Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathi Mel Payanam
Kathi Mel Payanam
Kathi Mel Payanam
Ebook225 pages2 hours

Kathi Mel Payanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580100905132
Kathi Mel Payanam

Read more from Pattukottai Prabakar

Related to Kathi Mel Payanam

Related ebooks

Related categories

Reviews for Kathi Mel Payanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathi Mel Payanam - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கத்தி மேல் பயணம்

    Kathi Mel Payanam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    முழுக்க வெயிலும் விலகாத முழுக்க தென்றலும் தவழாத மாலை நான்கு மணி அவஸ்தை நேரத்தில் தன்னைக் காத்திருக்கச் சொன்ன அனிதாவை மனதிற்குள் சபித்துக்கொண்டு கடற்கரையில் ஒரு கரையோரப்படகில் சாய்ந்து அமர்ந்து மணலை சமன் செய்து‘தீபக்’, ‘தீபக்’என்று தனது பெயரையே திரும்பத் திரும்ப விரலால் எழுதிக் கொண்டிருந்தான், தீபக்.

    அலுத்துப் போய் திரும்பி அலைகளைப் பார்த்தான். அதன் ஓசை நம்பிக்கைக் கவிதைகளை உள்ளடக்கி இருப்பதாய்ப்பட்டது. தூரத்தில் சில படகுகள். சில பறவைகள்.

    பறவைகள் கண்டிப்பாக கூடு திரும்பும், அந்தப் படகுகளுக்கு அப்படி உத்திரவாதமாகச் சொல்ல முடியுமா? திடீரென்று புயல் சுழன்றடித்து படகைக் கவிழ்க்கலாம். அதற்காக மீன்பிடிக்கச் செல்லாமல் இருக்க முடியுமா?

    மனதில் எழுந்த இந்தக் கேள்வி அவனை சற்று உற்சாகம் கொள்ள வைத்தது. செங்கல்பட்டு சென்று வந்ததில் தன் சமீபத்திய முயற்சி தோற்றுப்போன வருத்தத்தில் இருந்த அவனுக்கு அந்தக் கேள்வி நம்பிக்கை கொடுத்தது.

    திரும்பி கடற்கரையை ஒட்டிய தூரத்துச்சாலையைப் பார்த்தான். அங்கே தன் ஸ்கூட்டி வாகனத்தை நிறுத்திப் பூட்டி விட்டு மணல் வெளியில் இறங்கி அவனை நோக்கி நடந்து வரும் அனிதாவைப் பார்த்தான்.

    உற்சாகமாக கையசைத்தான். அவளும் பதிலுக்குக் கையசைத்தாள்.

    நீலநிற சூரிதார் அணிந்திருந்தாள். அதன் நீளமான துப்பட்டாவின் இரண்டு முனைகளும் காற்றில் பறந்தன. மணலில் அழுத்தமாகப் பாதம் பதித்து நடந்து வந்தாள்.

    அவனை நெருங்கி அவன் அருகில் அமர்ந்தாள்.

    என்னப்பா, கோபமா இருக்கியா? என்றாள்.

    கோபமா? ஏன்?

    அரை மணி நேரம் உன்னைக் காக்க வைச்சிட்டேனே...

    அது கூட எனக்கு வருத்தமில்லை. நாம் சந்திக்க இந்த நேரத்தைத் தேர்வு செஞ்சியே, அது தான் கொடுமை!

    மன்னிச்சிருங்கோ, எனக்கு அஞ்சரை மணிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதுக்கு முன்னால் உன்னை சந்திச்சிடணும்னு ஆசைப்பட்டேன். வேர்க்குதா?

    நீ வந்ததும் வேர்வை தெரியலை என்ற தீபக் தன் கைக்கெடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு, அப்படின்னா மகாராணி இன்னைக்கு எனக்காக ஒதுக்கியிருக்கிற நேரம் ஒரே ஒரு மணி நேரம்தானா? இது அநியாயம்!"

    வர்ற ஞாயிறு சந்திக்கலாமப்பா. அப்போ ‘அருத்தது போதும், புறப்பட்டுப் போய்த் தொலை’ன்னு நீயே சொல்றவரைக்கும் உன்னோட இருக்கேன். சரியா?

    சரி இப்ப நீ எங்கர்ந்து வர்ற?

    கோர்ட்லேர்ந்து...

    கோர்ட்டா?

    ஆமாம். குடும்பகோர்ட். ஒரு சுவாரஸ்யமான விவாகரத்து வழக்கு. அத முழுக்க விசாரிச்சு எங்க பத்திரிகையில் கட்டுரை எழுதறேன். அதுக்காக ஒரு வக்கீலை சந்திக்கப் போயிருந்தேன்.

    உன் பத்திரிகை ஆபீசுல உன்ன உக்காரவே விடாமல் துரத்திக்கிட்டே இருப்பாங்களா அனிதா?

    நிருபர் வேலைன்னா சின்ன விசயமா? உக்கார்ந்த இடத்திலேர்ந்து கற்பனையா கதையும், கவிதையும் தான் எழுத முடியும். நிருபர் வேலைன்னா கால்ல சக்கரம்தான். நீ என்னை விடு. என்ன ஆச்சு?

    எதைக் கேக்கறே?

    நீ செங்கல்பட்டு போயிட்டு வந்தியே. அதைப்பத்திக் கேக்கறேன்.

    உடனே அவன் முகம் சுருங்கியது. உதட்டைப்பிதுக்கி ‘உச்’சென்றான்.

    நீ தேடிப்போன தொழிலதிபர் இல்லையா?

    இருந்தாரு...

    என்ன சொன்னாரு?

    இனிமேல் அவரைத் தேடி வரவேணாம்னு சொல்லிட்டாரு...

    யாரோ அவரோட மனசை கலைச்சிட்டாங்க அனிதா. மூணு மாசமா அவர்கிட்ட நான் அலைஞ்சிட்டிருக்கேன். ஆரம்பத்தில் நான் வடிவமைச்சிருந்த அந்த பாலிதீன் இயந்திரம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வேற யாரையும் பார்ட்னரா போட்டுக்காமல் உற்சாகமாகப் பேசினாரு. இயந்திரத்துக்கு ‘ரூபி’ன்னு அவர் பேத்தி பேரைக்கூட சூட்டிட்டாரு. இப்ப என்னடான்னா இந்த இயந்திரம் நல்லா விற்பனை ஆகுமான்னு சந்தேகமா கேக்கறார்.

    சரி, விடு! அவருக்கு உன் அருமை புரியலை.

    அவருக்கு மட்டுமில்லை அனிதா, பலபேருக்குப் புரியலை.

    எனக்குப் புரிஞ்சிருக்கே தீபக். கொஞ்சம் பொறுமையா இருப்பா. உன்கிட்ட இருக்கிற அறிவுக்கும் திறமைக்கும் கண்டிப்பா நீ பெரிய ஆளா வருவே.

    அப்படித்தான் ஒவ்வொரு தடவையும் கிளி ஜோசியக்காரன் கூட சொல்றான்.

    ஏய்! ஜோசியம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டியா நீ!

    மனசு பலவீனப்படறப்போ அதுக்கு தெம்பேத்தறதுக்கு ஏதாச்சும் ஒருவழி தேவைப்படுது அனிதா.

    சில விநாடிகள் அவனை உற்றுப் பார்த்தாள். அவன் சட்டைப்பையில் குத்தி வைத்திருந்த பேனாவை உரிமையோடு எடுத்து அவன் கையை வாங்கி தன் மடியில் வைத்து உள்ளங்கையில் ‘நான் ஜெயிப்பேன்’என்று எழுதினாள்.

    இதை அப்பப்போ பார்த்துக்கோ. நம்பிக்கை வளரும்.

    குளிக்கிறப்ப அழிஞ்சிடுமே...

    தினம் ஒரு தடவை நான் எழுதிவிடறேன். ஏன் தீபக் நீ வடிவமைச்சிருக்கிற இந்த இயந்திரத்தை தயாரிச்சி விக்க நீ பல தொழிலதிபர்களைப் பார்க்கத்துக்குப் பதிலா நீயே ஒரு தொழிலதிபரா ஏன் மாறக்கூடாது?

    விளையாடறியா நீ? என் கையில் இருக்கிற இந்தத் திட்டத்தை யாராச்சும் செயலுக்குக் கொண்டு வரனும்னா இருபத்தி ஐந்து இலட்சம் குறைஞ்சது வேணும் என்கிட்ட அவ்வளவு பணம் இருந்தா நான் ஏன் மத்த உங்ககிட்ட கெஞ்சப் போறேன்.

    வங்கிகள் கடன் தரமாட்டாங்களா?

    இது நிருபிக்கப்படாத புது இயந்திரம். அதனால் இந்த திட்டத்துக்குப் பணம் தரமாட்டாங்க.

    அப்போ ஒண்ணு செய்யி…!

    உன் திட்டத்தை ஒரு பெட்டியில் போட்டு மூடி வச்சிடு. இருபத்தி ஐந்து இலட்சம் சம்பாதிக்கிறதுன்னு வைராக்கியத்தோட இறங்கு. ஒரு ஐந்து வருடத்தில் சம்பாதிக்கமாட்ட?

    வெறுப்பேத்தாதே! வருடத்துக்கு ஐந்து இலட்சமா அப்படின்னா மாசம் நாற்பதாயிரத்துக்கு மேலயா? எப்படி முடியும்? அப்படியே ஐந்து வருடத்தில் அவ்வளவு சம்பாதிக்கிறேன்னே வைச்சிக்கிட்டாலும் ஐந்து வருடத்துக்கு அப்புறம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஐம்பது இலட்சம் தேவைப்படும் அனிதா.

    அப்போ பேசாமல் கொள்ளையடி!

    அதான் அடிச்சிட்டேனே உன் மனசை என் திட்டத்தைப் பத்தி உன் பத்திரிசையில் எழுத முடியுமான்னு கேட்டு வந்தப்போதான் நீ அறிமுகமானே? இந்த பாலிதீன் திட்டத்தால் எனக்கு தொழில் கிடைக்கலைன்னாலும் காதல் கிடைச்சதப்பா! என்று பெருமூச்சுவிட்டான்.

    நம்பிக்கையை மட்டும் தளரவிட்டுடாதே!

    பார்ப்போம் பெங்களூரில் நடந்த ஒரு தொழில் கண்காட்சியில் விஸ்வேசுவரன்னு ஒரு தொழிலதிபரோட அறிமுகம் கிடைச்சது. என் திட்டம் பத்தின சுருக்கமான விளக்கத்தை அவருக்கு அனுப்பி வைச்சிருந்தேன் நேர்ல வாங்க பேசலாம்னு தேதி கொடுத்து தபால் எழுதியிருக்கார்.

    எப்போ வரச்சொல்லியிருக்காய்!

    வர்ற பதினேழாம் தேதி!

    பெங்களூரில் எத்தனை நாள் தங்குவே?

    அவரோட கம்பெனி கெஸ்ட் ஹவுசில் நாலு நாள் தங்கச் சொல்லிக் குறிப்பிட்டு இருக்கார்.

    அந்த நாலு நாள் பெங்களூரில் ஏதாச்சும் என் பத்திரிகைக்காக செய்தி திரட்டற வாய்ப்பு கிடைச்சா நானும் ஓடிவந்துடுவேன் உன்கூட…

    அப்படி வரமுடியுமான்னு பாரு அனிதா பகல்ல அவர் கூட விவாதம் வைச்சுக்கிட்டு மாலையில் நாம் ஊர் சுத்தலாம்.

    சரி என்று காற்றில் பறந்த தன் கூந்தல் உதிரியை சரிசெய்த அனிதா கைக்கெடிகாரம் பார்த்து பதறினாள், நேரமாச்சுப்பா. நான் புறப்படட்டுமா?" என்றாள்.

    அதுக்குள்ளேயா?

    ஐந்தரை மணிக்கு கரெக்டா அங்கே இருக்கறதா சொல்லிவிட்டேன். இப்பப் புறப்பட்டாத்தான் சரியா இருக்கும்.

    சரி, வா. என்னை பஸ் ஸ்டாப்புல விட்டுட்டுப் போ...

    இருவரும் எழுந்து கொண்டு கைகோர்த்து சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

    ஆமாம்... இப்போ நீ எங்கேப் போறே?

    ஜெயிலுக்கு!

    நான் சீரியசாக் கேக்கறேன்.

    நானும் சீரியசாத்தான் சொல்றேன். இப்போ நான் சென்ட்ரல் ஜெயிலுக்குத்தான் போறேன்.

    கோர்ட், ஜெயில், போலீஸ் ஸ்டேசன் இப்படியே சுத்திட்டிரு.

    எங்க பத்திரிகை புவனாய்வுப் பத்திரிகை. அதனால் இங்கல்லாம் போய்த்தான் ஆகணும். தெய்வீகப் பத்திரிகன்னா கோயில் கோயிலாப் போகலாம்.

    ஆமாம், இப்ப எதுக்கு சென்ட்ரல் ஜெயிலுக்கு போறே?

    எங்க பத்திரிகையில் ‘கைதியின் கதை’ன்னு ஒரு புதிய தொடர் கட்டுரை தொடங்கப் போறோம். ஜெயில்லே அதிக வருடம் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கிறவங்கள்ல வித்தியாசமான விசயங்கள் கொண்ட கைதிகளைப் பத்தி அதில் எழுதப் போறோம்.

    அப்படின்னா கைதிகளை நீ பேட்டி எடுக்கப் பொறியா?

    ஆமாம். எல்லாரையும் இல்லை. சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து.

    இதுக்கு ஜெயில்ல அனுமதி வாங்கியாச்சா?

    உயர் அதிகாரிகள் கிட்ட பேசி எழுத்துப்பூர்வமா வாங்கிட்டேன்.

    சாலைக்கு வந்ததும் அவள் வாகனத்தின் ஸ்டாண்ட் எடுத்து அமர, தீபக் பின்னால் அமர்ந்து கொண்டான்.

    அருகில் இருந்த ஒரு பஸ் நிறுத்தத்தில் அவன் இறங்கிக்கொண்டான்.

    நாளைக்கு போன் செய்றேன் அனிதா.

    சரி.

    ஞாயிறு கண்டிப்பா சந்திக்கிறோம் இல்லையா?

    கண்டிப்பா!

    யாராச்சும் சாமியாரை பேட்டி எடுக்கணும்னு ஓடிட மாட்டியே?

    இல்லை... ஞாயிறு உன்னைத்தான் பேட்டி எடுக்கப் போறேன், தயாரா இரு.

    அவள் புறப்பட்டுப்போன பிறகும் அந்த திசை நோக்கி கையசைத்தபடி நின்ற தீபக் திரும்பி பஸ் வரும் திசையைப் பார்த்தான்.

    ***

    மத்திய சிறைச்சாலை. உயர் அதிகாரி ராகவன் நாயர் - அனிதா கொடுத்த அந்த டைப் செய்யப்பட்ட அனுமதி கடிதத்தைப் படித்து முடித்தார்.

    உங்கள் பத்திரிகைக்கு சுவாரசியமான விசயங்கள் நிறைய வேணும்ன்னா நீங்கள் ஜெயபாண்டியன் ஒருத்தனை பேட்டி எடுத்துப் போட்டால் போதும் என்றார்.

    யார் சார் ஜெயபாண்டியன்...?

    மூணு கொலைகளை செய்துட்டு ஆயுள் கைதியா இருக்கிறான் அவன், அறிமுகப்படுத்தறேன் என்றார் அவர்.

    ***

    2

    சிறைச்சாலையின் உயர் அதிகாரி ராகவன் நாயர் மூன்று கொலைகளைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி ஜெயபாண்டியனைப் பற்றிக் கூறியதும் அனிதா ஆர்வம் அடைந்தாள்.

    ஒரு கொலை செய்தாலே மரண தண்டனை கொடுப்பாங்களே சார், அப்படி இருக்கறப்ப மூணு கொலைகளை செய்த ஒருத்தனுக்கு எப்படி ஆயுள் தண்டனை கொடுத்தாங்க? என்றாள்.

    சட்டதோட தீர்ப்பு அந்தந்த கொலை வழக்குகளுக்குத் தகுந்தபடி மாறும் மேடம். காவல் துறை சமர்ப்பிக்கிற தடயங்கள் சாட்சிகள், வக்கீல்களோட வாதத் திறமை இதெல்லாம் சேர்ந்துதான் தீர்ப்புகளை நிர்ணயம் செய்யும்.

    அப்படியா?

    அந்த மூணு கொலைகளை ஜெயபாண்டியன் தனிநபராச் செய்யலை அவனோட கூட்டாளி வேல்முருகன்னு ஒருத்தனோட உதவியோட செய்தான். அந்த வேல்முருகன் போலீஸ் கையில் சிக்கலை இன்னைய வரைக்கும் அவன் தலைமறைவா எங்கயோ இருக்கான். அவனைப் பிடிக்கிற முயற்சிகளில் காவல்துறை தீவிரமா இருக்குது. வேல்முருகன் அகப்படாதது ஜெயபாண்டியனுக்கு ஒரு பெரிய சாதகமான விசயமா அமைஞ்சி போச்சு.

    தனது சிறிய டைரிப் புத்தகத்தில் தந்தி வாக்கியங்களாக குறிப்புகள் எழுதியபடி அனிதா, ஜெயபாண்டியனை நான் சந்திக்கிறதுக்கு முன்னால் அந்த கொலை வழக்கைப் பற்றி கொஞ்சம் விபரமா சொல்ல முடியுமா சார்" என்றாள்.

    ஜெயபாண்டியன் தொழில் முறைத் திருடன். வீடு புகுந்து கொள்ளையடிக்கிறது கழுத்துச் சங்கிலி அறுத்துக்கிட்டு ஓடறது. தனிமையான பகுதிகளில் திடீர்னு வழிமறிச்சி கத்தியை காட்டி பணம் பறிக்கிறதுன்னு அவன் செய்யாத தப்புகளே கிடையாது.

    "அப்படின்னா

    Enjoying the preview?
    Page 1 of 1