Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yenni Ettavathu Naal!
Yenni Ettavathu Naal!
Yenni Ettavathu Naal!
Ebook130 pages50 minutes

Yenni Ettavathu Naal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403425
Yenni Ettavathu Naal!

Read more from Rajesh Kumar

Related to Yenni Ettavathu Naal!

Related ebooks

Related categories

Reviews for Yenni Ettavathu Naal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yenni Ettavathu Naal! - Rajesh Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எண்ணி எட்டாவது நாள்!

    Yenni Ettavathu Naal!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    அண்டத்தைப் படைத்த ஆண்டவனின் அளப்பரிய அற்புதங்களில் ஒன்று குழந்தைப் பேறு. ஒரு ஆணின் உடல் இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு பெண்ணின் உடல் ஆணின் உடலுக்கு எதிர்மறையாக இருக்க வேண்டும்! என்று யோசித்து யோசித்து உருவாக்கிய இறைவனின் திறமையை எண்ணி, வியக்காமல் இருக்க முடியவில்லை.’

    இறைவன் இல்லையென்று நாத்திகம் பேசுபவர்கள், இறைவன் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தாமல், அது ‘இயற்கை’ என்று சொல்வார்கள். இந்த உலகத்தில் இறைவனும் இல்லை, இயற்கையும் இல்லை. எல்லாம் விஞ்ஞானாம்தான்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ஒரு பெண்ணின் கரு முட்டையும் ஒரு ஆணின் உயிரணுவும் ஒன்றிணைந்துதான் குழந்தை உருவாகிறது’ என்று சொல்வார்கள். இந்த மூன்று மாதங்களில் எது சரியானது என்பதைப் பார்த்து விடலாம்.

    சென்னையின் புறநகர்ப் பகுதி. நள்ளிரவு இரண்டு மணி,

    செங்காட்டுக் குப்பம் போலீஸ் ஸ்டேஷன்.

    பேட்ரோலிங் போய்விட்டு வந்த அசதியில் இன்ஸ்பெக்டர் சேவியர், நாற்காலியில் ஒரு ப்ராக்கெட் குறியாய் மாறிக் கண் அயர்ந்திருந்தபோது டெலிபோன் அழைத்தது. எரிச்சலாய் எடுத்து, எஸ்... என்றார்.

    மறு முனையில் அந்த ஆண் குரல் கேட்டது.

    போலீஸ் ஸ்டேஷனா?

    ஆமா...

    இன்ஸ்பெக்டர் இருக்காரா?

    இன்ஸ்பெக்டர் பேசுறேன்!

    ஸார்...! நான் யாரு… என் பேர் என்ன...? என்கிற மாதிரியான கேள்விகளையெல்லாம் கேட்காமல், நான் இப்போ சொல்லப் போகிற விஷயத்தை மட்டும் நீங்க கேட்கிறதாய் இருந்தால் மட்டும் நான் தொடர்ந்து பேசுவேன். இல்லைன்னா ரிஸீவரை வெச்சிடுவேன். என்ன சொல்றீங்க...?

    நான் எதுவும் கேட்கலை. விஷயத்தைச் சொல்லுங்க...!

    ஸார்...! நான் ஒரு ஃபேக்டரியிலே வேலை செய்யறேன். ராத்திரி ஷிஃப்ட் முடிஞ்சு டூவீலர்ல என்னோட வீட்டுக்குப் போயிட்டிருந்தபோது, வழியில் யூரின் பாஸ் பண்றதுக்காக வண்டியை இருட்டுப் பள்ளம் பக்கத்துல நிறுத்திட்டு, புளிய மரத்துக்குப் பின்னாடி போனேன். செல்போன் டார்ச் வெளிச்சத்துலே உள்ளே நடந்து போகும் போதுதான் அதைப்’ பார்த்தேன். அப்படியே ஒரு நிமிஷம் நடுங்கிப் போயிட்டேன்.

    எதைப் பார்த்தீங்க..?

    அது வந்து... வந்து...

    சொல்லுங்க...!

    நீங்களே வந்து பாருங்க ஸார்... எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு... நான் மொதல்ல வீடு போய்ச் சேரணும்!

    டொக்!

    ரிஸீவர் வைக்கப்படும் சத்தம் கேட்டது.

    இன்ஸ்பெக்டர் சேவியர், டெலிபோனின் காலர் ஐ.டி.யில் அந்த எண்ணைப் பார்த்தார். அது ஒரு பி.சி.ஓ. எண் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.

    பேசிய அந்த ஆள் என்ன சொல்ல வந்தான்?’

    எதைப் பார்த்தான்?

    சேவியரின் தூக்கக் கலக்கம் சட்டென்று காணாமல் போயிற்று. மேஜையின் மீது இருந்த தொப்பி விநாடிக்கும் குறைவான நேரத்தில் அவருடைய தலைக்கு வந்தது. பக்கத்து அறையை எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தார்.

    மாறன்...!

    ஸார்...! மாறன் வெளியே வந்தார்.

    ஒரு அனானிமஸ் கால். இருட்டுப் பள்ளம் புளிய மரத்துக்குப் பின்னாடி யாரோ எதையோ பார்த்துப் பயந்து போய்ப் போன் பண்ணியிருந்தாங்க...! வாங்க, போய்ப் பார்த்துடலாம்...!

    மாறன் தயங்கினார்.

    ஸ்... ஸ்... ஸார்...!

    என்ன?

    இது ரொம்பவும் அன்-டைம்...! போன் பண்ணினவங்க யார்னு தெரியாம நாம அந்த இடத்துக்குப் போறது சரியில்லைன்னு நினைக்கிறேன்!

    என்ன மாறன்... பயப்படுறீங்களா?

    இது பயமில்லை ஸார்... ஒரு முன்னெச்சரிக்கை. ஏற்கெனவே இந்த ஏரியா தாதாக்கள் நம்ம மேலே ரொம்பவும் கோபமாகவும் பழி வாங்குற்ற உணர்வோடும் இருக்காங்க, எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னுதான் சொன்னேன்.

    சேவியர் சிரித்தார்.

    போலீஸ்காரனுக்கு என்னிக்குத்தான் ரிஸ்க் இல்லை...? எனக்குப் போன் பேசின நபர் பொய்யான பேர்வழியாய் இருக்க முடியாதுன்னு என்னோட மனசுக்குப்படுது. வாங்க, ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு வந்துடுவோம்... நம்மகூட ரெண்டு கான்ஸ்டபிளும் வரட்டும்!

    தென் நோ ப்ராப்ளம் ஸார்.

    ஜீப்பை ரெடி பண்ணுங்க...!

    அடுத்த சில நிமிஷங்களுக்குள் புறப்பட்டு விட்டார்கள்.

    ஸ்டேஷனை விட்டு இரண்டு கிலோ மீட்டர் தள்ளி அந்த இருட்டுப் பள்ளம் இருந்தது. குண்டும் குழியுமான ரோட்டில் ஐந்து நிமிஷப் பயணம்.

    இருட்டுப் பள்ளமும் அதையொட்டியிருந்த புளிய மரமும் ஜீப்பின் ஹெட்லைட் வெளிச்சத்தில் புலப்பட்டது.

    ஜீப் ரோட்டோரமாய்ப் போய் என்ஜினின் உதறலோடு நின்றது. சேவியர் சொன்னார்:

    உடனடியாய் யாரும் இறங்கிவிட வேண்டாம்.

    ஒரு நிமிஷம் காத்திருந்துவிட்டு, எல்லோரும் இறங்கினார்கள். மாறனின் கையில் இருந்த எட்டு செல் டார்ச் உயிர் பிடித்து வெளிச்சத்தை உமிழ்ந்தது. மரத்தை நோக்கி வெளிச்சத்தைத் திருப்பினார்.

    ஸார்! மரத்துக்குப் பின்னாடி நான் மொதல்ல போறேன். நீங்க பின்னாடியே வாங்க ஸார்...!

    மாறன் புளிய மரத்தை நோக்கி நடந்தார். சேவியரும் மற்ற இரண்டு கான்ஸ்டபிள்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

    ஸார்! இங்கே கொஞ்சம் சேறாய் இருக்கு... பார்த்து வரணும்!

    மரத்தின் பின்பக்கம் வந்தார்கள். டார்ச்சின் வெளிச்சம் தத்தித்தத்தி முன்னே போயிற்று.

    அந்த இடம் அவ்வளவு சுத்தமாக இல்லை.

    காற்றில் பறக்கும் பாலிதீன் கவர்கள், ஒரு அடி உயரத்துக்கு வளர்ந்திருந்த பார்த்தீனியம் குற்றுச் செடிகள்.

    சேவியர் அந்த இடத்தின் மையத்தில் போய் நின்று கொண்டு, டார்ச் வெளிச்சத்தில் குனிந்து பார்த்தார்.

    போனில் பேசிய நபர், இந்த இடத்தில் எதைப் பார்த்தான்? அவர் யோசனையோடு விழிகளைச் சுழற்றிக் கொண்டு இருக்கும்போதே பக்கத்தில் நின்றிருந்த கான்ஸ்டபிள் கலவரமாய்க் குரல் கொடுத்துக் கொண்டே ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார்.

    ஸார்... அங்கே பாருங்க!

    Enjoying the preview?
    Page 1 of 1