Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha 69 Naatkal!
Antha 69 Naatkal!
Antha 69 Naatkal!
Ebook128 pages1 hour

Antha 69 Naatkal!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. These Novel collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402157
Antha 69 Naatkal!

Read more from Rajesh Kumar

Related to Antha 69 Naatkal!

Related ebooks

Related categories

Reviews for Antha 69 Naatkal!

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha 69 Naatkal! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    அந்த 69 நாட்கள்!

    Antha 69 Naatkal!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    அந்த 69 நாட்கள்!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    ***

    1

    எங்கேயோ எப்போதோ படித்தது:

    நம்மிடம் இரண்டு செல்வங்கள் இருக்கின்றன. ஒன்று மனம்; மற்றொன்று உடம்பு. நல்ல வழியில் மனதைச் செலுத்திக் கொண்டு உடம்பையும் நோய் இல்லாமல் காப்பாற்றினால்தான், அந்த வாழ்க்கை வெற்றி மிகுந்த வாழ்க்கை.

    விடியக் காத்திருந்தது கிழக்குத் திசை.

    கோவை நகரின் காற்றில் ஓஸோன் குளிர். மரங்களில் பறவைகளின் கத்தல். எங்கோ தொலைவில் இருந்த மசூதியிலிருந்து அல்லாஹூ அக்பர்.

    கோவை ரயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பிளாட்பாரத்திற்குள் தன் நீண்ட உடம்பை நுழைத்தது சேரன் எக்ஸ்பிரஸ். 2A கம்பார்ட்மென்ட்டிலிருந்து வெங்கட் இறங்கினான். கறுப்பு பேண்ட், வெள்ளை சர்ட், பயணக் களைப்புத் துளியும் தெரியாத உற்சாக முகம். எண்ணெய் மினுமினுப்போடு சுருண்ட முடி. தன்னுடைய பெரிய ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தான்.

    கல்யாணின் முகம் கும்பலில் எங்கேயாவது தெரிகிறதாவென்று பார்வையைத் துரத்தினான்.

    கல்யாண்…?

    வெங்கட்டின் நண்பன்.

    சேரன் எக்ஸ்பிரஸ் சரியாய் ஆறு மணிக்கு வந்துடும். அதுக்கு முன்னாடியே நான் ஸ்டேஷன்ல வந்து வெயிட் பண்ணிட்டிருப்பேன்… என்று சொன்ன கல்யாணை, இப்போது ஸ்டேஷனின் எந்தத் திசையிலும் பார்க்க முடியவில்லை.

    வெங்கட், பயணிகளோடு ஒரு பயணியாய் நடந்து கொண்டே தன் செல்போனை எடுத்துக் கல்யாணின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டான். மறுமுனையில் ரிங்டோன் போய் அடுத்த பத்தாவது வினாடியில் கல்யாணின் குரல் கேட்டது.

    என்னடா… வெங்கட்… சேரன் வந்தாச்சா...?

    சேரன், சோழன், பாண்டியன் எல்லாரும் வந்தாச்சு. நீதான் வரலை…

    ஸாரிடா…!

    என்னாடா… பெரிய ஸாரி…! காலேஜ் டேஸிலிருந்தே நீ ஒரு பெரிய சோம்பேறி.

    கல்யாண் சிரித்தான்.

    இன்னும் கொஞ்ச நேரத்துல, நான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து உன்னை ரிஸீவ் பண்ணாமே இருந்ததுக்கு நீ ரொம்பவும் சந்தோஷப்படப் போறே…! எனக்கு உடனே ஒரு போன் பண்ணி ‘நன்றி நண்பா’ன்னு சொல்லப் போறே…!

    என்னடா உளர்றே…?

    நான் ஒண்ணும் உளறலை. இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்குதுன்னு பாரு...! சொல்லிவிட்டு கல்யாண் மறுமுனையில் செல்போனை அணைத்துவிட, வெங்கட் குழம்பினான். 'இந்தக் கல்யாண் என்னிக்குமே தெளிவாய்ப் பேச மாட்டான்!’

    சூட்கேஸ் ரோலரை உருட்டிக் கொண்டு ஒரு ஐம்பதடி தூரம் நடந்து இருப்பான். முதுகில் அந்தப் பெண் குரல் மோதியது.

    குட்மார்னிங் வெங்கட்…!

    சரேலென்று வெங்கட் திரும்பிப் பார்த்தான். உடம்பின் மொத்த நரம்பு மண்டலமும் ஐஸ் வாட்டருக்குள் முக்கியெடுக்கப்பட்ட தினுசில் ஜில்லிட்டுப் போனான். ஆஹா…!

    ஆருத்ரா சிரிப்போடு ஆரஞ்சு வண்ணச் சுடிதாரில் அஜந்தா சிற்பமாய்ப் பார்வைக்குக் கிடைத்தாள்.

    ஆருத்ரா...?

    கல்யாணின் தங்கை. ஒரு ஐ.டி. கம்பெனியில் ஹெல்த்தி ஜாப். விரல் நுனியில் எல்லா ஜி.கே. விஷயங்களையும் வைத்து இருப்பவள். ஃபேஸ் புக்கில் ஐயாயிரம் முகநூல் நண்பர்களோடு ஒரு மகாராணியாய் உலா வருபவள்.

    என்ன, அப்படிப் பார்க்கிறீங்க வெங்கட்...? உங்களுக்கு குட்மார்னிங் சொல்லி பதில் குட்மார்னிங் வாங்க கடந்த இருபது நிமிஷமாய் இந்த மூணாவது பிளாட்பாரத்தில் காத்திட்டிருக்கேன்…! சொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்தாள். வெங்கட் மலர்ந்தான்.

    குட்மார்னிங் ஆருத்ரா... உன்னை நான் ஸ்டேஷன்ல கொஞ்சமும் எதிர்பார்க்கலை. வெரி வெரி… ப்ளஸண்ட் சர்ப்பரைஸ்.

    உங்களை ரிஸீவ் பண்ண மொதல்ல அண்ணன் தான் வர்ற மாதிரி இருந்தது. அதுக்கப்புறம்தான் நான் அவரை கட் பண்ணிட்டு நானே காரை எடுத்துக்கிட்டு வந்தேன்… நான் வந்ததுல உங்களுக்கு ஏதாவது வருத்தமா...?

    நோ… நோ… உனக்கு எதுக்குச் சிரமம்னுதான் யோசனை பண்ணினேன்.

    இதுல ஒரு சிரமமும் இல்லை. நான் எப்பவுமே விடிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு வாக்கிங் போவேன். அண்ணனுக்கு ஏழு மணிவரை தூங்கிப் பழக்கம். அதான் அண்ணன் கிட்டே சொல்லிட்டு நானே ஸ்டேஷனுக்கு வந்துட்டேன்.

    தேங்க்ஸ்…!

    இதுக்கெல்லாம் போய் யாராவது நன்றி சொல்லுவாங்களா...?

    நான் தேங்க்ஸ் சொன்னது உனக்கு இல்லை ஆருத்ரா.

    பின்னே...?

    உன்னோட அண்ணனுக்கு…!

    வெங்கட்…! நான் உங்களை ஏன் ரிஸீவ் பண்ண வந்தேன்னு தெரியுமா...?

    ஏன்…?

    கார்ல போகும்போது உங்ககூட கொஞ்சம் பேசணும்.

    என்ன பேசணும்…?

    வாங்க… மொதல்ல காருக்குப் போயிடுவோம்…

    ஆருத்ரா சொல்லிட்டு நடக்க ஆரம்பித்துவிட, வெங்கட் தன்னுடைய ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டு அவளோடு நடந்தான்.

    ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த போது கோவையின் கிழக்குத் திசையில் உதிக்கும் சூரியனின் சிவப்பு மொட்டைத்தலை தெரிந்தது. நகரின் எல்லாத் திசைகளிலும் சாம்பிராணி புகை போட்ட தினுசில் பனிமூட்டம். வீசிய குளிர்காற்று, எலும்பில் துளை போட்டது.

    கால் டாக்ஸிகளும், ஆட்டோக்களும் ஸ்டேஷனுக்கு முன்பாய் வரிசையாய் நின்றிருக்க, அவைகளை ஜாக்கிரதையாய்க் கடந்து கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தார்கள். ஆருத்ரா, தன்னுடைய வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட்டைக் கண்டுபிடித்து ட்ரைவிங் இருக்கையில் ஏறி உட்கார்ந்தாள்.

    காரின் பின் சீட்டில் சூட்கேஸை வைத்த வெங்கட், முன் இருக்கைக்கு வந்து ஆருத்ராவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்.

    கார் நகர்ந்தது. போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சாந்தி தியேட்டரைத் தாண்டியதும் வேகம் பிடித்தது. செஷன்ஸ் கோர்ட் கட்டடங்களைக் கார் கடந்த போது வெங்கட் வாயைத் திறந்தான்.

    ஏதோ பேசணும்னு சொன்னே… என்ன பேசணும் ஆருத்ரா…?

    "வெங்கட்…! நீங்க ஒரு ஜர்னலிஸ்ட் ‘நீயூஸ் பஸ்டர்’ என்கிற ஒரு புலனாய்வுப் பத்திரிகையில்

    Enjoying the preview?
    Page 1 of 1