Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mohana Mupathu Naal
Mohana Mupathu Naal
Mohana Mupathu Naal
Ebook128 pages58 minutes

Mohana Mupathu Naal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403281
Mohana Mupathu Naal

Read more from Rajesh Kumar

Related to Mohana Mupathu Naal

Related ebooks

Related categories

Reviews for Mohana Mupathu Naal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mohana Mupathu Naal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    மோகனா முப்பது நாள்

    Mohana Mupathu Naal

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    சூரியனின் மேல் இருட்டுப் போர்வை விழ ஆரம்பித் திருந்த சாயந்தர நேரம். மேற்கு திசை பூராவும் சிதறிக்கிடந்த மேகப் பஞ்சுகளின் விளிம்புகளில் இன்னமும் சூரிய வெளிச்சத்தின் மிச்சம் ஒட்டிக் கொண்டிருந்தது.

    அந்தப் பழங்கால பங்களாவின் பின்புறத்தில் ஓர் அறையை மும்முரமாய் இடித்துக் கொண்டிருந்த கூலியாட்கள் ஒருவன் நெற்றியில் வியர்வை மின்ன நிமிர்ந்து அருகே நின்றிருந்தவனை ஏறிட்டான்.

    ராமசாமி...

    ம்

    வேலையை இன்றைக்கு இதோடு நிப்பாட்டிக்கலாமா...? மணி ஆறரைக்கு மேலே இருக்கும் போலிருக்கு.....

    மணி ஆறரையானா என்ன...? வெளிச்சம்தான் இன்னும் இருக்கே... நம்ம ஆட்கள் இன்னும் அரை மணி நேரமாவது வேலை செய்வாங்க... அந்த கிழக்கோரச் சுவத்தை இடிச்சு சுத்தம் பண்ணிருங்க போதும்... நாளைக்கு காலையில் வந்ததும் வடக்குப் பக்கமா இருக்கிற சுவத்தை இடிக்க ஆரம்பிச்சிடுவோம்...

    வெற்றிலைப் பாக்கை வாய் நிறைய குதப்பிக் கொண்டே பேசின கட்டிட மேஸ்திரி. பங்களாவின் உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்த ராஜலிங்கத்தைப் பார்த்ததும் தன் தலையில் ஏறியிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டே,

    டேய்... எல்லோரும் ஜரூரா வேலையைப் பாருங்க... ஜமீன்தாரய்யா வர்றார்... கூலி வாங்கப் போறநேரம்... அவருக்கு சோம்பேறித்தனமா வேலைப் பார்த்தா பிடிக்காது... என்றான்.

    அவன் சொன்ன வினாடி.

    கடப்பாறைகள் 'டங்க்... டங்க்' சத்தமும், மண்வெட்டிகள் கொத்தப்படும் சத்தமும் வேகமாய் காற்றில் கலந்து கேட்க ஆரம்பித்தன.

    கர்ர்க்... கர்ர்க்.

    உயர்ந்த ஜாதி கூர் வளைந்த பூட்சுகள். பங்களா போர்டிகோ படிகளோடு உறவாடி காதுகளுக்குப் பிடிக்காத சத்தத்தை எழுப்ப, ராஜலிங்கம் அழுத்தமான நடை போட்டு வந்து கொண்டிருந்தார். ராஜலிங்கத்துக்கு அபாரமான உயரம். வரப்போகும் இரண்டொரு மாதங்களில் அறுபது வயதைத் தொட இருந்தார். பழைய ராஜ புதனத்து மன்னர்களைப் போன்ற முக அமைப்பு. அகலமான நெற்றி. வழுக்கைக்குப் போய்க் கொண்டிருந்த தலை.

    மண்டையின் பின் பக்கத்திலும், பக்கவாட்டுகளிலும் சொற்பமாய் இருந்த முடிநரை வாங்கி. அடித்த போது சுருள் சுருளாய் எழும்பியது. அடர்த்தியான நரை புருவங்களுக்கு கீழே, ஜாக்கிரதையும், எச்சரிக்கையும் நிரம்பிய, சிறிய கண்கள். கன்ன மேடுகளின் லேசான தூக்கலுக்கு மத்தியில், முக்கு ஒரு கொக்கின் கூர்மையை பெற்றிருந்தது. மேலுதட்டு பரப்புக்கு மேலே, இருபதாவது வயதிலிருந்து நெய் பூசி வளர்க்கப்பட்ட மீசை, அந்த அறுபது வயதிலும், மாட்டின் கொம்புகளாய் சுருண்டிருந்தன. மீசைக்குக் கீழே. சதைப் பற்றில்லாத உதடுகள் அவர் அபூர்வமாய் சிரிக்கும் நேரங் களில், விழாத பல்வரிசை அழகாய் தெரியும், ராஜலிங்கம் அணிந்திருந்த கோட்டு போன்ற ஆடையில், உண்மையான தங்கப் பித்தான்கள் சின்னச் சின்ன மஞ்சள் பொட்டுகளாய் மின்னின.

    இடிபட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தை நெருங்கினார் ராஜலிங்கம். ஒரு நிமிடம் உன்னிப்பாய் பார்த்தவர்.

    வேலப்பா... என்றார்.

    சிக்கி முக்கி கல்லால் தட்டின மாதிரி கரடு முரடான குரல்.

    மேஸ்திரி வேலப்பன் ஓடி வந்தான்.

    அய்யா...

    கிழக்கோரச் சுவரை இன்னுமா இடிச்சு முடிக்கலை...

    அய்யா... கட்டிடம் பூராவும் சரியான கருங்கல்லுங்க... இரண்டு கடப்பாறை வளைஞ்சே போச்சுங்க... இதே செங்கல் சுவரா இருந்தால். இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே வேலை முடிஞ்சிருக்கும்...

    அந்தக் காலக் கட்டிடம்னா சும்மாவா...? நாளைக்கு சாயந்திரத்துக்குள்ளே இந்தக் கட்டிடம் பூராவையும் இடிச் சுடுவீங்கள்ள...?

    கண்டிப்பா இடிச்சிடுவோம்...

    "சரி... சரி, பொழுது இருட்டப் போவுது…

    பார்க்கிற வேலையை சீக்கிரமா முடிச்சிட்டுக் கூலியை வாங்கிட்டுப் புறப்படுங்க...

    இதோ ஆச்சுங்கய்யா... அந்தக் கிழக்கோர சுவத்தை இடிச்சதும் இன்றைக்கு வேலையை முடிச்சுக்கிறோம்...

    ராஜலிங்கம் திரும்பி போர்டிகோவை நோக்கி நடந்தார். அதே விநாடி, பங்களாவிலிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்த காம்பவுண்ட் கேட்டின் வழியாக அந்த அம்பாசிடர் கார் உள்ளே நுழைந்து.

    லேசான குலுங்கலோடு வந்து கொண்டிருந்தது. ராஜலிங்கம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே

    போர்டிகோவில் வந்து நின்ற கார். வாயைச் சாத்திக் கொள்ள அதன் இடுப்பைப் பிளந்து கொண்டு, ஈசுவர் இறங்கினான். கையில் ஒரு பிரீப்கேஸ், கழுத்தில் டை பறக்க இறங்கின ஈசுவருக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். ராஜலிங்கத்தின் மூத்தமகன். இளைய மகன் கோவிந்தகுமார் அடுத்த அத்தியாயம் ஏதோவொன்றில் வரும்போது. அவனைப் பார்த்துக் கொள்ளலாம். ஈசுவர். கோவிந்தகுமார் இந்த இரண்டு பேருக்கும் மூத்தவள் நர்மதா. இதே பங்களாவில்தான் அவள் இருக்கிறாள். அவளைப் பற்றியும் பின்னால் பார்ப்போம்...... இப்போதைக்கு ஈசுவரை மட்டும் பார்ப்போம்.

    ஈசுவருக்கு செத்துப் போன அவனுடைய அம்மா மங்கையற்கரசியின் ஜாடை. ஏறக்குறைய அப்பாவின் உயரம். சில கெட்ட பழக்கங்களுக்கு உடம்பு அடிமையாகிப் போனதில். ஆரோக்கியம் தவறி இருந்தான். உதடுகளின் விழிம்பில் எந்நேரமும் குரங்கு குட்டியாய் தொற்றிக் கொண்டிருக்கும் சிகரெட். அப்பாவுக்கு எதிரில் மட்டும் அது காணாமல் போயிருக்கும்.

    தினசரி ராத்திரிகளில் சீமை தீர்த்தமும். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையின் ராத்திரிகளில் ஒரு பெண்ணின் ஸ்பரிசமும் அவனுக்குத் தேவையான சமாசாரங்கள்.

    ராஜலிங்கம் சிமெண்ட்ஸ் கம்பெனியின் இணைடைரக்டரான ஈசுவர் தற்சமயம் பெண் தேடும் படலத்தில் மும்முரமாய் இறங்கியிருப்பவன்.

    ராஜலிங்கத்தை நெருங்கினான்.

    ஈசுவர்.

    அப்பா,

    ம்...

    கார்ப்பரேஷன் ஆபீசிலிருந்து பிளானிங் ஆபீஸர் யாராவது வந்தாங்களா?

    வரலையே...

    நம்ம ஆபீசுக்கு வந்திருந்தாங்க...

    எதுக்கு...

    நம்ம பங்களாவுக்கு பின்புறம் இருக்கிற கட்டிடத்தை இடிக்கிற விஷயம் அவங்க காது வரைக்கும் போயிருக்கு... அதைப்பத்தி விசாரிக்க வந்தாங்க...

    என்ன கேட்டாங்க...?

    கட்டிடத்தை எதுக்காக இடிக்கிறீங்கன்னு கேட்டாங்க...?

    நீ என்ன சொன்னே...?

    "அது ரொம்பவும் பழைய கட்டிடம்.

    Enjoying the preview?
    Page 1 of 1