Abaayam Thodu...!
By Rajeshkumar
4/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Abaayam Thodu...!
Related ebooks
Ithu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Parappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5முத்திரை சதி Rating: 5 out of 5 stars5/5Sheela, Simla, Sirithu Rattham! Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Sooriyagandhigal Rating: 5 out of 5 stars5/5Theera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5Olinthaalum Vidamaatten Rating: 5 out of 5 stars5/5Thooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsMiss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsPaathi Rajyam Rating: 0 out of 5 stars0 ratingsIruttuku Irandu Niram Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsMudinthal Uyirodu Rating: 0 out of 5 stars0 ratingsMoodu Pani Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsVivek Ashok Rajesh Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Maandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Naan Ariven Rating: 4 out of 5 stars4/5Thigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Febuary - 30 Rating: 3 out of 5 stars3/5Thaniyaaga Oru Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsJannal Seethaikal Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsVennilaave Vidai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsJannalkal Thirakkinrana Rating: 0 out of 5 stars0 ratingsEndrendrum Un Ethiri Rating: 5 out of 5 stars5/5Thapu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Abaayam Thodu...!
1 rating0 reviews
Book preview
Abaayam Thodu...! - Rajeshkumar
எடுக்கப்படும்.
1
நீலாம்பரி காதில் ஒட்ட வைத்துக் கொண்ட ரிசீவரோடு வியர்த்து வழிய, மறு முனையில் அடுத்தவன் பேச ஆரம்பித்தான்.
இதோ பார் நீலாம்பரி... வாழ்க்கையோட எல்லா சந்தோஷங்களையும் நீ தொட்டுட்டே... சந்தோஷங்களை ஏத்துக்கிட்ட மாதிரி பிரச்சனைகள் வரும்போது அதையும் ஏத்துக்கணும்...
மொதல்ல நீ விஷயத்தை சொல்லு...
விஷயத்தை நான் சொல்றதைக் காட்டிலும் அதை நீ கேஸட்ல பார்த்துடறது நல்லதுன்னு நினைக்கிறன்...
என்ன சொல்றே... கேஸட்டா...?
ஆமா... வீடியோ கேஸட்... அந்தக் கேஸட்டைப் பார்த்தாலே போதும். உனக்கு எல்லாமே புரிஞ்சுடும்...
என்ன கேஸட் அது...?
பார்க்கத்தானே போறே...? அந்த கேஸட் இப்போ உன்னோட பங்களா லெட்டர் பாக்ஸுக்குள்ளே இருக்கு. அதை எடுத்துப் போட்டுப் பாரு ரொம்ப முக்கியமான விஷயம்... அந்த கேஸட்டை நீ மட்டும்தான் தனியாப் போட்டுப் பார்க்கணும். எக்காரணத்தைக் கொண்டும் உன் புருஷனோடு சேர்ந்து உட்கார்ந்து அந்த கேஸட்டைப் பார்த்துடாதே...
அ...அ... அந்த கேஸட்ல என்னதான்... இருக்கு...?
போட்டுத்தான் பாரேன்... ராத்திரி பத்து மணிக்கு மேலே மறுபடியும் போன் பண்றேன். மத்த விஷயங்களைப் பத்தி அப்புறமா பேசிக்கலாம். ரிஸீவரை வெக்கறதுக்கு முன்னாடி ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லிடறேன். லெட்டர் பாக்ஸுக்குள்ளே இருக்கிற கேஸட்டை எடுத்து அதை போட்டுப் பார்க்காம டெஸ்ட்ராய் பண்றதோ இந்த போன் காலைப் பத்தி போலீஸ்ல சொல்றதோ வேண்டாம். விஷயம் போலீஸ் வரைக்கும் போயிட்டா விவகாரம் சிக்கலாயிடும். பின்னாடி வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை. ராத்திரிக்கு மறுபடியும் போன் பண்றேன்.
டொக்!
மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டுவிட - நீலாம்பரி தன் கையில் இருந்த ரிஸீவரை வைக்கத் தோன்றாமல் பிரமை பிடித்த மாதிரி நின்றாள்.
'யாரவன்...?'
‘என்ன கேஸட் அது...?'
இருதயம் தாறுமாறாய் அடித்துக் கொள்ள பக்கவாட்டு ஜன்னல் வழியாக ஹாலை எட்டிப் பார்த்தாள். கணவன் ஹேமந்த்குமார் பத்திரிகை நிருபர்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.
ரிஸீவரை வைத்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள் நீலாம்பரி.
'என்ன செய்யலாம்...?'
"கணவனிடம் இப்போதே எதையும் மறைக்காமல் இந்தப் போன் காலைப் பற்றியும் லெட்டர் பாக்ஸில் இருக்கிற கேஸட்டைப் பற்றியும் சொல்லிவிடலாமா?'
உள் மனசில் ஒரு அபாய சைரன் ஒலித்தது. போனில் பேசிய குரல் மறுபடியும் கேட்டது.
அந்த கேஸட்டை நீ மட்டும்தான் தனியாகப் போட்டுப் பார்க்கணும். எக்காரணத்தைக் கொண்டும் உன் புருஷனோடு சேர்ந்து உட்கார்ந்து அந்தக் கேஸட்டைப் பார்த்துடாதே...
‘அதில் ஏதோ விவகாரம் இருக்கிறது. கேஸட்டைப் போட்டுப் பார்த்துவிட்டு அப்புறமாய் அவரிடம் விஷயத்தைக் கொண்டு போகலாம்.'
அறையை விட்டு வெளியே வந்த நீலாம்பரி ஹால் பக்கம் போகாமல் சமையலரைப் பக்கம் போனாள்.
பொன்னம்மா...!
காரட்டை துண்டாக்கிக் கொண்டிருந்த வேலைக்காரி இதோ வந்துட்டேன்மா...
என்றபடி பக்கத்தில் வந்தாள்.
லெட்டர் பாக்ஸைத் திறந்து உள்ளே இருக்கிற லெட்டர்களையெல்லாம் பத்திரமா எடுத்துட்டு வா... பார்சல் மாதிரி ஏதாவது இருந்தாலும் கொண்டு வந்துடு...
சரிங்கம்மா
என்று சொல்லி ஹால் பக்கமாய்ப் போக முற்பட்டவளைத் தடுத்தாள் நீலாம்பரி.
முன்னாடி பத்திரிகைக்காரங்க உட்கார்ந்திருக்காங்க. பின் பக்க வழியாய் தோட்டத்தை சுத்திக்கிட்டு போய் லெட்டர்களை எடுத்துட்டு பின் பக்கமாவே வந்துடு...
சரிங்கம்மா...
தலையசைத்த வேலைக்காரி பின்பக்கமாய் நகர்ந்தாள். நீலாம்பரி சுவரில் சாய்ந்து கொண்டு உச்சபட்ச இருதயத் துடிப்போடு காத்திருக்க ஆரம்பித்தாள்.
சரியாய் இரண்டு நிமிஷம்!
வேலைக்காரி பொன்னம்மா கடிதங்களோடு துணியால் சுற்றப்பட்டிருந்த ஒரு சின்ன பார்சலோடும் வந்தாள்.
நீலாம்பரி பதற்றத்தோடு அவற்றை வாங்கிக் கொண்டு டி.வி.யும் டெக்கும் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
வீடியோ கேஸட்டும் கையுமாய் அறைக்குள் நுழைந்த நீலாம்பரி கதவைச் சாத்தி தாழிட்டுவிட்டு டெக்கை பதற்றமாய் நெருங்கி சுவிட்ச்சைத் தட்டி அதற்கு மின்சார உயிர் கொடுத்தாள். கேஸட்டை டெக்கின் செவ்வக வாய்க்குள் திணித்து கைகள் நடுங்க ரிமோட் கண்ட்ரோலை எடுத்து பட்டன்களைத் தட்டினாள்.
பச்சை விளக்கு சதுரமாய் எரிந்து திரையில் மழை பெய்கிற தினுசில் 'சோ'வென விழ - ட்ராக்கை அட்ஜஸ்ட் செய்தாள் நீலாம்பரி.
பளிச்சென்று திரையில் படம் விழுந்தது. ஒரு பகட்டான அறையின் பின்னணியில் - கட்டில் தெரிய - ஒரு உருவம் போர்வைக்குள் ஒருக்களித்து படுத்திருந்தது. கேமிரா அதை நெருங்க - ஒரு கை நீண்டு உருவத்தின் மேல் இருந்த போர்வையை உருவியது. ஸ்லோ மோஷனில் போர்வை விலக
நீலாம்பரி அதிர்ந்தாள்.
அது ஒரு பெண்ணின் உடம்பு. பளீரென்று மினு மினுத்த அந்த உடம்பில் ஒட்டுத் துணியில்லை. பரிபூர்ண மெஜாரிட்டியில் இளமையின் ஆட்சி.
முழு நிர்வாணம்.
'யார் அந்தப் பெண்...?'
நீலாம்பரி திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கேமிரா அந்தப் பெண்ணின் முகத்தை க்ளோஸப்புக்கு கொண்டுவர - எஃகு முஷ்டியால் இருதயத்தின் மையத்தில் ஒரு குத்து விழுந்த மாதிரி துடித்து நிமிர்ந்தாள்.
அது அவள்தான்.
'கடவுளே! இந்தக் கோலத்தில் நான் குளியலறையில் கூட இருக்க மாட்டேனே...?'
'இது எப்படி சாத்தியம்...?'
கேமிரா இப்போது அவளுடைய பாதத்திலிருந்து சென்டி மீட்டராய் அவளுடைய உடம்பை மோப்பம் பிடித்துக் கொண்டு போக - பார்க்க சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டாள்.
முந்தானை விலகுகிற தினுசில்கூட அவள் கேமிராவுக்கு முன்பு நின்றது கிடையாது.
'இவ்வளவு அப்பட்டமாய்... உரித்த கோழி மாதிரி கேமிரா வழங்கியிருக்கிறது எப்படி...?'
நீலாம்பரி வியர்த்து யோசித்துக் கொண்டிருக்க - வெளியே கதவு தட்டப்பட்டது. சட்டென்று ரிமோட் கண்ட்ரோலில் ஸ்டாப் பட்டனைத் தட்டி கேஸட் இயக்கத்தை நிறுத்திவிட்டு கதவுக்கு வந்து தாழ்ப்பாளை விலக்கி திறந்தாள்.
வெளியே -
வேலைக்காரி.
என்ன...?
அய்யா உங்களைக் கூப்பிட்டார்ம்மா...
வர்றேன்... போ
அவளை அனுப்பிவிட்டு டெக்குக்கு வந்த நீலாம்பரி எஜெக்ட் பட்டனைத் தட்டி கேஸட்டை வெளியே எடுத்து படுக்கைக்கு கீழே மறைத்து வைத்துவிட்டு வெளியே வந்து ஹாலை நோக்கிப் போனாள். வியர்வையை ஒற்றி ஒற்றி எடுத்ததில் கர்ச்சிப் நனைந்து போயிருக்க, நீலாம்பரியின் இருதயப்பிரதேசம் குதிரைகள் ஓடும் பந்தய மைதானமாக மாறியிருந்தது.
ஹேமந்த்குமார் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தான்.
நீலாம்பரி மேல் உங்களுக்கு எப்படி லவ் அஃபேர் ஏற்பட்டது...?
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான். "நீலாம்பரியை நான் முதல் முதலா பார்த்தது ஒரு பப்ளிக் ஃபங்க்ஷனில் தான்... யாரோ அறிமுகப்படுத்தி வெச்சாங்க... ரெண்டு நிமிஷம்தான் பேசியிருப்பேன். அந்த ரெண்டு நிமிஷ சந்திப்பிலேயே நீலாம்பரி மத்த நடிகைங்க மாதிரி இல்லைங்கிற உண்மையை தெரிஞ்சுகிட்டேன்.
எப்படி தெரிஞ்சுட்டீங்க...?"
2
"என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும். எங்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாவே பணக்காரக் குடும்பம்... பம்பாயிலேயும் சிங்கப்பூர்லேயும் நிறைய பிசினஸ். கோடிக்கணக்கான சொத்துக்கு நான் ஒரே வாரிசு. எனக்கு அறிமுகப்படுத்தப்படுகிற பெண்கள் நான் யார்ன்னு தெரிஞ்சதுமே என்கிட்டே வலிய வலிய பேசிப் சிரிப்பாங்க... மறுபடியும் எங்கே பார்க்கலாம்னு டேட்டிங் கேட்பாங்க... 'யூ ஆர் ஸோ ஹேண்ட்ஸம்'ன்னு முகஸ்துதி பண்ணுவாங்க. இந்த சேஷ்ட்டையெல்லாம் நீலாம்பரி எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது அவகிட்ட நான் பார்க்கலை. நான் கைகுலுக்க முயற்சி செஞ்சப்பகூட வணக்கம் தான் சொன்னா. ஃபங்க்ஷன்ல யார்கிட்டேயும் அனாவசியமா சிரிச்சு பேசலை... பேச்சில், பார்வையில், நடத்தையில் கணிசமான கண்ணியம் இருந்தது... அதுக்கப்புறம் நீலாம்பரியைப் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்கள் எல்லாமே அவ மேல எனக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தின..."
என்ன கேள்விப்பட்டீங்க...?
படுக்கைக்குக் கூப்பிட ஒரு பெரிய படத் தயாரிப்பாளரை ஷூட்டிங்க்ல அத்தனை பேர் பார்த்திட்டிருக்கும்போதே கால்ல போட்டிருந்த ஸ்லிப்பரைக் கழற்றி அடிச்சது... தன்னோட வருமானத்துல பத்து பர்சென்ட்டை மாசா மாசம் மகளிர் மறுவாழ்வு இல்லத்துக்கு தர்றது... அப்புறம்...
போதும்... போதும்...
என்று கையமர்த்திக் கொண்டே கணவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் நீலாம்பரி. மனசுக்குள் புயல் அடித்துக் கொண்டிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தோடு கணவனை ஏறிட்டாள்.
விட்டா நீலாம்பரி புராணமே பாடிடுவீங்க போலிருக்கு...?
.
பாடினாலும் தப்பில்லை... இந்தக் காலத்துல பணம் காசோடு புகழும் சேர்ந்துட்டா... யாராயிருந்தாலும் சரி அவங்களுக்கு தலை நிலை கொள்ளாது. தமிழ்நாட்டு மக்கள்ல அறுபது சதவீதம் பேரை உன்னுடைய அன்புப் பிடியில் இறுக்கி வெச்சிருக்கிற உனக்கு துளியளவும் கர்வம் இல்லாதது இந்த உலகத்தோடு எட்டாவது அதிசயம்... இந்த எட்டாவது அதிசயத்துக்கு கணவனாய் இருக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு...
ஹேமந்த்குமார் பேசியது கேட்டு நிருபர்கள் கைதட்ட - நீலாம்பரியின் மனம் சற்று நேரத்துக்கு முன்னாள் வீடியோ கேசட்டில் பார்த்த தன்னுடைய பிறந்த மேனி கோலத்தை நினைத்துக் கூசியது.
'என்னை அந்தக் கோலத்தில் யார் எந்த சந்தர்ப்பத்தில் வீடியோ படம் எடுத்திருப்பார்கள்...?'
நீலாம்பரி யோசித்து பார்த்தாள்.
பிடிபடவில்லை.
திடுமென்று அவளுடைய தோள் தட்டப்பட்டது. ஹேமந்த்குமார் அவள் முன்னே கையை ஆட்டிக் கொண்டிருந்தான். என்ன... யோசனை...?
ஒ...ஒ... ஒண்ணுமில்லை. என் மேல நீங்க வெச்சிருக்கிற பிரியத்தை நினைச்சு பிரமிச்சுப் போயிட்டேன்...
பிரமிச்சு போயிட்டா மூஞ்சியெல்லாம் இப்படி வேர்க்குமா என்ன...?
என்னமோ தெரியலை... வேர்க்குது...
நீலாம்பரியை ஒரு நம்பாத பார்வை பார்த்தான் ஹேமந்த் குமார்.
ஆட்டோ போய்க் கொண்டிருக்க ஜெயகோபி டிரைவரிடம் பதற்றம் வழியும் குரலில் கேட்டான்.
ஒரு பொண்ணை வெட்டிட்டாங்களா?
ஆமா சார்... வயசு அம்பது இருக்கும். ரோட்டோரமா உட்கார்ந்து முறுக்கு வித்திட்டிருந்த பொம்பளை. கலாட்டா பண்ணிய கட்சிக்காரங்களைப் பார்த்து ஏதோ கெட்ட வார்த்தை சொல்லி திட்டியிருக்கா. ஒருத்தன் தன் கையிலிருந்த அரிவாளாலே ஓங்கி ஒரு போடு போட்டுட்டான்.
ஜெயகோபியின் மனசுக்குள் ஒரு தற்காலிக டென்க்ஷன் டென்ட் அடித்துக்கொண்டது. டிரைவர் தொடர்ந்தார்.
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் சி.பி.ஐ. மூலமா ஸ்டேட் மினிஸ்டர் மேல ஸ்டெப் எடுத்ததுக்காக அந்தக் கட்சிக்காரங்க ஊரையே ரெண்டு பண்ணிட்டாங்க ஸார்...
யார் பக்கம் நியாயம்...?
நம்ம மினிஸ்டர் பக்கம் சுத்தமா நியாயம் இல்ல ஸார்... அந்நிய செலாவணி மோசடியில வசமா சிக்கிக்கிட்டவரை சி.பி.ஐ. சும்மா விடுவார்களா...? கைக்கு விலங்கு மாட்டி ஜெயில்ல கொண்டுபோய் உட்கார வெச்சுட்டாங்க. ஸ்டேட் கவர்ன்மெண்ட் அதை மோசடி வழக்குன்னு சொல்றாங்க... எல்லாத்துக்கும் மேலா சி.எம்மோட ஸ்டேட்மெண்ட் வேற.
அவரோட ஸ்டேட்மெண்ட் என்ன?
நம்ம மினிஸ்டரை கைது பண்ணியது சென்ட்ரல் கவர்ன்மெண்ட்டோட பழிவாங்கற நடவடிக்கையாம்...
ரெண்டு நாள் இப்படி போராட்டம் நடக்கும். அப்புறம் சரியாப் போயிடும்.
சரியா போறது மாதிரி தெரியலை ஸார். ஸ்டேட் கவர்ன்மெண்ட் இந்தப் பிரச்னையை சும்மா விடமாட்டாங்க... தொடர்ந்து இந்தக் கலவரத்தை நடத்தி பெரிசு பண்ணி மினிஸ்டரை ரிலீஸ் பண்ற வரைக்கும் விட மாட்டாங்க. நாளைக்கு ரயில் நிறுத்தப் போராட்டம் பண்ணப் போறாங்களாம். எத்தனை ரயில் கவிழப்போகுதோ...?
ஜெயகோபி ஏதோ பேச வாயைத் திறந்தபோது -
ஆட்டோவின் வேகம் குறைந்தது. மெதுவாய் போய் நின்றது...
என்ன டிரைவர்...?
போலீஸ் ஸார்...
ஜெயகோபி ஆட்டோவின் முன்புறக் கண்ணாடி வழியே குனிந்து பார்த்தான். வயர்லெஸ் இரைச்சலோடு ஒரு போலீஸ்