ததை டெலிட் ஆப்ஷனுக்கு போய் டெலிட் செய்தான்.

    ஜன்னலுக்கு வெளியே பறவைகளின் சத்தம் கேட்டது. சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.

    மணி 5.45.

    ‘இன்னும் சற்று நேரத்த்திற்குள் விடிந்து விடும். அம்மாவும் அப்பாவும் வாக்கிங் போக எழுந்து விடுவார்கள்.’

    ‘அவர்களுடைய பார்வையில் பட்டுவிடக்கூடாது!’

    ‘கிளம்பி விட வேண்டும்!’

    அறையினின்றும் மெல்ல வெளியே வந்தான். மாடி வராந்தாவும், ஹாலும் இருட்டில் இருக்க - படியிறங்கினான். ஹாலில் நடந்து வாசற்படி கதவின் தாழ்ப்பாளைத் திறந்தான்.

    போர்டிகோவில் நின்றிருந்த அந்த விலையுயர்ந்த இரண்டு கார்களும் வைகறையின் அந்த அரைகுறை இருட்டிலும் மினுமினுத்தன. கார்க்குப் பக்கத்தில் இருந்த அவனுடைய சேலஞ்சர் பைக்கை எடுத்துக்கொண்டான். காம்பௌண்ட் கேட் வரை தள்ளிக் கொண்டு வந்தான். கேட்டைத் திறந்துவிட்ட வாட்ச்மேன் சல்யூட் அடிக்க, அதைப் பொருட்படுத்தாமல் பைக்கை ஸ்டார்ட் செய்துகொண்டு சாலையில் பறந்தான். விடிந்தும் விடியாத நேரம். போக்குவரத்து அற்ற சாலை. பைக் ஒரு மின்னல் துணுக்காய் காற்றைக் கீறிக்கொண்டு சீறியது.

    கடற்கரை ரோட்டில் பாதி தூரம் கடந்து இருந்த போது செல்ஃபோன் அழைத்தது. பைக்கின் வேகத்தைக் குறைத்தவன், அழைப்பது யார் என்று பார்த்தான்.

    அம்மா.

    ‘பேசலாமா... வேண்டாமா..?’ என்று ஐந்து விநாடி யோசித்தவன் ஆறாவது விநாடி செல்ஃபோனை காதுக்கு பொருத்தி மெல்ல ம் என்றான்.

    மறுமுனையில் அம்மாவின் குரல் கோபத்தில் வெடித்தது.

    "என்னடா... ம்...? நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு ஃபோன் பண்ணி பேசும் போது வீட்டுக்கு ஒரு மணி நேரத்துகுள்ளே வந்துடறேன்னு சொன்னே! உன்கிட்டே மாற்றுச் சாவி இருக்கிறதால நானும் அதை நம்பினேன். ராத்திரி எத்தனை மணிக்கு வந்தே?’

    ஒரு மணிக்கு...

    ஏன்டா குரல் ஒரு மாதிரி இருக்கு?

    நேத்து பார்ட்டியில் ரெண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன். தொண்டை கட்டிடுச்சு.

    ஐஸ் க்ரீம் சாப்பிட்டியா... இல்ல ஐஸ் பீர் சாப்பிட்டியா...? வர வர உன்னோட போக்கே சரியில்லடா... எப்ப பார்த்தாலும் பார்ட்டி.. பார்ட்டி...! சரி.. ராத்திரி ஒரு மணிக்கு வந்தே...? இப்ப எங்கே கிளம்பிட்டே..?

    அது வந்து... வந்து என் ஃப்ரண்ட் ஒருத்தன் டெல்லியிலிருந்து வர்றான். அவனை ரிஸீவ் பண்றதுக்காக ஏர்போர்ட் போயிட்டிருக்கேன்.

    என்னடா இது! ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்தேன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னே...! ராத்திரி தூங்கினியா இல்லையா!

    அஞ்சு மணி வரைக்கும் தூங்கினேன்... இது போதாதா?

    நீ பேசறதைப் பார்த்தா உனக்கு உடம்பு சரியில்லையோன்னு தோணுது...!

    அதெல்லாம் ஒண்ணும் இல்லேம்மா... நான் நல்லாத்தான் இருக்கேன்...!

    சரி! நீ ஏர்போர்ட்டுக்கு போயிட்டு எப்போ திரும்பி வருவே..? எட்டு மணிக்குள்ளே வந்துடுவே இல்லையா?

    பார்க்கலாம்.

    செல்ஃபோனை அணைத்தான்.

    பைக் மறுபடியும் வேகம் பிடித்தது.

    கிழக்கு திசை மெலிதான ஆரஞ்சு நிறத்துக்கு திரும்பிக் கொண்டிருக்க - அவன் பைக்கை விரட்டினான். சென்னை நகரின் கட்டிடங்கள் பின்னால் போய்க் கொண்டிருக்க அடுத்த இருபதாவது நிமிஷம் ஈச்சம்பாக்கம் வந்தது.

    நகரின் பரபரப்பு இல்லாத அந்த புறநகர் பகுதியில் வீடுகள் தள்ளி தள்ளித் தெரிந்தன.

    பைக் இப்போது தார்ச்சாலையை விட்டு விலகி

    Enjoying the preview?
    Page 1 of 1