Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

January Iravugal
January Iravugal
January Iravugal
Ebook318 pages1 hour

January Iravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
January Iravugal

Read more from Rajeshkumar

Related to January Iravugal

Related ebooks

Related categories

Reviews for January Iravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    January Iravugal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    வசந்தகுமார் தெரு முனையில் இருந்த பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள் நுழைந்தான். கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு பிளாஸ்டிக் நூலால் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த டெலிபோன் டைரக்டரியை கையில் ஏந்தி பிரித்தான். கே ஆல்ஃபபடிக் வரிசையை எடுத்து கிருபாகரனின் டெலிபோன் என்னைத் தேடினான்.

    ஏகப்பட்ட கிருபாகரன்கள்.

    நெம்பர் 27 ரோன்வில்லா, ஜி.ரோடு, அண்ணா நகர் கிழக்கு அட்ரஸையும் ஞாபகப்படுத்திக் கொண்டு நம்பரைத் தேட கிடைத்தது.

    ஏழு இழக்க எண், சட்டைப் பையில் இருந்த பால் பாயிண்ட் பேனாவை பிதுக்கி உள்ளங்கையில் அந்த என்னைக் குறித்துக் கொண்டே வசந்தகுமார், ரிசீவரை எடுத்துக் கொண்டு டயலில் எங்களைத் தட்டினான்.

    மறுமுனையில் நான்கைந்து தடவை ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டது ஹலோ...

    "ஒரு பெண் குரல் கேட்டது.

    வசந்தகுமார் கையில் தயாராய் வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு லைனை உயிர்க்குக் கொண்டு வந்தான்.

    ஹலோ... அது மிஸ்டர் கிருபாகரன் வீடா?

    ஆமா.

    அவர் கூட பேசணுமே!

    நீங்க யாரு?

    என் பெயர் வசந்தகுமார். பேப்பர்ல சிறுநீரகம் தேவைங்கிற விளம்பரத்தைப் பார்த்தேன். அது விஷயமா அவர்கிட்ட பேசணும்.

    என்ன பேசணும்?

    நான் கிட்னி தர விரும்பறேன்.

    ஒரு நிமிஷம்... லைன்ல இருங்க.

    வசந்தகுமார் மோவாயைச் சொரிந்து கொண்டு காத்திருக்க அரை நிமிஷ அவகாசத்திற்குப் பிறகு, ஒரு ஆண் குரல் கேட்டது. கிருபாகரன் ஸ்பீக்கிங்"

    ஸார்! நான் வசந்தகுமார். பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன். நான் கிட்னியை தர விரும்பறேன்.

    தேங்க்யூ ஏ லாட்... உங்க ப்ளட் க்ரூப்?

    ஏபி நெகட்டிவ் சார்.

    என்ன வயசு?

    இருபத்தாறு.

    தொழில்?

    ஸார், நான் ஒரு ஜாப்லஸ் க்ராஜ்வேட்.

    வேலை தேடிட்டிருக்கீங்களா...?

    ஆமா.

    என்ன படிச்சிருக்கீங்க?

    பி.ஈ.

    ஃபேமிலி?

    எனக்கு ஃபேமிலியே கிடையாது ஸார்... ஒண்டிக்கட்டை எல்லீஸ் ரோட்ல ரூம் எடுத்து தங்கிக்கிட்டு வேலை தேடிட்டிருக்கேன்.

    எங்க போன் நம்பர் எப்படித் தெரிந்தது

    பேரையும் அட்ரஸையும் வெச்சு டைரக்டரியில் பார்த்தேன். நெம்பர் கிடைச்சது.

    உங்களுக்கு கிட்னி டொனேட் பண்ண சம்மதமா?

    பரிபூர்ண சம்மதம் ஸார்!

    யாரும் எந்த அப்ஜெக்ஷனும் பண்ண மாட்டாங்களே?

    சொந்த பந்தம்ன்னு யாரவது இருந்தாத்தானே ஸார், அப்ஜெக்ஷன் பண்றதுக்கு? உயிரோட இருந்த வரைக்கும் எண் மாமா படிக்கவெச்சார். அதுக்கப்புறம் ஒரு கிறிஸ்டியன் ட்ரஸ்ட் மூலமா படிச்சேன்.

    சரி, நேர்ல வாங்க.

    இப்பவேவா ஸார்.

    இப்ப வேண்டாம். சாயந்தரம் ஆறுமணிக்கு மேல.

    வர்றேன் ஸார்.

    -

    ஸார்_ தயக்கமாய் குரல் கொடுத்தான் வசந்த குமார்.

    என்ன?

    சிறுநீரகம் தரும் நபருக்கு ஒரு பெரிய தொகை பரிசாகக் கொடுக்கப்படும்ன்னு விளம்பரத்தில் மென்ஷன் பண்ணியிருந்தீங்க...?

    ஆமா!

    பெரிய தொகைன்னா எவ்வளவு ஸார்?

    நீங்க என்ன எதிர்பாக்கறீங்க?

    ஸார்... நான் வேலையில்லாத பட்டதாரி. வேலைகிடைக்காததினால பேங்க் லோன்ல தொழில் தொடங்கலாம்னு நினச்சேன். பேங்க் லோனும் கிடைக்கலை. நான் உங்ககிட்டேயிருந்து அதிகமா ஒன்னும் எதிர் பார்க்கலை ஸார்."

    உங்க எதிர்பார்ப்பை சொல்லுங்க.

    ஒரு லட்சம் ஸார்.

    "குரல் சிரித்தது.

    நீங்க ரெண்டு லட்சமாவே வாங்கிக்கலாம் மிஸ்டர் வசந்தகுமார்!

    வசந்தகுமார் சந்தோஷத்தில் சுவாசிக்கத் திணறினான்.

    ஸ... ஸார்...

    சரியா ஆறுமணிக்கு வந்துடுங்க. எங்க ஃபேமிலி டாக்டர் உங்களை செக் பண்ணிப் பார்த்துட்டு ஓ.கே. சொல்லிட்டா மேற்கொண்டு ஆக வேண்டியதை கவனிப்போம்.

    தேங்க்யூ ஸார்.

    இருதயம் மகிழ்ச்சியில் தத்தளிக்க ரிஸீவரை வைத்துவிட்டு வெளியே வந்தான் வசந்தகுமார்.

    சரியாய் ஆறு மணிக்கெல்லாம் இருட்டிக் கொண்டு வருகிற அந்த சாயங்கால நேரத்தில் அண்ணாநகர் கிழக்கு ஜி ரோட்டில் பிரவேசித்தான் வசந்தகுமார். குளிர்காற்றிலும் நிசப்தத்திலும் தீர்க்கமாய் உறைந்து போன ஆள் அரவமற்ற ரோடு.

    ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு பங்களாவும் ஏக்கர் பரப்பில் வியாபித்திருக்க - வசந்தகுமார் மெல்ல நடந்தான். கோல்ட் ப்ளேம் மரங்கள் ரோடு பூராவும் காய்ந்த பூக்களைத் தூவியிருந்தன.

    பத்து நிமிஷ நடை.

    27 – எண்ணிட்ட அந்த பங்களா வந்தது. கடைசி பங்களா. ரோடு அதோடு முடிந்திருந்தது. டெட் எண்ட். பீங்கான்கள் பதித்த காம்பௌன்ட சுவர் உயரமாய்த் தெரிந்தது.

    வசந்தகுமார் காம்பௌண்ட் கேட்டுக்கு மும்பாய் போய் நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். விஸ்தாரமான பங்களா.

    உள்ளே சாம்பல் நிற இருட்டு பரவியிருக்க - கல்லில் செதுக்கிய மாதிரி ஒரு அமானுஷ்ய நிசப்தம்.

    கேட்டைத் தள்ளினான்.

    அது க்ர்ர்ரீச்ச் - என்று உயிருள்ள ஒரு மிருகம் மாதிரி அலறிக் கொண்டு உள் வாங்கித் திறந்தது.

    அந்த காம்பௌண்ட் கேட் உள்வாங்கித் திறந்து கொண்டதும், வசந்தகுமார் உடனே உள்ளே நுழைந்து விடாமல் யோசிப்பில் சில விநாடிகளை கரைத்தான்.

    உள்ளே போகலாமா?

    வேண்டாமா...

    பங்களாவின் முன்பக்கப் பரப்பில் யாருடைய தலையாவது தெரியுதாவென்று பார்வையை எட்டினவரைக்கும் பரத்திப் பார்த்தான். யாரும் தட்டுப்படாமல் போகவே மெல்ல உள்ளே காலடி எடுத்து வைத்தான்.

    மனசுக்குள் பிரமிப்பு ஓடியது. பங்களா நிஜமாகவே பிரமாண்டம் காட்டியது. பெரிய போர்டிகோவில் பதுங்கியிருந்த நான்கைந்து கார்கள் நாங்கள் வெளிநாட்டில் ஜனித்தவர்கள் என்று சொன்னது. பச்சைப் பெயிண்டால் மெழுகியது போன்ற புல்தரைக்கு நடுவே உண்டாக்கப்பட்ட செயற்கைக் குளம் நிறைய - தண்ணீர் இங்க்கை கரைத்த மாதிரி நீல நிறத்தில் அமைந்தது,

    வசந்தகுமார் நடையைத் தயக்கமாய் பெயர்த்துப் போட்டு போர்ட்டிகோவை நெருங்கி நின்றான். இப்போதும் யாரும் தட்டுப்படாமல் போகவே ஆச்சரியப்பட்டான்.

    இவ்வளவு பெரிய பங்களாவில் ஒரு வாட்ச்மேன் கூடவா இருக்க மாட்டான்...?

    சலவைக் கல்லாலான போர்டிகோ படிகளில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்க - வாசல் கதவு நல்ல அகல நீளத்தில் பூ வேலைப்பாடுகளாக - சமீபத்திய பாலிஷில் மின்னியது.

    மில்க் ஒயிட் நிற உடம்போடு நின்றிருந்த மெர்ஸிடஸ் காரைச் சுற்றிக் கொண்டு போர்டிகோ படிகளை அண்மைப்படுத்திய விநாடி -

    தோள்பட்டையின் மேல் -

    வெதுவெதுப்பாய் - ஒரு கை படிவதை உணர்ந்து - திருக்கிட்டுப் போய் திரும்பினான் வசந்தகுமார்.

    பற்களில் சிகரெட் பைப்பைப் பிடித்தபடி நின்றிருந்தார் அந்த நடுத்தர வயது நபர். வயது நாற்பது இருக்கலாம். சதைப் பிடிப்பான சதுர முகம். முகத்தின் பரப்பளவுக்கு பொருத்தமில்லாத சிறிய கண்கள். கண்களுக்கு கீழே சின்னச்சின்னதாய் சதைப் புடைப்புகள். கன்னச் சிவப்பில் வெளிநாட்டு ஸ்காட்ச் தெரிந்தது. அடர்த்தியில்லாத மீசையிலும் கிராபிலும் வெள்ளை ரோமங்கள். பைஜாமா மாதிரியான ட்ரஸ் ஒன்றில் காற்றோட்டமாய் சொகரியமாய் நுழைந்திருந்தார்.

    ஸ... ஸார்... வசந்தகுமார் விஷ் செய்ய முயல அவர் புன்னகைத்தார். நீங்க வசந்தகுமார்...?"

    ஆமா...

    நான் கிருபாகரன்! உங்களுக்ககத்தான நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.

    ஸாரி ஸார். வாட்ச்மேன் யாரும் இல்லாததினால நானே கேட்டைத் திறந்துகிட்டு உள்ளே வந்துட்டேன்.

    நோ... ப்ராபளம் - டே டைம் வாட்ச்மேன் ட்யூட்டி முடிஞ்சு போயிட்டான். நைட் வாட்ச்மேன் ஏழு மணிக்குத்தான் வருவான். வாங்க வசந்தகுமார் உள்ளே போகலாம்.

    அவனுடைய தோளில் கை போட்டு கிருபாகரன் கதவை நோக்கி கூட்டிப் போனார்.

    2

    சுவரில் மாட்டியிருந்த அம்பாளின் திருவுருவப்படத்திற்கு முன்பாய் விளக்கேற்றிவிட்டு ஸ்தோத்திரம் சொல்வதற்காக வாயைத் திறந்த மிதிலா - வாசல் கதவு மெலிதாய் தட்டப்படும் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து தாழ்ப்பாளை விலக்கி கதவைத் திறந்தாள்

    வெளியே-

    அசோக் நின்றிருந்தான் வசந்தகுமார்க்கு இருக்கும் ஒரே நண்பன். கல்லூரி கால நண்பன்.

    ஓ... நீங்களா? வாங்க... வாங்க கதவை விரியத் திறந்து கொண்டே வரவேற்றாள் மிதிலா.

    வசந்தகுமார் வீட்ல இல்லை?

    இப்பத்தான் வெளியே போனார்.

    எங்கே?

    எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகம் ஒண்ணை வாங்கறதுக்காக மயிலாப்பூரில் இருக்கிற ஒரு பழைய புத்தகக்கடைக்குப் போய்ட்டு வர்றேன்னு கிளம்பினார்.

    போய் ரொம்ப நேரமாச்சா?

    ஒரு பத்து நிமிஷமிருக்கும்! என்ன விஷயம்... உள்ளே வாங்க.

    அசோக் உள்ளே வந்து மிதிலா எடுத்துக் போட்ட அந்த அசௌகரியமான ஸ்டூலில் உட்கார்ந்தான். மிதிலாவைப் புன்னகையோடு ஏறிட்டான்.

    சிஸ்டர்! ஒரு ஸ்பூன் சர்க்கரை கொண்டு வர்றீங்களா?

    எதுக்கு?

    கொண்டு வாங்க சொல்றேன்.

    மிதிலா குழப்பமாய் உள்ளே போய் ஒரு ஸ்பூன் சர்க்கரையோடு அசோக்கை நெருங்கினாள்.

    ம்... கொண்டு வந்துவிட்டேன்.

    வாய்ல போட்டுக்குங்க.

    எ... எதுக்கு?

    போட்டுக்குங்க சொல்றேன்.

    மிதிலா முகத்தை அண்ணாந்து - தன் செப்பு போன்ற சின்ன வாயைத் திறந்து சர்கரையைத் தூவிக் கொண்டு அசோக்கைப் பார்க்க - அவன் தன் மார்புச் சட்டைப் பகுதிக்குள் வைத்திருந்த ப்ரௌன் நிற கவரை எடுத்து நீட்டினான்.

    இந்தாங்க சிஸ்டர்.

    எ... என்ன... இது.

    வசந்தகுமார்க்கு நான் வேலை செய்யற கம்பெனியிலேயே வேலை கிடைச்சிருக்கு. அதுக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இது.

    மிதிலாவுக்கு உடம்பு பூராவும் சந்தோஷத்தில் பரபரத்தது. கை லேசாய் நடுங்க அந்தக் கவரை வாங்கிக் கொண்டே கேட்டாள்:

    அ... அது எப்படி? உங்க கம்பெனியில் நடந்த வேலைக்கான இண்டர்வ்யூவில் இவர்தான் செலக்ட் ஆகலையே? வேற ஒருத்தர்க்கு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் குடுத்துட்டதா சொன்னீங்க?

    "வாஸ்தவம்தான் சிஸ்டர். அது போனமாசத்து கதை. செலக்ட் ஆனவர்க்கு துபாய்ல வேலை கிடைச்சுட்டதாலே இந்த போஸ்ட்டை ரிசைன் பண்ணிட்டார்.

    அப்படி அவர் போயிட்டதாலே மெரிட் லிஸ்ட் படி வசந்தகுமார்க்கு இந்த வேலை கிடைச்சிருக்கு. வசந்தகுமார் என்னோட ஃப்ரண்ட்ன்னு எங்க ஜி.எம்.க்கு தெரியும். அதனால்தான் சாயந்தரம் அஞ்சுமணிக்கு மேல என்னை அவரோட ரூமுக்குக் கூப்பிட்டார். அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை போஸ்ட்ல அனுப்பினா... இந்த மழை சீசன்ல உங்க ஃப்ரண்ட் கைக்கு கிடைக்க ரெண்டு நாளாயிடும். ஸோ நீங்களே இன்னிக்கு சாயந்தரம் நேர்ல பார்த்து குடுத்துடுங்கன்னு சொன்னார்."

    மிதிலா பரவசப்பட்டாள்.

    அய்யோ! இந்த நேரம் பார்த்து அவர் வெளியே போயிட்டாரே? அப்படியும் வாசற்படியைத் தாண்டும் போது சொன்னேன்: ஏங்க தலைக்கு மேலே மழையை வெச்சுட்டு கிளம்பறீங்களே? நாளைக்குப் போய் அந்த புஸ்தகத்தை வாங்கிக்கக் கூடாதா'ன்னு. ம். ஹூம்! நான் சொன்னதை அவர் காதுலே போட்டுக்கலை. கிளம்பிப் போயிட்டார்.

    சிஸ்டர்! வசந்தகுமார் உண்மையிலேயே அதிஷ்டசாலி இல்லேன்னா எடுத்த எடுப்பிலேயே நாலாயிரம் ரூபாய் சம்பளத்துல அஸிஸ்டெண்ட் என்ஜினியர் போஸ்ட் வேலை கிடைக்குமா... அதுவும் ஒரு ரெப்யூட்டட் கம்பெனியில்...!

    சந்தோஷத்தில் பேச்சு வராமல் இருதயம் பூராவும் சந்தோஷம் கனக்க நின்றாள். அசோக் தொடர்ந்தான்:

    சிஸ்டர்! இந்த வீட்டை இனிமே நீங்க காலி பண்ணிடனும். கம்பெனியில் க்வார்ட்டர்ஸ் அலாட் பண்ணிடுவாங்க. வெல் ஃபர்னிஷ்ட் க்வார்ட்டர்ஸ். உடனடியா டூ வீலர் ஒண்ணு குடுத்துடுவாங்க...

    எல்லாம் மாயாஜாலம் மாதிரி இருக்கு.

    மெல்லச் சிரித்துக் கொண்டே அசோக் எழுந்தான். நான் வர்றேன். வசந்தகுமார் வீட்டுக்கு வந்ததும் எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க.

    இருங்க, காப்பி சாப்பிட்டுப்போகலாம்.

    வேண்டாம் சிஸ்டர்... எந்த நிமிஷமும் வானம் பொத்துக்கலாம். நான் கிளம்பறேன். வசந்தகுமார் ட்யூட்டியில் சேர்ந்ததும் விருந்தே பண்ணிப் போடுங்க. சாப்பிடறேன், வரட்டுமா?

    ம்...

    அசோக் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை நோக்கிப் போக - மிதிலா சந்தோஷம் தாங்காமல் - மானசீகமாய் வசந்தகுமாரோடு குத்துச் சண்டை போட்டாள் அவனை மூர்க்கமாய் அணைத்து முகம் பூராவும் முத்தமிட்டாள்.

    3

    பங்களாவின் ஹாலுக்குள் நுழைந்த - வசந்தகுமார் கண்களில் வியப்பைக் கொட்டினான். சுவர்களின் பரப்பு பூராவும் வெண்ணெயால் மெழுகியதுபோல் மார்பிள் ஆக்ரமிப்பு. ஹாலின் மையத்திலிருந்து லஸ்தர் விளக்கு - மின்சாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்க

    Enjoying the preview?
    Page 1 of 1