Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sorgathin Saavi
Sorgathin Saavi
Sorgathin Saavi
Ebook110 pages1 hour

Sorgathin Saavi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403546
Sorgathin Saavi

Read more from Rajesh Kumar

Related to Sorgathin Saavi

Related ebooks

Related categories

Reviews for Sorgathin Saavi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sorgathin Saavi - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    சொர்க்கத்தின் சாவி

    Sorgathin Saavi

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அம்மா...!

    வி.சி.டி.யில் பத்மா சுப்ரமணியத்தின் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சமுத்ரா வேலைக்காரியின் குரல் கேட்டுக் கலைந்தாள்.

    என்ன பொன்னி...?

    உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக போலீஸிலிருந்து ஒருத்தர் வந்து இருக்கார்ம்மா... பெரிசா மீசையெல்லாம் வெச்சுகிட்டு பார்க்கிறதுக்கே பயமாயிருக்கம்மா...

    சமுத்ரா வி.சி.டி.யை அணைத்து விட்டு எழுந்தாள். இருபத்து மூன்று வயது. ஒடிசலான உடம்பு வாகு. பெரிய கண்கள். அடர்த்தியான தலைமுடி. ஒற்றை ஜடையாக மாறிப் பின் பக்கம் ஒரு கறுப்பு அருவியாய் வழிந்து ரம்யமாய் அசைந்தது. சமுத்ரா கடந்த இரண்டு வருஷ காலமாய் எல்லா நாளிதழ்களிலும், டி.வி. சானல்களிலும் தன்னுடைய பரத நாட்டியத் திறமைக்காக ஒரு நிரந்தர இடம் பிடித்து இருந்தாள். சமீபத்தில் ஜனாதிபதி கையால் வாங்கிய பட்டம் 'பரத நாட்டியப் பொக்கிஷம்'. அடுத்த வருடம் கண்டிப்பாய் ஒரு 'பத்மஸ்ரீ' உண்டு என்பது கலை இலக்கிய விமர்சகர்களின் அசாத்திய நம்பிக்கை.

    சமுத்ரா தன் அறையினின்றும் வெளிப்பட்டு மாடி வராந்தாவில் நடந்து சிவப்பு கார்ப்பெட் போர்த்தியிருந்த மாடிப் படிகளில் இறங்கி ஹாலுக்குள் நுழைந்தபோது சோபாவில் அந்த போலீஸ் அதிகாரி ஒரு வார இதழைப் புரட்டியபடி தெரிந்தார்.

    சமுத்ராவைப் பார்த்ததும் புன்னகையுடன் எழுந்தார்.

    ஸாரி...! ஓய்வாக இருக்கிற நேரத்தில் வந்து உங்களுக்குத் தொல்லை கொடுத்துட்டேன்...

    சமுத்ராவும் புன்னகைத்தாள்.

    காரணம் இல்லாமே வர மாட்டீங்களே... டிபார்ட்மெண்ட் சார்பா ஏதாவது கலை நிகழ்ச்சியா?

    அதெல்லாம் இல்லை... உங்ககிட்டே ஒரு அஞ்சு நிமிஷம் தனியாப் பேசணும்...

    தாராளமாகப் பேசலாம்... இந்த பங்களாவில் என்னையும் வேலைக்காரியையும் தவிர வேறு யாரும் கிடையாது. நீங்க எதைப் பேசறதாயிருந்தாலும் இங்கேயே பேசலாம்...

    நான் அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ். என்னோட பேர் வகுளாம்பரன். உங்களைப் பார்க்கச் சொல்லி கமிஷனரோட உத்தரவு.

    உங்களுக்குச் சொந்த ஊர் கும்பகோணமா?

    ஆமா... எப்படிக் கண்டுபிடிச்சீங்க?

    நீங்க பேசற தமிழ்...! எனக்கும் பூர்வீகம் கும்பகோணம்தான்... சரி.! என்ன விஷயமா வந்திருக்கீங்க... சொல்லுங்க...

    அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் வகுளாம்பரன் தன் காக்கிச் சட்டையின் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து ஒரு கடிதக் கவரை எடுத்துச் சமுத்ராவின் கையில் கொடுத்தார்.

    இந்த லெட்டரைக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க...

    சமுத்ரா குழப்பமாய் அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தாள். கடிதம் முதல் பத்து வரிகள் உருது மொழியிலும், அதற்குக் கீழே உள்ள பத்து வரிகள் ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டு இருந்தது. சமுத்ரா ஆங்கில வாக்கியங்களைப் படித்தாள்.

    தமிழக போலீஸ் துறைக்கு எங்கள் இயக்கத்தின் சார்பாக வேண்டுகோள்கள் சில... இந்த வேண்டுகோள்கள் என்கிற வார்த்தையை நீங்கள் எச்சரிக்கைகள் என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.

    வேண்டுகோள் - 1: 'லிட்டில் டெவில்ஸ்' என்கிற எங்கள் புனித இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் சென்னை 'க்யூ பிராஞ்ச்' போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை இன்னும் 24 மணி நேரத்துக்குள் விடுதலை செய்யாவிட்டால் உங்கள் போலீஸ் துறையைச் சேர்ந்த மூணு பேர் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள். இது விளையாட்டான மிரட்டல் இல்லை. விபரீதம் வேண்டாம் என்று நினைத்தால் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்யவும்.

    வேண்டுகோள் - 2: 'லிட்டில் டெவில்ஸ்' என்கிற எங்களுடைய புனித இயக்கத்தைத் தீவிரவாதிகளின் இயக்கம் என்று போலீஸ் கமிஷனர் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த வார்த்தைகளை அவர் வாபஸ் பெறவேண்டும். இதற்கும் 24 மணி நேரக் கெடு. அவர் வாபஸ் வாங்கவில்லை என்றால் அவருடைய குடும்பம் அவர்க்காகக் கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும்.

    வேண்டுகோள் - 3: அடுத்த மாதம் பதினாலாம் தேதி பாகிஸ்தானில் கராச்சியில் இண்டர்நேஷனல் கல்சுரல் ப்ரோக்ராம் ஒன்று நடக்க உள்ளது. மொத்தம் 50 நாடுகள் பங்கு கொள்ளும் அந்த சர்வதேசக் கலை விழாவில் உங்கள் நாடான இந்தியாவும் கலந்து கொள்கிறது. பாகிஸ்தான் அரசு இதை அனுமதித்தாலும் நாங்கள் இதை அனுமதிக்கத் தயாராக இல்லை. எனவே அந்தக் கலை விழாவில் பரத நாட்டியம் ஆடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாட்டியப் பெண் சமுத்ரா கராச்சியில் காலடி எடுத்து வைக்கக்கூடாது. மீறிக் காலடி எடுத்து வைத்தால் இரண்டு கால்களையும் இழந்து, சமுத்ரா, சக்கர நாற்காலியில், ஊர் திரும்ப வேண்டியிருக்கும்.

    இப்படிக்கு

    புனித இயக்கம், லிட்டில் டெவில்ஸ்.

    லெட்டரைப் படிக்கப் படிக்கவே சமுத்ராவின் அழகான சிறிய நெற்றியில் நீர்த் திவலைகளாய் வியர்வை. உலர்ந்து போன உதடுகளோடு நிமிர்ந்த வகுளாம்பரனைப் பார்த்தாள் சமுத்ரா.

    என்ன ஸார்... இப்படி எழுதியிருக்காங்க...

    தீவிரவாதிகளோட கடிதம் இப்படித்தான் இருக்கும்...

    சமுத்ராவின் வியர்வை அதிகமாயிற்று. வகுளாம்பரன் புன்னகைத்தார். என்ன மிஸ் சமுத்ரா! பயந்துட்டீங்களா?

    பின்னே பயம் இல்லாமே இருக்குமா...? கராச்சியில் காலடி எடுத்து வெச்சா என்னோட ரெண்டு கால்களையும் இழந்து சக்கர நாற்காலியில் திரும்பி வர வேண்டியிருக்கும்னு லெட்டர் எழுதியிருக்காங்களே.

    "இது மாதிரியான லெட்டர்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு நிறைய வரும். எங்களைப்

    Enjoying the preview?
    Page 1 of 1