Thapu Thappai Oru Kolai
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Thapu Thappai Oru Kolai
Related ebooks
Sorkkam En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsUyir Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNylon Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodu...! Rating: 4 out of 5 stars4/5Thoonkatha Kan Ondru Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaarani Thappu Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Thisaigal Rating: 0 out of 5 stars0 ratingsAadatha Oonjalgal Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsThai Manne Vanakam Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathirkuriya Kutram Rating: 0 out of 5 stars0 ratingsEn Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal and Vidinthal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThurathum Thorogangal Rating: 0 out of 5 stars0 ratings19 vayathu Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsசிவப்பு வானம்!: (Sivappu Vaanam!) Rating: 5 out of 5 stars5/5Uyir Meethu Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsThookkumara Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsRaththa Gnayiru Rating: 5 out of 5 stars5/5En Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Sei! Seiyaathe! Rating: 2 out of 5 stars2/5Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsMagaa Sathi Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thapu Thappai Oru Kolai
0 ratings0 reviews
Book preview
Thapu Thappai Oru Kolai - Rajeshkumar
25
1
ரோஸ் மில்க் நிறத்தில் ஏராளமாய் பூத்திருந்த போகன் வில்லா மரங்கள் அடர்ந்த அந்த நிழலான ரோட்டை வெட்டிக் கொண்டு, வலது கைப் பக்கமாய் திரும்பிய அந்த சாக்லேட் நிற கண்டசா கார் ஓட்டல் சோழா ஷெர்டஷனுக்குள், ஒரு வெல்வெட் குவியல் மாதிரி குலுங்கி நுழைந்து மௌனமாகியது.
காரின் நாலாபக்க கதவுகளையும், நான்கு ஜாதி பெண்கள் ஓடிவந்து திறக்க, ஜெயச்சந்திரன் கீழ் இறங்கினான்.
சுத்தமாய் ஆறடி உயரம், வெள்ளை நிற சூட்டில் பெயிண்ட் அடித்த மாதிரி பிரகாசமாய் தெரிந்தான். கண்ணாடிக் கதவருகே காத்திருந்த சிவப்பு உடை பேரர் பவ்யமாகக் கதவைத் திறந்துவிட உள்ளே போனான். வரவேற்பு ஹாலின் மறுபக்கம் கண்ணாடிச் சுவர் வழியாக, கோபால்ட் நீல நிறத்தில் நீச்சல் குளமும், கோதுமை நிறத்தில் மார்புக்கு கச்சைகளோடு ஆங்கிலோ - இந்தியப் பெண்களும் தெரிந்தார்கள். ரிசப்ஷன் கௌண்டர் அருகே ஏராளமானவர்கள் காத்திருந்தார்கள்.
ஜெயச்சந்திரன் முதல் மாடி ஏறி, ‘மெர்க்காரா’ அறைக்குள் நுழைந்தான். ஏ.ஸி. அவன் உடம்பைச் செல்லமாய் தடவியது. பேரர் பிளாஸ்டிக் மெனு அட்டையை நீட்ட, அதில் கண்ணைப் பதித்துவிட்டு மெல்லிய குரலில் சொன்னான்:
டொமேட்டோ க்ரீம் - வித் பாராட்ஸ்டிக்ஸ்...
எஸ் ஸார்.
- அவன் நகர்ந்தான்.
ஜெயச்சந்திரனின் பார்வை அந்த மெர்க்காரா ஹால் முழுவதும் ஓடியது. பீரைச் சப்பிக் கொண்டிருந்த ஒரு ஹிப்பி இளைஞன், ஐஸ்க்ரீமை நுனி நாக்கால் ருசி பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞி, அந்நிய கலப்பில்லாத இரண்டு தமிழ்நாட்டுத் தம்பதிகள், புதிதாய் தாடி வளர்க்க ஆரம்பித்திருந்த ஒரு டீன் ஏஜ் யுவன்...
ஸார்...
பேரர் பீங்கான் கோப்பையில் ஆவி பறக்கும் டொமேட்டோ க்ரீமோடு நின்றிருந்தான். கையிலிருந்த தட்டைப் பரப்பி விட்டு, கோப்பையைக் கீழே வைக்க முயன்றான்.
அதேவிநாடி - கை நழுவ -
சூடான டொமேட்டோ க்ரீம் மேஜையில் பட்டு, ஜெயச்சந்திரனின் வெள்ளை நிற சூட் மேல் ‘ப்ளாச்’ என்று சிதறியது. வெள்ளை நிற சூட் பூராவும் ஸ்பிரே செய்த மாதிரி டொமேட்டா க்ரீம்.
ஸாரி ஸார்!
பேரர் முகம் வியர்த்து நடுங்க, ஜெயச்சந்திரன் விருட்டென்று கோபப்புலியாய் எழுந்தான்.
யூ... பாஸ்டர்ட்!
பேரரின் கன்னத்தை நோக்கி கையை வீசினான்.
ரப்...
அண்ணா...!
ஜெயச்சந்திரன் புரண்டு படுத்தான்.
அண்ணா...:
ஜெயச்சந்திரன் முகத்தில் குளிர்ந்த நீர் திவலைகளாய் தெரித்தது.
சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.
கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டான். எதிரே மேகலா - அவனுடைய தங்கை மாவு ஆட்டிய கையோடும், சாயம்போன சேலையிலும் நின்றிருந்தாள்.
என்னண்ணா, கனவு ஏதாச்சும் கண்டியா? தலையணையைப் போட்டு இந்தக் குத்துக் குத்தறே... ம்... எழுந்திரு... தெருக்கோடியில் உங்க பாஸ் புரொபசர் திரிவேதி கார்ல காத்திட்டிருக்காராம். உன்னை வரச்சொன்னாராம்... எதிர்வீட்டுப் பையன் சேது இப்பத்தான் வந்து சொல்லிட்டுப் போறான்.
மேகலா சொல்லிக் கொண்டே நகர்ந்துவிட, ஜெயச்சந்திரன் பதட்டமாய் எழுந்தான். அழுக்கான பாயையும், கிழிசல் போர்வையையும் முறையாய் மடித்து வைத்து விட்டு, கட்டியிருந்த லுங்கியோடு எழுந்து வாசல் பக்கம் போனான். சற்றுமுன் கண்ட இனிப்பான கனவு உடம்பின் சகல பாகங்களிலும் உறைந்து போயிருந்தது. கண்டசா கார், ஓட்டல் சோழா, நான்கு ஜாதி பெண்கள், வெள்ளை நிற சூட், மெர்க்காரா ஹால், டொமேட்டா க்ரீம் - இதெல்லாம் ஜெயச்சந்திரனுக்குக் கனவில் மட்டும் சாத்தியமே! இது மட்டுமில்லை; எத்தனையோ இரவுகளில் வரும் கனவுகளில் தனக்குப் பிடித்தமான நடிகையோடு முதலிரவுகளைக் கொண்டாடியிருக்கிறான்... அவர்களுக்குக் குழந்தைகளைக் கொடுத்திருக்கிறான்!
டேய்... ஜெயச்சந்திரா!
அம்மாக்காரி பாகீரதி ஒரு ஆஸ்துமா இருமலோடு, அழுக்கான சமையலறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.
என்னம்மா...?
உங்கள் முதலாளி உன்னைப் பார்க்க வந்திருக்காராமே... இத்தினி காலையிலே எதுக்காகடா வந்திருக்கார்? ஒருநாளும் இல்லாமே, அதிசயமா...
தெரியல்லேம்மா, போய்ப் பார்த்தாத்தான் தெரியும்.
வர்றவர் நம்ம வீட்டுக்கே வரலாமேடா...? தெருக் கோடியிலியே ஏன் நிக்கணும்?
ஜெயச்சந்திரன் எரிச்சலாய் அம்மாவை ஏறிட்டான்.இந்த தரித்திரம் பிடிச்ச வீட்டுக்கு வந்தா உட்கார ஒரு நாற்காலிகூட கிடையாதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும். அவர் வர ஆசைப்பட்டாலும், அவரோட கார் இந்த குறுக்குச் சந்துல வரமுடியுமா?
சர்ட்டை மாட்டிக் கொண்டு வாசற்படி இறங்கினான் ஜெயச்சந்திரன். தெருக்கோடியில் புரொபசர் திரிவேதியின் அம்பாசிடர் கார், சூரிய வெளிச்சத்தில் பளபளக்கும் முன் மண்டையோடு நின்றிருந்தது. திரிவேதி எதற்காக வந்திருப்பார்...? அவரிடம் வேலைக்குச் சேர்ந்த மூன்று வருஷ காலத்தில் அவர் அவனுடைய வீட்டைத்தேடி வருவது இதுதான் முதல்தடவை.
ஜெயச்சந்திரன் காரை நோக்கி வேகமாய் நடந்தான். அவனைப் பற்றி அடுத்த பாரா...
ஜெயச்சந்திரன் ஒரு நிஜமான இந்தியன். ஓர் இந்தியனுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ, அந்த எல்லாத் தகுதிகளும் அவனிடம் இருந்தன. படித்துவிட்டு இரண்டு வருஷகாலம் எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சில், ஒழுங்காய் ரினியூவல் செய்தான். ‘சாப்பாடு தயார்’ என்று ஓட்டலில் போர்டு மாட்டுகிற மாதிரி, ‘கல்யாணத்துக்கு நான் தயார்’ என்று நிற்கும் தங்கை மேகலாவின் கல்யாணத்தை முடிக்க முடியாமல் சிரமப்பட்டான். வேலை கிடைக்காத சோர்வில் சிலநாள் தாடி வளர்த்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமா என்று யோசித்தான். நம்பிக்கையில்லாமல் கடவுளைக் கும்பிட்டான். தங்கை மேகலாவைப் பெண்பார்க்க வந்தவர்கள் பத்தாயிரம் ரூபாய் வரதட்சணையும், பத்து பவுன் நகையையும் கேட்டபோது, சினிமாவில் வருகிற கதாநாயகன் மாதிரி அழுதான்.
காரை நெருங்கினான் ஜெயச்சந்திரன்.
குட்மார்னிங் ஸார்!
குட்மார்னிங்... வாடா பையா!
காரின் கதவைத் திறந்தார்.
புரொபசர் திரிவேதியின் வழக்கமான அழைப்பு அது.
புரொபசர் திரிவேதி அறுபது வயதை போன வருஷம் முடித்திருந்தார். தன்னுடைய ஐம்பதாவது வயதில் மனைவியை கிருஷ்ணாம் பேட்டையில் தகனம் செய்தவர்... ஒண்டிக்கட்டை, புராதனப் பொருள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் நிறைய இருந்தது.
என்ன ஸார்... இவ்வளவு காலையில் வந்திருக்கீங்க? ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானே பங்களாவுக்கு வந்திருப்பேனே ஸார்!
பையா... மொதல்ல கார்ல ஏறி உட்கார்!
ஜெயச்சந்திரன் ஏறி உட்கார்ந்தான்.
இப்பத்தான் தூங்கி எழுந்திரிச்சியா?
சரி... இந்த விளம்பரத்தைப் பார்
திரிவேதி கையில் வைத்திருந்த ‘ஹிண்டு’ பேப்பரை நான்காய் மடித்து - அதன் வலதுபக்க மூலையைக் காட்டினார்.
ஜெயச்சந்திரன் பார்வையை அதில் போட்டான்.
FOR SALE
Sixteen Century mogul handy ornamental article.
Contact Anantha narayanan, 16, Rose villa.
Besant Nagar, Madras.
ஜெயச்சந்திரன் திரிவேதியை ஏறிட்டான்.ஏதோ ஒரு முகலாய நகை சேலுக்கு வந்திருக்கு ஸார்...
ஏதோன்னு அவ்வளவு அலட்சியமா சொல்லாதே பையா... மொகல் நகை ரொம்பவும் புராதனம். அந்த சென்சுரி நகை நம்ம பங்களா ஆர்ட் காலரியில் இல்லை. இந்த நகையை எப்படியாவது வாங்கணும்... இன்னிக்கு நீ இந்த அட்ரஸுக்குப் போறே!
நீங்க வரலையா ஸார்?
நான் இன்னிக்கு காலையில் கோயமுத்தூர் போறேன். அக்ரிகல்ச்சுரல் காலேஜ்ல ஒரு செமினார். அட்டெண்ட் பண்ணிட்டு நாளைக்குச் சாயங்காலம் ப்ளைட்ல திரும்பிடுவேன். நான் வர்றதுக்குள்ளே நீ இந்த அட்ரஸுக்குப் போய் நகையைப் பார்த்து விலை நிலவரமெல்லாம் கேட்டு வெய்யி... நான் வந்ததும் மறுபடியும் ஒரு தடவை அந்த அட்ரஸுக்குப் போகலாம்.
சரி சார்!
இந்த அட்ரசுக்குப் போறப்போ காமிராவையும் எடுத்துட்டு போ... நாலைஞ்சு ஸ்நாப் எடுத்துக்கோ... பார்ட்டி நாணயமானவனா இல்லையான்னு அக்கம் பக்கம் கேட்டு முடிவு பண்ணிக்க...
சரி ஸார்!
செலவுக்குப் பணம் வெச்சிருக்கியா?
இல்லே ஸார்...
திரிவேதி தன்னுடைய புராதனகால பர்ஸைப் பிரித்தார். ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டினார்.
போதுமா?
போதும் ஸார்
பார்ட்டிகிட்ட இதமா பேசு...
தெரியும் ஸார்!
திரிவேதி காரின் இக்னீஷியனை உசுப்ப, ஜெயச்சந்திரன் இறங்கிக் கொண்டான்.
வரட்டுமா பையா?
சரி ஸார்!
கார் நகர்ந்தது.
***
காலை பத்து மணி.
பெசண்ட் நகர் டெர்மினஸில் இறங்கிக் கொண்டான் ஜெயச்சந்திரன், இருப்பதில் சுமாராய் தெரிந்த சட்டையையும், பேண்டையும் மாட்டி, மழுங்கிப்போன பிளேடால் ஏழாவது தடவை அதிஜாக்கிரதையாய் ஷேவ் செய்து, மேகலா ஒளித்து வைத்திருந்த டால்கம் பெளடரை கொஞ்சம் போல் திருடி முகத்தில் பூசி பளபளப்பை ஏற்றிக் கொண்டு, பஸ்ஸில் நொத நொதவென்று நசுங்கி, நாற்பது நிமிஷம் பிரயாணித்து, உடம்பு பூராவும் ஏறிக்கொண்ட நூறு கிலோ சோர்வோடு இறங்கிக் கொண்டான்.
தூரத்தில் சமுத்திரம் நீலநிறப் பென்சிலால் கோடிழுத்த மாதிரி தெரிந்தது.
பகுதி பூராவும் ஜனங்கள் சொற்பமாய் நடந்தார்கள்.
அருகேயிருந்த பெட்டிக்கடைக்குப் போனான் ஜெயச்சந்திரன். பெட்டிக்கடை வைத்திருந்தவர் சமீபத்திய பி.ஏ.வை முடித்தவர் போல் தெரியவே, ஒரு ‘ஸார்’ போட்டு கேட்டான்.
ஏன் ஸார்... இந்த அட்ரஸ் எங்கேயிருக்கு?
பெட்டிக்கடைக்கார பட்டதாரி வாங்கிப் பார்த்தார்.
ரோஸ் வில்லவா?
ஆமா...
அது கொஞ்சம் எக்ஸ்டென்ஷன் ஏரியா ஸார்... அதோ, அந்த சமுத்திரக் கோடியிலயிருக்கு... புதுப்பணக்காரங்க நாலைஞ்சு பேர் அந்த ஏரியால வீடு கட்டியிருக்காங்க. போய் விசாரிச்சீங்கன்னா தெரியும் ஸார்!
பெட்டிக்கடைக்காரர் சொல்ல - ஒரு தேங்ஸை உதிர்த்துவிட்டு நடந்தான் ஜெயச்சந்திரன்.
மணல் பரப்பில் கால்கள் புதையப் புதைய ஒரு பத்து நிமிஷ நடை, உடம்பு முழுவதும் வியர்வை ஜலஜல வென்று ஊறி சட்டையை நனைத்தது.
அடக்குவார் இல்லாமல் சமுத்திர அலைகள் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருக்க - சவுக்குமரத் தோப்புக்கு மத்தியில் அந்த பங்களா தெரிந்தது.
ஒண்டியான பங்களா.
கொஞ்சம் தொலைவில் சில பங்களாக்கள் சிதறிக்கிடந்தன.
ஜெயச்சந்திரன் பங்களா நோக்கிப் போனான்.
மரத்தால் ஆன காம்பெளண்ட் கேட் பொறுப்பில்லாமல் திறந்து கிடக்க, தயக்கமாக ஒரு நிமிஷம் நின்றுவிட்டு உள்ளே நுழைந்தான். சவுக்கு மரங்கள் வரிசையாய் நின்றிருக்க - அதன் நிழலிலேயே நடந்து பங்களாவின் முகப்பை நெருங்கினான் அடர்த்தியான பச்சை பெயிண்ட் அடித்த கதவு தாழிடப்பட்டிருக்க-
அதன் நெற்றியில் கறுப்பு போர்ஷன் பின்னணியில் வெள்ளை நிற பிளாஸ்டிக் மின்னின.
16 ROSE VILLA
கதவின் இடதுபக்க மேற்புறத்தில் ரத்தத்தால் பொட்டு வைத்த மாதிரி அந்த காலிங்பெல் தெரிய - வாசற்படி ஏறி அதை அழுத்தினான் ஜெயச்சந்திரன்.
பங்களாவின் உள்ளே மெலிதாய் வீறிட்டது காலிங் பெல்.
கதவு திறக்கப்பட காத்திருந்தான் ஜெயச்சந்திரன்.
சுத்தமாய் ஒன்றரை நிமிஷம் கழிந்த பிறகு - கதவு ‘டொக்’ என்ற சத்தத்தோடு திறந்தது.
அந்தப் பெண் நின்றிருந்தாள்.
வயது 17, 18, 19 - இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும்
சொல்லலாம் போலிருந்தது. உடம்பு முழுவதும் துளிர் வெற்றிலை மாதிரி வாளிப்பு. குடும்பப் பாங்கான முகத்தில் மஞ்சள் தீற்றல் கொஞ்சம் அதிகப்படியாகவே தெரிந்தது. வரைந்த மாதிரியான கண்களில் கணிசமாய் காந்தம் இருந்தது. உதடுகள் இயல்பான சிவப்பில் ஆரஞ்சு சுளைகளாய் தெரிந்தது.உங்களுக்கு யார் வேணும்?
என்று அவள் கேட்டபோது, பிளந்த உதடுகளுக்குள்ளே ஒரு முத்துச்சரத்தை ஒளித்து வைத்திருந்தாள். ஐ மீன் பல்வரிசை. கழுத்து வழக்கம் போலவே சங்கு மாதிரி தெரிந்தது. அளவான மார்புகளிலும், தேவையான அகல இடுப்பிலும், கண்களை நிறைத்தாள். விலை அதிகமில்லாத சேலையை நேர்த்தியாய் சுற்றி - சேலையின் நிறத்துக்குப் பொருத்தமில்லாமல் பிளவுஸை மாட்டியிருந்தாள்.
ஜெயச்சந்திரன் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு கேட்டான்:
மிஸ்டர் அனந்தநாராயணன் இருக்காரா?
நீங்க யாரு?
அந்தப் பெண் எதிர் கேள்வி கேட்டாள்.
எம்பேர் ஜெயச்சந்திரன். புரொபசர் திரிவேதிகிட்ட அசிஸ்டெண்டா இருக்கறேன்.. ஹிண்டு பேப்பர்ல மிஸ்டர் அனந்தநாராயணன் ஒரு விளம்பரம் குடுத்திருக்கார்... அது சம்பந்தமாய் பார்த்துட்டுப் போலாம்ன்னு தான் வந்தேன். அவர் இருக்காரா?
அந்தப் பெண் புன்னகைத்தாள்.
ஓ! மாமா குடுத்த அந்த மொகல் நகை சம்பந்தமான விளம்பரத்தைப் பார்த்துட்டு வர்றீங்களா? ப்ளீஸ்... கம். உள்ளே வாங்க!
அவள் கதவைத் தள்ளியபடி நிற்க - ஜெயச்சந்திரன் உள்ளே போனான்.
உள்ளே -
பங்களாவில் ஹால் ஹாக்கி மைதானம் மாதிரி விஸ்தாரமாய் தெரிந்தது. பங்களாவின் மேல்தளப் பரப்பிலிருந்து ஏராளமான ஸாண்ட்லியர் விளக்குக கொத்துக்கள் சீராய் தொங்கிக் கொண்டிருந்தன. சுவர் பூராவும் பெரிது பெரிதான ஆயில் பெயிண்டிங்குகள். ஹாலின் தரைப்பரப்பு முழுவதும் நீலகிரி வெல்வெட் பரப்பு.
உட்காருங்க...
அவள் சோபாவைக் காட்டினாள்.
ஜெயச்சந்திரன் உட்கார்ந்தான். அவள் நின்று கொண்டே சொன்னாள்,என்னோட மாமாதான் அவர். மாமா ஒவ்வொரு மாசமும் செகண்ட் சாட்டர்டே ஆனை மலை பாரஸ்ட்டுக்கு ஹண்டிங் போயிடுவார். சாட்டர்டே போயிட்டு மண்டேதான் வருவார்... நேத்து ராத்திரிதான் புறப்பட்டு போனார்.
ஏமாற்றமடைந்து நெற்றியைத் தேய்த்தான் ஜெயச்சந்திரன்.
அனந்தநாராயணன் உங்க மாமாவா?
ஆமா...
அந்த மொகல் நகையை நான் இப்போ பார்க்க முடியுமா?
ஒரு நிமிஷம் தயங்கினாள் அவள்.
உங்களுக்கு விருப்பமில்லேன்னா வேண்டாம்.
"நோ... நோ.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. வாங்க மேலே போவோம். மாடியிலதான் மாமவோட ரூம்