Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthaithu Vaitha Nila
Puthaithu Vaitha Nila
Puthaithu Vaitha Nila
Ebook141 pages47 minutes

Puthaithu Vaitha Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Puthaithu Vaitha Nila

Read more from Rajeshkumar

Related to Puthaithu Vaitha Nila

Related ebooks

Related categories

Reviews for Puthaithu Vaitha Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthaithu Vaitha Nila - Rajeshkumar

    19

    1

    ராஜநாயகம் தனக்கு முன்னால் கைகட்டி நின்றிருந்த தன்னுடைய நான்கு பி.ஏ.க்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு தன் பெரிய நரை மீசைக்குக் கீழே மறைத்து இருந்த உதடுகளை அசைத்தார்.

    இது ஒரு வார கல்யாணம். தினசரி பாட்டு, கச்சேரின்னு இந்தக் கோயமுத்தூரே அமர்க்களப்படணும். ஊர்ல இருக்கிற எல்லா ஜனமும் என்னோட மகள் தமயந்தியோட கல்யாணத்தைப் பத்தி வாய் வலிக்கப் பேசியாகணும். தினசரி பத்தாயிரம் பேர் கல்யாணம் விருந்தை சாப்பிட்டாகணும்.

    எஸ்... ஸார்...

    வேண்டிய பணத்தை வவுச்சர்ல கையெழுத்து போட்டு கேஷியர்கிட்டயிருந்து வாங்கிக்கலாம். பணம் கல்யாணத்தோட எந்தக் காரியத்துக்காக செலவு செய்யப்பட்டதோ அதுக்கான பில்லை ப்ராப்பரா ப்ரொட்யூஸ் பண்ணி அக்கவுண்ட்ஸை செட்டில் பண்ணனும்...

    எஸ்... ஸார்...

    இந்தக் கல்யாணத்துக்காக செலவு பண்ண ரெண்டு கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கேன். இந்த ரெண்டு கோடி ரூபாயில் ஒவ்வொரு பைசாவுக்கும் சரியான கணக்கு காட்டப்படணும்.

    எஸ்... ஸார்...

    என்னோட டாட்டர் தமயந்தியோட கல்யாணம் எப்படி நடக்கணும்... என்னென்ன ஏற்பாடுகள் செய்யணும்... இதைப் பத்தியெல்லாம் பேசி முடிவு செய்ய இன்னும் ஒரு மணி நேரத்துல கம்பெனி ஜி.எம். வருவார். அவர்கிட்ட பேசிட்டு மறுபடியும் உங்களை காண்டாக்ட் பண்றேன். யார் யார்க்கு என்னென்ன போர்ட்போலியோன்னு பிரிச்சுக் கொடுத்த பின்னாடி உங்க வேலையை நீங்க கவனிக்க ஆரம்பிக்கலாம்...

    எஸ்... ஸார்...

    நவ் யூ மே கோ...

    நான்கு பி.ஏ.க்களும் பவ்யமாய் விஷ் செய்து விட்டுப் பின்வாங்கிப் போக, ராஜநாயகம் சிகரெட் பைப்பை சிரத்தையாய் பற்ற வைத்துக் கொண்டு மெலிதாய் புகைவிட்டபடி லானுக்கு வந்தார்.

    ஐந்து செண்ட் நிலப்பரப்பில் கொரியன் க்ராஸ் பச்சை நிறப் பாய்களை விரித்திருக்க, கார்டனர் ஹோஸ் பைப்பை வைத்துக் கொண்டு நீர் பாய்ச்சியபடி தெரிந்தான். லானைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த ரோஜாத் தொட்டிகளில் பூக்களோடு மொக்குகளும் சிரித்தன.

    கோவைக்கே உரிய சாயந்தர நேர ஐஸ் காற்று தயங்கித் தயங்கி வீசிக் கொண்டிருந்தது.

    அப்பா...

    முதுகுக்குப் பின்னால் குரல் கேட்க, திரும்பினார்.

    தமயந்தி ஊதாநிற மேக்ஸியோடு தோளில் ஒரு வானிடி பேக்கை மாட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.

    இருபத்தியோரு வயது. லேசாய் ஐஸ்வர்யாராயின் சாயல். அந்த தேன்நிற கண்களுக்குப் பதிலாய் திராட்சை விழிகள்.

    என்னம்மா...! எங்கேயோ கிளம்பிட்டே போலிருக்கு.

    கொஞ்சம் ஷாப்பிங் அப்பா...

    கல்யாணப் பொண்ணு இப்படியெல்லாம் வெளியே போகக்கூடாதம்மா... மாப்பிளை வீட்டுக்காரங்க பார்த்தா தப்பா நினைச்சுக்குவாங்க...

    அப்பா...! நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க...

    என்ன...?

    என் கழுத்துல மாப்பிளை தாலி கட்டறவரைக்கும் நான் ஒரு சுதந்திரப் பறவை. எங்கே வேணும்ன்னாலும் வருவேன் போவேன். யாரும் என்னை எதுவும் கேட்க முடியாது...

    தமயந்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹாலின் ஒரு கோடியில் இருந்த பூஜையறையிலிருந்து வெளிப்பட்டாள் பாரிஜாதம்.

    பாரிஜாதம்?

    ராஜநாயகத்தின் மனைவி.

    இரட்டை நாடி சரீரத்தைத் தூக்கிக் கொண்டு மூச்சிரைக்கக் கோபமாய் வந்தாள்.

    என்னடி சொன்னே...?

    தமயந்தி தன் தலையில் நோகாமல் அடித்துக் கொண்டாள். ஓ...! நீ பூஜை ரூமுக்குள்ளேதான் இருந்தியாம்மா. நான் கவனிக்காமே பேசிட்டேன்.

    ஏண்டி! ஷாப்பிங் போக இதுவா நேரம்? கோயமுத்தூர் முன்னே மாதிரி கிடையாது. ஊர் ரொம்பவும் கெட்டுப் போச்சு. ஏதாவது ஷாப்பிங் போகணும்ன்னா அஞ்சு மணிக்குள்ளே போய்ட்டு வந்துடணும்...

    சரிம்மா...! நாளையிலிருந்து நீ சொல்ற மாதிரியே போறேன்... இன்னிக்கு மாத்திரம் போய்ட்டு வந்துடறேன்.

    ஊஹும்! போகக்கூடாது.

    போவேன்...

    போகக்கூடாது.

    அப்பா! பாருங்கப்பா... இந்த அம்மாவை...

    ராஜநாயகம் சிரித்தார். பாரிஜாதம்! பொண்ணை சும்மா விரட்டாதே... அவ ஷாப்பிங் தானே போறா. கார்ல போய்ட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடப் போறா.

    எல்லாமே... நீங்க தர்ற செல்லம்தான். இவளுக்கு சின்னவளை ஃபாரீன்ல படிக்கிறதுக்காக அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னேன். நீங்க கேட்கலை. அனுப்பி வெச்சீங்க. இப்ப அவ அங்கேயே வேலை பார்த்துகிட்டு செட்டிலாயிடலாம்ன்னு நினைக்கிறா... தமயந்தியோட கல்யாணத்துக்குக் கூட வாரம், பத்து நாள் முன்னாடி வரமாட்டாளாம்... கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரிதான் வருவாளாம்... பொண்ணுகளை எப்படி வளர்க்கணுமோ அப்படி வளர்த்து இருக்கணும்... இஷ்டப் படி விட்டுட்டு இப்போ இழுத்துப் பிடிச்சா முடியுமா...?

    தமயந்தி அருகில் இருந்த சோபாவில் 'தொப்'பென்று உட்கார்ந்தாள்.

    அய்யோ அம்மா... நான் இப்போ ஷாப்பிங் போறதா வேண்டாமா...?

    போய்ட்டு வா... ஆனா ஒரு மணி நேரத்துக்குள்ளே நீ வீட்ல இருந்தாகணும்...

    இருப்பேன்...

    கிளம்பு...

    தமயந்தி அம்மாவின் கன்னத்தை மெல்ல தட்டிக் கொடுத்துவிட்டு போர்டிகோவில் நின்றிருந்த 'மாருதி ஜென்'னை நோக்கி ஓடினாள்.

    ராஜநாயகம் சிகரெட் பைப்பை சின்னதாய் சீப்பி ஒரு கொத்துப் புகையை விட்டுவிட்டு பாரிஜாதத்தைப் பார்த்தார். உனக்கு ஏதாவது உள்ளே வேலை இருக்கா?

    இல்லீங்க... ஏன் என்ன விஷயம்?

    "ஒண்ணுமில்லை. கல்யாண ஏற்பாடுகளைப் பற்றி பேசறதுக்காக நம்ம கம்பெனியோட

    Enjoying the preview?
    Page 1 of 1