Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thee... Deepa... Deepavali
Thee... Deepa... Deepavali
Thee... Deepa... Deepavali
Ebook102 pages51 minutes

Thee... Deepa... Deepavali

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580100400424
Thee... Deepa... Deepavali

Read more from Rajesh Kumar

Related to Thee... Deepa... Deepavali

Related ebooks

Reviews for Thee... Deepa... Deepavali

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thee... Deepa... Deepavali - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    தீ தீபா தீபாவளி!

    Thee Deepa Deepavali!

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    ‘இன்று வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஓரளவு வறண்ட நிலையே காணப்படும். சென்னையிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் வெய்யில் கடுமையாக இருக்கும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று டி.வி.யில் சொன்ன வானிலை அறிக்கையை ஏமாற்றிவிட்டு சென்னையைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது மழை.

    ரோட்டின் ஓரத்தில் ஸ்கூட்டர் நனைந்து கொண்டிருக்க, ஹரிணி ஒரு பேக்கரியின் கடை வாசலில் பாலிதீன் தடுப்புக்குக்கீழே ஒண்டியிருந்தாள். மழை இப்போ நிக்கிற மாதிரியில்லை. உள்ளே வந்து அந்த ஸ்டூல்ல உட்கார்ங்கம்மா என்று பேக்கரி ஆள் சொல்லியும் பரவாயில்லை…! நான் இங்கேயே நிக்கறேன்…! என்று சொல்லிக் கொண்டே மழை நிற்கப் போகிற நிமிஷத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் ஹரிணி. ஆனால் மழையோ கொஞ்சம்கூட வேகத்தைக் குறைத்துக் கொள்ளாமல் உச்ச ஸ்தாயியிலேயே இருந்தது. ஹரிணி வாட்ச்சில் நேரம் பார்த்தாள்.

    அந்த சாயந்தரம் ஐந்து மணி ஏதோ இரவு எட்டு மணியாகிவிட்டதைப் போல் இருட்டியிருந்தது. காற்றில் குளிர் ஊசிகள்.

    ‘இன்னிக்குப் பார்த்தா இப்படி மழை பிடிக்கணும்?’

    ஹரிணி சூடாய் பெருமூச்சுவிட்டாள். ‘ஊஹ_ம்! இந்த மழை இப்போதைக்கு நிக்கிற மாதிரி தெரியலை… ஸ்கூட்டரை இங்கேயே நிறுத்திவிட்டு ஒரு ஆட்டோ பிடித்தாவது போய்விட வேண்டியதுதான்!’

    ஒரு கண்ணாடி ஜாடியிலிருந்து இன்னொரு கண்ணாடி ஜாடிக்கு பிஸ்கெட்டுகளை மாற்றிக் கொண்டிருந்த பேக்கரி ஆசாமியைத் திரும்பிப் பார்த்தாள்.

    என்னங்க…! அந்த தெருமுனையில்தானே ஆட்டோ ஸ்டாண்ட்…?

    ஆமாம்மா…

    என்னோட ஸ்கூட்டர் உங்க கடை முன்னாடியே நிக்கட்டும். நான் ஒரு ஆட்டோ பிடிச்சு… போக வேண்டிய இடத்துக்கு போய்ட்டு வந்து அப்புறமா ஸ்கூட்டரை எடுத்துக்கிறேன்…

    இந்த மழையில் அந்த ஸ்டாண்ட்ல ஆட்டோ இருக்காதேம்மா…?

    ஒரு குடை இருந்தா கொடுங்களேன்… எதுக்கும் நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்…

    ஏம்மா… அவசரமா போகணுமா…?

    இல்லேன்னா சொல்லுவேனா…?

    டேய்… சுப்ரமணி…! பேக்கரி ஆள் உட்பக்கம் பார்த்து குரல் கொடுக்க, பதினாறு வயது சிறுவன் ஒருவன் எட்டிப் பார்த்தான்.

    என்ன மாமா…?

    அந்தக் குடையைக் கொண்டு வந்து கொடுடா…! அம்மாவுக்கு ஆட்டோ ஸ்டாண்ட் வரை போகணுமாம்.

    அந்த சுப்ரமணி ஒரு குடையைக் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி விரித்துக் கொண்டு பெய்கிற மழையில் காலை வைத்தாள் ஹரிணி. குடையில் மோதிய மழைத்துளிகள் சாரலாய் எகிறி முகத்தில் அடித்தது. காற்று ஒரு சின்னக் குழந்தையாய் மாறி குடையைப் பிடித்து இழுத்தது. மழைத் தண்ணீர் காலை ஜில்லென்னு நனைக்க, அடுத்த தெருவின் முனையில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்டை நோக்கி நடந்தாள்.

    ஆட்டோ ஸ்டாண்டில் ஒரே ஒரு ஆட்டோ மட்டும் கான்வாஸ் படுதாவோடு நின்றிருக்க உள்ளே டிரைவர் சிகரெட் புகையோடு லுங்கியைப் போர்த்திக் கொண்டு தெரிந்தார்.

    ஆட்டோ வருமா…?

    எங்கே போகணும்?

    பெசன்ட் நகர்.

    வராதும்மா…

    டிரைவர்! நீங்க கேட்கிற வாடகையைத் தர்றேன்… வண்டியை எடுங்க.

    வண்டி வராதுன்னு சொன்னா கேளும்மா…

    ரொம்பவும் அவசரம் டிரைவர்… முக்கியமான ஒருத்தரை நான் அஞ்சரை மணிக்குள்ளே பார்க்கணும்…

    இதோ பாருங்கம்மா… நான் வண்டி வராதுன்னு சொன்னதுக்கு காரணம் இருக்கு… இது பழைய என்ஜின் ஆட்டோ… மழையில் போனா பாதி வழியில் வண்டி நின்னுடும்… அப்புறம் பேஜாராப் போயிடும். வேற ஏதாவது ஒரு ஆட்டோ பிடிங்கம்மா…

    டிரைவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாலையில் தண்ணீரை இறைத்தபடி போய்க் கொண்டிருந்த கார் ஒன்று சட்டென்று வேகம் குறைந்து நின்று பிறகு பின்னோக்கி வந்தது. ஹரிணிக்கு பக்கத்தில் வந்து நின்றது. காரின் பக்கவாட்டு கண்ணாடி கீழே இறக்கப்பட்ட டிரைவிங் சீட்டில் ஸ்பெக்ஸ் அணிந்த ஒரு இளைஞன் தெரிந்தான்.

    குரல் கொடுத்தான்.

    ஹலோ…! நீங்க ஹரிணிதானே?

    ஹரிணி அந்த இளைஞனை அடையாளம் தெரியாமால் குழப்பத்தோடு பார்த்தபடி எஸ் என்றாள்.

    இந்த மழையில் எங்கே குடையும் கையுமாய்…?

    "ஒரு இடத்துக்குப் போகணும். ஆட்டோ வருமான்னு கேட்டுகிட்டு இருந்தேன்… டிரைவர் ஆட்டோ வராதுன்னு சொல்லிட்டார்.

    Enjoying the preview?
    Page 1 of 1