Yamunavin 48 mani neram
By Rajesh Kumar
()
About this ebook
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Read more from Rajesh Kumar
Karuppu Udai Devathai! Rating: 5 out of 5 stars5/5Vivek Thotrathillai Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukadhai Rating: 4 out of 5 stars4/5Puthiya Abaayam Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 4 out of 5 stars4/5Manidhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Kuttralathil Oru Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSivappai Oru Pournami Rating: 4 out of 5 stars4/5Naan Naaneythaan Rating: 4 out of 5 stars4/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Vendru Vaa Vivek Rating: 3 out of 5 stars3/5Theeratha Dhrogam Rating: 5 out of 5 stars5/5Isai Kolai Rating: 5 out of 5 stars5/5Nalliravu Seithi Rating: 4 out of 5 stars4/5Oru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Only Vivek! Rating: 5 out of 5 stars5/5Sorry Wrong Number Rating: 4 out of 5 stars4/5Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Vivek, Roopala Thuppariyum Novelgal Thoguthi 1 Rating: 4 out of 5 stars4/5Uravugal Pirivathillai Rating: 5 out of 5 stars5/5Good Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Oru Everest Thavaru! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratingsNadunishi Thendral Rating: 5 out of 5 stars5/5
Related to Yamunavin 48 mani neram
Related ebooks
Chinna Thappu Periya Thappu Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Vithi Puthithu Rating: 5 out of 5 stars5/5Sila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsVeebareethaththirku Oru Visa! Rating: 5 out of 5 stars5/5Oru Maalainera Maranam Rating: 0 out of 5 stars0 ratingsOnpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsOru Gram Drogam Rating: 2 out of 5 stars2/5Miss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsOru Mazhai Naalil Rating: 5 out of 5 stars5/5Thalaiyuthir Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Minnal Rating: 0 out of 5 stars0 ratingsThapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5January Iravugal Rating: 2 out of 5 stars2/5Vanakkathukkuriya Kutram Rating: 5 out of 5 stars5/5Kannimaika Neramillai! Rating: 5 out of 5 stars5/5Thee... Deepa... Deepavali Rating: 5 out of 5 stars5/5Yaaro Paarkirargal Rating: 5 out of 5 stars5/5Piragu Naan Kondren Rating: 4 out of 5 stars4/5Rajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsVilagum Thiraigal Rating: 5 out of 5 stars5/5Karaikku Varatha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Naane Pagaiyaanen and Maranam Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsReadymade Sorkkam Rating: 5 out of 5 stars5/5Pesum Rojakkal! Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsNishaa… Nishaa Odi Vaa…! Rating: 4 out of 5 stars4/5Yarum Paarkkatha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsMul Munaiyil Mukilaa Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Yamunavin 48 mani neram
0 ratings0 reviews
Book preview
Yamunavin 48 mani neram - Rajesh Kumar
http://www.pustaka.co.in
யமுனாவின் 48 மணி நேரம்
Yamunavin 48 Mani Neram
Author:
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
மழை லேசாய்ப் பெய்து கொண்டிருந்தது. ஓர் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வியாழக் கிழமையின் நள்ளிரவில் இந்தத் தொடர்கதை ஆரம்பமாகிறது. நேரம் உத்தேசமாய் 12.45.
கற்பகம் சினி காம்ப்ளக்ஸ் கங்கா தியேட்டரில் செகண்ட் ஷோவை முடித்துக் கொண்ட ஜனங்கள் தூங்கப் போகிற அவசரத்தில் வெளியே வந்து மழையைப் பார்த்ததும் கும்பல் கும்பலாய் வராந்தாவில் தேங்கினார்கள். சிலர் கைநீட்டி மழையின் பலத்தைப் பரிசோதித்து, அது பலவீனம் என்று தெரிந்ததும் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்புக்களை எடுத்து உச்சந்தலையில் போட்டுக் கொண்டு கீழே இறங்கினார்கள்.
கண்டிப்பா மழை வரும். செகண்ட் ஷோ வேண்டாம். நாளைக்கு ஃபர்ஸ்ட் ஷோ போலாம்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். நீ கேட்கலை. இப்பப் பார்... மழை நைநைன்னு பெய்யுது.
ஏதோ ஓர் எரிச்சலில் ஒரு வழுக்கைத் தலைக் கணவன் மரப்பாச்சி மாதிரி நின்றிருந்த தன்னுடைய மனைவியைப் பார்த்து இங்கிதமில்லாமல் கத்தினான்.
இப்போ மழை விட்டுடும்
என்று அவள் அலட்சியமாய்ச் சொன்னாள்.
இது விடற மழையா எனக்குத் தெரியலை. உங்கம்மா பேச்சு மாதிரி இதுவும் ஓயாமே கொட்டத்தான் போகுது. மேலே ஆகாயத்தைப் பார்த்தியா? உங்கப்பன் கம்பளியைப் போர்த்திக்கிட்டு உட்கார்ந்திருக்கிற மாதிரி கருமென்று இருக்கு.
எங்க அப்பா அம்மாவை எதுக்காக இழுக்கறீங்க? வளவளன்னு பேசிட்டிருக்காமே ஆட்டோ ஒண்ணைப் பிடிங்க.
அவள் சன்னமாய் கர்ஜிக்க, வழுக்கைத் தலையன் எரிச்சலோடு ஓர் ஆட்டோவை நோக்கிப் போனான்.
வராந்தாவில் ஓரமாய் நின்றிருந்த யமுனாவும், சுவர்ணாவும் பீறிட்டு வந்த சிரிப்பைப் புறங்கையால் அடக்க முயன்று முடியாமல் சிரித்தார்கள்.
படத்துல வர்ற வசனத்தை விட இது நல்லாயிருக்கு. இல்லையா யமுனா?
சுவர்ணா சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள்.
யமுனா தன் முகத்திலிருந்த சிரிப்பை அழித்து விட்டுக் கொஞ்சம் பதட்டமாய்ச் சொன்னாள். சுவர்ணா! மழை லேசா வேகமெடுக்குது பார். கும்பல் பூராவும் கரைஞ்சிட்டிருக்கு. நாம்பளும் ஏதாவது ஆட்டோவைப் புடிச்சு ஹாஸ்டலுக்குப் போய் விழுந்துட வேண்டியதுதான்...
சரி, இறங்கலாமா?
ம்...
வராந்தாவின் படிகளில் இறங்கி மழையை ஜில்லென்று ஸ்பரிசித்து வரிசையாய் நின்றிருந்த ஆட்டோக்களை நோக்கி நடந்தார்கள். அவர்கள் ஆட்டோவைப் பிடிப்பதற்குள் வாசகர்களுக்கு ஒரு வர்ணனை.
யமுனா 1966ல் மே மாதத்தின் மத்தியில் ஜனித்தவள். வயதைக் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வயது இனிக்கும். செம்பொன் நிறம். வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக் குளித்து ஈரம் உலர்ந்தும் உலராமல் தலையைப் பின்னி நெற்றியில் புள்ளியாய்த் தெரிகிற செஞ்சாந்துப் பொட்டோடும், ரோஜாப் பூவோடும் அவள் ஆபீஸ் போனால் - அன்றைக்குக் காலை அந்த ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். தேன் நிறக் கண்களும், எப்போதுமே ஈரக் கோட்டிங்கோடு வரைந்த மாதிரியான உதடுகளும் பிரும்மாவின் நேரடிப் பார்வையில் ஸ்பெஷலாய் உருவானவை. அவள் சிரிக்கும்போது எந்தப் புதுக் கவிஞனாவது பார்த்தால் 'அட மின்னல்’ என்று ஒற்றை வரியில் கவிதை எழுதுவான்.
யமுனாவின் உத்தியோகம்? ஒரு ரிசப்ஷனிஸ்ட். கார்த்திகா காஸ்மெடிக்ஸ் கம்பெனியில் நல்ல சம்பளத்தில், வருபவர்களுக்கு 'ஹலோ' சொல்லிப் பல் வரிசை தெரியாமல் புன்னகைப்பாள். தவறான பார்வையோடு வரும் ஆண்களைச் சுலபமாய்க் கண்டுபிடித்து விடுவாள்.
இப்போதைக்கு யமுனாவைப் பற்றி இவ்வளவு விஷயங்கள் போதும்.
அடுத்தபடியாக சுவர்ணா
சென்ற வாரம் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவள் பஸ்ஸுக்காகக் காத்திருந்தபோது நான்கைந்து கல்லூரி மாணவர்கள் அவளுக்கு மார்க் போட்டபோது, அவள் நாற்பது மார்க் வாங்கி அழகில் பாஸ் செய்திருந்தாள். இந்தி எதிர்ப்புப் போராட்ட வருஷத்தில் பிறந்தவள். உள்ளூர் கான்வென்ட் ஒன்றில் உபாத்தியாயினி. எல்.கே.ஜி. பிள்ளைகளோடு சேர்ந்து 'பா... பா பிளாக்ஷிப்' என்று கத்துபவள், சொந்த ஊர்? பாரதியார் பிறந்த ஊர். உத்தியோகத்திற்காக அப்பா அம்மாவை விட்டு இந்த ஊருக்கு வந்திருப்பவள். இந்த ஆறு மாசமாய்த் தான் கல்யாண ஆசை வந்து நகத்தைக் கடித்துச் சுவரை வெறிக்கிறாள்.
பெய்த மழையில் இருவரும் லேசாய் நனைந்து ஆட்டோவை நெருங்கினார்கள். ஆட்டோ டிரைவர் பாலிதீன் பேப்பரை உடம்பு பூராவும் சுற்றிக் கொண்டு பீடி நனையாமல் புகையை உறிஞ்சினான்.
எங்கேம்மா போகணும்?
சாரதாமணி ஹாஸ்டல்...
மீட்டர் போட மாட்டேன். எட்டு ரூபா ஆவும்.
ரொம்ப அதிகம் யமுனா... வா அடுத்த ஆட்டோவைப் பார்க்கலாம்...
நகர்ந்தார்கள். அடுத்த ஆட்டோ டிரைவர் ஒன்பது ரூபாய் கேட்க மேற்கொண்டு நகர்ந்தார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்த கும்பல் கிடைத்த ஆட்டோக்களில் ஏறிக் கரைந்து கொண்டிருந்தார்கள்.
யமுனா கவலையான குரலில் சொன்னாள்.
சுவர்ணா! இந்த நேரத்துல் பணத்தைப் பார்த்துட்டிருக்க வேண்டாம். மழை பலமா வரும் போலிருக்கு. பேசாம அவன் கேட்டதைக் கொடுத்துட்டு ஹாஸ்டல் போய்ச் சேருவோம்...
நீ பேசாழி வா யமுனா... நாலு ரூபாய்க்கு நான் உனக்கு ஆட்டோ பிடிச்சுத் தர்றேன். மழை கொஞ்சம் பேஞ்சாப் போதுமே!
சுவர்ணா பேசிக் கொண்டே ஒவ்வொரு ஆட்டோவாய் நகர்ந்தாள்.
மழை பேய்கிற சதவிகிதத்தை அதிகமாக்கியது.
நின்றிருந்த ஆட்டோக்களில் ஜனங்கள் இரண்டிரண்டு பேராய் பதுங்கிக் கொள்ள, நிமிஷ நேரத்தில் ஆட்டோ வரிசை காணாமல் போனது. தியேட்டரும் அந்த ராஜேந்திர பிரசாத் ரோடும் வெறிச்சிட்டுப் போக ஆரம்பித்தன. யமுனாவும், சுவர்ணாவும் தெப்பலாய் நனைந்து சுற்றும் முற்றும் பார்த்தார்கள். யமுனா சுவர்ணாவின் மேல் எரிந்து விழுந்தாள்.
காசைப் பெரிசா நினைச்சே, இப்பப் பார் அல்லாடறோம்...
ஸாரி யமுனா.
இப்ப என்ன பண்றது?
வா, அந்தக் கார்னர் வரைக்கும் நடந்து போகலாம். அங்கே நிச்சயமா ஆட்டோ கிடைக்கும். எத்தனை ரூபா சொன்னாலும் ஏறிப் போயிடலாம் வா...
நடந்தார்கள்.
ஒரு பத்தடி நடந்திருப்பார்கள்.
எதிரில் ஓர் ஆட்டோ காலியாய் வந்தது.
சுவர்ணா அந்த ஆட்டோவை நிறுத்து...
யமுனா கத்தினாள்.
சுவர்ணா கையைக் காட்ட, ஆட்டோ மழை நீரை வாரியிறைத்துக் கொண்டு வேகமாய்த் திரும்பி நின்றது. ஆட்டோவில் ஒரு கிழவன் குச்சியாய் மெலிந்திருந்தான். ஓர் ஆஸ்துமா இருமல் இருமி விட்டுக் கேட்டான். எங்கேம்மா போகணும்?
சாரதாமணி ஹாஸ்டல்...
கிழவன் இடம் தெரியாமல் விழித்தான்.
யமுனா சொன்னாள். கணபதி தாண்டி ஜெம் நகர்ல அந்த ஹாஸ்டல் இருக்கு
வேலைக்குப் போற பொண்ணுங்களெல்லாம் தங்கியிருக்குமே. அந்தக் கட்டிடமாம்மா?
அதேதான்!
ஏழு ரூபாயாகும்மா...
வாங்கிக்க.
யமுனா சொல்லிக் கொண்டே உள்ளே போக - சுவர்ணா நெருக்கிக் கொண்டு உட்கார்ந்தாள். மழை வெளியே இன்னமும் கோடு கோடாய் இறங்கிக் கொண்டிருந்தது. தெரு விளக்குகள் மழைக்குப் பயந்து கண்களை மூடிக் கொள்ள தெருவில் இருள் கொட்டியிருந்தது. தெரு முனையில் சாராயக் கடையில் மட்டும் பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒன்று வெளிச்சத்தைத் துப்பிக் கொண்டிருக்க, இரண்டு பேர் குடித்துவிட்டு மழலை மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆட்டோ கிளம்பியது.
பெரியவரே! கொஞ்சம் சீக்கிரமாப் போகணும்
சுவர்ணா ஆட்டோ கிழவனுக்குப் பெரியவர் பட்டம் கொடுத்துப் பேச, அவன் உற்சாகமாய் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.
அவ சொல்றாளேன்னு ஆட்டோவைப் பறக்கடிக்காதீங்க... கொஞ்சம் நிதானமாவே போங்க... அவசரமில்லை.
யமுனா சொல்லிவிட்டு சீட்டின் பின்னுக்கு நன்றாகச் சாய்ந்து கொண்டாள்.
ரோட்டில் தேங்கியிருந்த நீரைச் சிர்ரென்று சீய்த்துக் கொண்டு ஆட்டோ ஓடித் தெருமுனையில் திரும்பிக் கணபதி போகும்